Nanbar Ajith; நண்பர் அஜித் மாதிரி உடை அணிந்து வர வேண்டும்: விஜய்! மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு கோட் சூட்டில் வந்த விஜய், நண்பர் அஜித் மாதிரி உடை அணிய வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி என்றார்.
நண்பர் அஜித் (Nanbar Ajith) மாதிரி தான் உடை அணிந்து வர வேண்டும் என்பதற்காக இப்படி வந்ததாக மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது விஜய் பேசியுள்ளார்.
பொதுவாக அஜித் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், கோட் சூட்டில்தான் வலம் வருவார். அண்மையில் கூட, ஆத்விக் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. அதில் கூட அஜித் கோட் சூட்டில் வலம் வந்திருந்தார்.
அவரேப் போன்று தற்போது விஜய்யும் தான் உடை அணிந்து வரவேண்டும் என்பதற்காக இப்படி வந்ததாக கூறினார்.
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு (Master Audio Launch) விழா சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்தது. இதில் மாஸ்டர் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது பேசிய விஜய்யிடம் முதலில் உங்களது உடைக்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு காஸ்டியூமர் பல்லவிதான் என்றார். அதன் பிறகு நண்பர் அஜித் (Nanbar Ajith) மாதிரி உடை அணிந்து செல்ல வேண்டும் என்பதற்காகவே இப்படி வந்ததாக கூறினார்.
விஜய் அவ்வாறு கூறியதைத் தொடர்ந்து #NanbarAjith என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் அதிகளவில் டிரெண்டாகி வருகிறது.
நெய்வேலியில் படப்பிடிப்பின் போது உங்களுக்காக ரசிகர்கள் வந்தார்களே! அந்த தருணம் எப்படி இருந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்றார். வேற லெவல் நீங்க…ரெய்டும் ஜாலியா இருக்கு…
இறுதியில், விஜய் சேதுபதி தனக்கு கொடுத்த முத்தத்தை திருப்பி அவருக்கே கொடுத்துள்ளார் விஜய். ஆம், மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்று விஜய் சேதுபதிக்கு விஜய் முத்தம் கொடுத்துள்ளார். தொடர்ந்து இசை வெளியீடும் சிறப்பாக நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ijay Speech At Master Audio Launch; ரெய்டும் நல்லா ஜாலியாத்தான் இருக்கு: விஜய் மகிழ்ச்சி! (Master Audio Launch) மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய், தனது வீட்டில் நடந்த ஐடி ரெய்டு பற்றி பேசியுள்ளார்.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அந்த தருணமும் வந்தது. ஆம், விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் விஜய்யை மேடைக்கு அழைத்தனர். மேடைக்கு வந்த விஜய் முதலில் தனது பாட்டில் வரும் வாத்திகம்மிங் பாடலுக்கு நடனம் ஆடினார்.
அவருடன் சாந்தணு ஆடினார். ஆனால், அனிருத் ஓரமாக நின்றுவிட்டார். வழக்கம் போல், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பி எல்லோருக்கும் வணக்கம்…
சிம்ரன்
சிம்ரன் ஜி டான்ஸ் ஆடியதற்காக நன்றி. உங்களுக்கு அவசியம் இல்லை. இருந்தாலும், எங்களுக்காக வந்து டான்ஸ் ஆடியிருக்கீங்க.
சாண்டி, உள்பட இன்னும் சிலர் பசங்க எல்லோருமே டான்ஸ் ஆடியிருக்கீங்க. உங்கள் அனைவருக்குமே நன்றி…
ஏமாற்றமும், வருத்தமும்:பிகில்
ரசிகர்கள் எல்லோருக்குமே ஏமாற்றமும், வருத்தமும் இருக்கும் என்று எனக்கு தெரியும். பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வெளியில் நடந்த சம்பவம் தான் தற்போது மிகவும் எளிமையாக நடப்பதற்கு காரணம்.
