Home Blog Page 330

பெண்களை மயக்கும் வாசனை திரவியம் பற்றிய சீக்ரெட்!

0

பெண்களை மயக்கும் வாசனை திரவியம் பற்றிய சீக்ரெட்!

வாசனை திரவியத்தை (fragrance) அடித்துக்கொண்டால் பெண்களை மயக்கலாம். எந்த ஒரு வாசனை திரவிய நிறுவனமும் இந்த முறையில் விளம்பரம் செய்யத் தவறுவதில்லை.

Axe perfume, Fogg perfume, Kenzo perfume இப்படி நிறைய நிறுவனங்கள் தங்களுடைய விளம்பரங்களில், பெண்களை கவர்வது பேன்றே உருவாக்கி இருப்பார்கள்.

எங்களுடைய வாசனை திரவியத்தை பயன்படுத்தினால் பெண்கள் சுற்றி சுற்றி வருவார்கள். வாசனையை நுகர்ந்தவுடன் மடியில் சாய்வார்கள் என்றெல்லாம் விளம்பர படுத்தியுள்ளனர்.

இந்த வாசனை திரவியம் பயன்படுத்தினால் பெண்கள் மயங்குவார்களா? என்ற கேள்வி 50-50 என்று சொல்லலாம். சிலருக்கு வாசனை பிடிக்கும், சிலருக்கு பிடிக்காமல் கூட போகலாம்.

இந்த வாசனை திரவியம், பட்டனை அழுத்தியதும் எப்படி பாட்டிலில் இருந்து பீறிட்டு வெளியே வருகின்றது என்பதை பற்றிய பதிவு தான் இது.

இதை அறிந்துகொள்ளாமல் பலர் ஒரு மதிப்பெண்ணில், அரசு வேலையை இழந்துள்ளனர். அதுபற்றி தெரியுமா?

வாசனை திரவிய பாட்டில்கள் அனைத்தும், பெர்னோலி தத்துவத்தின் அடிப்படையில் தான் இயங்குகின்றது.

பெர்னோலி தத்துவம்

பாய்மவேகம் உயரும்பொழுது, அந்த பாய்மத்தின் அழுத்தம் அல்லது நிலையாற்றலும் அதே வேளையில் குறையும்.

பள்ளிபருவத்தில் இந்த தத்துவத்தை நீங்கள் படித்து இருப்பீர்கள், ஆனால் அது எங்கு செயல்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்கு முறையாக கற்றுத்தரப்படவில்லை.

படத்தில் உள்ளவாறு தான் வாசனை திரவிய பாட்டில் அமைப்பு இருக்கும். வாசனை திரவியம் முக்கால் பங்கு நிரப்பப்பட்டு இருக்கும். மீதி உள்ள பகுதியில், காற்று அதிக அழுத்தத்தில் நிரப்பப்பட்டு இருக்கும்.

மேலே உள்ள மூடியை அழுத்தியவுடன் பெர்னோலி தத்துவம் மூலம் வாசனை திரவியம் வெளியேறும்.

பாட்டிலின் வெளியே காற்று சமநிலையில் இருக்கும். அதாவது பாட்டில் உள்ள அழுத்தத்தை விட வெளியில் உள்ள காற்றின் அழுத்தம் மிகவும் குறைவு.

மூடியை அழுத்தியதும், பாட்டில் உள்ள காற்று அழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி வெளியேற நினைக்கும்.

வாசனை திரவியம், பாட்டிலினுள் இருக்கும் காற்றுக்கும், வால்வின் ஓட்டைக்கும் இடையில் இருக்கும். இதனால், காற்று கொடுக்கும் அழுத்தத்தின் மூலம், முதலில் வாசனை திரவியம் வெளியேறும்.

ஓவ்வொரு முறையும் பட்டனை அழுத்தும் போதும், வாசனை திரவியம் இப்படித்தான் வெளியே வரும். வாசனை திரவியம் முழுமையாக தீர்ந்தவுடன் தான் இறுதியாக காற்று மட்டும் புஸ் புஸ் என்று வெளியில் வரும்.

அல்லது, காற்றும் வாசனை திரவியத்துடன் சேர்ந்தே வரும். காற்று தீரும்போது வாசனை திரவியமும் தீர்ந்துவிடும்.

நாமும் வாசனை திரவியம் தீர்ந்தவுடன் பாட்டிலை வீசி விடுவோம்.

காற்று, அழுத்தம் அதிகமான பகுதியில் இருந்து, அழுத்தம் குறைவான பகுதியை நோக்கி செல்லும். இதுவே பெர்னோலி தத்துவம்.

இந்த அடிப்படையில் தான் கேஸ் சிலிண்டரும் இயங்குகின்றது. அதிக அழுத்தத்தின் மூலம் அடைக்கப்பட்டு இருப்பதால், வால்வு லேசாக விலகினாலும் பீறிட்டு வெளியேறும்.

இப்பொழுது பெர்னோலி சமன்பாடு பற்றி தெளிவு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறன்.

இது பள்ளி தேர்வில் மட்டுமல்ல, TNPSC தேர்வுகள் மற்றும் மத்திய மாநில அரசுகள் நடத்தும் வேலைவாய்ப்பு தேர்வுகளில் பெரும்பாலும் கேட்கப்படும் கேள்வி.

எனவே, பெர்னோலி என்றவுடன் செண்ட் பாட்டிலை நினைத்துக்கொண்டால் போதும் எளிதில் விடை அளித்துவிடலாம்.

3

2.0 டெல்டா மக்களின் துயர் துடைக்கும் படம்!

0
2.0

2.0 டெல்டா மக்களின் துயர் துடைக்கும் படம்!

நேற்று வெளியான 2.0 மூவி அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுவிட்டது. அதே நேரத்தில் டெல்டா மக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில், இப்படம் தேவையா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இப்படத்தை பார்க்க வேண்டியது முதலில் அவர்களே. விவசாயம் அழிகின்றது என விவசாயியே தன்னை அறியாமல் விவசாயத்தை அழித்துக்கொண்டு உள்ளான்.

கஜா புயல் பாதிப்பு. ஏராளமான மின்கம்பங்கள் சாய்வு. செல்போன் கோபுரங்கள் பிடுங்கி எறியப்பட்டது. 2.0 படமும் செல்போன் கோபுரத்தின் பாதிப்பு பற்றியது தான்.

உங்களுடைய போராட்டத்தை அரசுக்கு எதிராக நடத்தாமல், செல்போன் கோபுரங்களுக்கு எதிராக மாற்றுங்கள். அடுத்த நொடியே பிரதமரே நேரில் வந்து சந்திக்கும் நிலை உருவாகும்.

உங்கள் ஊரில், செல்போன் கோபுரங்கள் இன்னும் சரிசெய்யப்பட வில்லையெனில், சரி செய்ய அனுமதிக்க வேண்டாம். அது விவசாயத்தை அழிவில் இருந்து மீட்கும் செயல்.

செல்போன் கோபுரம் மட்டும் தான் பாதிப்பா? எனக்கேட்டால் இல்லை. பூச்சிக்கொல்லி மருந்துகளும் ஒருவகை பாதிப்புகளே.

கார்பரேட் நிறுவனங்கள் கொடுக்கும் அழுத்தத்தில், அரசியல் கட்சிகள் ஆடிப்போகும். உடனே செல்போன்களுக்கு எதிராக போராட்டத்தை தடுக்க, நலத்திட்ட உதவிகள் நொடிப்பொழுதில் வந்து சேரும்.

அதைவிடுத்து, சாப்பாட்டிற்காக வாகனம் பின்பு ஓடி ஓடி தேய்ந்தாலும், உங்களை கண்டுகொள்ள சக தமிழர்களுக்கே நேரமில்லை.

3

2.0 Review 2D – பாகுபலியை பஸ்பமாக்கிவிட்டார் சங்கர்!

0
2.0 Review

2.0 Review 2D – பாகுபலியை பஸ்பமாக்கி விட்டார் சங்கர்!

2 point 0 படத்தை முதல் நாள் பார்க்கவே மனமில்லை. ரிவியூ போடவேண்டும் என்று நினைத்தாலும் ஒரே மழை.

