Home Blog Page 137

ஜி-20 நாடுகளிலேயே அதிகபட்ச வளர்ச்சியில் இந்தியா-IMF !

0

மும்மை: இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அனைத்துலக நாணய நிதியம்”( International Monetary Fund -IMF) வெளியிட்டுள்ள செய்தியை மேற்கோள் காட்டி

இந்தியா அனைத்து ஜி-20 நாடுகளை காட்டிலும் மொத்த உள்நாட்டு உர்பத்தியின் (GDP) வளர்ச்சிவிகிதம் அதிகமாகவே உள்ளதாகவும், இது தற்ப்போது 1.9 சதவிகிதத்தில் உள்ளதெனவும் தெரிவித்தார்.

2021-2022 இல் 7.4 சதவிகிதத்தை எட்டும்!

அனைத்துலக நாணய நிதியத்தின்(IMF) கூற்றில் இந்த வளர்ச்சி வரும் 2021-2022 இல் 7.4 சதவிகிதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் அவர் செவ்வாய் கிழமை கூறுகையில் உலகம் தற்போது கோவிட்-19 பரவலாலும் ,ஊரடங்கு உத்தரவுகளாலும்  எப்பொழுதும் இல்லாத மோசமான

பொருளாதார இழப்புகளை உலகம் சந்தித்திருப்பதாகவும் தற்போதுவரை 9 ட்ரில்லியன் டாலர் அளவில் இந்த இழப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த அளவு ஜப்பான் மற்றும் ஜெர்மனியின் பொருளாதாரங்களை  ஒன்று சேர்த்து ஒப்பிடும் பொழுது அதை விட அதிகம் என அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் தற்போது உள்ள நிலவரப்படி ஒரு சில நாடுகள் மட்டுமே வளர்ச்சி விகிதத்தில் உள்ளதெனவும் அதில் இந்தியாவும் ஒன்று எனவும் தெரிவித்தார்.

மேலும் அவர் மோட்டார் வாகன உற்பத்தித்துறை மற்றும் வாகன விற்பனை கடுமையான பாதிப்பை சந்தித்திருப்பதாகவும் மின்சாரத்தேவையில் குறைவு ஏற்பட்டிருப்பதனையும் சுட்டிக்காட்டினார்.

3

அவசரத்திற்கு ஆம்புலன்ஸாக மாறிய தபால்வண்டி – இந்தியாபோஸ்ட் சேவையினை பாராட்டிய மத்திய அரசு

0
அவசரத்திற்கு ஆம்புலன்ஸாக மாறிய தபால்வண்டி - இந்தியாபோஸ்ட் சேவையினை பாராட்டிய மத்திய அரசு

India post : கொரோனாவின் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கில் இருக்கும்போது, அவசரத்திற்கு ஆம்புலன்ஸாக மாறிய இந்தியாபோஸ்ட் வண்டிகள் பல மருத்துவக்கருவிகளை நாடுமுழுவதும் எடுத்துசென்றுள்ளன. கொரோனவைரஸ் பரவலை தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் ஒரு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட அவசரகால சூழ்நிலையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளை நாடுமுழுவதும் கொண்டுசெல்வது மத்திய அரசிற்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.
ஆனால் அந்த கடினத்தை தன்கையில் எடுத்துக்கொண்டு நாடு முழுவதும் ஆம்புலன்ஸில் செல்ல வேண்டிய மருத்துவக்கருவிகளை இந்தியாபோஸ்ட் தபால் வண்டிகள் மூலம் சரியான நேரத்திற்கு கொண்டுசேர்த்துள்ளது இந்தியாபோஸ்ட்.
நாடுமுழுவதும் இருக்கும் பல மக்களுக்கு அவர்கள் பென்சன் பணம் முதல் அவர்களுக்கு வந்திருக்கும் தபால்களை வழங்கும் வேலையினை மட்டும் பார்க்காமல், இப்படிப்பட்ட முக்கியமான காலகட்டங்களில் அரசிற்கு உதவியதை பார்த்து பலர் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய உள்துறை இணைச்செயலாளர் கூறுகையில், 100 டன்னுக்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்கள் இந்தியாபோஸ்ட் வாயிலாக நாடுமுழுவதும் பல இடங்களுக்கு சரியான நேரத்தில் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அரசால் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் இந்தியாபோஸ்ட் வங்கியில் பணம் வைத்திருந்தவர்கள் எளிதில் எடுப்பதற்காக, நாடு முழுவதும் பல இடங்களில் நடமாடும் வங்கிகள் செயல்படுவதாக கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட கடுமையான காலங்களில் மக்களுக்கும் அரசிற்கும் பெரிய உதவிகளை செய்துவரும் இந்தியபோஸ்டினை பலர் பாராட்டி வருகின்றனர்.
3

ராகவா லாரன்ஸ் மீண்டும் 25 லட்சம்: இதுவரை ரூ.3.65 கோடி நிதியுதவி!

