சிங்கப்பூரில் ஒரே நாளில் 1000 பேருக்கு கொரோனா பாதிப்பு; கவலையில் வெளிநாட்டு தொழிலாளர்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருக்கும் இடங்களில் பரவல் அதிகமாம்.
இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். தெற்கு ஆசியாவில் இருந்து மட்டும் 3 லட்சம் பேர் வேலை செய்கின்றனர்.
இதில் கட்டுமானப்பணி மற்றும் பராமரிப்பு பணிகளில் வேலை செய்பவர்கள் மட்டுமே அதிகமாக உள்ளனர். அதில் பலருக்கு கொரோனா தொற்று ஆகியுள்ளது.
இதன் மூலம் நேற்று ஒரே நாளில் 940-க்கும் மேற்பட்டோர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் இதுவரை கொரோனா பெருந்தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இதனால் விடுதியில் இருக்கும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று அனைத்து லட்சியங்களும் நிறைவேறும் நாளாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களால் நன்மை கிடைக்கும். குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடும் நாளாக இருக்கும்.
இன்று நல்ல ஆற்றலுடன் செயலாற்றுவீர்கள். நண்பர்கள் ஆலோசனைகள் வெற்றியை தேடி தரும். தொழில் சிறப்பாக இருக்கும் கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று நாள் முழுதும் சாதகமான பலன்களை பெறுவீர்கள். வீட்டில் பொருளாதார நிலை உயரும். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். வேலை வாய்ப்புகள் தேடி வரும் நாளக இருக்கும்.
இன்றைய தினம் எல்லா விதத்திலும் நன்மை அளிக்கும் நாளாக இருக்கும். தன, தான்ய சேர்க்கை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி பெருகும் நாளாக இருக்கும்.
இன்று பணியில் அர்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டிய நாளாகும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். கடன் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. கவனமாக இருக்கவும்.
19/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
தேப்பெருமாநல்லூர் ஆன்மீக அதிசயங்கள், மறுப்பிறவி இல்லாதவர்கள் மட்டுமே போக முடியும் அதிசயமான சிவன் கோவில், அனைத்து பரிவார தெய்வங்களும் ஆகம விதிப்படி இல்லாமல் மாறி அமைந்த திருக்கோவில், மறுப்பிறவியை தகர்க்கும் திருக்கோயில்.
உலகெங்கும் பரவியிருக்கும் ஆதி அந்தம் இல்லாத பரம் பொருளாகிய ஈசனின் திருக்கோவில்கள் அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ளன.
தமிழகத்தில் காவிரிக் கரையில் சோழ நாட்டில் சிவ பெருமானிற்கு மிக பிரம்மாண்டமான கோவில்கள் அமையப் பெற்றுள்ளன.
அப்படிப்பட்ட பசுமை மாறாத சோழ வளதேசத்தில் அமைந்த அதிசயமான கோவில் தான் தேப்பெருமாநல்லூர் வேதாந்த நாயகி உடனுறை விஸ்வநாத சுவாமி திருக்கோயில்.
தேப்பெருமாநல்லூர் தல வரலாறு
பிரளய காலம் வந்த போது உலகமெங்கும் நீரால் அழிந்து போன போது இத்திருத்தலம் மட்டும் தண்ணீர் சூழாமல் நிலைத்து நின்றது. இதனை கண்டு ஆச்சரியப்பட்டு பிரம்மன் விவரம் அறிய விநாயகரை நோக்கி தியானித்தார்.
விநாயகரும் அவர் முன் தோன்றி இத்தலம் மிகவும் புனிதமானது இங்கே ஈசன் எழுந்தருள உள்ளார். இங்கே நானும் அம்மை அப்பனும் எழுந்தருள்வோம் என்று கூறினார்.
மேலும் மறுப்பிறவி இல்லாத புனிதரால் மட்டுமே இத்தல இறைவனை தரிசிக்க இயலும் என்றார். பின் பிரம்மன் நீரால் மூழ்காத இத்திருக்கோவிலுக்கு வந்தார். இங்கே சிவபெருமான் ஜோதி லிங்கமாக காட்சி கொடுத்தார்.
