Home Blog Page 27

இவருக்கு லாக்டவுனே கிடையாது: மாலத்தீவில் லூட்டியடிக்கும் ஹன்சிகா: விரைவில் Throwback வீடியோ!

0
Hansika Motwani Throwback Video

Hansika Throwback Video; இவருக்கு லாக்டவுனே கிடையாது: மாலத்தீவில் லூட்டியடிக்கும் ஹன்சிகா: விரைவில் Throwback வீடியோ! ஹன்சிகா மோத்வானி மாலத்தீவில் லூட்டி அடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ஹன்சிகா மோத்வானி மாலத்தீவில் சுற்றித்திரிந்து லூட்டி அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் வந்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஆனால், சிறுவயதிலேயே விளம்பர நிகழ்ச்சிகள், சின்னத்திரை நாடகங்களில் நடித்துள்ளார்.

ஹவா என்ற பாலிவுட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு, கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான அல்லு அர்ஜூனின் Desamuduru என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்தார்.

மாப்பிள்ளை படத்தில் அறிமுகமான ஹன்சிகா தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, புலி, அரண்மனை 2, சிங்கம் 3, 100 என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மஹா என்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடித்து முடித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்குதல் காரணமாக 6 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வரும் 31 ஆம் தேதி வரையில் இந்த லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதன் விளைவாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலையில், நடிகை ஹன்சிகா மட்டும் ஊரெல்லாம் சுற்றி வருகிறார்.

ஆம், மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள ஹன்சிகா அங்கு லூட்டியடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

முழு வீடியோ வரும் வியாழன் அன்று இரவு 7 மணிக்கு வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுன் நேரத்தில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் ஹன்சிகா தொடங்கியுள்ளார். அதில், தனது வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், அந்த யூடியூப் சேனல் மூலமாக தனது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்.

3

வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு 2 வேடமா?

0
Suriya Vaadivasal

Suriya Vaadivasal; வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு 2 வேடமா? இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா 2 கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் காப்பான்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படம் கொரோனா காரணமாக இதுவரை திரைக்கு வரவில்லை. நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனாவால், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும், அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆதலால், புதிதாக உருவாக்கப்பட்ட குறைந்த பட்ஜெட் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. பொன்மகள் வந்தாள், பென்குயின் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. இந்தப் படங்களைத் தொடர்ந்து காக்டெய்ல், டேனி, ஆர்கே நகர், லட்சுமி பாம் ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.

கொரோனா லாக்டவுன் முற்றிலும் சரியான பிறகு அருவா படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாடிவாசல் படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, வாடிவாசல் படத்தில் சூர்யா 2 கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதுவும், அப்பா, மகன் கதாபாத்திரமாம். இதற்கு முன்னதாக வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெரினா போராட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ஜல்லிக்கட்டு படத்தில் சூர்யா நடிப்பதால், படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அருவா படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

கருப்பன் நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும்: காளையுடன் கெத்து காட்டிய சூரி!

0
Soori Jallikkattu Kaalai

Soori with Jallikattu Kaalai; கருப்பன் நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும்: காளையுடன் கெத்து காட்டிய சூரி! நகைச்சுவை நடிகரான சூரி காளையுடன் நடந்து சென்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜல்லிக்கட்டு காளையை பிடித்துக் கொண்டு சூரி செல்லும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூரி. மதுரையை சொந்த ஊராகக் கொண்ட இவர், வடிவேலு, விவேக் ஆகியோருக்கு அடுத்து காமெடியில் கலக்கி வருகிறார்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் புரோட்டா காமெடி மூலம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றார். இதன் மூலமாக பரோட்டா சூரி என்றே அழைக்கப்பட்டார்.

தற்போது நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக 6ஆவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரையில் வரும் 12 ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சூரி, விழிப்புணர்வு வீடியோ, குழந்தைகளுடன் நேரம் செலவிடும் வீடியோ, சமையல் செய்யும் வீடியோ என்று தொடர்ந்து, டுவிட்டரில், தனது வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது தான் வளர்க்கும் காளையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் – எங்க கருப்பன் நடந்து போனா என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு காளையுடன் சூரி இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

3

துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது? அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!

0

Tughlaq Durbar First Look; துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது? அறிவிப்பு வெளியிட்ட படக்குழு! விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 8 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில், மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, புஷ்பா, யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ.ரணசிங்கம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் 8 ஆம் தேதி துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. கோவிந்த வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். மேலும், பார்த்திபன் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tughlaq Durbar

3

மது அருந்த ஏ.டி.எம் இல் இருந்து பணத்தை திருட முயற்சி செய்து காவல் துறையிடம் சிக்கிய நபர்: கோவை

ஏ.டி.எம் இல் இருந்து பணத்தை திருட

கோவை: ஜூன் 3 இல் 42 வயதுடைய ஒருவர் கோவையில் உள்ள ஆர்.எஸ் புரத்தில் ஒரு ஏ.டி.எம் இல் இருந்து பணத்தை திருட முயற்சி செய்து காவல் துறையிடம் சிக்கினார்.