அரைமனதுடன் தான் நான் ஏற்றுக்கொண்டேன். முழுமனதுடன் இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அனிருத்தும், நானும் கத்திக்குப் பிறகு இணைந்துள்ளோம். பாடல் சூப்பர்…ஒவ்வொரு பாடலுக்குப் பிறகு ஒரு குட்டி ஸ்டோரி இருக்கிறது.
விஜய் சேதுபதி
தவிர்க்க முடியாத தமிழ் சினிமாவில் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால், அது விஜய் சேதுபதி தான். ஏன் வில்லனாக நடிக்கிறீங்க என்று கேட்டேன்.
அதற்கு மிகவும் எளிமையாக என்னை ஆப் செய்ய வேண்டும் என்பதற்காகவே எனக்கு உங்கலை பிடிக்கும் சார் என்று சொல்லிவிட்டார். பேரில் மட்டும் இல்லை மனதிலேயும் இடம் கொடுத்திருக்கிறார்.
மாளவிகா மோகனன்
தமிழ் மட்டும் ஓகே என்றால், தமிழில் முன்னணி நடிகை மாளவிகா மோகனன். ஆண்ட்ரியா கதை தேர்வு சூப்பர். அவருக்கு டீம் சார்பில் ஒரு வேண்டுகோள்.
இனி வரும் காலங்களில் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். சாந்தணுவிற்கும் அப்படித்தான். அவரும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும்.
இப்படி தனித்தனியாக பேசுவதற்குப் பதிலாக, அவர்களது வேலையே படத்தில் பேசும். அந்தளவிற்கு ஒவ்வொருவரது உழைப்பும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ளது.
சேவியர் பிரிட்டோ
செந்தூர் பாண்டி, தேவா ஆகியவற்றிற்கு பக்கபலமாக என்னுடைய மாமா இருந்தார். மாஸ்டர் படம் எல்லாமே எனது மாமா சேவியர் பிரிட்டோவிற்குதான்.
லோகேஷ் கனகராஜ்
அடுத்து லோகேஷ் கனகராஜ்…மாநகரம் திரும்பி பார்க்க வைத்தார். கைதியை திரும்ப திரும்ப பார்க்க வைத்தார். முதலில் ஒரு வங்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அதன் பிறகு குறும்படம்.
கையில் சீன் பேப்பரே இருக்காது. அவங்க அந்த டயலாக் பேசுவாங்க. நீங்க இந்த டயலாக் பேசணும். அப்படி சொல்வார். யோவ் என்னய்யா சொல்லுர என்றேன்.
சீன பேப்பர் கொடுக்கவே மாட்டார். ஒருநாள் மன உளைச்சலுக்கே ஆளாகிவிட்டேன். இவன் கூட எப்படி 4 மாசம் ஒர்க் பண்ணப்போறோம் என்ற கவலை வந்துவிட்டது.
இந்த மாதிரி அந்த மாதிரி எந்த மாதிரியும் வேண்டாம். முதலில், சீன் பேப்பரை கொடு என்றேன். அதன் பிறகுதான் சீன் பேப்பரை கொண்டு வந்து சார், சீன் பேப்பர் சார், சார் சீன் பேப்பர் சார் என்றார்.
ஓட்டுறானா கிண்டல் பண்ணுறானா என்றே தெரியாது. வாழ்க்கையில், ஹார்டு ஒர்க், ஸ்மார்ட் ஒர்க், இரண்டும் இருந்தால், சீக்கிரமே சக்சஸ்தான். டீச்சர்ஸ், புரோபசர்ஸ் கேங், அர்ஜூன் தாஸ் கேங், பூவையார் அண்ட் கேங், என்று எல்லோருக்கும் நன்றி. கடைசியாக ஒரு ஸ்டோரி…
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே.. நீ நதிபோல ஓடிக்கொண்டிரு…வாழ்க்கையும் ஒரு நதி போலத்தான். நதி அதுபாதையில் அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும்.
சிலர் அதில் விளக்குகளை விட்டு வணங்குவார்கள்.
சிலர், பூக்களை தூவி வழிபடுவார்கள்.
இன்னும் சிலர், அதில் கல்லை எறிந்து வழிபடுவார்கள்.