மழையின் நடுவே அடித்து புடித்து ஓடினால், தியேட்டரில் ரசிகர் ஷோ என்ற பெயரில் கட்டணக்கொள்ளை வேறு இருக்கும். இரவில் இருந்து என் வீட்டில் பவர்கட். காலை பத்து மணியாகியும் வரவில்லை.

வீட்டில் இருந்தாலும் வெட்டியாக இருக்க வேண்டும். அதற்கு படத்திற்கே போகலாம் என கடைசி நிமிடத்தில் முடிவெடுத்து, 250 ரூபாய்க்கு ப்ளாகில் டிக்கெட் வாங்கி திரையரங்கிற்குள் சென்றேன்.

படம் 3D இல்லை 2D மட்டுமே. 250 குடுத்து வெறும் 2D தானா. படத்துல பெருசா ஒன்னும் இருக்கப்போறது இல்ல. 3D-ல பாத்தாலாவது 4, 5 ஷாட்டு ப்ரமிப்பாவாது இருக்கும். அதுவும் போச்சா என நொந்து கொண்டேன்…

கிராபிக்ஸ்ங்கிற பேர்ல ஏற்கனவே பார்த்து சலிச்சு போன ஆங்கில படங்களின் தாக்கம் தான் இருக்கப்போகுது. வேற என்ன புதுசா இருக்கப்போகுது. படத்துல இருக்க ஓட்ட உடைசல் எல்லாத்தையும் ஒன்னு விடாம ரிவியூல கிழி கிழின்னு கிழிச்சிடனும்.

படம் துவங்கும் முன்பு வரை இதுதான் என் மனநிலை. படம் ஆரம்பித்து காட்சிகள் நகர நகர ஓட்டு மொத்த கவனமும் திரையில் மட்டுமே இருந்தது.

படம் எப்படி?

படத்தை பார்ப்பது 2D-யில் தான். ஆனால் ஒவ்வொரு காட்சியும் என்னை அசர வைத்துவிட்டது. இந்தப் படத்தை முதல் நாள் பார்க்காமல் விட்டால், நிச்சயம் வருத்தப்பட்டிருப்பேன்.

இந்திய சினிமாவை கிட்டத்தட்ட ஹாலிவுட்டுடன் சமன் செய்துவிட்டார் சங்கர். அதுவும் வெறும் 500 கோடியில். இன்னும் ஒரு 500 கோடி கொடுத்தால், அவதாரை கூட விஞ்சி விடுவார் போல…

ஐ படத்திற்கு பின், ஷங்கர் பணத்தை வீணடிக்கும் இயக்குனர் எனப்பெயர் பெற்றார். அந்த நேரத்தில் சரியாக களம் இறங்கிய ராஜமௌலி, சங்கரை பீட் செய்துவிட்டார் என பேசப்பட்டது.

இந்த படத்திற்கு பிறகு ஓட்டு மொத்த இந்திய சினிமாவும், வாயடைத்துப்போகும். இன்னும் கொஞ்சம் அதிகம் செலவு செய்திருந்தால் ஹாலிவுட்டை கூட ஓவர்டேக் செய்துவிடும்.

கிராபிக்ஸ் பிரமாண்டம், இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் இப்படி ஒன்று கூட சோடை போகவில்லை.

படத்தில் என்ன பெருசா கதை இருக்கப்போகுது கிராபிக்ஸ் தான் படம். இப்படித்தான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் படத்தின் சென்டிமென்ட் காட்சிகள், இரும்பு இதயத்தைக்கூட கரைக்கும் அளவிற்கு உள்ளது.

ரஜினியின் ஓட்டுமொத்த திரை உலக வாழ்க்கைக்கு மகுடம் சூட்டும் படமாக இது அமைந்துவிட்டது என்பதே உண்மை.

படத்திற்கான ஓப்பனிங் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறைவு தான். ஆனால் வரும் நாட்களில் படம் தாறுமாறாக ஓடும் என்பது மட்டும் உறுதி.

2.0 குறைகள்

படத்தின் குறை என்றால் அது கதை தான். இது ஒரு சயின்ஸ்பிக்சன் பேண்டசி படம். ஆரா, செல்போன் கோபுரங்கள், நெகடிவ் எனர்ச்சி இவை தான் அந்த பிரச்சனை.

ஆரா என்றால் பேய். அறிவியல் பேய் இல்லை எனச்சொல்லுகிறது. ஆனால் வசீகரன் பேய் இருக்கு, அதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளார்கள் என தவறான விளக்கம் கொடுத்துள்ளார்.

விண்வெளிக்கு பாசிடிவ் எனர்சியை மட்டுமே அனுப்பி உள்ளதாக கூறியுள்ளனர். அதெப்படி பிரித்தார்கள். மேலும் நல்லவர்களிடம் மட்டும் எப்படி செல்லும். தீயவர்கள் கண்டுபிடிக்க மாட்டார்களா?

இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் படம் என்பதைவிட பேண்டசி படம் எனச்சொல்லுவதே சிறந்தது. தவறான அறிவியல் பேசப்பட்டுள்ளது.

எங்களுடைய வாட்ஸ்ஆப் குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்…
http://mrpuyal.com/tamil-whatsapp-group/

3

பெட்ரோல் 1 ரூபாய் மட்டுமே! நள்ளிரவு முதல் அமல்

0

பெட்ரோல்

பெட்ரோல் 1 ரூபாய் மட்டுமே! நள்ளிரவு முதல் அமலுக்கு கொண்டுவந்துள்ளார் ப்ரேம் ஆனந்த்.

ராமர்பிள்ளை யார்ன்னு கேட்டா சின்னக் குழந்தை கூட சொல்லும். அந்த அளவிற்கு பலவருடங்களாக தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர்.

சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவேன்னு சொன்ன மாதிரி…. இவர் பெட்ரோல் தருவேன்னு சொல்லியவர்…. சொல்லிக்கொண்டே இருப்பவர்….

ராமர்பிள்ளையின் வளர்ச்சியை முடக்குவது, கார்பரேட் கைக்கூலிகள் என பல தமிழர்கள் ராமர்பிள்ளைக்கு ஆதரவாக வெகுண்டு எழுந்தனர்.

தமிழகத்தில் ஸ்ரீ ராமருக்கு கூட இவ்வளவு ஆதரவு பெருகியது இல்லை. ராமர்பிள்ளையின் 5 ரூபாய் பெட்ரோல் அறிவிப்பு, தமிழகத்தின் ஒட்டுமொத்த மீடியாவையும் மீண்டும் பரபரப்பாக்கியது.

இப்படி ஒரு சூழ்நிலையில், Let’s Make Engineering Simple வலைத்தளம் ராமர்பிள்ளை உண்மை முகம் என மூன்று நாட்களுக்கு முன் ஒரு வீடியோவை வெளியிட்டது.

ராமர்பிள்ளையின் இத்தனை வருட கூவலை, அந்த ஒற்றை வீடியோ தலைகீழாக புரட்டிப்போட்டது. அவருக்கு ஆதரவாக பேசிய அனைவரும், அடுத்த நொடியே பின் வாங்க துவங்கிவிட்டனர்.

யார் இந்த LMES?

இதே கேள்வி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போதே பலரால் கேட்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் படிப்பை துவங்கி, அமெரிக்காவில் வேலையில் சேர்ந்தார் ப்ரேம் ஆனந்த். அவர் மீண்டும் இந்தியா வந்து துவங்கிய நிறுவனம் தான் LMES.

Lets Make Engineering Easy எனத்துவங்கி, Let’s Make Engineering Simple என மாற்றிக்கொண்டார். ஆரம்ப கட்டத்தில் அறிவியல் மற்றும் கணிதத்தை எளிதில் புரியும்படி தெளிவாக வீடியோவுடன் விளக்கம் அளித்தார்.

அதுவரை இவர், ஒரு கல்வி கற்பிப்பவராக தான் அனைவருக்கும் அறிமுகமானார். ஸ்டெர்லைட் வீடியோ இவரை வெகுவேகமாக பலரிடம் கொண்டு சேர்த்தது.

அந்த வீடியோவிற்கு பிறகு, கவனிக்கத்தக்க மனிதராக உருவெடுத்தார். அதே போன்று சர்ச்சை மனிதர் எனவும் பெயர் பெற்றார்.

அறிவியலையும், கணிதத்தையும் தமிழில் இவ்வளவு அழகா புரியவைப்பது, இவருக்கு நிகர் இவரே.

