Sarkar Movie Review | Vijay | Murugadoss | Keerthi Suresh | Fictional
Sarkar Movie Review | Vijay | Murugadoss | Keerthi Suresh | Fictional
விமர்சனம் வீடியோவை காண படத்தை கிளிக் செய்யவும்..
கதை ஓப்பனிங் தமிழ்நாட்டோட சி.எம்.யை லாரியை வைத்து கொலை செய்கின்றனர். அவர் இறந்துவிட்டதால் அவருடைய தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகின்றது.
அது விஜய்யின் தொகுதி என்பதால் ஓட்டுப்போட வெளிநாட்டிலிருந்து இந்தியா வருகின்றார்.
கத்தி படத்தில் வெளிநாடு செல்லும்முன், சமந்தா அழகில் மயங்கி, விமான டிக்கெட்டை கிழித்தது போல், வாக்குச்சாவடியில் கீர்த்தி சுரேசின் அழகில் மயங்குகின்றார்.
அந்த கேப்பில், வரலட்சுமியின் ஆட்கள், விஜய்யின் ஓட்டை நைசாக போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.
கார்பரேட் கிரிமினல்கிட்டவே ஒருத்தன் வாலாட்டுனா… சும்மாவ விடுவாரு நம்ம விஜய். ஆசை ஆசையாய் ஓட்டு போடா வந்த விஜய், விரல்ல மை கூட வக்க முடியாம சோகமா வெளிய வராரு.
உலகத்தில் உள்ள ஓட்டுமொத்த சேனலும் விஜய்காக வெயிட்டிங். மை வச்ச விரல காட்டி.. கெத்தா போஸ் குடுக்க வேண்டிய விஜய்யை, முகத்துல கரி பூசி அனுப்பிட்டாங்க.
வாடிப்போன விஜய் மூஞ்ச பாத்ததும் கீர்த்தி சுரேஸ் பீல் ஆயிட்டாப்ல. கீர்த்தி சுரேஷ் அன்பை பார்த்து, வெள்ளைக்கார பொண்ண விரட்டிவிட்டுட்டு, தமிழ் பொண்ணு கீர்த்திய பி.ஏ.வா வச்சிக்கிறாரு விஜய். அப்புறம் படிப்படியா விஜய்யின் காதலியா மாறிடுறாங்க.
தமிழ்நாட்டு ரசிகர்கள் மனதை கவரவில்லை என்றாலும், கார்பரேட் மான்ஸ்டர் விஜய் மனதை கவர்ந்து விட்டார் கீர்த்தி. கீர்த்தி நீங்க வேற லெவல்… புடிக்கிறது எல்லா ஹை கிளாஸ் தான். நோ லோகிளாஸ்..
இதுலவே ஒரு அரைமணி நேரம் போயிடுது. அடுத்து ஆனால் பறக்கும் கதையை நகர்த்துகின்றார் முருகதாஸ். அந்த வேகத்துல போனதான, கதை என்னுதுன்னு வர்றவங்கிட்ட இருந்து தப்பிக்கமுடியும்.
கோணவாய் ராதாரவியின் ஆட்கள் தான் கள்ளஓட்டு போட்டதுன்னு விஜய்யின் டெக்னிக்கல் டீம் கண்டுபிடிக்குது. எலக்சன் ரிசல்ட் வரக்கூடாது. கள்ளஓட்டு முறைகேடு நடந்திருக்குன்னு விஜய் கேஸ் போடுறாரு.
விஜய்யின் விஸ்வரூபத்தால், வரலெட்சுமியின் சி.எம். கனவு தகர்கின்றது. விஜய் தனக்குன்னு ஒரு கூட்டத்தை உருவாக்கிட்டு, பைக்கில் ஊர்வலமாக போராட செல்கின்றார்.
அப்போ, விஜய்யை போலிசை விட்டு அடித்து துவைக்கின்றார் வரலெட்சுமி. அரசியல் செய்வதில் அப்பா சரத்குமாரையும் விஞ்சிவிட்டார். சரத்குமார் உங்க பொண்ண பாத்து கத்துக்கங்க.
பழ.கருப்பையா நிஜத்துலயும் அரசியல்வாதி, படத்துலயும் அரசியல்வாதியா நடிசிருக்காரு. வருவுக்கும் விஜய்க்கும் ஏற்பட்ட மோதல, தனக்கு சாதகமா பயன்படுத்த நினைக்கிறாரு எதிர்கட்சி தலைவர் பழ.கருப்பு.
ஓட்டு போட்டுட்டு, வெளிநாட்டுல மாடல் அழகிகளோட சுத்திக்கிட்டு இருந்த விஜய், கூவம், சேரி, சாக்கடைன்னு அலையிறாரு. இப்படிலாம் அலைஞ்சா தான தலைவனாகலாம், தமிழ்நாட்டின் சி.எம். ஆகலாம்.
சேரி தொகுதி மக்கள ஒன்னு திரட்டி, ஒரே இடத்துல்ல உட்காரவச்சு, பேஸ்புக், டிவிட்டர்ல லைவ் பண்ணுது விஜய்யின் டெக்னிகல் டீம்.
கத்தி படத்துல எப்படி தண்ணிய வச்சு ஓட்டுமொத்த சென்னையையும் அலறவிட்டாரு. அதே மாதிரி, ஒரு தொகுதிய வச்சு ஓட்டு மொத்த தமிழ்நாட்டின் தலையெழுத்தவே மாத்துராரு விஜய்.