0
Raghava Lawrence

Raghava Lawrence Donation; ராகவா லாரன்ஸ் மீண்டும் 25 லட்சம்: இதுவரை ரூ.3.65 கோடி நிதியுதவி! நடிகர் ராகவா லாரன்ஸ் நடிகர் சங்கத்திற்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

நடிகர் சங்கத்திற்கு ராகவா லாரன்ஸ் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதியுதவி, பொருளுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் முதலில் ரூ.3 கோடி நிதியுதவி அளித்திருந்தார்.

அதில், பிரதமர் நிவாரண் நிதிக்கு ரூ.50 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லடசம், நடனக் கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 25 லட்சம், ராயபுரம் மக்களுக்கு உதவும் வகையில் ரூ.75 லட்சம் என்று வழங்கியுள்ளார்.

சமீபத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு உதவும் வகையில் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். இதையடுத்து, நலிந்த சினிமா விநியோகஸ்தர்களுக்கு உதவும் வகையில், ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார்.

ஆம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் சங்கத்திற்கு என்று தனியாக ரூ.25 லட்சம் நிதியுதவியும் அளித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

எனக்கு அனுப்பியிருந்த வீடியோவை பார்த்தேன். இந்த வீடியோவை அனுப்பி வைத்த நடிகர் உதயாவிற்கு எனது நன்றி. நான் நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் அளிக்கிறேன்.

ஒரு சிறிய வேண்டுகோள், எனக்கு நிறைய வீடியோக்கள் மற்றும் சங்கம் மற்றும் பொது மக்களிடம் இருந்து செல்போன் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.

ஒரு தனி மனிதனாக என்னால் எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு முயற்சி செய்கிறேன். இது மிகவும் வேதனையாக இருக்கிறது.

யாரேனும், நிதியுதவி அளிக்க விரும்பினால், எங்களுடன் சேர்ந்து கொள்ளலாம். அது ஒரு ரூபாயாக இருந்தாலும் கூட உதவி செய்யும். சேவையே கடவுள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சங்கத்திற்கு ராகவா லாரன்ஸ் அளித்த ரூ.25 லட்சம் நிதியுதவியைத் தொடர்ந்து, அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உதயா கூறியிருப்பதாவது:

தென்னிந்திய நடிகர் சங்கம் ஃபெப்சி அமைப்பில் இல்லாததால், தான் செய்த உதவி அவர்களுக்கு சென்று சேரவில்லை என்பதை உணர்ந்த ராகவா லாரன்ஸ், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவுவதற்கு பணம் மட்டும் இருந்தால் போதாது, கொடுக்கும் மனமும் இருக்கவேண்டும்.

திரைத்துறையை சார்ந்தவர்களின் குடும்பங்களில் விளக்கேற்றிவைத்த ஒளிவிளக்கு. கொடுத்து சிவந்த கை, எங்கள் கருப்பு வைரம் ராகவா லாரன்ஸ். நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

3

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கொரோனா தொற்றா? திடீர் பரிசோதனை

0
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கொரோனா தொற்றா? திடீர் பரிசோதனை. புதிதாக வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை செய்யப்பட்டார்.

ரேபிட் கிட் மூலம் வெறும் 10 நிமிடத்தில் கொரோனா இருக்க என்பதை உறுதி செய்து விடலாம். ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டிக்கு கொரோனா நெகட்டிவ் என வந்தது.

இந்தியாவில் கொரோனா இருக்கிறதா இல்லையா என கண்டறியவே பலமணி நேரம் செலவழிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பலர் பயந்துகொண்டு இருந்தனர்.

இந்நிலையில் 10 நிமிடத்தில் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறியும் வகையில் ரேபிட் டெஸ்ட் கிட் என்ற கருவியை அனைத்து மாநில அரசுகளும் வாங்கிய வண்ணம் உள்ளன.