அதேவேளை அவ்வப்போது பரபரப்பு வீடியோக்களையும் வெளியிட ஆரம்பித்தார். அந்த பரப்பு வீடியோவும், அறிவியலைச் சார்ந்தே இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

ராமர் பிள்ளை கண்டுபிடிப்பு

ராமர்பிள்ளையின் கண்டுபிடிப்பு மீது பிரேம் ஆனந்த் கவனம் திரும்பியது. ராமர்பிள்ளை என்ன கண்டுபிடித்தார் என ஆராயும் வேலையில் இறங்கியது இவருடைய குழு.

பல மாதங்களாக ராமர் பிள்ளையை வளைத்து வளைத்து வீடியோ எடுத்தும், ராமர் பிள்ளையின் மூலிகை எரிபொருள் தயாரிப்பு முறையை, இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கல்வி, குழந்தைகள், கற்பிப்பு என ராமர் பிள்ளையை ஸ்டுடியோவிற்கு வரவழைக்க வலைவிரித்தனர். ராமர்பிள்ளையும் வான்டெட்டாக வந்து வலையில் சிக்கினார்.

அவருடைய மெழுகு ரகசியத்தை தெரிந்துகொண்ட பிரேம்ஆனந்த், அவருடைய தயாரிப்பு முறையை கேட்டு வற்புறுத்தியுள்ளார். அப்பொழுதும், தயாரிப்பு முறை பற்றி தெரிவிக்க மறுத்துவிட்டார் ராமர்பிள்ளை. (இது ராமர் பிள்ளையின் குற்றச்சாட்டு)

இந்த வீடியோ வெளியீட்டுக்குபின் ஆதான் மீடியா என்கின்ற யூடியூப் சேனலில் ராமர்பிள்ளையின் பேட்டி ஒளிபரப்பாகிறது.

அந்த வீடியோவில் மூச்சுக்கு முன்னூறு முறை தமிழ் மக்கள், சீமான் அய்யா எனக்குறிப்பிடுகின்றார்.

சீமானை அய்யா என அழைத்த முதல் தமிழர் இவர் தான். அவருடைய தொண்டர்கள் கூட அண்ணன் என்று தான் அழைப்பார்கள்.

ஆனால், சீமானை விட வயதில் முதியவர் ராமர் பிள்ளை. அவரை அய்யா எனக் குறிப்பிட்டது சற்று சிந்திக்க வேண்டிய விசயமே.

ராமர்பிள்ளையின் பதில் வீடியோவிற்கு பிறகு, ப்ரேம் ஆனந்த் ஒரு பதில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அவற்றை எல்லாம் எழுத்தில் சொன்னால் புரியாது. மூன்று வீடியோக்களையும் நிச்சயம் பாருங்கள். பார்த்தல் தான் அதைப்பற்றி முழுமையாக புரியும்.

இவ்வளவு நடந்தும் பிரேம் ஆனந்த், ராமர்பிள்ளையை இறுதி வரை ஏமாற்றுக்காரர் எனக்கூறவில்லை.

ஆனால், அவர் கண்டுபிடித்த விஷயத்தை மறைப்பதற்கு, போலியான மற்றும் தவறான சோதனை முறைகளை சொல்லி ஏமாற்றி வருகின்றார் என்று தான் கூறியுள்ளார்.

ராமர் பிள்ளையின் சிதம்பர ரகசியம்

தமிழர்கள் அவரிடம் வைத்த கோரிக்கை, பெட்ரோல் தயாரிக்கும் முறையை வெளிப்படையாக சொல்லிவிடுங்கள் என்று தான்.

கடவுளே வந்து கேட்டாலும், புறநானுறை எழுதியவர் வந்து கேட்டாலும், ராமர்பிள்ளை சொல்லுவதாக இல்லை.

அவர் வெளியில் சொல்லி, அது நடைமுறைக்கு வந்துவிட்டால் அதைக்கண்டுபிடித்தவர் ராமர்பிள்ளை தான். அதை எவராலும் மாற்ற முடியாது.

இப்பொழுது உள்ள மீடியா உலகில், நிச்சயம் வேறு ஒருவர் இனிஷியல் போட்டுக்கொள்ள வாய்ப்பே இல்லை.

ஆனால் அதையும் மீறி மூலிகை பெட்ரோலை வைத்துக்கொண்டு, பணம் பார்க்க நினைக்கின்றாரோ என எண்ணத் தோன்றுகின்றது. மேலும், மூலிகை பெட்ரோலை கண்டுபிடிக்கவில்லையோ? எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

ராமர்பிள்ளையின் மூலிகை பெட்ரோலுக்கு போட்டியாக, ஒரு ரூபாய் பெட்ரோலை அறிமுகம் செய்துள்ளார் பிரேம் ஆனந்த்.

இதன் பிறகு கண்டுபிடிப்பு என எவன் ஒருவன் கூறினாலும் நம்பிக்கை வருமா?

இதற்கெல்லாம் ராமர் பிள்ளை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய எண்ணமும்.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? பெட்ரோல் இல்லை! அதனால் கையேந்துகிறோம் வெளிநாட்டில்!

அ இல்லை தந்த புறநானுறு. ராமர்பிள்ளைக்கு அதரவாக எழுதிய அதே கைகள் தான் இந்தக் கட்டுரையும் எழுதுகின்றது.

அ இலை உண்மையாகி விடாதா என்ற கனவோடு!!!

இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள்.

3

கருப்பு வெள்ளிக்கிழமை (Black Friday) பற்றி தெரியுமா?

0
Black Friday Tamil கருப்பு வெள்ளிக்கிழமை பற்றி தெரியுமா?

கருப்பு வெள்ளிக்கிழமை (ப்ளாக் பிரைடே) மற்றும் தேங்க்ஸ் கிவிங் டே பற்றி தெரியுமா? Black Friday and Thanksgiving Day in Tamil. வாம்ப்போனங் (Wampanoag) பில்கிரிம் (Pilgrims) இனத்தின் மோதல்

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை ப்ளாக் ஃப்ரைடே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உலக அளவில் அதிகமான பொருட்கள் விற்பனையாகும்.

ரோஸ் டே முதல் கிஸ் டே வரை புல் அப்டேட் காதலர் தினம் ஸ்பெஷல்

நம்ம ஊர் ஆடித் தள்ளுபடி ஆப்பர்களை விட பன்னாட்டு நிறுவனங்கள், ப்ளாக் ப்ரைடே அன்று ஆப்பர்களை அள்ளிவீசும்.

கருப்பு என்பது துக்கத்தை குறிக்கும் நிறம். சந்தோசமான வெள்ளிக்கிழமையை ஏன் கருப்பு வெள்ளிக்கிழமை என பெயரிட்டுள்ளனர்?

ப்ளாக் ப்ரைடே பற்றி அறிந்துகொள்ளும் முன், Black Friday இது ஏன் கொண்டாப்படுகிறது? தேங்க்ஸ் கிவிங் டே (Thanksgiving Day) என்றால் என்ன? என்று பார்ப்போம்.

தேங்க்ஸ் கிவிங் டே (Thanksgiving Day Tamil)

நவம்பர் நான்காவது வியாழன்கிழமை ‘தேங்க்ஸ் கிவிங் டே‘ கொண்டாடப்படுகிறது. இதற்கு அடுத்த நாள் ப்ளாக் ப்ரைடே கொண்டாடப்படுகிறது.

வாம்ப்போனங் (Wampanoag) பில்கிரிம் (Pilgrims) இனத்தின் மோதல் Thanksgiving Day Tamil

இரண்டாயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, வாம்ப்போனங் (Wampanoag) என்ற இனம் வடஅமெரிக்காவில் வசித்து வந்தது. இவர்கள் அமெரிக்காவில் குடியேறிய, இந்தியப் பழங்குடியினர்

வாம்போனங் இனத்தில் முச்சகோதரிகள் (Three sister) என்று அழைக்கப்பட்ட மூன்று பெண்கள் இருந்தனர். இவர்கள் தான் அமெரிக்காவிற்கு விவசாயத்தை அறிமுகம் செய்தது. இந்த நாகரிகம் கிமு 800-களில் கனடாவில் முதலில் துவங்கியது.