விநாயகரும் அஷ்டதிக் பாலகர்களின் கபாலங்களை ஒட்டியாணமாக மாற்றி இடுப்பில் அணிந்து மனிதர்களை போல் கண்கள், நீண்ட கை விரல்கள் , கால் விரல்கள் கொண்டு கபால விநாயகர் ரூபத்தில் காட்சியளித்தார்.
அம்பிகை பிரளயத்தில் அழிந்த வேதங்களை உபதேசிக்கும் வண்ணம் வேதாந்த நாயகியாக காட்சியளித்தார் என்று தலபுராணம் கூறுகிறது.
வித்தியாசமான சன்னதிகள்
விஸ்வநாதர் கற்ப கிரஹம் தேன் மற்றும் சுண்ணாம்பு கலந்து கட்டப்பட்டுள்ளது. இறைவி வேறு எங்கும் இல்லாத வண்ணம் வலது காலை முன் வைத்து திருவாயை குவித்து வேதங்களை உபதேசிக்க வரும் வண்ணம் அமைந்துள்ளார்.
தட்சிணாமூர்த்தி வேறு எங்கும் இல்லாத வண்ணம் சனகாதி முனிவர்கள் இன்றி நந்தியின் மேல் அமர்ந்தவாரு உள்ளார். நந்தி இத்தல இறைவனை காண வரும் போது கால் இடறி விழுந்து வலது காது உள்ளே போனதால் வலது காது உள்ளே அழுந்திய படி காட்சி தருகிறார்.
கன்னி மூலையில் கபால கணபதி அருள்புரிகிறார். அபிஷேகத்தின் போது கபாலங்களை விநாயகரின் இடையில் காணலாம். வடமேற்கு கோஷ்டத்தில் திருமால் காட்சி தருகிறார். ஒரே இடத்தில் மகா மந்திர பைரவர், சாந்த பைரவர் என இருவரும் காட்சியளிக்கின்றனர்.
இரண்டு சண்டிகேஸ்வரர்கள் ஒரே இடத்தில் தெற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். சண்டிகேஸ்வரருக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு திருக்கரத்துடன் விஷ்ணு துர்கையும், அம்பிகையின் கருவறைக்கு பின் வடக்கு கோஷ்டத்தில் எட்டு திருக்கரங்களுடன் துர்கையும் காட்சி தருகின்றனர்.
நவ கிரகங்கள் தங்களின் திசைகளை மாற்றி வெவ்வேறு திசைகளில் உள்ளனர். பைரவருக்கு அருகில் சனிபகவான் காக வாகனத்தில் காட்சி தருகிறார்.
இப்படி அனைத்து தெய்வங்களும் அகமவிதிக்கு அப்பாற்பட்டு வெவ்வேறு விதத்தில் அமைந்துள்ளது கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.
திருக்கோவிலின் வரலாற்று சிறப்புகள்
மகரந்த முனிவருக்கு அகத்தியர் அளித்த சாபம் போக்கிய தலம். சனிபகவானை பைரவர் அழித்து பின் மீண்டும் சாந்த பைரவராக மாறி அருள்புரிந்த திருத்தலம்.
ஒவ்வொரு சூரிய கிரகணத்தின் போதும் நாகம் தலவிருட்சமான வில்வ மரத்திலிருந்து வில்வத்தை கொய்து சென்று இறைவனுக்கு அர்பணித்து பூஜிக்கும் திருத்தலம். தினமும் சூரியன் தன் கதிர்களை கொண்டு விஸ்வநாதரை பூஜிக்கும் திருத்தலம்.
நவராத்ரி காலத்தில் திருமால் சீர் கொடுத்து தனது தங்கையான அம்பிகையையும் மைத்துனரான ஈசனயும் அருகில் உள்ள தனது கோவிலுக்கு அழைத்து செல்லும் திருத்தலம். மறுப்பிறவி என்பதே இல்லாமல் ஆக்கும் ஒரே ஒரு திருத்தலம் இதுவே ஆகும்.