ஆனாலும், நதி அதுபாட்டுக்கு அதுபாதையில் ஓடிக்கொண்டுதான் இருக்கும்.
நாம், நம்ம வேலையை, கடமையை செம்மையாக செய்துகொண்டே நதிபோன்று போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
உண்மையாக இருக்க வேண்டுமென்றால், ஊமையாக இருக்க வேண்டியிருக்கிறது…போதும் ஆளவிடுங்கப்பா என்று கூறி கதையை முடித்தார்.
அவரிடம் பாவனா மற்றும் ஆர்ஜே விஜய் ஆகியோர் கேள்வி எழுப்பினர். உங்களது உடைக்கான காரணம் என்ன? அதற்கு காஸ்டியூமர் பல்லவிதான் என்றார்.
அஜித் பற்றி பேசிய விஜய்
அதன் பிறகு நண்பர் அஜித் மாதிரி உடை அணிந்து செல்ல வேண்டும் என்பதற்காகவே இப்படி வந்ததாக கூறினார்.
ரெய்டும் ஜாலியா இருக்கு
நெய்வேலியில் படப்பிடிப்பின் போது உங்களுக்காக ரசிகர்கள் வந்தார்களே! அந்த தருணம் எப்படி இருந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்றார். வேற லெவல் நீங்க…ரெய்டும் ஜாலியா இருக்கு…
விஜய் சேதுபதிக்கு விஜய் முத்தம்
இறுதியில், விஜய் சேதுபதி தனக்கு கொடுத்த முத்தத்தை திருப்பி அவருக்கே கொடுத்துள்ளார் விஜய்.
ஆம், மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்று விஜய் சேதுபதிக்கு விஜய் முத்தம் கொடுத்துள்ளார். தொடர்ந்து இசை வெளியீடும் சிறப்பாக நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Vijay Sethupathi Speech; சாமிக்காக சண்டை போடுறாங்க கூட பழக வேண்டாம்: விஜய் சேதுபதி! மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசியுள்ளார்.
சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து வருகிறது.
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் சேதுபதி தாமதமாக வந்தார். அப்போது பேசிய அவர், சாண்டியின் நடனத்தை பாராடினார்.
குட்டி ஸ்டோரி பாடலை தான் பாடவில்லை என்றார். ஒருவர் என்ன நினைக்கிறார் என்பதை அவரது இடத்திற்கு சென்றுதான் பார்க்க வேண்டும்.
உதாரணமாக, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் போது தனது பெயருடன் சேர்ந்து விஜய் சேதுபதியின் பெயரும் வர வேண்டும் என்றார் விஜய். அவர் ஒரு நல்ல மனிதர்.
படப்பிடிப்பின் போது எதுவுமே பேசமாட்டார். எப்போதுமே அமைதியாகவே சிரித்துக்கொண்டே இருப்பார். நான் அவரிடம் கேட்டேன்.
ஏன் சார் பேசவே மாட்டீங்கிறீங்க என்றேன். அதற்கு, அவர் சொன்னார். நான் எதையுமே உன்னிப்பாக கவனிப்பவன் என்றார். எனக்கு என்ன வருகிறதோ அதையே செய்யச் சொன்னவர்.
முதன் முதலில் நான் அவரை ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது எனது நண்பரின் அம்மா வந்து என்னிடம் காமராஜர் அரங்கில் ஏதோ விழா நடக்கிறது என்று அதற்குரிய டிக்கெட்டை கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்டு காமராஜர் அரங்கிற்கு சென்றேன். அப்போதுதான் அவரை நான் பார்த்தேன் என்றார்.
முதலில் நான் லேட்டாக வந்ததற்கு காரணம் என்னதுனா, திருநெல்வேலி ஷூட்டிங்கிலிருந்து ஓடி வந்தேன். அதான் லேட்டாக ஆகிவிட்டது.
மறுபடியும், அங்கு கிளம்பவேண்டும். ஏனென்றால், ஷூட்டிங் இருக்கு. இதை சொல்லவில்லை என்றால், அப்புறம் வதந்தி பரப்பிவிடுவார்கள் என்றார்.