அந்த காலகட்டத்தில் வாம்ப்போனங் இன மக்கள் அம்மை நோயால், அளவுக்கு அதிகமாக உயிரிழந்து கொண்டிருந்தனர். அச்சமயத்தில் பில்கிரிம் (Pilgrims) என்ற இனத்தவர் அங்கு நுழைகின்றனர்.

பில்கிரிம் இனத்தின் வேலையே, போகும் வழியில் கிடைத்ததை சுருட்டிக்கொள்வது. இவர்கள் ஐரோப்பியர்கள். எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள். வாம்ப்போனங் இனத்தவரின் உடமைகளையும், பொருட்களையும் கொள்ளையடித்து கொள்கின்றனர்.

ஏற்கனவே, நோயால் பாதிக்கப்பட்ட வாம்ப்போனங் இனத்தினர் தற்பொழுது, உணவு இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர். மேலும், வாம்ப்போனங் இனம் தொடர்ந்து பில்கிரிம் இனத்தால் பாதிப்புக்குள்ளானது.

இதை முடிவுக்கு கொண்டுவர, பில்கிரிம் இனத்தவருடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டனர் வாம்ப்போனங் இனத்தினர்.

வருடா வருடம் முதல் அறுவடை நாளில், ஒரு பங்கை பில்கிரிம் இனத்தவருக்கு விருந்தாக படைத்தனர். பின்னாளில் இதுவே ‘தேங்க்ஸ் கிவிங் டே’வாக மாறியது.

வான்கோழியின் இறைச்சி

1621-ம் ஆண்டு அமெரிக்காவில், முதல் தேங்க்ஸ் கிவிங் டே விருந்து கொண்டாடப்பட்டது. அதில் வான்கோழியின் இறைச்சி முக்கிய இடம்பிடிக்கும்.

எனவே வான்கோழிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இதற்கு தேங்க்ஸ் கிவிங் டே என பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது.

அமெரிக்காவில், நவம்பர் நான்காவது வியாழக்கிழமை தேங்க்ஸ் கிவிங் டே கடைபிடிக்கப்படுகின்றது. கனடாவில் அக்டோபர் இரண்டாம் திங்கள்கிழமை கடைபிடிக்கப்படுகின்றது.

1789-ல் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன், தேங்க்ஸ் கிவிங் டே நாளை அதிகாரப்பூர்வ கொண்டாட்டமாக நடைமுறைக்கு கொண்டுவந்தார்.

தோராயமாக 250 வருடங்கள் கழித்து ஆபிரகாம் லிங்கன், தேங்க்ஸ் கிவிங் டே நாளை அமெரிக்காவின் அரசு விடுமுறை தினமாக அறிவித்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இணையாக தேங்க்ஸ் கிவிங் டே கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் தாத்தா கதை உருவான வரலாறு!

ப்ளாக் ப்ரைடே (Black Friday Tamil)

தேங்க்ஸ் கிவிங் டேவிற்கு மறுநாள், நவம்பர் நான்காவது வெள்ளிக்கிழமையில் அமெரிக்க மக்கள் புதிய பொருட்கள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டனர்.

கடை வீதிகள் மற்றும் நகர்புறம் இந்த நாளில், கூட்ட நெரிசலுடன் காணப்படும். எனவே, சாலைவிபத்து மற்றும் கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர். இதை நினைவு கூறும் விதமாக ‘ப்ளாக் ப்ரைடே’ எனப் பெயரிடப்பட்டது.

கிறிஸ்துமஸ் நட்சத்திரம் உண்மையா? கிரேட் கன்ஜெக்சன் என்றால் என்ன? இயேசு பிறந்த வரலாறு

மேலும், மக்கள் நிறைய பொருட்களை வாங்க ஊக்குவிக்கும் விதமாக, வணிகர்கள் சலுகைகள் வழங்க ஆரம்பித்தனர். உலகிலேயே அதிகமாக பொருட்கள் விற்பனையாகும் நாள் என ப்ளாக் ப்ரைடே  (black friday) என வரலாற்றில் இடம்பிடித்தது.

நம்ம ஊரில் ஆடித்தள்ளுபடி போல் அமெரிக்காவில் ப்ளாக் ப்ரைடே மிகவும் பிரபலம். இது அமெரிக்காவில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில் அறிமுகமாகி விட்டது. அமேசான் நிறுவனம் சென்ற ஆண்டு இந்தியாவில் ஏகப்பட்ட ஆப்பர்களை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

3

Gaja Puyal – பழனிச்சாமி உஷ்… ஸ்டாலின் டோஷ்….

0
gaja puyal

Gaja Puyal – கஜா புயல் வருகையால் எடப்பாடிக்கு ஆப்பு. ஸ்டாலினுக்கு டாப்பு. பழனிச்சாமி பார்வையிடாதது ஏன்?

கஜா புயல் வருவதற்கு முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டன. இதுவரை எந்த ஒரு புயலுக்கும், இப்படி ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது கிடையாது.

புயல் வரும் கடைசி நிமிடம் வரை, எல்லோரும் விளையாட்டாக எடுத்துக்கொண்டனர். இவ்வளவு எச்சரிக்கைகளை பார்த்தால், புயல் வரவே வராது என மீம்ஸ்கள் பரந்தன.

ஆனால், கஜா புயலின் கோரத்தாண்டவத்தை பார்த்த பின்பு, அதனின் வீரியம் மக்களுக்கு புரிந்தது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில், நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும்.

இதற்குமேல் தமிழக அரசின் மீதோ, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதோ, எந்த குறையும் சொல்ல வாய்ப்பில்லை. எனவே, ஸ்டாலின் யாரும் எதிர்பாராத வகையில், பாராட்டுகளை தெரிவித்தார்.

ஸ்டாலின் பாராட்டியபின் எடப்பாடியை ஊடங்கள் புகழ்ந்து தள்ளின. இது மத்தியில் உள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை. ஓவர் நைட்டில் ஒபாமாவாக நினைத்த எடப்பாடியை ஒசாமாவாக மாற்றிவிட்டனர்.

புயல் பாதிப்புகளை, அதிமுகவின் பன்னீர் செல்வம் மற்றும் பல அமைச்சர்கள் பார்வையிட்டனர். ஆனால், எடப்பாடி பார்வையிட செல்லவே இல்லை. மோடியை பார்க்க செல்ல உள்ளதாக தகவல்கள் வேறு வந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் நற்பெயர் பெற்ற எடப்பாடி, சிங்கக்குட்டி போல் மக்கள் முன்னிலையில் சென்று நற்பெயர் பெற முயன்றார். ஆனால் அவரின் கனவுக்கு ஊதப்பட்டது சங்கு.

இப்படியே விட்டால், எடப்பாடி தனி ஆளாக ஆட்சியை பிடித்துவிடுவார் என்று எண்ணியது மேலிடம். இதனால் எடப்பாடிக்கு ரெட் போட்டுவிட்டது. புயல் பாதித்த திசைபக்கம் கூடத் தலைவைத்துப் படுக்கக்கூடாது என எச்சரிக்கை செய்தது.

மேலும், மீட்பு பணிகளையும் தாமதமாகியது. காலையில் நற்பெயர் மாலையில் அவப்பெயர் கஜா புயலை நினைத்து கடுப்பாகிப்போனார் எடப்பாடி.

இதைத் தெரிந்துகொண்ட ஸ்டாலினுக்கு மிகவும் மகிழ்ச்சி. பாராட்டு தெரிவித்த கையோட பொரிந்து தள்ளிவிட்டார்.

இரும்பு ஊரின் கரும்பு மனிதரை, இரும்பு இதயம்கொண்ட எடப்பாடியே என ஸ்டாலின் கூற,. மீடியாக்களும் எடப்பாடியை வசைபாடியது.

தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளால் பாதிக்கப்பட்டது, ஏற்கனவே புயலால் பதிக்கப்பட்டு வெந்து, நொந்துபோன மக்களே. எடப்பாடியல்ல!!!

3

Thimiru Pudichavan Movie Review – திமிரு புடிச்சவன் விமர்சனம்

0
thimiru pudichavan movie

Thimiru Pudichavan Movie Review – திமிரு புடிச்சவன் விமர்சனம்.

விஜய் ஆண்டனி நடிக்கத் தெரியவில்லை என்றாலும், ஹீரோ அந்தஸ்துடன் வலம்வரக் காரணம், கதைத் தேர்வும், குறைந்த  பட்ஜெட்டில் தரமாக படமெடுப்பதும் தான்.