இதே ரேபிட் தமிழக அரசு மத்திய அரசிடம் 25000 கிட் வாங்கியுள்ளது. ஆந்திராவில் இதுவரை 572 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சார்ஸ் வைரஸ் எப்படி முடிவுக்கு வந்ததென்று தெரியுமா? – அதிர்ச்சியளிக்கும் இயற்கையின் சக்தி

0
சார்ஸ் வைரஸ் எப்படி முடிவுக்கு வந்ததென்று தெரியுமா? - அதிர்ச்சியளிக்கும் இயற்கையின் சக்தி

Sars Virus : தற்போதைய கொரோனவினைப்போலவே இதே நூற்றாண்டில் மக்கள் மத்தியில் பெரிதும் அச்சத்தினை ஏற்படுத்தியதுதான் சார்ஸ் வைரஸ்.

சீனாவில் குவாங்டோங் எனும் மனதில் 2002ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கண்டறியப்பதுதான் சார்ஸ் வைரஸ். இது வௌவாலின் மூலம் மனிதருக்கு பரவியிருக்கலாம் என்று கூறினாலும், எதன்மூலம் இது பரவியது என்று இன்றுவரை யாராலும் நிரூபிக்கப்படவில்லை.
உலகம் முழுக்க 28 நாடுகளுக்கு பரவி 8000 பேரை பாதித்தது மட்டுமல்லாமல், 750க்கும் மேற்பட்டோரை பலியாகியுள்ளது இந்த சார்ஸ் வைரஸ் ( Sars virus ).
இந்த வைரஸ் கண்டறியப்பட்டவுடன் இதன் பரவலை கட்டுப்படுத்த, தற்போது போடப்பட்டிருக்கும் லாக்டவுன் போலவே 2002இல் போடப்பட்டது.
கொரோனவைரஸ் குடும்பத்தையே சார்த்த இந்த வைரஸின் அறிகுறிகளும் காய்ச்சல், சளி, தலைவலி மற்றும் சுவாசப்பிரச்சனை.
இதுவரை இந்த வைரஸ்சிற்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் ஆரம்பத்தில் வேகமாக கூடிய பலி எண்ணிக்கை நாளடைவில் குறையத்தொடங்கியது.
இதனால் பாதிக்கப்பட்டோரின் நோய் எதிர்ப்புசக்தியினை அதிகரிக்கவே மருந்துகள் தந்ததாகவும், இயற்கையில் மக்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி வேகமாக உண்டானதால் பலர் குணமடைந்ததாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த உலகில் மந்தை எதிர்ப்புசத்தி என்று ஒன்று உள்ளது. ஒரு பகுதியின் யாருக்காவது நோய் தொற்று ஏற்பட்டால் அங்கிருக்கும் மொத்த மக்கள்தொகையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு அந்த நோயினை எதிர்க்கும் சக்தி உருவாகிவிட்டால் அதன்பின் அந்த நோய் அந்த பகுதியினை தாக்கும் வலிமையினை இழந்துவிடுமாம்.
சார்ஸ் வைரஸினால் ஏற்பட்ட இடங்களில் வேகமாக அதிகரித்த மந்தை எதிர்ப்புசக்தி காரணமாகவே வேகமாக இதன் தாக்கத்திலிருந்து பல நாடுகள் மீண்டதாக சொல்லப்படுகிறது.
2004ஆம் ஆண்டிற்கு பிறகு உலகில் எங்கேயும் இந்த வைரஸ் தொற்றினால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
3

குடும்பம் தான் அழகான பரிசு: குடும்பத்தோடு காட்சியளிக்கும் அருண் விஜய்!

0
Arun Vijay Family Album

குடும்பம் தான் அழகான பரிசு: குடும்பத்தோடு காட்சியளிக்கும் அருண் விஜய்! நடிகர் அருண் விஜய் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அருண் விஜய் தனது குடும்ப புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஏராளமான படங்களில் நடித்தவர் அருண் விஜய். யாருக்கும் போட்டியில்லாமல், அவரது ஸ்டைலில் அவர் நடித்துக் கொண்டிருந்தார்.

முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பிரியம், காத்திருந்த காதல், துள்ளி திரிந்த வானம், கண்ணால் பேசவா, முத்தம், இயற்கை, தவம், வேதா என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு தடையறத் தாக்க என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 3 வருட இடைவெளி. அப்போதுதான் தல அஜித் நடிப்பில் வந்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்தார்.