மேலும், சக மனிதனை, கலைஞனை மதிக்கத் தெரிந்த ஒருவர்தான் விஜய். அவருடன் பணியாற்றியது எனக்கு அருமையான தருணம்.
அவர் எப்போதும் ஸ்மார்ட், சூப்பராக, அழகாக இருப்பார். தேவைப்படும் நேரத்தில் வெட்கமும் படுவார். புரோமோஷனுக்காக ஒரு ரெய்டு நடந்தது.
கொரோனா வைரஸ் பற்றி யாரும் பயப்பட வேண்டாம். மனதை மட்டும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். தைரியமாக இருக்க வேண்டும்.
மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வருவான். வேறு யாரும் வரமாட்டார்கள். கூடப்பிறந்த உறவினர்கள் கூட நம்மை தொட்டு பேசுவதற்கு தயங்கும் இந்த நேரத்தில் நம்மை பாதுகாத்து வரும் மருத்துவர்களுக்கு நன்றி.
சாமிக்காக சண்டை போடுறவங்க கூட மட்டும் பழக வேண்டும். சாமியை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் சொல்வார்கள்.
மனிதத்தையும், மனித நேயத்தையும் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையில் மதம் அவசியமில்லை என்பதை காட்டுங்கள் என்றார். மேலும், தனது பெயர் விஜய குருநாத சேதுபதி காளிமுத்து என்று குறிப்பிட்டார்ர்.
அதோடு, தனது ரசிகர்களுக்கு மட்டும் குறைவான பாஸ் கொடுக்கப்பட்டதாகவும், சேவியர் பிரிட்டோவின் ரசிகர்களுக்கும், குழுவினருக்கும் மட்டும் அதிகளவில் பாஸ் கொடுக்கப்பட்டதாகவும் நக்கலாக பேசினார்.
சேவியர் பிரிட்டோ ஒரு அறிவாலி. அறிவுக் களஞ்சியம். அவரிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
இறுதியில், அனைவருக்கும் நன்றி என்று கூறினார் மேடையை விட்டு இறங்கிச் சென்றார். இந்நிகழ்ச்சிக்கும் வரும் போது விஜய்யை கட்டியணைத்தார்.
விஜய், அவருக்கு முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
Master Producer Xavier Britto; விஜய் எங்கவீட்டு சொத்து, சமுதாயத்தின் முத்து! விஜய் எங்கள் வீட்டு சொத்து என்று தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு (Master Audio Launch) விழா சென்னை லீலா பேலஸ் (Leela Palace) ஹோட்டலில் நடந்து வருகிறது.
மாஸ்டர் படக்குழுவினருடன் இணைந்து ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ கூறுகையில், விஜய் தான் எங்கள் வீட்டு சொத்து.
அவர் தான் சமுதாயத்தின் முத்து. கடினமான சண்டைக்காட்சியைக் கூட மிகவும் எளிமையாக செய்து முடிக்கிறார்.
அம்மா, அப்பா மீது அதிக பாசம் வைத்தவர். அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம், இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம் என்று கூறினார்.
மேலும், அது போல தன்னை மட்டுமே நினைப்பவன் மிருகம், குடும்பத்தை நினைப்பவன் மனிதம். ஆனால், சமுதாயத்தை நினைப்பவன் தான் தலைவனாகிறான். விஜய் ஒரு தலைவன்.
ஒருவரிடம் இருந்து நடை, உடை, பாவணை என்று எல்லாவற்றையும் காப்பியடிக்கலாம். ஆனால், அவரது பேஷனை மட்டுமே யாராலும் காப்பியடிக்க முடியாது. விஜய் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார்.
அவரது அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்துவிட்டு, நான் திரும்ப வருகிறேன். அப்போது விஜய்யும் பின்னாடியே வந்தார். நான் புறப்படும் வரை கீழேயே இருந்தார். இது அவரது மரியாதையை காட்டுகிறது.