மறுப்பிறவியை போக்கும் விஸ்வநாதர்
“மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி”
என்று மணிவாசகர் பாடியதற்கு ஏற்ப இறைவன் இத்தலத்தில் இந்த மாயப்பிறவியில் இருந்து விடுதலை அளித்து சிவபதம் அடைய அருள்புரிகிறார்.
மேலும் எவர் ஒருவர் மறுப்பிறவி இல்லாத புனிதரோ அவர்களால் மட்டுமே இத்தல இறைவனை தரிசிக்க இயலும் என்பது உண்மையாகும்.
அனைவரும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் சென்று விஸ்வநாதரையும் வேதாந்த நாயகியையும் தரிசித்து மறுப்பிறவியற்று நற்கதி அடைவோம்.
இந்தியா: சமூக வலைதளங்களில் “பறவைகளுக்கு உணவளிக்க சபதம் ஏற்போம்” என்ற அர்த்தம் கொண்ட #LetsPledgeToServeBirds என்ற ஆங்கில ஹேஷ்டேக் பரவல் ஆகியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் மனிதர்களைப்போலவே நாட்டில் வாழும் விலங்குகளும் உணவின்றியும் தண்ணீர் இன்றியும் தவித்து வருகின்றன.
வீட்டில் முடங்கிய மக்கள் சிலர் தங்கள் வீட்டை சுற்றி உள்ள பறவைகளை காப்பதற்காக மொட்டை மாடியில் வேகவைத்த அரிசி, தானியங்களை வைத்தும்
பறவைகளுக்கு தண்ணீர் வைத்தும் காணொளிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கூடவே “LetsPledgeToServeBirds” என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்து வருகின்றனர்.
அதில் ஒரு பெண்மணி தன் வீட்டின் முன் கிடந்த பறவைக்கு தண்ணீர் கொடுத்து காப்பாற்றும் காணொளியும் இடம் பெற்றிருந்தது.
வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில் மக்களின் இத்தகைய செயல்பாடுகள் பறவைகள் வாழ வழிவகுத்தால் இது போன்ற முயற்ச்சிகள் முக்கியத்துவம் பெரும்.
பறவைகளைப் போன்றே நாய்களும் உணவின்றி மனிதர்களை கடிக்கும் சம்பவங்கள் சில இடங்களில் நடந்தேரியுள்ளன.
கொரோனா ஊரடங்கால் மனிதர்கள் நடமாட்டம் குறைந்த நிலையில் தெரு நாய்களும் உணவின்றி தவிக்கின்றன, அதற்கும் இவ்வாறு ஒரு ஹேஷ்டேக் உருவக்கம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்று பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவளிப்பதனால் வீட்டிலேயே முடங்கியிருப்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
சூது கவ்வும் பார்ட் 2 விரைவில் வருமா? யார் சொன்னது? விஜய் சேதுபதி நடிப்பில் வந்த சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சூது கவ்வும் 2 படம் விரைவில் உருவாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
பீட்சா, தெகிடி, இன்று நேற்று நாளை, சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட பல படங்களை திருகுமரன் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் சிவி குமார் தயாரித்திருந்தார்.
தற்போது, டைட்டானிக், காதலும் கவுந்து போகும், 4ஜி ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் சிவி குமார் தனது சமூக வலைதள பக்கத்தில், எனது தயாரிப்பில் வந்த படங்களில் உங்களுக்கு எந்த படத்தின் 2ம் பாகம் வேண்டும் என்று கேட்டிருந்தார்.