உங்களுக்கான தலைவன தேர்ந்தெடுக்கும் நேரம் வந்திடுச்சு, மக்கள் முன்ன வனம் பேச, அந்த தலைவனே நீதானப்பா மக்க செல்ல விஜய் முகத்தில் மலர்ச்சி.
மக்கள் வாய்ல இருந்து இப்படி ஒரு வார்த்தை வரணும்னு தான, இவ்ளோவும் பண்ணுனது. இப்படி ஒரு பரபரப்பான காட்சில இன்டர்வெல்.
அடுத்து நம்ம முதல்வன் படம் மாதிரி விஜய் சி.எம்.ஆனாரா? எப்படி ஆனாருங்கிறது மீதிக்கதை!
இதுவரை அரசியல்னு வந்தாலே, முதல்வன் படம் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். சர்கார் படம் அந்த நிலையை மாற்றும். அடுத்து 20 வருசத்துக்கு இந்த படத்தோட தாக்கம் இருக்கும்.
படத்துல நிறைய இடத்துல கத்தி படத்தை போன்ற திரைக்கதை அமைப்பு தென்படும். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும், ரசிகர்களுக்குள் அரசியல் தாக்கத்தை உருவாக்கும்.
விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு, இந்த படம் நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுக்கும். படத்துல மட்டும் சி.எம். ஆனா போதுமா? நிஜத்துல எப்போ சி.எம். ஆவிங்க விஜய்.
இது ஒரு பிக்ஷனல் ரிவியூ. முழுக்க முழுக்க ரசிகர்கள் மற்றும் மக்கள் எண்ணங்களை வைத்து கற்பனையாக உருவாக்கப்பட்டது.
சர்கார் கதை திருட்டு? எஸ்.ஏ.சந்திரசேகர், முருகதாஸ் கூட்டு!
சர்கார் கதை யாருடையது? சர்கார் கதை யார் மூலம் திருடப்பட்டது. வெளிவராத உண்மைகள்.
முருகதாஸ் கதை திருடினார் என்ற குற்றச்சாட்டு தீனா தொட்ட காலம் முதலே உள்ளது. விஜய் படத்திற்கு சிக்கல் என்பது… இன்று நேற்று அல்ல, அவர் அரசியலில் குதிப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்த காலம் முதலே உள்ளது.
சர்கார் கதைத் திருட்டு. இதில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. உண்மையில் என்ன நடந்தது? ஆதி முதல் அந்தம் வரை.
‘செங்கோல்’ என்ற தலைப்பில் வருண் ராஜேந்திரன் 90-களிலேயே ஒரு அரசியல் கதையை உருவாக்கிவிட்டார். அக்கதையின் முக்கிய உயிர் நாடியே ‘கள்ள ஓட்டு’ பிரச்சனை.
பல வருடங்களாக, இக்கதையை வைத்து… வாய்ப்புத் தேடி அலைந்துள்ளார். ஒரு வழியாக, விஜய்யிடம் கதை சொல்ல அணுகியபோது, எஸ்.ஏ.சியின் அறிமுகம் கிடைத்தது.
விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்கின்ற ஆசையில், எஸ்.ஏ.சியிடம் உதவி இயக்குனராக சேர்ந்துள்ளார் வருண் ராஜேந்திரன்.
இறுதிவரை உதவியாளராக மட்டுமே இருக்க முடிந்தது. விஜய்யின் கால்சீட் கிடைக்கவில்லை. எஸ்.ஏ.சியும் படங்கள் இயக்குவதில்லை. உதவி இயக்குனர் பணியும் முற்றுப்பெற்றது.
எஸ்.ஏ.சி.யிடம் இருந்து விலகி செல்வதற்கு முன்பே, செங்கோல் படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் எஸ்.ஏ.சி.யிடம் கொடுத்துவிட்டார் வருண்.
கதை அங்கிருந்து விஜய்யிடம் சொல்லப்பட்டது. பின்பு முருகதாசிடம் கதை பற்றி கூறப்பட்டுள்ளது.
இப்படி தான் கதை முதலில் கசிந்து, பின்பு படமாகியுள்ளது. இருப்பினும் பாக்யராஜ், விஜய் மற்றும் எஸ்.ஏ.சியின் மானத்தை காப்பாற்றியுள்ளார். ஏன்?
சர்கார் என படத் தலைப்பு வைத்ததுமே, வருணுக்கு லேசாக சந்தேகம் எழுந்துள்ளது. படத்தின் டீசர் வெளியான அடுத்த நொடியே கண்டுபிடித்துவிட்டார். இது நம்முடைய செங்கோல் கதை என்று.
உடனே, இதுபற்றி எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அவருடைய அதிர்ஷ்டம், பாக்யராஜ் தலைவராக இருந்தது. காரணம், இருவரும் நன்கு பழக்கம்.
இருவரின் கதையையும் மொத்தமாக அலசி ஆராய்ந்ததில், கதை சுடப்பட்டது என நிரூபணமாகியது.
இந்த விஷயத்தை, காதோட காதாக வைத்து முடித்துவிடலாம் என பாக்யராஜ் முருகதாசிடம் சுமூகமாக பேசியுள்ளார்.