மது குடிக்க ஏ.டி.எம் இல் இருந்து பணத்தை திருட முயற்சித்த நபர்

ஆர்.எஸ் புரத்தை சேர்ந்த டி. விஜயகுமார் என்பவர், ஏ.டி.எம் இல் இருந்து பணத்தை தான் எடுக்க முயற்சித்ததாகவும், ஆனால் அவரது வங்கி கணக்கில் பணம் இல்லை எனவும், அதனால் மது அருந்துவதற்காக ஏ.டி.எம் இல் இருந்து பணத்தை திருட முயற்சித்ததாகவும் காவல் துறையிடம் தெரிவித்தார்.

குடித்திருந்த நிலையில் வந்த அவர் ஏ.டி.எம் இல் பணம் எடுக்க முயற்சி

வெள்ளிக்கிழமை இரவு மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு அவர் கொடுக்காத காரணத்தால், மனைவியின் ஏ.டி.எம் அட்டையை எடுத்து வந்துள்ளார். அன்று குடித்திருந்த நிலையில் வந்த அவர் ஏ.டி.எம் இல் இருந்து பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார்.

திருகாணிகளை அப்புறப்படுத்தி பணம் எடுக்க முயற்சி

அன்று ஏ.டி.எம் இயந்திரத்தில் உள்ள திருகாணிகளை அப்புறப்படுத்திய அவர், ஏ.டி.எம் இல் பணம் வைக்கும் இடத்தில் இருந்து பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார்.

பொதுமக்கள் காவல் துறையிடம் புகார்

மறுநாள் ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வந்த பொதுமக்கள் அங்கு யாரோ பணம் திருட முயற்சி செய்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து காவல் துறையிடம் புகார் செய்திருக்கிறார்கள்.

சிசிடிவி ஒளிப்பதிவில் பதிவான காட்சிகளால் சிக்கினார்

இந்த புகாரின் அடிப்படையில் கே.நாகராஜ் தலைமையில் செயல்பட்ட காவல் துறையினர் சிசிடிவி ஒளிப்பதிவில் பதிவாக காட்சிகளை ஆராய்ந்தனர் பின்னர் விஜய குமாரை திங்கள் அன்று கைது செய்து காவலில் அடைத்தனர்.

3

யூடியூப்பில் நம்பர் ஒன் டிரெண்டிங்கில் சூப்பர்ஸ்டார் ஆந்தம் பாடல்!

0
Superstar Anthem

Friendship First Single Superstar Anthem; யூடியூப்பில் நம்பர் ஒன் டிரெண்டிங்கில் சூப்பர்ஸ்டார் ஆந்தம் பாடல்! பிரண்ட்ஷிப் படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர்ஸ்டார் ஆந்தம் பாடல் யூடியூப்பில் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது.

லோஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தில் சூப்பர்ஸ்டார் ஆந்தம் பாடல் யூடியூப்பில் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது

இயக்குநர் ஜான் பால்ராஜ் மற்றும் சூர்யா ஆகியோரது இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் பிரண்ட்ஷிப்.

இந்தப் படத்தின், மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

இதே போன்று கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான லோஸ்லியா ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். இதுவே லோஸ்லியாவின் முதல் படம்.

இந்தப் படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு டிஎம் உதய குமார் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், பிரண்ட்ஷிப் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் சூப்பர்ஸ்டார் ஆந்தம் பாடல் லிரிக் வீடியோ வெளியாகி யூடியூப்பில் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது.

இந்தப் பாடலை சிம்பு பாடியுள்ளார். ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு வரிகளும் ரஜினியை பெருமைப்படுத்தும் வகையிலும், அவருக்கு மரியாதை செய்யும் வகையிலும் பாராட்டும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

முன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்!

0
Sonia Agarwal

முன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்! தனது முன்னாள் கணவர் செல்வராகவனுக்கு நடிகை சோனியா அகர்வால் நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவனுக்கு நடிகை சோனியா அகர்வால் நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வந்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தவர் நடிகை சோனியா அகர்வால்.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி வெளியான இந்தப் படம் திரைக்கு வந்து 17 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

காதல் கொண்டேன் படத்தைத் தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் இயக்குநர் செல்வராகன் உடன் இணைந்து பணியாற்றினார்.

இதன் மூலம் இருவரும் காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. பின்னர், செல்வராகவன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இதையடுத்து, மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆனார்.