அதில், தெகிடி, சூதுகவ்வும், மாயவன் ஆகிய படங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இதில் கிட்டத்தட்ட 62% பேர் சூது கவ்வும் படத்திற்கும், 26% தெகிடி படத்திற்கும் 12% மாயவன் படத்திற்கும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
சூது கவ்வும் படத்தில், விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், கருணாகரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
சூது கவ்வும் 2 பாகம் குறித்து இயக்குநர் நலன் குமாராசாமி கூறுகையில், என்னிடம் அதிரடி மசாலா வகையில் ஒரு படமும், ஸ்போர்ட்ஸ் டிராமா வகையில் ஒரு படமும் இருக்கிறது. சூது கவ்வும் 2 ஆம் பாகம் எதிர்காலத்தில் நடக்கும் என்று நம்பிகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக சூது கவ்வும் 2 விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விஜய் சேதுபதி கடைசி விவசாயி, உப்பெனா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், புஷ்பா, துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார்.
இந்தப் படங்கள் திரைக்கு வந்த பிறகு சூது கவ்வும் 2 ஆம் பாகம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்தப் படத்தில் விஜய் சேதுபதிதான் நடிப்பார் என்பது குறித்து படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே தெரியவரும்.
Mahesh Babu; ஆர் ஆர் ஆர் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்ஆர்ஆர் (RRR).
இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.
கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் கோமரம் பீம் மற்றும் சீதாராம ராஜூ ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்திய படம் என்று கூறப்படுகிறது.
ராம் சரண் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். அண்மையில், படத்தின் டைட்டில் லோகோவுடன் கூடிய RRR மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும், வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று போஸ்டரிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை மிஞ்சும் அளவிற்கு இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் ஆர் ஆர் ஆர் படத்தைத் தொடர்ந்து ராஜமௌலி அடுத்து தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இதன் காரணமாக டுவிட்டரில் #MaheshBabu, #SSRajamouli ஆகிய ஹேஷ்டெக்குகள் டிரெண்டானது.
ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்க: மீண்டும் சென்னை – 28 பாய்ஸ்! கொரோனா லாக்டவுன் நேரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீண்டும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் சென்னை – 600 028 கூட்டணி இணைந்துள்ளது.
வெங்கட் பிரபுவின் சென்னை 600 028 கூட்டணி மீண்டும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணைந்துள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் சென்னை 600 028.
இப்படத்தில் ஜெய், சிவா, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி, விஜய் வசந்த், நிதின் சத்யா ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தின் 2ம் பாகம் வெளியானது. இந்தப் படத்திலும் சென்னை 600 028 படத்தில் நடித்த பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் சென்னை – 600 028 பாய்ஸ் ஒன்று கூடியுள்ளனர். ஆம், கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவருமே வீட்டில் இருக்கின்றனர்.
அப்படியிருக்கும் போது சென்னை – 600 028 பாய்ஸ் கூட்டணி மீண்டும் ஒன்றுகூடியுள்ளது. கொரோனா விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், வெங்கட் பிரபு அண்ட் டீம் ஒரு சின்ன வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், சென்னை 600 028 படக்குழுவினரை வீட்டில் இருந்தபடியே நடிக்க வைத்து வெங்கட் பிரபு வீடியோ வெளியிட்டுள்ளார்.
கையை கழுவவேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளி ஆகியவற்றை வலியுறுத்தி அந்த வீடியோவில் நடித்துள்ளனர்.
இதில், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது போன்றும், சிவா கை கழுவுவது போன்றும் காட்டப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, VPBoysLockdown என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Vadivelu; கிங் பட காமெடியை பதிவிட்டு வாழ்த்து சொன்ன வடிவேலு! விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் சேர்ந்து நடித்த கிங் படத்தின் காமெடியை பதிவிட்டு வடிவேலு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விக்ரம் நடித்த கிங் படத்தின் காமெடியை பதிவிட்டு, வடிவேலு விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சியான் என்று அழைக்கப்படும் விக்ரம் நேற்று தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
தற்போது கோப்ரா படத்தில் நடித்து வரும் விக்ரமுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில், காமெடி நடிகர் வடிவேலு அவருடன் இணைந்து நடித்த கிங் படத்தின் காமெடியை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து வடிவேலு வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்ரம், வாழ்க பல்லாண்டு என பதிவிட்டுள்ளார்
அதே போன்று ரசிகர்களும் HBD Vikram என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்துள்ளனர்.