விஜய் ஆண்டனியின் முகத்தில் எவ்வித ரியாக்சன்களையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் தற்பொழுது நடிப்பில் கொஞ்சம் தேறி வருகின்றார்.

அதே சமயம், இனி அவர் ஹீரோவாக நிலைப்பது கடினம். காரணம் அதே கதைத் தேர்வு தான். சமீப காலமாக அவருடைய கதைத் தேர்வு மிகவும் மட்டமாக உள்ளது.

திமிரு புடிச்சவன் படம் விஜய் ஆண்டனியின் மிக மோசமான படங்களில் முதல் இடத்தைப் பிடித்து விட்டது.

ஆந்திராவில் கூட இதுபோன்ற படங்கள் எடுப்பதை குறைத்துகொண்டு விட்டனர். தமிழ் சினிமாவில் இப்படியான படங்கள் வெளியாவது வேதனையான விஷயம்.

படத்தின் இயக்குனர் கணேஷா அவர்களே, முதலில் ஒரு நல்ல ஷார்ட் பிலிம் எடுத்துப் பழகிவிட்டு பிறகு பெரிய படங்கள் எடுக்க வரவும்.

நிவேதா பெத்துராஜ் உங்களோட வளர்ச்சி நடிப்புல மட்டும் இல்ல, உடலிலும் நன்கு தெரிகின்றது. என்ன தான் மதுரை பொண்ணா இருந்தாலும் சினிமான்னு வந்துட்டா சும்மாவா விடுவாங்க…

காமெடியே இல்லாமல், ஒரு ஹீரோயினை வைத்து காமெடிகள் நகர்கின்றது. உன்னை மாற்றிக்கொள் உலகம் மாறிவிடும் நல்ல பாடல். அந்த பாடலில் இருந்த பீலிங் கூட படத்தின் ஒரு காட்சியிலும் இல்லை.

விஜய் ஆண்டனி நடித்துப் பழக வேண்டும் என்பதற்காக இப்படத்தை தேர்வு செய்தாரா? இல்லை கணேஷா இயக்கி பழக வேண்டும் எனத் தேர்வு செய்தாரா?

கருத்து சொல்லுவதற்குமுன் கருத்தாக படம் எடுக்க கற்றுக்கொண்டு வரவும். அரைகுறையாக வாய்ப்புகளை பயன்படுத்துவது, ஒரு தயாரிப்பாளரை கொள்ளும், படம் பார்க்க வருபவர்களை கொள்ளும்.

விஜய் ஆண்டனி, மத சாயலை பூச முயல்கின்றார் என இப்படம் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

கிறிஸ்தவர்களை பற்றி தரக்குறைவாக காட்சிகளை வைப்பது. இஸ்லாமியர்கள் மீது பாசம் காட்டுவது. முருகராய் மாறி இந்துக்களை உயர்த்துவது.

இப்படி நீங்கள் இந்து, முஸ்லீம்கள் மனதில் இடம் பிடிப்பதற்கு பதில், இசையமைத்தே காலத்தை கடத்திவிடலாம்.

ஜாதி, மதங்களை அழிக்க வேண்டிய காலகட்டத்தில் அதை வைத்துப் பிழைப்பு நடத்த முயல்கின்றீர்கள்.

3

Kaatrin Mozhi Moive Review | காற்றின் மொழி திரை விமர்சனம்

0
kaatrin mozhi

Moive Review Kaatrin Mozhi | காற்றின் மொழி திரை விமர்சனம்

ராதாமோகன் இயக்கும் படங்கள் என்றால் நம்பி செல்லலாம் என்ற நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை காப்பாற்றியுள்ளார்.

மொழி படத்திற்கு பின் ஜோதிகா, ராதாமோகன் கூட்டணி இணைந்த படம் காற்றின் மொழி.

திருமணத்திற்குபின் பெண்ணியம் பேசும் கதாப்பாத்திரமாக தேர்வு செய்து நடித்தார் ஜோதிகா. ஆனால் காற்றின்மொழி, பெண்ணியத்தையும் மீறி எதார்த்த உண்மைகளையும் புரிய வைத்துள்ளது.

கணவன், மனைவி இருவருமே பணிக்கு சென்றால், அவர்களுக்குள் எவ்வளவு மன அழுத்தம் ஏற்படும்? அவர்களுக்குள் எப்படி சந்தேகங்கள் வளரும்? எப்படி இதை எதிர்கொள்வது என தெளிவாக கூறியுள்ளார் ராதாமோகன்.

சந்தேக குணத்துடன் வாழும் தம்பதிகள் இப்படத்தை பார்த்தால், நிச்சயம் அவர்களுக்கு நல்ல கவுன்சிலிங் கிடைத்தது போன்றும் இருக்கும். மன அழுத்தம் குறைந்தது போன்றும் இருக்கும்.

அந்த அளவிற்கு ஆழ்மனதில் பதியும்படியும், நகைச்சுவையுடனும் கலந்துகட்டி கூறியுள்ளார் ராதாமோகன்.

பொதுவாக, கருத்துப்படம் என்றால் பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்காது. இதனால் கருத்துப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே செல்கின்றது.

மொழி படத்தைப் பார்த்தபோது, எப்படி விழுந்து விழுந்து சிரித்தோமோ, அதே அளவு இப்படமும் நம்மை நொடிக்கு நொடி சிரிக்க வைக்கின்றது.

மசாலா என்கின்ற பெயரில் நாளுக்கு நாள் டிவிக்களில் ஆபாசங்களை அள்ளி விதைக்கின்றனர். அந்தரங்க நிகழ்ச்சி என்ற பெயரில் அருவருப்பான வார்த்தைகளை பேசி நிகழ்ச்சியை பார்க்கத் தூண்டுகின்றனர்.

அவர்கள் முகங்களில் கரியை பூசும் அளவிற்கு, இந்த படத்தின் காட்சியமைப்புகள் உள்ளன. ஆபாசத்தை ஆபாசமாக தான் பேச வேண்டும் என்பதில்லை, வேறுகோணத்திலும் அணுகலாம் என ஆணித்தரமாக பதியவைத்து விட்டது காற்றின்மொழி.

திருமணத்திற்கு முன்பை விட தற்பொழுது ஜோதிகாவின் நடிப்பை பார்க்கும்போது, சிலிர்க்க வைக்கின்றது.

மேலும், படமும் ஜோதிகாவின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்துவது போன்றே உள்ளது. ஜோதிகாவை நடிக்க வைக்கவேண்டும் என அவரின் குடும்பத்திற்காகவே எடுக்கப்பட்ட படம் போன்றே உள்ளது.

இளங்கோ குமரவேல் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், ராதா மோகனின் அனைத்துப் படங்களில் இடம்பெறுவார்கள். இதிலும் உள்ளனர்.

லக்ஷ்மி மஞ்சு எப்.எம். ஹெட்டாக நடித்துள்ளார். நிறைய இடங்களில் ஓவர் ரியாக்சன் கொடுப்பது முகம் சுழிக்க வைக்கிறது.

யோகிபாபு இரண்டு மூன்று காட்சிகள் வந்தாலும், கலகலப்பிற்கு பஞ்சம் இல்லை. காதலி பெயர் தீபிகா படுகோன என சொன்னாலும், அவர் நயன்தாராவை தான் குறிப்பிடுகின்றார் என தொளிவாகவே தெரிகின்றது.

நயன்தாரா, அவருடைய பெயரை சொல்ல பர்மிஷன் கொடுக்கவில்லை போல, கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சிம்பு வந்தாலே வம்பு. ஜோதிகா குடும்பத்திலும் சின்னதா வம்பு செய்துவிட்டார்.

விதார்த் கிடைத்த கேப்பில் எல்லாம் கிட வெட்டியுள்ளார். சிவக்குமார் ஏற்கனவே டென்சன் பார்டியா மாறிட்டு வர்றாரு… இத வேற பாத்தா அம்புட்டுத்தான்…

படத்தில் டெக்னிகல் டீம் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படத்திற்கு இசை கூடுதல் பலம்.

ராதாமோகனின் திரைக்கதைக்கும், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவிற்கும் உயிர் கொடுத்துள்ளது காசிப்பின் இசை.