ஆனால், முருகதாஸ் எந்த சமரசத்திற்கும் ஒத்துவரவில்லை. கோர்ட் வரை செல்லவும் தயார் எனக்கூறியுள்ளார்.
சீனியர் இயக்குனர், திரைக்கதை ஜாம்பவான் சொல்லியும் முருகதாஸ் கேட்கவில்லை. எழுத்தாளர் சங்க விதிமுறைகளும், முருகதாசுக்கு ‘ரெட் கார்ட்’ போட சாதகமாக இல்லை.
முதலில் முருகதாசுக்கு ஒரு அறிக்கை. அடுத்து வருணுக்கு ஒரு அறிக்கை என இரு அறிக்கைகள் எழுத்தாளர் சங்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது.
பாக்யராஜ் அழுத்தத்தை பார்த்து அரண்டுபோன முருகதாஸ், பட ரிலீசுக்கு முன்பே மீடியாவை சந்தித்துவிட்டார்.
கத்தி படத்தின்போது, பாக்யராஜ் போன்ற ஒரு தூண் மீஞ்சூர் கோபிக்கு கிடைக்கவில்லை.
மீஞ்சூர் கோபி, வக்கீல்களின் நயவஞ்சக வலையில் வீழ்ந்து, கேஸை வாபஸ் வாங்க, கத்தி படம் கடைசி நிமிடத்தில் ரிலீஸ் ஆனது.
மீண்டும் விடாமுயற்சியுடன், முருகதாசை இறுக்கப் பிடித்து இழப்பீட்டுத் தொகையை பெற்றார் மீஞ்சூர் கோபி.
ஆனால் சர்கார் படத்தில், பாக்யராஜ் உருவில் ஒரு சங்கமே எதிர்த்து நிற்கின்றது. வீம்பு பிடித்தால், நிச்சயம் படம் வெளிவரப்போவதில்லை என்பது உறுதி.
முருகதாஸ் மீடியாவில் ஒப்பாரி வைக்க. பாக்யராஜ் மீது வீண் பழி சுமத்தப்பட்டது. ஏதோ உள்நோக்கத்துடன் பாக்யராஜ் செயல்படுகின்றார் என முருகதாஸ் கூறினார்.
பதிலுக்கு பாக்யராஜ், சர்கார் படத்தின் முழுக்கதையையும் மீடியா முன் கொட்டித் தீர்த்துவிட்டார். முருகதாஸுக்கு அழுத்தம் கொடுப்பதால், அவரை விட எனக்கு தான் பாதிப்பு அதிகம் என்று பாக்யராஜ் வெளிப்படையாக கூறினார்.
முருகதாஸ் எட்டு அடி பாய்ந்தால், பாக்யராஜ் 16 அடி பாய்ச்சலில் செல்ல, பாக்கியராஜை சமாளிக்க முடியாமல், முருகதாஸ் திணறிவிட்டார்.
மேலும், வருணை நீதிமன்றம் நட வைத்து, பக்கபலமாக இறுதிவரை பாக்யராஜ் கூடவே இருந்துள்ளார்.
விஜய் மற்றும் சன்பிக்சர் தரப்பு படத்தை வெளியிட வேண்டும் சுமூகமாக செல்லுங்கள் என முருகதாஸுக்கு அழுத்தம் கொடுத்தது.
மேலும், நீதிமன்றத்தில் வருணுக்கு சாதகமான நிலை என்றவுடன், வேறு வழியே இல்லாமல் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு விட்டார் முருகதாஸ்.
ஆனால், இறுதிவரை கதையை முருகதாஸ் திருடிவிட்டார். எஸ்.ஏ.சி திருடிவிட்டார் என முழு உண்மைகளையும் பாக்யராஜ் வெளியில் சொல்லி அவர்கள் பெயரை கெடுக்க விரும்பவில்லை.
ஓவ்வொரு முறையும் மீடியாவை சந்திக்கும் முன், விஜய், எஸ்.ஏ.சி., சன் பிக்சர்ஸ் மற்றும் முருகதாஸ் தரப்புகளிடம் தெளிவாக விளக்கம் அளித்துவிட்டு காய் நகர்த்தி உள்ளார்.
இறுதியாக இன்று நீதிமன்ற வாசலில், வருண் எஸ்.ஏ.சியிடம் உதவியாளராக பணியாற்றிய விவரத்தை வெளிப்படையாக கூறினார்.
வருண், பாக்யராஜ் உதவியாளர் என முருகதாஸ் மீடியாவில் கூறியதால், என் உதவியாளர் என்பதை விட எஸ்.ஏசி.யிடம் அதிக நாள் பணி புரிந்துள்ளார் என விளக்கம் கொடுத்துள்ளார்.
எந்த தரப்பும் பாதிக்கப்படக்கூடாது என்பது பாக்யராஜ் எண்ணம். பணம் பத்தும் செய்யும் என்பது முருகதாஸ் எண்ணம்.
சர்கார் படத்தின் கதை வருணுடையது என முருகதாஸ் டைட்டில் கார்டில் போட சம்மதிக்கவில்லை. தன்னுடைய பெயர் களங்கப்படும் என எடுத்துக்கூறினார்.
இதனால், கதைக்கரு அல்லது கதை சிந்தனை என வருண் பெயர் போடுங்கள் என அறிவுறுத்தினார். இதற்கு முருகதாஸ் ஓகே சொல்ல பிரச்சனை முற்றுப் பெற்றது.