இந்தப் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். மேலும், பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கியது.

குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம், சாஹோ ஆகிய மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

அண்மையில், மாஃபியா படம் வெளியானது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மாஃபியா 2 படம் வெளியாக இருக்கிறது.

மேலும், அக்னி சிறகுகள், வா டீல், பாக்ஸர், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதோடு, குடும்பம் என்றென்றும் நீடிக்கும் ஒரு பரிசு என்று குறிப்பிட்டுள்ளார்.

அதில், அருண் விஜய் தனது அப்பா விஜயகுமார், அம்மா முத்துக்கண்ணு, மனைவி ஆர்த்தி மோகன், ஆர்ணவ் என்ற மகன் மற்றும் பூர்வி என்ற மகள் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தைத் தான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு உத்தரவு என்பதால், வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்யும், வீடியோவையும் அவர் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

3

1983 ஆண்டிற்கு சென்று இந்தியா வென்ற முதல் உலகக்கோப்பை காண ரெடியா?

0

வருகிறது  83’! இந்தியாவின் முதல் உலகக்கோப்பை வென்ற தருணத்தை ( 1983 cricket world cup ) மீண்டும் காணத்  தயாரா…

1983 ஆண்டிற்கு சென்று இந்தியா வென்ற முதல் உலகக்கோப்பை காண ரெடியா? கபில்தேவ் தலைமையில் 1983-ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பை வென்றது. இந்த நிகழ்வை தத்ரூபமாக செதுக்கும் படமே “83”. 1983 cricket world cup.

வருகிறது 83’ இந்திப்படம்!   நம் நாட்டில் கிரிக்கெட் பிடிக்காதவர் மிகவும் கம்மி . அதிலும் இப்போது “பயோ பிக்சர்” எனப்படும் வாழ்க்கை வரலாற்றுப்படங்கள்  மிகப் பிரபலமடைந்து வருகின்றது. 1983 cricket world cup.

அந்த வரிசையில் இந்தப்படம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது. ரன்வீர் சிங் தான் கபில் தேவின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க இருக்கிறார், அதாவது கபில்தேவாக நடித்து வருகிறார்.  

அதிக மன வலிமை கொண்டவர் கபில் தேவ்!

கபில் தேவ் உண்மையாகவே ஒரு வித்தியாசமான வீரர். மித வேகப்பந்துவீச்சாளர் என்றாலும் மிகத் துல்லியமாகவே பந்து வீசுவார். அவர் இதுவரை நோ பால் எனப்படும் கிரீஸ் கோட்டைத் தாண்டி வீசப்படும் உபரிப்பந்தை ஒரு முறைக்கூட வீசியது இல்லை.

அவர் விளையாடிய நாட்களில் ஒருமுறைக் கூட ஓய்வு எடுத்தது  கிடையாது. அதிக ஆக்குரோஷம், ஆர்ப்பாட்டம் எதுவும் கிடையாது. ஆனால் மிக உறுதியானவர். அதிக மன வலிமை கொண்டவர்.

இழப்பதற்கு எதுவுமே இல்லை…

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெறும் 183 ரன்களே எடுத்து ஆட்டம் இழந்தது.  அன்றைய  காலகட்டத்தில் மிகவும் வலிமையான அணியான மேற்கு இந்தியத் தீவுகள் அறுபது ஓவர்களில் அந்த இலக்கை மிகவும் எளிதாக எட்டிவிடும் என்றே பலரும் எண்ணினர் .

இந்தியா பந்து வீசுவதற்கு முன்னர் “நாம் இழப்பதற்கு எதுவுமே இல்லை, நம் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியதே மிகப் பெரிய விஷயம்.

நாம் அச்சப்படவே தேவை இல்லை. அவர்களுக்கு நாம் எந்த ஒரு ரன்னையும் எளிதில் விட்டுக்குடுக்க வேண்டாம். முடிந்தளவு போராடுவோம் “ என்று பேசினாராம் .

அன்று இந்திய அணியின் களப்பணி மிகவும் அபாரமாக இருந்தது. கபில் தேவ் யாருமே பிடிக்க முடியாது என்று நினைக்கப்பட்ட ஒரு கேட்சை அபாரமாக ஓடிச்சென்று பிடித்து அசத்தினார் .