தேனீக்களிடமிருந்து தேனை திருடிக்கொண்டு செல்லும் போது தேனி சொல்லுமாம், தேனை மட்டுமே அவர்களால் திருட முடியும், ஆனால், அந்த மேக்கிங் ஸ்டைலை யாராலும் திருட முடியாது என்று சொல்லுமாம்.
இப்படியெல்லாம் பேசிய அவர் ஏசு சபையைச் சேர்ந்தவர்களுக்கும், தன்னை இதுவரை கொண்டு வந்த பாதிரியார்களுக்கும் நன்றி என்றார்.
மேலும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், தனது குடும்பத்தினருக்கும், மாஸ்டர் படக்குழுவினருக்கும், தனது குழுமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி என்று கூறினார்.
Master Dheena; வருமான வரித்துறையினரை எச்சரித்த தீனா! ஈசிஆர்ல ரோடு சும்மா இருக்குன்னு அடிக்கடி ரைடு போகாதீங்க என்று எச்சரித்துள்ளார்.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்து வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்ட படம் மாஸ்டர். கல்வி முறையை மையப்படுத்திய மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.
விஜய் உடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, கவுரி கிஷா, தீனா, ரம்யா சுப்பிரமணியம், சாந்தணு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தீனா கூறுகையில், பைக் வச்சிருக்கும் எல்லோருக்குமே ரைடு போகணும் என்று ஆசை இருக்கும்.
ஆனால், ஈசிஆர்ல ரோடு சும்மா இருக்கு என்று யாரும் ரைடு போகாதீங்க என்று வருமான வரித்துறையினரை எச்சரித்துள்ளார்.
மேலும், மாளவிகா மோகனன் என்னிடம் பேச வேண்டும் என்று ஆசையில் இருந்தார். ஆனால், நான் பிஸியாக இருந்தால் அது முடியாமல் போய்விட்டது என்று கிண்டலாக பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய கவுரி கூறுகையில், 96 படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தேன்.
ஆனால், மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளேன். ரொம்பவும் பெருமையாக இருக்கிறது. அம்மாவிற்கு நன்றி மற்றும் படக்குழுவினர் பலரும் நன்றி என்றார்.
ரம்யா சுப்பிரமணியம் கூறுகையில், பிகில் இசை வெளியீட்டு விழாவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன்.
ஆனால், தற்போது மாஸ்டரில் அவருடன் இணைந்து நடித்துள்ளேன். இதைத் தவிர வேறு ஒன்றும் தேவையில்லை என்றார்.
சாந்தணு கூறுகையில், இதுதான் என்னுடைய முதல் படம் போன்று தோன்றுகிறது. மாநகரம் படத்தின் போதே எனக்கு ஒரு கதாபாத்திரம் இருந்தது. ஆனால், அது முடியவில்லை. கைதி படத்திலேயும் அதுபோலத்தான் அதுவும் முடியாமல் போய்விட்டது.
தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளேன். சிறு வயதிலிருந்தே அவருடைய ரசிகன் தான்.
எப்போது விஜய்யுடன் இணைந்து நடிக்க போகிறாய் என்று எல்லோரும் என்னிடம் கேட்டார்கள். நாம் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் ரசிகர்களும் நினைத்திருக்கிறார்கள்.
அது இப்பொழுது நிறைவேறிவிட்டது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Malavika Mohanan; சென்னை லீலா பேலஸ் ஹோட்டலுக்கு நடிகை மாளவிகா மோகனன் முதலாவதாக வருகை தந்துள்ளார்.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடக்கும் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலுக்கு மாளவிகா மோகனன் முதலாவதாக வந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்ட படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி மாஸ்டர் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிரமாண்டமாக நடந்து வருகிறது.
