Home சினிமா கோலிவுட் கட்சி ஆரம்பித்தும் கமல் திருந்தவில்லை; சிங்கப்பூரில் நடந்தது என்ன?

கட்சி ஆரம்பித்தும் கமல் திருந்தவில்லை; சிங்கப்பூரில் நடந்தது என்ன?

1293
0
கட்சி ஆரம்பித்தும் கமல்

கட்சி ஆரம்பித்தும் கமல் திருந்தவில்லை; சிங்கப்பூரில் நடந்தது என்ன?

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது. அதில் கமலும், பூஜாகுமாரும் சிங்கபூர் வீதியில் உலா வருகின்றனர்.

இதுவரை கமல் தரப்பில் இருந்து, இந்தப் புகைப்படம் குறித்து எந்தத் தகவலும் வெளிவரவில்லை.

ஆனால், மீடியாக்கள் சும்மா இருக்குமா? கண்ணு, காது, மூக்கு வைத்து பல கோணங்களில் எழுதி வருகின்றனர்.

ஒரு சில யுடியூப் சேனல்கள், கமல், பூஜா குமாருடன் பொங்கல் கொண்டாட சிங்கப்பூர் சென்றுள்ளார் எனக் கூறியுள்ளது.

சில மீடியாக்கள், கவுதமியின் உறவு முறிவுக்குப்பின் பூஜா குமாருடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

சிலர் இந்தியன்-2 படத்திற்காக சிங்கப்பூர் சென்று ஸ்டோரி டிஸ்கசன் செய்திருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

இந்தியன்-2 படம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவே தகவல்கள் தெரிவிகின்றன.

மேலும், பூஜாகுமார் அந்தப்படத்தில் நடிப்பது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

கமலும் இதுவரை இதுகுறித்து விளக்கம் கொடுக்கவில்லை. அப்புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது?

கமல், பூஜாகுமார் இருவருக்கும் இடையே உள்ள உறவு என்ன? இது குறித்து கமல் விளக்கம் கொடுப்பதே சிறந்தது.

கட்சி ஆரம்பித்த பின்பும் கமல் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது, அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்பது மட்டும் உறுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here