இந்த படத்தை அனைத்து வயதினரும் நிச்சயம் பார்த்து மகிழலாம். பார்த்தே தீர வேண்டிய படமும் கூட.

3

கன்னித்தீவும் ரஜினி பெற்ற கன்னிகளும்..!

0

கன்னித்தீவும் ரஜினி பெற்ற கன்னிகளும்..!

ரஜினிக்கு இரண்டு மகள்கள். முதல் மகள் ஐஸ்வர்யா. இரண்டாவது மகள் சவுந்தர்யா. ஐஸ்வர்யாவும் சிம்புவும் காதல் வயப்பட்டனர். இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

சிம்பு, ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் லதா ரஜினிகாந்த் மூவரும் போனில் உரையாடிய ஆடியோ இணையத்தில் வைரலாகி, அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் இருவரது காதலும் முற்றுப்பெற்றது.

அதன்பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004-ல் திருமணம் செய்துகொண்டனர். ஐஸ்வர்யாவின் தங்கை சவுந்தர்யா. சவுந்தர்யாவிற்கும் அஸ்வின் ராம்குமாருக்கும் 2010-ல் திருமணம் நடைபெற்றது.

அஸ்வின், கே.எஸ்.வெங்கட்ராமன் அவர்களின் பேரன். கே.எஸ்.வெங்கட்ராமன், கே.எஸ்.வி. கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர்.

தற்பொழுது, கே.எஸ்.வி. கன்ஸ்ட்ரக்ஷன் மேனேஜிங் டைரக்டர் அஸ்வின் ராம்குமார். மேலும் சொந்தமாக ப்ரோ மேனேஜ் என்ற நிறுவனத்தை துவங்கி, சி.இ.ஓ.வாக பணியாற்றிவருகின்றார்.

சவுந்தர்யா மற்றும் அஸ்வின் தம்பதிகளுக்கு வேத் என்ற மகன் உள்ளார். மகன் பிறந்த சில மாதங்களிலேயே மனகசப்பு ஏற்பட்டது. 2017-ல் இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

சவுந்தர்யா தற்பொழுது விசாகன் என்பவரை திருமணம் செய்ய உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஷாகன் அபெக்ஸ் என்ற மருந்து கம்பெனி முதலாளியின் மகன். இவர் வஞ்சகர் உலகம் என்ற படத்தில் இரண்டாவது நாயகராக நடித்துள்ளார். இவருக்கு சிறுவயது முதலே சினிமா மீது மோகம்.

பார்டி, பப் என சுற்றியபோது சவுந்தரியாவுடன் காதல் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது திருமணம் வரை சென்றுள்ளது. விஷாகனும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர்.

தினகரன் பத்திரிக்கையின் நிறுவனர் கே.பி.கந்தசாமியின் பேத்தியை விஷாகன் முதலாவதாக திருமணம் செய்துகொண்டார்.

கே.பி.கந்தசாமியின் மகன் கே.பி.கே.குமரன். கருணாநிதி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கம். திமுக கட்சியில் முக்கிய பதவியில் உள்ளார். அவருக்கு இரண்டு மகள்கள். கனிகா குமரன் மற்றும் சரஸ்வதி குமரன்.

கனிகா குமரன், விஷாகனின் முதல் மனைவி மற்றும் பேஷன் என்ற பத்திரிக்கையின் தலைவர். விஷாகன் மற்றும் கனிகா குமரன் இருவரும் மனக்கசப்பின் காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர்.

இந்த விவாகரத்திற்குப்பின் கனிகா குமரன், வருண் மணியன் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.

வருண் மணியனும், த்ரிஷாவும் முன்னாள் காதலர்கள். இருவரும் தனி விமானத்தில் ஹாயாக வலம் வந்தனர். நிச்சயதார்த்தம் தடபுடலாக நடந்தது. ஆனால், திடீரென திருமணம் நடைபெறவில்லை. இருவரும் பிரிந்துவிட்டனர்.

வருண் மணியன், ரேடியன் மீடியா குரூப் மேனேஜிங் டிரைக்டர். இவர் தயாரித்த முதல் படம் ‘வாய மூடி பேசவும்’. அந்த படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன்.

பாலாஜி மோகனின் அடுத்த படம் மாரி. மாரி படத்தின் நாயகன் தனுஷ். மாரி படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த படம் தங்கமகன். தங்க மகன் படத்தின் இயக்குனர் வேல்ராஜ். வேல்ராஜ் தனுசை வைத்து இயக்கிய முதல் படம் வேலையில்லா பட்டதாரி.

அப்படத்தின் வில்லன் பெயர் அஸ்வின். அந்த காதாப்பாத்திரம் சவுந்தர்யாவின் முன்னாள் கணவர் அஸ்வின் ராம்குமாரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும். நிஜ வாழ்கையில் அஸ்வின் ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியின் ஓனர். தாத்தா துவங்கிய நிறுவனத்தின் எம்.டி.

படத்திலும் அதே போன்ற காட்சி அமைப்புகள் இடம்பெற்று இருக்கும். தனுஷ் அந்த காதபாத்திரத்தை அமுல்பேபி எனக் கூப்பிட்டு அளவில்லா களிப்படைவார்.

அப்படத்தில் நடிகை சுரபி சிகரெட் மற்றும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி உடல் உறுப்பு பாதிக்கப்படுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். அது சவுந்தர்யாவின் நிஜவாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் என அப்போது பேசப்பட்டது.

வேலையில்லா பட்டதாரி படம் வெளிவந்த சில நாட்களிலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. அதற்கு தனுஷ் தான் காரணமாம். சவுந்தர்யா மற்றும் தனுஷின் செயல்கள் அஸ்வினுக்கு பிடிக்கவில்லை.

ராதிகா வீட்டில் நடந்த பார்டியில், தனுஷுடன் அடித்த லூட்டியை கேள்விப்பட்டதும் அஸ்வின் விவாகரத்து செய்வதென்று முடிவு செய்துவிட்டார்.

விவாகரத்து பெற்ற அதே வருடத்தில், வேலையில்லா பட்டதாரி 2 படம் வெளிவந்தது. அதை இயக்கியவர் சவுந்தர்யா.

வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்கு முன், கொடி படத்தில் நடித்தார். அந்த படத்தின் நாயகி த்ரிஷா.

டிசம்பர் 2015-ல் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. அதற்கு சில நாட்கள் முன்பு தான் வருணும் த்ரிஷாவும் பிரிந்தனர்.

அதற்கு காரணம், நிச்சயதார்த்த பார்ட்டிக்கு சினிமா பிரபலங்களை யாரும் அழைக்கக்கூடாது என வருண் கூறியுள்ளார். ஆனால் த்ரிஷா அதைப் பொருட்படுத்தாமல் தனுஷை பார்ட்டிக்கு கூட்டி வந்து லூட்டியடித்துள்ளார்.

அதன்பிறகே திரிஷாவும் தனுஷும் முதல் முறையாக ஜோடியாகஇணைந்து கொடி படத்தில் நடித்தனர். நீண்ட நாட்களாக த்ரிஷாவிற்கு ரஜினியுடன் நடித்துவிட வேண்டும் என்பது ஆசை.

அந்த ஆசையையும் தற்போது தனுஷ் நிறைவேற்றி வைத்துவிட்டார். பேட்ட படத்தில் த்ரிஷா நடிக்கின்றார்.

த்ரிஷாவின் முன்னாள் காதலர் வருண் மணியன், விஷாகனின் முதல் மனைவி கனிகா குமரனை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.

கனிகா குமரனால் கழற்றிவிடப்பட்ட விஷாகனை சவுந்தரியா திருமணம் செய்ய உள்ளார். சவுந்தர்யாவால் கழற்றிவிடப்பட்ட அஸ்வின், கடந்த மார்ச் மாதம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

3

2.0 Official Trailer Fun Review | Shankar | Rajini | Amy | A.R.R

0

2.0 Official Trailer விமர்சனம்…. வழங்குவோர்…. கோகோ கோலா, நியூஸ் 7, லைப்ஸ்டைல், டாபிகானா, வீட்டா இங்க்லீஷ் கிளாஸ், நிப்பான் பெயின்ட், ஆப்பிள் ஐபோன்…

ஒரு வருஷம் முன்னவே, 2.0 ஆடியோ வெளியிட்டில் பிரிவியூ செய்ய ரெடி பண்ணிய டீசரை, புத்தம் புது டீசர் போல், வெளியிட்டார் சங்கர்.