சீனா: வுகான் நகரத்தித்தில் இருந்து உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவியது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் சீனா ஏற்கனவே இந்த நகரத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,579 ஆக தெரிவித்திருந்த நிலையில் இப்போது திருத்தம் செய்யப்பட்டிப்பதாகவும்
வுகான் பலி எண்ணிக்கை 50% அதிகம்
விடுபட்ட எண்ணிக்கையை சேர்த்து வுகான் நகரத்தில் இப்போது 3,869 ஆக பலி எண்ணிக்கை உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 50 சதவிகித உயர்வாகும்.
ஏற்கனவே பலி எண்ணிக்கை தொடர்பாக உலக நாடுகள் சீனாவின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து இந்த தகவலை சீனா இன்று வெளியிட்டு உள்ளது.
இந்த தகவல் திருத்தத்திற்கு காரணம் மருத்துவமனைக்கு வெளியில் ஏற்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு தகவல்களை சேகரிக்க ஏற்பட்ட காலதாமதம் மற்றும்
தற்காலிக மருத்துவமனை, தனியார் மருத்துவமனை போன்றவர்களிடமிருந்து தகவல் சேகரிக்க ஏற்பட்ட தாமதமே என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் 11 மில்லியன் மக்கள்வசிக்கும் இந்த நகரத்தில் பல மாதங்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது
மட்டுமல்லாமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணத்தினால் தான் கோரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காதலிக்கும் ஆண், பெண்களுக்கு முன் உதாரணமாக அஜித் – ஷாலினி ஜோடியும், அவர்களது காதல் வாழ்க்கையும் இருக்கிறது.
தமிழ் சினிமாவில் அனைவருமே ஆச்சரியப்படும் அளவிற்கு சிறந்த காதல் ஜோடியாக இருப்பது அஜித் – ஷாலினி. இவர்களுக்கு சிறந்த காதல் ஜோடிக்கான பட்டங்கள் கொடுக்கலாம்.
காதல் திருமணம் செய்து 20 ஆண்டுகள் ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி வந்தால் அஜித் – ஷாலினி திருமணம் செய்து 20 ஆண்டுகள் ஆகிறது.
ஹலோ ஹேஷ்டேக்
அஜித் – ஷாலினியின் திருமண நாள் வருவதை முன்னிட்டு ஹலோ ஹேஷ்டேக்கில் AjithShaliniBestCouple👩❤️👨, AjithShaliniLoveStory❤️❤️, AjithShaliniPhotos, அஜித் ஷாலினி பாடல்கள் 💕🎼, AjithShalini👩❤️👨, AjithShaliniSongs💕🎼, AjithShaliniLoveScenes❤️🎬, AjithShaliniRoleModelCouple👩❤️👨 ஆகியவை டிரெண்டாகி வருகிறது.
அஜித் ஷாலினி சிறந்த காதல் ஜோடி, அஜித் ஷால்னி காதல் கதை, அஜித் ஷாலினி புகைப்படங்கள், அஜித் ஷாலினி பாடல்கள், அஜித் ஷாலினி, அஜித் ஷாலினி காதல் காட்சிகள், அஜித் ஷாலினி ரோல் மாடல் ஜோடி என்று ஹலோவில் ஹேஷ்டேக் உருவாக்கி அஜித் ஷாலினி பற்றி கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
திரையுலகில் காதல் திருமணம் செய்த பல பிரபலங்களுக்கு முன்னுதாரணம் தல அஜித் ஷாலினி ஜோடியே. வருகிற ஏப்ரல் 24 அன்று திருமண நாளை கொண்டாடும் அஜித் ஷாலினி ஜோடி பற்றிய உங்களுக்கு தெரிந்த சுவாரஸ்யமான தகவல்களையும், உங்களது வாழ்த்துக்களையும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள Hashtags-ஐ பயன்படுத்தி பதிவிடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
அமர்க்களம்
தல ரசிகர்கள் அனைவருக்குமே தெரியும், அஜித்தின் காதல் வாழ்க்கை. ஆம், அமர்க்களம் படத்தின் மூலமாகவே அஜித் – ஷாலின் காதல் வாழ்க்கை தொடங்கியது.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை. குழந்தை நட்சத்திரமாகவே தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
காதலுக்கு மரியாதை
ஹீரோயினாக அறிமுகமானது என்னவோ விஜய்யின் காதலுக்கு மரியாதை. இதுதான் தமிழிலும் ஷாலினிக்கு முதல் படம்.