மேலும், சிரித்த முகத்துடன் முருகதாஸ் வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில், வருணின் கதைத் திறமையை பார்த்து வியக்கிறேன். பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
இத நீங்க நாலு சுவத்துக்குள்ள இருக்கும்போதே செஞ்சிருந்தா, அந்த டைட்டில வருண் பேர கூட யாரு கவனிச்சு படிச்சிருக்க கூட மாட்டங்களே?
முருகதாஸ் யார் கதை திருடினார் என குற்றச்சாட்டு எழுகின்றதோ அவர்கள் எல்லாம் ஓவர் நைட்டில் பாப்புலராகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.
Movie Review Jarugandi – நிதின் சத்யாவால் தேசிய விருது மிஸ்!
Movie Review Jarugandi. ஜருகண்டி படம், ஆந்திரா பக்கம் போன புயல இழுத்து, சென்னை பக்கம் வுட்டுட்டாரு இயக்குனர் A.N. பிச்சுமணி. ரிவியூ பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது முழுமையாக படிக்கவும்..
பின்குறிப்பு:-
இதை படிக்கும் படக்குழு ரிவியூ எப்படி இருக்குனு ஒரு ரிவியூ குடுக்கவும்… +919092626259 என்னுடைய வாட்ஸ்ஆப் எண்ணிற்கு. இல்லன ரத்தம் கக்கி சாவிங்க…
காலைல நம்ம ஊரு திரையரங்கத்துல வேல பாக்குற நண்பருக்கு போன் போட்டேன். இந்த வாரம் என்ன புதுப்படம் வந்திருக்கு விமர்சனம் பண்ணனும்னு, ஜூனியர்னு ஒரு படம் வந்திருக்குன்னு சொன்னாப்ல.
மத்த தியேட்டர்ல போனவாரம் வந்த ‘மெட்ராஸ் கோழி‘ ரெண்டு படமும் ஓடுது. இன்னொரு தியேட்டர்ல ஜூனியர் படம் மாத்திருக்குனு சொன்னாப்ல. அது ஜூனியர் இல்ல, ஜீனியஸ்னு நான் சொன்னேன்.
நாம ரிவியூ பண்ணனும்னு நினைச்ச படத்தவே எடுத்துட்டாணுவனு ஒரே சந்தோசம். அந்த தியேட்டர்ல எப்பவும் ஒன்னத்துக்கும் ஒதவாத படமா எடுத்து ஓட்டுவாரு தியேட்டர்காரர். நம்ம ஊரு டிசைன் அப்டி.
தியேட்டர் பக்கம் போனா, டைட்டில் ‘ஜருகண்டி’ன்னு இருந்துச்சு. ஒருவேள படம் எதுவும் எடுக்கல திரும்பிப்போனு சொல்லுராகளா…. இல்ல நம்ம பய சொன்ன மாதிரி, ஆந்திரா ஜூனியர் என்.டி.ஆர் படமோன்னு நெனச்சேன்.
கொஞ்சம் மேல பாத்தா, நம்ம இளைய தளபதியாக ஆசையா இருக்குன்னு சொன்ன ஜெய் படம். அப்ப தான் தெரிஞ்சது இப்படி ஒரு படம் இன்னிக்கு ரிலீஸ் ஆயிருக்குன்னு.
தியேட்டர்காரர் மேல சுத்தமா நம்பிக்கை இல்ல. இருந்தாலும், கண்கள் இரண்டால் பாட்டுல சலிக்காம பாத்த நம்ம ஜெய் பய தான நடிச்சிருக்காப்ளனு, நம்ம தாடிவாலாவுக்கும்.. எனக்கும் சேர்த்து ரெண்டு டிக்கெட் எடுத்துட்டோம்.
வேற வழி… 20 கிலோமீட்டர் ட்ராவல். மழை வேற தூறுது. வேற எங்க போறது….
பக்கதுல மெட்ராஸ் படம் ஓடுது… அதான்பா வடசென்னை… ஆண்டிரியாவுக்காக இன்னொரு வாட்டி போலாம்னு பாத்தா, ரிவியூ போடனுமேனு… புது படத்துக்கே போயிட்டோம்…
டேய் நிருத்து…. என்னடா ஜருகண்டி திரைவிமர்சனம்.. தேசிய விருதுன்னு சொல்லிபுட்டு… உன் சொந்த கதையை அடிச்சி விட்றனு கேக்குறீங்களா? அத விட இத படிக்க சுவாரஸ்யமா இருக்கும் அதான்….
சரி படத்த பத்தி சொல்லுறேன்…
தேசிய விருது கெடைக்க வேண்டிய படத்த… நிதின் சத்யா பய கெடுத்து வச்சிட்டாப்ல… நா என்னத்த சொல்ல…
நடிக்கிற வேல இல்லன்னு… நம்ம நிதின் சத்யா படத்த தயாரிக்க வந்துட்டாப்ல.. அவரு தான் தயாரிப்பாளராம். கூகிள் ஜி பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்.
