Home நிகழ்வுகள் உலகம் பாகிஸ்தான்: பிரபல முன்னாள் கிரிகெட் வீரர் சாகித் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தான்: பிரபல முன்னாள் கிரிகெட் வீரர் சாகித் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று

பாகிஸ்தானின் பிரபல முன்னாள் கிரிகெட் வீரர் சாகித் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ட்விட்டர் பக்கத்தில்

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில் வியாழக் கிழமை முதல் தான் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தனக்கு கொரோனா இறுப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவும், தனக்காக பிராத்தனை செய்யும்படி தனது இரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

கொரோனா இருப்பது உறுதி

“நான் வியாழக்கிழமை முதல் உடல் நலம் குறைந்துள்ளதை உணர்ந்தேன்; உடல் வலி அதிகமாக இருந்தது. உடல் பரிசோதனை செய்ததில் எதிர்பாராத விதமாக எனக்கு கொரோனா இருப்பது உறுதி ஆகி உள்ளது. விரைவில் குணமடைய அனைவரது பிராத்தனையும் தேவை”, என தனது ட்விட்டர் பக்கத்தில் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் மூன்றாவது கிரிக்கெட் வீரர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் மூன்றாவது நபராக அஃப்ரிடி கருதப்படுகிறார்.

அஃப்ரிடி தனது அதிரடி ஆட்டத்தாலும் நல்ல நடத்தையாலும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசந்தோஷி வழிபாடு: விநாயகருக்கு மகள் உள்ளாரா? யார் அவரின் மகள்? எப்படி அவரை பூஜிப்பது?
Next articleபள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுத்த சூரி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here