இரண்டாவது படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார். அதுதான் அமர்க்களம். அஜித் – ஷாலினி காதல் வாழ்க்கை ஆரம்பமானதும் அந்த படத்தில்தான்.
அஜித் – ஷாலினி காதல் வாழ்க்கை
இயக்குநர் சரண் அமர்க்களம் படத்தில் நடிப்பதற்கு ஷாலினியிடம் பேசியுள்ளார். ஆனால், அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பிறகு அஜித் நேரடியாக பேசவே அவரது மரியாதைக்காக ஷாலினியும் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஷாலினி ரத்தக் காயம்
படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்துள்ளது. அதுவரை ஷாலினி மீது காதல் வராத அஜித்திற்கு அவருக்கு ஏற்பட்ட காயத்தைப் பார்த்தும், அவரது பக்குவத்தைப் பார்த்தும் காதல் வந்துள்ளது.
அமர்க்களம் படத்தில் ஏற்பட்ட விபத்து
அமர்க்களம் படத்தில் ஏற்பட்ட விபத்து, படத்தின் காட்சிப்படி, சீனிவாசா தியேட்டரில் ஓடும் அண்ணாமலை படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஷாலினி எடுத்து வந்து தனது வீட்டில் வைத்துக் கொள்வார். அப்போது, அவரிடம் இருந்து கிளைமேக்ஸ் காட்சி பெட்டியை வாங்க அஜித் கோபத்துடன் கையில் கத்தியோடு ஷாலினி வீட்டிற்கு வருவார். கோபத்தோடு, ஷாலினியுடன் சண்டை போட்டு கிளைமேக்ஸ் படப்பெட்டியை பிடுங்குவார். இது தான் சீன்.
அஜித் கூச்சல் – மருத்துவ வசதி
அந்த காட்சியின் போது, அஜித் தான் கொண்டு வந்த கத்தியை எடுத்து வீசுவார். அது, ஷாலினி கையில் ரத்தக் காயத்தை ஏற்படுத்தியது.
ஒட்டு மொத்த யூனிட்டும் அதிர்ச்சியடையவே ஷாலினி மட்டும் ரொம்பவே கூலாக இருந்துள்ளார். ஆனால், நம்ம தல சும்மா இருப்பாரா? இல்லவே இல்லை. கூச்சலிட்டுள்ளார். அவர் கூச்சலிட்டதில் மருத்துவமனையே செட்டுக்கு வந்துள்ளது.
அதன் பிறகு ஷாலினி ஷூட்டிங்கிற்கு வரவே மாட்டார் என்று நினைத்துளனர். ஆனால், இது குறித்த அறிந்த ஷாலினியின் அப்பா உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார்.
ஷாலினியின் அப்பா பாராட்டு
வந்தவர், சிறு வயதிலிருந்தே படப்பிடிப்பின் போதோ அல்லது படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்திலோ ஷாலினிக்கு ரத்தம் காயம் ஏற்பட்டாலோ அந்த படம் கண்டிப்பாக ஹிட் கொடுக்கும். அதே போன்று தற்போது அமர்க்களம் படத்திலும் நேர்ந்துள்ளது. ஆதலால், இந்தப் படம் கண்டிப்பாக ஹிட் கொடுக்கும் என்று பாராட்டு தெரிவித்தார்.