ஓப்பன் பண்ணா ஜெய் வாய்ஸ்… என் பேர் சத்யானு, நம்ம நிதின் சத்யாவ காட்டுனாங்க.. ஏழு குண்டலவாடா இதென்ன மதுரைக்கு வந்த சோதனை…
ஜெய் டப்பிங் பேச… நம்ம நிதின் சத்யாவே நடிச்சிட்டாரோனு ஒரு ஷாக்… கேமரா அப்டியே ஜெய் பக்கம் திரும்பிச்சு… இப்ப தான் கொஞ்சம் நிம்மதி…
ஏன்னா… டைட்டில் கார்டுல போட்ட மியூசிக் அப்டி.. கொஞ்சம் விட்டா ஹார்ட் அட்டாக் வந்திருக்கும். பக்கத்துல இருந்த தாடிவாலாட்ட சொன்னேன்.. ரெண்டு சத்யாடா படத்துலன்னு..
சொன்னது தான் தாமதம்… அத்தோட நிதின் சத்யாவ காணோம். படம் எடுக்க காசு பத்தலபோல, அநியாயத்துக்கு ரூம் குள்ளவே ஷூட்டிங்….
ஷாட் ஓகேவோ? இல்லையோ? ஜருகண்டி… ஜருகண்டின்னு… டேக் வாங்காம, அடுத்தடுத்த ஷாட்ன்னு, போயிட்டே இருக்காப்ல டைரக்டர் பிச்சுமணி.
பட்ஜெட் பிராப்ளம்னு பாத்தா, அப்புறம் தான் புரியுது… பட்ஜெட்டே ப்ராப்ளம்னு. ஷார்ட் பிலிம் எடுக்க வச்சிருந்த காச வச்சு, பியூச்சர் பிலிம் எடுத்திருகாரு போல நிதின்.
பக்கத்துல இருக்க தாடிவாலா, மொக்க போடுதுன்னு பாத்தா… படத்துல நம்ம டேனி தாடிவால தொல்ல தாங்க முடியல. ரோபோ ஷங்கர் வர சீன்ல தான் ஏதோ காமெடி ஒர்க்கவுட் ஆயிருக்கு.
நம்ம மொட்டை… போபோ சஷி போட்ட மியூசிக் கேட்டதுமே அல்லு விட்ருச்சு. அதுக்கு இதமா ரோபோ கொஞ்சம் ஒத்தடம் கொடுத்து இருக்காப்ல.
விஜய் சேதுபதி நடிச்ச ‘நல்ல நாள் பாத்து சொல்லுறேன்’ படத்தோட மியூசிக்கு… இது எவ்ளோவோ தேவலன்னு ஒரு ஆறுதல். சும்மா 50 வருட தமிழ் சினிமால வந்த மியூசிக்க வளச்சு வளச்சு கலந்து கட்டி அடிச்சி விட்ருக்காப்ல…
மொட்ட சிவாஜி… நீ மறுபடியும், ஆந்திராவுக்கே போயிடு சிவாஜி… இசைக்கு போட்டியா சவுண்டு மிக்சிங்.. அடா..டா..டா.. மசால்வட மசால் வட தான். நல்லா டிசைன் டிசைனா வட சுட்ருக்காப்ல..
அடுத்து நம்ம கேமரா இயக்குனர், அவரு வேற ஆட்டி ஆட்டி எடுத்து கண்ண கலங்க வச்சிட்டாரு.. எப்படி கலங்க வச்சாரு பாத்திங்கள்ள..
இவ்ளோ ரண களத்துளையும், டைரக்டர் ஒரு பிட் சீன் கூட வக்கல. அதுக்காக ஒரு பாராட்டு. இருந்தாலும், அந்த ஹாஸ்பிட்டல் க்ளோஸ்அப் தவிர்த்திருந்தா…100% கிளியர் குடுத்துருக்கலாம்.
ஹீரோயின ஸ்கிரீன்ல பாத்த வரை மீ..டூ..வுக்கான அறிகுறி எதுவும் தெரியல. இருந்தாலும், சேப்டிக்கு ஒரு வீடியோ ரெக்கார்ட் எடுத்து வச்சிக்கங்க. நாள பின்ன.. பெரிய ஆள் ஆயிட்டா, உங்கள வச்சி செஞ்சிடப்போவுது…
எல்லாத்துக்கும் காரணம், நிதின் சத்யா. அவரு நடிக்காம, நண்பர் ஜெய்ய நடிக்க வச்சு அழகு பாத்துருக்காருன்னு பாத்தா, ஜெய்கு இருந்த மார்கெட்டவும் இறக்கி விட்டுட்டாப்ல.
படம் பாத்து முடிச்சிட்டு, ரிவியூ எழுதுறதுக்கு முன்ன.. படத்தோட காஸ்ட் அன் குரூவ் பத்தி, கூகுள்… டிவிட்டர்னு ஆராய்ச்சி பண்ணேன்.
நிதின் சத்யா மற்றும் இயக்குனர் ட்விட்டர் பக்கத்த ஆராய்ச்சி செஞ்சப்போ…
இயக்குனர் பீம்ஜி, அதான்பா பா.ரஞ்சித் ஒரு ட்விட் பண்ணிருக்காரு. பாசமிகு நண்பன் பிச்சுமணி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்’னு ஒரு ட்வீட் போட்ருக்காப்ல.