இந்த ஓட்ட.. ஓடச டீசர பாக்க தான் இவ்ளோ நாள் வெயிட் பண்ணோமானு ரசிகர் கடுப்பாக,

ட்ரைலர்ல பாருங்க எப்படி மிஸ்டேக் எல்லாம், சரி பண்ணி விட்றேன்னு சொன்னார். சொன்ன மாறியே ஒரு சில கொறைய சரி பண்ணிட்டாப்லபா நம்ம சங்கர் ஜி.

25 vfx ஸ்டூடியோ, 2150 vfx ஷாட், 3d கேமரா, வி.கேம் டெக்னாலஜி இன்னும் பற்பல புது டெக்னாலஜில உருவான 2.0 படத்தோட ட்ரைலர் எப்படி இருக்குனு பாக்கலாம்.

2.0 ட்ரைலரும் அதே டவர்ல் தான் ஆரம்பிக்குது. இந்த முறை டவருக்கு கீழே இன்னொரு நபர் ஓடி வராரு. தூக்கில் தொங்குனது, அக்ஷய இல்ல ஓடி வர்றது அக்சயானு சின்ன கன்பியுசன்… ஆனாலும், செத்தா தான பேயாவோ, வேற பிறவியோ எடுக்க முடியும்.

அடுத்து ஓட்டல் சாப்பிடும் சீன், போன முறை டீசரில் இந்த நபரிடம் செல்போன் இருக்காது. இந்த முறை இருக்கின்றது.

நெக்ஸ்ட் லைப்ஸ்டைல் முன் டீசரில் கும்பலாக செல்பி எடுத்துக்கொள்வார்கள். ஏன் தேவையில்லாம செல்பி என கேட்டிங்கள… அதனால கொஞ்ச பேர சும்மா நடந்துபோவ வச்சிட்டாரு ஷங்கர் பட எடிட்டர்…

அடுத்து எமி ஜாக்சன் ஒரு ரோபோ… அப்டிங்கிற சஸ்பென்ஸ் உடையுது… வசிகரன் செய்த மேஜிக், பொம்பள ரோபோ அறிமுகம். பட்டன தட்டினது டக்குனு சட்டைய கழட்டி, பாக்குறவங்களுக்கு கிர்ர் ஏத்துது எமி ரோபோ.

சிட்டி திரும்ப வந்தா சும்மாவா விடும் இந்த எமிய. ஒரு சின்ன கிஸ் பண்ணதுக்கே ஐஸ் வர்யாவ… வர்யானு கூப்டிச்சு..

எமிய பாத்தா சும்மாவா விடும், அதுவும் மீடூ சர்ச்சையில் சிக்கிய மாயா கிருஷ்ணன் வேற வசியோட அசிஸ்டன்ட் போல, ஒன்னும் தெரியாத சிட்டிக்கு, ஜகஜால வித்தைகளை மாயா கிருஷ்ணன் கத்துக்கொடுத்தாலும் கொடுப்பாங்க.

கருணாசும், சந்தானமும் இந்த முறை இல்லை. அதுக்கு பதிலா மாயாவ களத்துல இறக்கி விட்டுடாப்ல சங்கர் ஜி…

அடுத்து ஒரு ஹை கிளாஸ் குடும்பம். அதுல ஒரு குடும்பப்பாங்கான பொண்ணு, தொடையழகி ரம்பாவை ஓவர் டேக் செஞ்சிடும் போல, பாத்துமா செல்போன் பறக்குதுன்னு சொல்லி அவசரத்துல காலத் தூக்கிடாத, படத்துக்கு அப்புறம் சென்சார் பிரச்சனை வந்திடும்.

நெக்ஸ்ட்.. நம்ம சிவகுமார் அங்கிள். செய்ய்…. சிவகுமார் இல்லப்பா அக்சய் குமார். செல்போன்னதும் சிவகுமார் நியாபகம் வந்திடுச்சு. அந்த குடும்பத்தோட செல்போன பறிச்சிட்டு போயிடுறாரு.

செல்போன் பறிக்கிற ஷாட்டவே படத்துல ஒரு அரைமணி நேரம் காட்டுவாரு போலயே சங்கரு…

அடுத்து நம்ம வசியோட போனவே பட்டுன்னு தட்டி, நொட்டுனு தூக்கிட்டாப்ல அக்சய். அத நம்ம ரோபோ எமி பே..ன்னு… வாய் பாக்குது. ஷங்கர் ஜி எமிக்கு ஒரு நாலு பைட் சீன் குடுங்க…

அடுத்து நம்ம நியூஸ் 7 விளம்பரம். விளம்பரத்த படத்துகுள்ள தான் வச்சிட்டு இருந்தாரு சங்கரு… இப்போ டீசர் ட்ரைலர்ல வேற வக்க ஆரம்மிசிட்டாரு…

ஏப்பா… நியூஸ் செவன், எவ்ளோ ரூபா…ப.. குடுத்திங்க… டீசர், ட்ரைலர்னு, படம் முழுக்க உங்க பேனர் தான் பெர்சா வரும் போல…

அடுத்து ஒரு பிகரு… கருப்பு ட்ரஸ்ல காத பொத்துது. ரொம்ப பயந்த சுபாபம் போல, அக்சய் கழுகு போட்ட சத்தத்துல பயந்துகிச்சு.

எந்திரன் சிட்டி… அக்சய் கழுக, பொரட்டி எடுக்கும் பாத்த, அத பாத்து பயந்து பயந்து பில்டிங் பில்டிங்கா ஓடுது.

சும்மா.. கழுகு வேசத்துல… ஒருத்தன விடாம, கதற விடுறாப்ல நம்ம அக்சய் கொமாரு. நீங்க கொக்கி கொமாரவிட பெரிய ஆளு தான் போங்க…

செல்போன் போஸ்டர கூட விட்டு வக்கமா பயர் பண்ணுறாரு அக்சய். அப்டி என்னாப்பா கடுப்பு இந்த செல்போன் மேல…

அடுத்து எம்பாமிங் செய்யப்பட்ட ரோபோன்னு கிண்டல் அடிக்க பட்ட எந்திரன் சிட்டி ரோபோவோட என்ட்ரி சீன்… எத்தனை மொறதான் கலாய்கிறது உன்ன…

அங்கிட்டு போ சிட்டி… சும்மா குளோசப்ல மூஞ்ச காம்சி கண்டேத்திட்டு இருக்க. அப்புறம்.. அந்த சைனா பொண்ணு சிரிச்சிட்டே ஓடுமே அந்த ஷாட்….

அடுத்து அக்சய் குமார் செல்போன் மனிதனா மாறி, கொய்யால ஒருத்தன கூட விடமாட்டேன். எல்லாருமே கொலைகாரனுங்க. செல்போன கண்டாலே எல்லாரும் அலறணும்னு கட்டபொம்மன் சிவாஜி ரேஞ்சுக்கு வசனம் பேசுறாரு…

செல்போன் தொரத்த, ஒருத்தர் தொப்பைய வச்சிட்டு ஓட முடியாம ஓடுறாரு… அனேகமா அவர் கதம் கதம்னு நினைக்கிறன்.

அடுத்து பேட்மேன், ஸ்பைடர்மேன் எல்லாரையும் தோற்கடிக்கிற ஒரு கெட்அப். சிட்டிய மார்ல குத்தி… பீஸ் பீசா பிச்சு எறிஞ்சிட்டு, மிரட்டலா கெத்தா போஸ் குடுக்குறாரு அக்சய்.

ரெக்கைகள் சிலிர்க்குது. அனேகமா இதான் படத்தோட இன்டர்வெல் சீன்னு நெனக்குறேன்…

நெக்ஸ்ட் அக்சய்… குப்ப மேடு போல மறைஞ்சி, டக்குனு கழுகா மாறுற சீன்ல ஷங்கரின் பிரமாண்டத்தை, பிரமிப்பா பாக்க வச்சிட்டாங்க… நம்ம வி.எப்.எக்ஸ். கலைஞர்கள்…
சோக்கா.. இருந்திச்சுப்பா அந்த சீன்னு….