காதலிக்கும் காட்சி
அஜித், ஷாலினியை காதலிப்பதாக கூறும் காட்சி. ஆம், ஷாலினியை பார்க்க வரும் அஜித், அவருக்கு பூங்கொத்து கொடுப்பார்.
இதைக் கேள்விப்பட்ட அஜய் தனது பணத்தில் பூங்கொத்து வாங்கி கொடுத்துள்ளார்.
அந்த சமயத்தில் ஷாலினியின் அப்பா யாருக்கு இந்த பூங்கொத்து என்று அஜித்திடம் கேட்டுள்ளார். இதற்கு, அஜித் பயந்து கொண்டு இது நடிகர் மாதவன் தனது காதலிக்காக வாங்கியது என்று கூறி சமாளித்துள்ளார்.
எனினும் ஷாலினிக்கு பூங்கொத்து கொடுத்து காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
அஜித் வேண்டுகோள்
சீக்கிரமே படத்தை எடுத்து முடிச்சிருங்க சார். இல்லை என்றால் இந்த பொண்ணை நான் காதலிச்சிருவேனுக்கு பயமாக இருக்கு என்று தன்னிடம் கூறியதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அஜித் பிறந்தநாள் – ஷாலினி கிப்ட்
இதே போன்று அஜித்தின் பிறந்தநாளுக்கு இயக்குநர் சரண் அஜித்தை தொடர்புகொண்டு ஷாலினியை பேச வைத்துள்ளார்.
அப்போது பேசிய ஷாலினி உங்கள் வீட்டு வாசலில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது என்று திறந்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.
அஜித்தும் அவர் கூறியதைக் கேட்டு வீட்டு கதவை திறந்து பார்த்து அதிர்ச்சியடைள்ளார்.
ஏனென்றால், அஜித்திற்கு பிடித்த அனைத்தும் அவர் வீட்டு வாசலில் இருந்துள்ளது. இப்படியே இருவரது காதலும் மலர்ந்துள்ளது.
அஜித் காதல் புரோபோஷ்
ஒரு கட்டத்தில் நேரடியாக ஷாலினியிடம் அஜித் தனது காதலை வெளிப்படுத்தியதோடு, திருமணம் செய்து கொள்ளவும் ஆசையிருப்பதாக கூறியுள்ளார்.
அப்போது, ஷாலினிக்கும் அஜித் மீது காதல் இருந்துள்ளது. ஆதலால், ஷாலினியும் யோசிக்காமல் ஓகே சொல்லியுள்ளார்.
அதோடு தான் அப்பா செல்லம் என்பதால், அப்பாவிடம் சம்மதம் வாங்கும்படி கூறியுள்ளார்.
அஜித் ஷாலினி திருமணம்
உடனே அஜித் ஷாலினியின் பெற்றோரை சந்தித்து சம்மதம் வாங்கியுள்ளார். அப்புறம் என்ன, இருவீட்டார் சம்மதத்துடன் அஜித் தனது காதலி ஷாலினியை கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி திருமணம் செய்தார்.
சினிமாவின் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும், அவர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருப்பது என்னவோ தல அஜித் – ஷாலினி.
அமர்க்களம் மூலம் காதல் வாழ்க்கையை தொடங்கிய அஜித்துக்கு பக்கபலமாக ஷாலினி இருந்து வருகிறார். ஒரு ஆணின் வெற்றிப் பிறகு ஒரு பெண் இருப்பாள் என்று கூறுவது உண்டு. அப்படி அஜித்தின் வாழ்க்கையில் வந்த ஷாலினி அஜித்தின் ஒவ்வொரு அசைவிலும் அவருக்கு உறுதுணையாகவே இருக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு சினிமா வாழ்க்கையில் இருந்து ஷாலினி விலகியுள்ளார்.
அஜித் மகன், மகள்
அஜித் – ஷாலினிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமர்க்களம் படத்திற்குப் பிறகு அஜித், முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், உன்னை கொடு என்னை தருவேன், தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம், ரெட், வில்லன், என்னை தாலாட்ட வருவாளா, வரலாறு, பில்லா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
எல்லாமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படம். தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.