அடடா… பா.ரஞ்சித் மாதிரி வர வேண்டிய பிச்சுமணிய, ஏலம் விட்ற வடிவேலு பிச்சுமணியா மாத்திடிங்களே சத்யா… பட்ஜெட் இல்லததால தேசியவிருது மிஸ் ஆயிட்டு. பாவம் நம்ம பிச்சு…
அப்புறம் ஒரு ட்விட், பிரின்ஸ் ராசன் ஒருத்தர்… சம்பளமும் கொடுத்து நடிக்கவும் வச்சதுக்கு நன்றின்னு போட்ருந்தாப்ல. படத்துல ஜெய்யவும், ஹீரோயினவும் தவற… மத்த எல்லாருமே கெஸ்ட்ரோல் தான்…
இந்த பிரின்ஸ் ராசன் எப்போ வந்தாரு.. எப்போ போனாருன்னு தெரியல. இருந்தாலும் சம்பளம் கிடைச்சதுன்னு சொன்னதும் பெரிய ஆச்சரியமா இருந்தது.
நிதின் சத்யா.. உண்மையாவே உங்க படத்தோட பட்ஜெட் எவ்ளோ? எனக்கு ஒரே டவுட்டா இருக்கு. உங்க பணம் எவ்ளோ? பத்ரி கஸ்தூரி பணம் எவ்ளோ?
உண்மையாவே ஆர்டிஸ்ட் பாராட்டுற அளவு தயாரிப்புன்னா… அதுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.. ஏன்னா அம்புட்டு பேரும்.. படம் முடிஞ்சதும்.. பேமென்ட் வரலன்னு கழுவி கழுவி ஊத்துவானுங்க.. யூவார் கிரேட்..
சுரேஷ் சந்திரா பி.ஆர்.ஓ. பண்ணியும் வியாழகிழம ஏன் படத்த ரிலீஸ் பண்ணல? சென்டிமென்ட்டா விசுவாசம் போஸ்டர… உங்க படத்தோட இடைவேளைல வுட்ருந்தா… கூட்டம் அள்ளிருக்குமே!!!
ஒருவேளை.. இளைய தளபதி ஜெய் ஒத்துகலையோ… விஜய் மேல காண்ட… அட்லீ மேல காண்டன்னு தெரியல.. மூன்று முகம் ரஜினி போலீஸ், மெர்சல் விஜய் போலீஸ்னு கலாய்ச்சுருக்காப்ல.
ஏப்பா சுட்லீ, நீ பேரு வாங்கிக்கொடுத்த ஜெய்யே… சுடாத பழமா? சுட்ட பழமான்னு? காட்டிக் குடுத்துட்டாரேப்பா… அடுத்த படத்துக்கு, எத்தன பேர் புட்டேஜ் ரெடி பண்ணி, டீல் பேச போறானுங்களோ!!!
இத மொக்க படம்னு சொன்னா.. இதவிட மொக்க படங்களுக்கு கவுரவ குறைச்சல் ஆயிடும். அதனால இத ஒரு ஸ்டெப் மேல விட்ருவோம்…
இதுவர இவ்ளோ பெருசா… எந்த படத்துக்கும் ரிவியூ எழுதுனது இல்ல.. இதுக்கு மட்டும் ஏன்டா இவ்ளோ பெருசா எழுதி வெறுப்பேத்துறன்னு… வாசகர்கள் டென்சனாக வேண்டாம்.. இது உங்களுக்கு எழுதுனது இல்ல..
இந்த மாதிரி படம் எடுக்குற படக்குழு… படிச்சிட்டு மண்டைய பிச்சிக்கணும்னு எழுதுனது… எவ்ளோ நாள் தான் இவங்க படத்த பாத்து நம்ம மண்டய பிச்சிக்கிறது.. ஒரு சேஞ்சுக்கு ரிவியூங்கிற பேர்ல டார்ச்சர் பண்ணுவோம்….
பின்குறிப்பு:-
இதை படிக்கும் படக்குழு ரிவியூ எப்படி இருக்குனு ஒரு ரிவியூ குடுக்கவும்… +919092626259 என்னுடைய வாட்ஸ்ஆப் எண்ணிற்கு. இல்லன ரத்தம் கக்கி சாவிங்க…
ரபேல் ஊழல்: சிபிஐ-யை வீட்டுக்கு அனுப்பினார் மோடி!
ரபேல் ஊழல், பாஜக மீது வைக்கப்பட்ட மிகப்பெரிய குற்றச்சாட்டு. மோடி அரசின் ஊழலை அனைத்துக் கட்சிகளும் கூட்டாக ஊதி பெரிதாக்கி விட்டனர்.
ரபேல் ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட சி.பி.ஐ. விசாரணை குழுவின் இயக்குனரை கட்டாய விடுப்பு கொடுத்து அனுப்பி விட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானில் மாநிலத்தில், நடந்த பொதுக் கூட்டத்தில், நேற்று ராகுல் காந்தி பேசியதாவது,
”ரபேல் போர் விமானங்களை வாங்கும்போது நடைபெற்ற ஊழல் பற்றி கேள்வி எழுப்பியதும், சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளனர். என காங்கிரஸ் தலைவர், ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும் ”மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லியின் மகளுடைய வங்கி கணக்கில், வங்கி கடன் மோசடியில் ஈடுபட்ட மெஹுல் சோக்சி என்பவர் பணத்தை டெபாசிட் செய்துள்ளார் எனத் தெரிவித்தார்.
இதன் மூலமே பாஜக இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் அரசு. ஏமாற்றும் அரசு என கடும் விமர்சனம் செய்துள்ளார் ராகுல் காந்தி.