செத்துப்போன ரோபோ சிட்டியோட நியூரல் ஸ்கீமாவ எடுத்து, புது சிட்டி… டெரர் சிட்டிய உருவாக்குது நம்ம எமி ரோபோ… கால், கை, தலனு பாத்து பாத்து ரெடி பண்ணுது எமி ஜாக்சன்…

C-யவும்.. பவர் சிம்பிளவும் லோகோவ வச்சிட்டு… வீர சிட்டி உருவாகிடுச்சு … எமி ஒத்தால ஒரு ரோபோ உருவாக்கிடுச்சு…

அப்போ வசீகரன்.. அனேகமா மட்ட தான்… அக்சய் சிட்டிய செய்றதுக்கு முன்ன, வசியோட சோழிய முடிச்சிட்டாப்ல போல…

ஐ அம் சிட்டி… ரிலோடட்னு அக்சய் குமார் முன்னால கைய ஒரு குத்து குத்தி காமிக்குது பாருங்க நம்ம சிட்டி ரோபோ… அட அட.. அந்த குக்கூ சீன் மாதிரி செம்ம வெயிட்… வெர்சன் 2.0னு சொன்னதும் அக்சய் காண்டாயிட்டாப்ல.

நெக்ஸ்ட் நம்ம மிலிட்டரி சீன். ஒன்னும் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சாலும், வன்ட்டடா போயி அடி வாங்குறதவே வேலையா வச்சிருக்காங்க. பிரங்கிக்கெல்லாம் தண்ணி காட்டுறாரு நம்ம கழுகார்.

திரும்ப எந்திரன் சிட்டி… மூஞ்ச காமிச்சி வெறுப்பேத்துது.. போ போயி 2.0 சிட்டிய வர சொல்லு. ஒரு டைம் சொன்ன நூறு டைம் சொன்ன மாதிரி. திரும்ப வந்த சூப் வச்சி குடிச்சிடுவேன்.

நெக்ஸ்ட் நம்ம 2.0 சிட்டி… ஒரு பெரிய படைய உருவாக்குது. விரல்ல பெரிய சைஸ் துப்பாக்கியோட அப்கிரேட் ஆயிருக்கு… ஏதாவது ஓவரா சேட்ட பண்ணுனா, பட்டுனு பொட்டுலவே போற்றும் போல.

ஐயோ இந்த ஓல்ட் சிட்டி தொல்ல தாங்க முடியல. திரும்ப திரும்ப காமிச்சி எடிட்டர் காண்டேத்ராப்ல…

பயந்து பயந்து ஓடுது, பறக்குது, ஒன்னத்துக்கும் லாயக்கு இல்ல. தெண்டம். பயந்தகோழி ரோபோவ எவ்ளோ டைம் பாக்குறது…

ஐஸ்வர்யா இல்லைன்னு பீலிங் போல, அதான் சண்ட போட எனர்ச்சி இல்லமா, பயந்து ஓடுது…

அடுத்து அக்சய் செல்போன விட்டுபுட்டு, ஸ்ட்டேடியத்துல இருக்க எலக்ட்ரிக்சிட்டி பவர புல்லா இழுக்குராப்ல…

அப்புறம் ஸ்டேடியத்துல ஒருத்தர மட்ட பண்ணுராப்ள அக்சய்… அனேகமா அந்த ஆளு தான்… அக்சய் சாக… காரணம் போல.

நெக்ஸ்ட் டீசர் சீன் பா.. போன் ரோபோவ மாறி சிட்டிய நோக்கி ஓடுது. யாருகிட்ட சிட்டிகிட்டவேவா.

கழுக கூட்டுல சத்தி கதறவிடலாம் பாத்தா, ஓட்ட வெளிய ஓடி சிட்டிக்கே டப்பு குடுக்குது அக்சய் கழுகு.

சிட்டி மட்டும் என்ன தக்காளி தொக்கா… அதுவும் எல்லா ரோபோவையும் ஒண்ணா சேத்து.. பெரிய ரோபோவா மாறி, அக்ஷய் குமார சாத்து சாத்துன்னு சத்துது…

அடுத்து, எங்கயோ இருந்த எமி ஜாக்சன, லபக்னு இழுத்து கபாளீகரம் செய்யப் பாக்குது நியூ சிட்டி… எப்பா கபாலி கொஞ்சம் பாத்துப்பா…

கள்ள உறவு தப்பில்லன்னு மோதி மன்றம் சொன்னாலும் சொன்னாங்க.., ஒரு ரோபோ கூட நாட்டுல நிம்மதியா நடமாட முடியல…

மாயா கிருஷ்ணன்.. உங்க லீலை தானா.. பேரு கூட பொருத்தமா தான் இருக்கு உங்களுக்கு…

அடுத்து ஓல்ட்சிட்டி பயந்து ஓடுது. அடுத்து புது சிட்டி அக்ஷய துணி துவக்கிற மாறி தொவச்சி எடுக்குது.

செத்தாண்டா சேகருன்னு சந்தோசமா கைய தட்டுது. அவ்ளோ சீக்கிரத்துல கதய முடிச்சிரலாம்னு பாத்தியான்னு… மொரட்டு பில்லர தூக்கி சிட்டிய வெளு வெளுன்னு வெளுக்குது…

பதிலுக்கு சிட்டியும் ஒரு பில்லர தூக்கி…. அக்ஷய சாத்த, விராட்கோலியும்… எம்.எஸ்.தோனியும் பேட்ட வச்சி சண்டை போட்ற மாதிரியே இருக்கு….

அக்சய் மார்ல ஓங்கி ஒரே குத்து, கைய உள்ள விட்டு கொடல உருவ, பட்டுன்னு படுத்துட்டாப்ல அக்சய்…

அடுத்து எமி கைல இருந்து ஒரு மூணு ஓட்ட நீளமா நீண்டுட்டே வருது… ஒருவேள சிட்டிக்கு, எமி கிரின் சிக்னல் கொடுத்துடுச்சு போல… அப்புறம் என்ன சிட்டி உன் வித்தையை காட்டு….

எமிய பாத்து பாத்து செதுக்கிருக்காப்ல… நம்ம ரோபோ சங்கரு… ஐ படத்துலவே மெரசலாயிட்டேன் சாங்ல… இதுக்காக தான் ஒத்திகை பாத்திருப்பாரு போல…

அடுத்து மிலிட்டரி பாய்ஸ் என்ட்ரி. அடுத்து எந்திரன் ரொபோ, அக்ஷய.. சுடத் தெரியாம சுடுது.. அர்னால்ட் கிட்ட போய் ட்ரைனிங் எடுத்துட்டு வா சிட்டி…

அப்புறம் நம்ம அக்ஷய யாரோ சொழட்டி அடிக்குறாங்க. வேற யார இருக்கும் நம்ம சூப்பர் ஹீரோ புது சிட்டி தான்.

செல்போன வச்சு.. சொவர எழுப்பி… ஸ்டேடியத்துல இருக்கவன் அம்புட்டு பேரவும்.. அடச்சு வச்சு… நோ எக்சிட்னு டிஸ்ப்ளே பண்ணி… அக்சய கதற விடுராப்ல.

கழுகு பாஞ்சு பறக்குது, உயர பறக்குது, டிசைன் டிசைனா பறக்குது… அப்டியே படத்தோட டைட்டில் வந்திடுச்சு…

தீபாவளி சரவெடி வெடிக்குற மாதிரி, சிட்டி பண்ணுற அளப்பர இருக்கே, மொத்த துப்பாக்கியவும் ஒண்ணா வச்சு.. வளச்சு வளச்சு சுடுது… இதுக்கு எதுக்கு 2.0 சிட்டி, எந்திரன் சிட்டியே சோக்கா சுடுமே

ஒரு வழியா முடிஞ்சின்னு பாத்தா… வசிகரன் மூஞ்சி டக்குனு அக்ஷய் குமாரா மாற… ஓல்ட் சிட்டி ஷாக்.

அதான் முன்னமே சொன்னேல, வசீகரன போட்டுட்டு…, வசீகரன் வேசத்துல சிட்டியவும் போட்ற சீன்…கெத்த இன்டெர்வெல் பிளாக் வரப்போது இந்த சீன்ல. நெக்ஸ்ட் எமி புது சிட்டிய உருவாக்கும். இதான் படத்தோட செகன்ட் ஆப்….

3