வானம், சதுரங்கம், பாலக்காட்டு மாதவன், தடம், தனிமை, அயோக்யா, குயீன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது, வன்முறை, ரெட் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது முன்னாள் கணவரும் இயக்குநருமான செல்வராகவனுக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: காதல் கொண்டேன் தமிழ் சினிமாவில் பார்த்திராத ஒரு ஒப்பற்ற படம்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் செல்வராகவன், கஸ்தூரி ராஜா, தனுஷ் ஆகியோருக்கும், இறைவனுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

3

தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்: சிம்ரன்!

0
தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்: சிம்ரன்!

Simran; தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்: சிம்ரன்! நான் எப்போதும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவளாகவே இருப்பேன் என்று நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன், தான் எப்போதும் தமிழுக்கும், தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில், பிரபுதேவா, அப்பாஸ், ரம்யா ஆகியோரது நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு திரைக்கு வந்த விஐபி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிம்ரன்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, வாலி, கண்ணுபட போகுதய்யா, ப்ரியமானவளே, ஒற்றன், ஏழுமலை, கண்ணத்தில் முத்தமிட்டால் என்று வரிசையாக ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் அறிமுகமாகி 23 ஆண்டுகள் ஆகியுள்ளது. தமிழைத் தவிர, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் பகா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சினிமாவிற்கு வந்து 23 ஆண்டுகள் ஆகியுள்ளது குறித்து சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

ஒன்ஸ்மோர் படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்ததை இப்போது நினைக்கும் போது கூட மகிழ்ச்சியாக இருக்கிறது.

அவரிடம் இருந்து ஆசீர்வாதம் கிடைத்தது. விஜய், பிரபுதேவா, ரம்பா, அப்பாஸ் ஆகியோருடன் இணைந்து நடித்தது எனது அதிர்ஷ்டம்.

எனது கடைசி மூச்சிவரை தமிழுக்கும், தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கோவையில் உள்ள செல்வபுரம் பகுதியை சேர்ந்த 105 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி: சுகாதார அதிகாரிகள்

கோவை கொரோனா

கோவை: கோவையில் உள்ள செல்வபுரம் பகுதியை சேர்ந்த 105 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் திங்கள் கிழமை தெரிவித்தனர். பெரும்பாளும் அறிகுறி அற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

பாதிப்பாளர்களை கொடிசியா கொரோனா மையத்திற்கு மாற்றினர்

அதிகாரிகள் கொரோனா பாதிப்பாளர்களை கொடிசியா கோவிட் பாதுகாப்பு மையத்திற்கு திங்கட்கிழமை மாலை கொண்டு செல்ல முடிவு செய்தனர். இந்த கொரோனா மையத்திற்கு அழைத்து செல்லப்படும் முதல் கொரோனா பாதிப்பாளர்கள் குழுவாக இவர்கள் கருதப்படுகிறார்கள்.

ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் 350 கொரோனா நோயாளிகள் சிகிச்சை

ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் 350 கொரோனா நோயாளிகள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உக்கடத்தில் உள்ள ஒரு பேருந்து ஓட்டுநருக்கு கொரோனா

உக்கடத்தில் உள்ள ஒரு பேருந்து ஓட்டுநருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அனைத்து பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களையும் சுகாதார அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

3

இந்தியாவின் மொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது

கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியை

புதுடெல்லி: இந்தியாவின் மொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை திங்கள் கிழமை 1 கோடியை தாண்டியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திங்கள் கிழமை ஒரே நாளில் 24,248 கொரோனா தொற்றுகள்

திங்கள் கிழமை ஒரே நாளில் 24,248 கொரோனா தொற்றுகள் ஏற்பட்டதை அடுத்து இந்தியாவின் மொத்த கொரோனா தொற்று 7 இலட்சத்தை நெருங்குகிறது. திங்கள் கிழமை 425 பேர் கொரோனாவால் இறந்ததை அடுத்து மொத்த கொரோனா இறப்பு 19,693ஆக உள்ளது.

கொரோனா பரிசோதனை திங்கள் கிழமை காலை வரை 1,00,04,101

“இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மொத்த இரத்த மாதிரிகளின் எண்ணிக்கை திங்கள் கிழமை காலை 11 மணிவரை 1,00,04,101 ஆக உள்ளது. ஜூன் 5 இல் 1,80,596 இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன,” என இந்திய மருத்துவ ஆய்வக அமைப்பின்(ICMR) விஞ்ஞானியும் மற்றும் ஊடக ஒருங்கினைப்பாளருமான, மருத்துவர். லோக்கேஷ் சர்மா தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் 1,105 பரிசோதனை கூடங்கள் உள்ள

தற்போது நாட்டில் 1,105 பரிசோதனை கூடங்கள் உள்ளதாகவும் இதில் 788 பொது மற்றும் 317 தனியார் கொரோனா பரிசோதனை கூடங்கள் எனவும், ஒரு நாளுக்கான பரிசோதனையின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

3