Home நிகழ்வுகள் இந்தியா பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளை நாளை வெளியிடப்படும்: CBSE

பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளை நாளை வெளியிடப்படும்: CBSE

பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான

புதுடெல்லி: நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(CBSE) பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளை புதன் கிழமை(ஜூலை 15, 2020)இல் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த செய்தியை மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று தெரிவித்தார்.

அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சமூகவளைதளத்தில் அறிவிப்பு

“எனது அன்பிற்குரிய குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம், பத்தாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகளை நாளை அறிவிக்கப்படும். அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,” என சமூக வளைதளத்தில் தெரிவித்தார்.

குறுந்தகவல் மற்றும் பல்வேறு வழிகளில் தேர்வு முடிவுகளை அறியலாம்

டிஜிலாக்கர்(DIGILOCKER) எனும் கைப்பேசி செயலியிலும் தேர்வு முடிவுகளை காணலாம் மற்றும் குறுந்தகவல் மூலமும் தேர்வு முடிவுகளை காணலாம் என நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here