Sindhu Jayakumar Exclusive Story and Photos
Sindhu Jayakumar Exclusive Story and Photos
அமைச்சர் ஜெயக்குமாரின் மனைவி சிந்து என வாட்ஸ்ஆப்பில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. மேலும் விகடன் இணையதளத்தில் சிந்துவின் புகைப்படத்தை முகத்தை மறைத்து வெளியிட்டுள்ளார்.
யார் இந்த சிந்து. எப்படி ஜெயக்குமாருடன் நெருக்கமானார், எப்படி விஷயம் வெளியில் கசிந்தது… அமைச்சர் ஜெயக்குமார் சிந்துவுக்கும் எவ்வளவு நாள் பழக்கம்.
சிந்துவின் தாய் ஜெயக்குமாரை சிக்கவைத்தது எப்படி என விரிவான ஒரு அலசல்.
விரிவான தகவல் கீழே உள்ள வீடியோவில் தரப்பட்டுள்ளது.
Movie Review Sandakozhi 2 | சண்டக்கோழி 2 திரைவிமர்சனம்
Movie Review Sandakozhi 2 | சண்டக்கோழி 2 திரைவிமர்சனம். சைடிஸ் மட்டும் தான் இருக்கு. சரக்க காணோம்.
சண்டக்கோழி 2, முதல் பாகத்துக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அவருடைய படத்தை, அவரே காப்பியடித்து இரண்டாம் பாகம் எடுத்துள்ளார். மீரா ஜாஸ்மினும், அத்தை மகள்களும் மிஸ்ஸிங்.
படத்தில் ரசிக்க வைத்த காட்சி. வயசானாலும் ராஜ்கிரண் அடிதடி மட்டும் அப்படியே இருக்கு. சைலண்டா நடிச்ச கீர்த்தி சுரேஷ், வாலு பொண்ணாக நடித்தது. மீரா ஜாஸ்மின் அளவு இல்லைனாலும் ஓகே.
முதல் பாதியே சுமார் தான். இரண்டாம் பாதியில், முதல் சீன் பார்த்ததுமே தெரிஞ்சிடுச்சு. லிங்குபாய் தியேட்டருக்கு வந்த எல்லாரையும் தரமா சம்பவம் பண்ணப் போறாருன்னு.
படத்தில் இருக்கும் எல்லா கேரக்டர்களுமே மொக்கை. எதுக்கு இவ்ளோ பேர். எதுக்கு வரலெட்சுமி, மெட்ராஸ் ஜானி பகை. தீம் மியூசிக் மட்டும் தான் இருக்கு. கன்டென்ட் மிஸ்ஸிங்.
லாஜிக் ஓட்டைலாம் இல்ல, பாதாள சுரங்கமே கட்டி வச்சிருக்காரு. அரச்ச மாவை அரைக்கலாம். அதையும் எத்தனை நாள் அரைக்க முடியும்.
அரச்சு அரச்சு, மாவு கண்ணுக்கே தெரியாம ஒரு நாள் ஆவி ஆயிடும். அப்படித்தான் இருக்கு லிங்குசாமியின் சமீபகால படங்கள்.
அஞ்சான் படத்தில் சரிந்த மார்கெட்டை, சண்டக்கோழி படத்தின் மூலம் சரி செய்வார் என நம்பிக்கையுடன் படம் பார்க்க சென்றேன். அவர் மேல் இரக்கப்பட்டதற்கு கிடைத்த தண்டனை சண்டக்கோழி 2.
லிங்குசாமி இனி தமிழ்சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதே நல்லது. நீங்க கத்துகிட்ட மொத்த வித்தையவும் திரும்ப திரும்ப இறக்குவதற்கு நாங்க தான் கிடைத்தோமா?
சண்டைகோழி 2 – சைடிஸ் மட்டும் தான் இருக்கு. சரக்க காணோம்.
Movie Review VadaChennai | வடசென்னை – த்ரில் ஹிட்
Movie Review VadaChennai | வடசென்னை – த்ரில் ஹிட். வடசென்னை திரைவிமர்சனம்.
வடசென்னையை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்துவிட்டன. ஒவ்வொரு படமும் ஒருவித பிரச்சனைகளை பற்றிப் பேசினாலும், அனைத்துப் படங்களுமே நார்த் மெட்ராசின் முக்கிய அம்சங்களை கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும்.
இதுவும் அங்கு நடந்த சில உண்மை சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளிவந்த தாதா, ரவுடி, கேங்வார் படங்களைப் போன்று தான் இதுவும். கதை பழசு.
முதல் பாதியை பார்க்கும்போது நம் மனதில் தோன்றியதும் அதுவே. இந்த படத்துல என்ன புதுசா சொல்லப்போறாங்க. இந்த படத்த எடுத்து முடிக்க இவ்ளோ நாளா? என சலிப்பு தட்டியது.
எக்கசக்க கேரக்டர்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்ய, ஆடியன்ஸ் முகத்தில் குழப்பத்தைக் காண முடிந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் ஓவ்வொரு முடிச்சாக அவிழ்த்து. அனைத்து கேரக்டர்களையும் மனதிற்குள் பதியவைத்துவிட்டார் வெற்றிமாறன்.
கதை பழசு என்பதை வெற்றிமாறனின் ஸ்க்ரீன்ப்ளே மறக்கடித்துவிட்டது. இப்படத்தின் ஸ்கீரின்ப்ளே மட்டும் பலவீனமாக அமைந்திருந்தால், படம் நிச்சயம் ப்ளாப்.
அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்கள், யூகிக்க முடியாத கதை நகர்வுகள், யூகிக்க முடியாத காட்சிகள், மிரட்டலான பைட் சீன்கள் என கிளைமேக்ஸ் வரை அதகளப் படுத்திவிட்டார் வெற்றிமாறன்.
ஆடியன்சை கவர்ச்சியால் கிறங்கடிக்க, ஐஸ்வர்யா ராஜேஸ் மற்றும் ஆண்டிரியா இடையே கடும் போட்டியே நடந்துள்ளது என சொல்லலாம். அந்த அளவிற்கு ஆடைகளை களைவதில் தாராளம் காட்டியுள்ளனர்.
படத்தில் மேலாடை இல்லாமல் வரும் ஆண்ட்ரியா, உள்ளாடை இல்லாமல் வரும் ஐஸ்வர்யா நிஜமாக நடித்தது போல் இருந்தாலும், மார்பிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கலாம்.
மற்றபடங்களில் இல்லாத ஒரு விஷயம், கெட்ட வார்த்தைகள் சரளமாக பயன்படுத்தப்பட்டது. நிஜத்தில் வடசென்னை எவ்வளவு கலீஜ் என்பது நச்சென்று வெளிப்பட்டுள்ளது.
படத்திற்கு இசை, ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள் கூடுதல் பலம். படத்தில் வரும் நிறைய கதாப்பாத்திரங்கள் நன்கு அறிந்த முகங்களே. அனைவருமே நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியிருந்தனர்.
படத்தின் முக்கிய ஹீரோ ராஜன். ராஜன் கதாப்பாத்திரத்தில் நடித்தது வேறுயாருமல்ல, இயக்குனர் அமீர். நடிப்பில் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துவிட்டார்.
80, 90களில் எம்.ஜி.ஆர் ஆட்சியின் கீழ், வடசென்னை தாதாவை நேரில் பார்த்த அனுபவம். அப்படி ஒரு நடிப்பு. படத்தின் முக்கியத் தூண் அமீர் அமீர் அமீர்….
படத்தில் குறையெனில், அனைவருக்கும் தலையில் ‘விக்’ மாட்டி வேடிக்கை காண்பித்தது. அதற்கு காரணம், படத்தின் தாமதம் என நினைக்கிறேன்.
படம் எடுப்போமா என வெற்றிமாறனே ஒரு நேரத்தில் நம்பிக்கை இழந்திருக்க கூடும். தனுஷ் அந்த அளவிற்கு படத்தில் நடிக்க தாமதப்படுத்திவிட்டார்.
மொத்தத்தில், வடசென்னை த்ரில் ஹிட்.
சர்கார் படத்தை முடக்க சதி: விஜய் மகிழ்ச்சி!
சர்கார் படத்தை முடக்க சதிவலை பின்னப்பட்டுள்ளது. அதைப் பற்றி கவலைப்படாமல் விஜய்யும், முருகதாசும் படு ஹேப்பியாக உள்ளனராம்.
விஜய் சத்தம் இல்லாமல், ரத்தம் சிந்தாமல் நடித்தாலே ஏகப்பட்ட பஞ்சாயத்துகளை சந்திப்பார். மெர்சலா அரசியல் பேசிய இப்படத்திற்கு மட்டும் இன்னும் பிரச்சனையே எழவில்லையே?
இப்படத்தை பார்த்து, சன்பிக்சர் கலாநிதி மாறனே கொஞ்சம் பயத்தில் உள்ளாராம். காரணம், சமீபத்தில் நடந்த சர்கார் ஆடியோ விழா.
விஜய் மேடை ஏறியதும், தீபாவளி பட்டாசை முன்கூட்டியே வெடித்து தள்ளிவிட்டார். விஜய் பேசியது மற்றும் தடையாக மைக் ஸ்டான்ட் இருக்கக் கூடாது என பிரசன்னா நகர்த்தியது வரை அனைத்தும் செட்டப்.
முன்கூட்டியே விஜய் எப்படி பேச வேண்டும், பிரசன்னா எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும். பக்காவாக ஸ்கிரிப்ட் ரெடி செய்து கொடுத்துள்ளார் முருகதாஸ்.
இது காலாநிதி மாறனுக்கே தெரியாமல் நடந்துள்ளது. இதனால் படம் சென்சாருக்கு அனுப்பும்முன் தி.மு.க.விற்கு எதிராக வசனம் உள்ளதா என செக் செய்து அனுப்ப முடிவு செய்துள்ளாராம்.
அடுத்து மத்தியிலும், மாநிலத்திலும் படத்தின் சென்சாருக்காக காத்துக்கொண்டு உள்ளனராம். அவர்களுக்கு எதிராக வசனம் இருந்தால் படத்தை முடக்க முடிவு செய்துள்ளனராம்.
படம் ரிலீஸ் வரை அமைதி காத்து, ரிலீசானவுடன் பாதுகாப்பை காரணம் காட்டி, படத்தை பாதியிலேயே நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரச்சனையை சந்திக்க வேண்டும் என முடிவு செய்தே, சர்கார் படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, விஜய்யும், முருகதாசும் படு ஹேப்பியாக உள்ளனராம்.