இந்நிகழ்ச்சியை சன் டிவி தங்களது சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆனால், என்ன இருந்தாலும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு இது ஏமாற்றம்.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகை மாளவிகா மோகனன் முதலாவதாக வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரைத் தொடர்ந்து ஆண்ட்ரியா, அதர்வா, விஜய் சேதுபதி, படக்குழுவினர் ஆகியோர் பலரும் வருகை தந்துள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கு சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோ வரவேற்புரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியின் போது தன் மகன் தன்னை கட்டியணைக்க வேண்டும் என்று ஷோபா கேட்க உடனே மேடைக்குச் சென்ற விஜய், தனது அம்மாவையும், அப்பாவையும் கட்டியணைத்து அவர்களுக்கு முத்தம் கொடுத்து அவர்களது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
அம்மா, அப்பாவை கட்டியணைத்த விஜய்! தன் மகன் தன்னை கட்டியணைக்க வேண்டும் என்ற அம்மாவின் ஆசையை விஜய் நிறைவேற்றியுள்ளார்.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், தற்போது சன் டிவியில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இதில், படக்குழுவினருடன் இணைந்து விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், அம்மா ஷோபா சந்திரசேகர், மனைவி சங்கீதா விஜய் ஆகியோர் உள்பட ஏராளமான ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் இணைந்து அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் சிவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், எனக்கு எதுவும் பேச தோன்றவில்லை. கடவுளுக்குதான் நன்றி சொல்கிறேன்.
நாளைய தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என்று அவர் கூறினார். அதற்கு மிர்ச்சி விஜய் நாங்களும் அதற்காகதான் காத்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.
இதையடுத்து பேசிய ஷோபா சந்திரசேகர் தனது மகன் தன்னை கட்டியணைக்க வேண்டும் என்றார்.
உடனே மேடைக்குச் சென்ற விஜய், தனது அம்மாவையும், அப்பாவையும் கட்டிப்பிடித்து அவர்களுக்கு முத்தம் கொடுத்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
மருத்துமனையில் கொரோனா உள்ளது எனக் கூறியதை நம்பாமல் பெங்களூரு முதல் டெல்லி வரை சென்று 2000 பேருக்கு கொரோனவை பரப்பி உள்ளார் பெங்களூர் பெண்.
கூகுளில் வேலை செய்த நபருக்கு டெல்லியைச் சேர்ந்த பெண்ணுடன் பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. ஹனிமூனுக்கு பிரான்ஸ், கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.
மார்ச் 7-ம் தேதி இந்திய திரும்பிய கணவர் 9-ம் தேதி பெங்களூர் அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்று உள்ளார்.
வேலைக்கு சேர்ந்த பின்பு தான் அவருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டு உள்ளது. இதற்காக மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.
உடனே அவருடைய மனைவியையும் சோதனை செய்துள்ளனர். அவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பதற்றத்தில் அந்தப்பெண் அவருடைய பெற்றோருக்கு போன் செய்ய, மருத்துவர்கள் பொய் சொல்கிறார்கள் நீ டெல்லி கிளம்பி வந்துவிடு என பெற்றோர் கூறியுள்ளனர்.
அந்த படித்த பெண் பெற்றோரின் முட்டாள் தனமான யோசனையைக் கேட்டு பெங்களூருவில் இருந்து ட்ரைன் வழியாக மும்பை சென்று உள்ளார்.
அங்கு இருந்து விமான நிலையத்திற்கு காரில் சென்று உள்ளார். மும்பையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்று உள்ளார்.
அங்கு வீட்டில் பதுங்கி கொண்டு உள்ளார். அதிகாரிகள் அவரின் வீட்டை கண்டு பிடித்து பெற்றோரிடம் கேட்ட போது அவர் இங்கு வரவே இல்லை என்று கூறியுள்ளனர்.
பிறகு காவல்துறையினர் வந்து சோதனை நடத்தியதில் வீட்டிற்குள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இருந்து அவர் டெல்லி பயணம் மேற்கொண்டது வரை கிட்டத்தட்ட 2000 பேருக்கு மேற்பட்ட மக்களை சந்தித்திருக்க கூடும்.
இதில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது எனப் புரியாமல் அதிகாரிகள் குழம்பிவிட்டனர். இப்படி நான்கு பேர் இந்தியாவில் இருந்தால் நாலே நாளில் இந்தியா சுடுகாடாக மாறிவிடும்.