அன்று அவரின் அறிவுரைப்படி நடந்த இந்திய அணியின் அபாரச் செயல்பாட்டால்  இங்கிலாந்தில் நடைப்பெற்ற உலகக் கோப்பையை 1983-ஆம் ஆண்டு வென்று வரலாறு படைத்தது.

1983 cricket world cup நம்மில் பலர் காண முடியாமல் போன அந்த சிலிர்ப்பூட்டும் தருணத்தை நமக்கு படமாக தரவிருக்கின்றனர்.

கபீர் கான் இயக்கி, பிரிதம் இசையமைக்க, ரிலையன்ஸ் நிறுவனம் விநியோகஸ்தராக பங்குபெற, மிகப் பிரமாண்டமாகத் தயாராகி வருகின்றது.

சிறிது நாட்கள் முன்னர் தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் ஜாம்பவான்களின் வழி காட்டுதலின் படி பயிற்சிகள் துவங்கியுள்ளது!

அன்றைய இந்திய (1983 cricket world cup) அணியின் துவக்க ஆட்டக்காரர், அஞ்சா நெஞ்சர், அதிரடி ஆட்டக்காரர் க்ரிஷ் ஸ்ரீகாந்த் அவர்கள்.

அவரின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க இருப்பது நம் “கோ” புகழ் ஜீவா என்பது கூடுதல் தகவல். காத்திருப்போம்….

சா.ரா 

3

Master: மாஸ்டரில் மீசையில்லாத விஜய்!

0
Master Thalapathy Vijay

Thalapathy Vijay; மாஸ்டரில் மீசையில்லாத விஜய்! மாஸ்டர் படத்தில் விஜய் மீசையில்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தற்போது புதிதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மாஸ்டரில் விஜய் மீசையில்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர். இந்தப் படத்தில், விஜய் உடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதிக்கு தங்கையாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

கல்வித்துறையில் நடக்கும் ஊழலை மையப்படுத்தி மாஸ்டர் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். சமீபத்தில் விஜய்யின் கல்லூரி அடையாள அட்டை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

கடந்த 9 ஆம் தேதி வெளியாக இருந்த மாஸ்டர், கொரோனாவால் வெளியாகவில்லை. வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாஸ்டரில் விஜய் மீசையில்லாமல் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அதுவும் நாசர் தான் இந்தப் படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ளாராம். அவர் வில்லன்களால் கொலை செய்யப்படவே விஜய் மீசையில்லாமல் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் படம் வெளியான பிறகே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக ஒரு பாடலில் விஜய் தாடியில்லாமல், நடித்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், மீசையில்லாத விஜய்யின் புகைப்படம் இதுவரை சமூக வலைதளங்களில் வெளியாகவில்லை.

இந்த நிலையில், மாஸ்டரில் மீசையில்லாத விஜய் என்ற ஹலோ ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

3

1000 ஆண்டுகளாக நடந்துவரும் இரும்பினால் காதுகுத்திக்கொள்ளும் பண்டிகை – கொரோனவை காரணம் காட்டி நடப்பதற்கு தடைவிதித்தது அரசு

0
1000 ஆண்டுகளாக நடந்துவரும் இரும்பினால் காதுகுத்திக்கொள்ளும் பண்டிகை - கொரோனவை காரணம் காட்டி நடப்பதற்கு தடைவிதித்தது அரசு

Ear piercing festival westbengal : மேற்குவங்கத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் மிக பழமையான ஒரு பண்டிகையினை, கொரோனாவினை காரணம் காட்டி நடக்க தடைவிதித்துள்ளது மத்திய அரசு.

இந்தியாவின் பல இடங்களில், பல வினோதமான மத ரீதியான பண்டிகைகள் நடப்பது வழக்கமான ஒன்று. இந்த மாதிரியான பண்டிகைகளினாலே பல சுற்றுலா பயணிகளை இந்தியா கவர்ந்து வருகிறது.

அப்படி பலரை கவர்ந்த ஒரு பண்டிகைதான் மேற்குவங்கத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும், இரும்பினால் காதுகுத்திக்கொள்ளும் பண்டிகை ( Ear piercing festival westbengal ).

இந்த பண்டிகை அங்கு நடக்கும் விவசாயம் செழிப்பாக நடக்கவேண்டுமென இறைவனிடம் வேண்டுவதாக கொண்டாடப்படுகிறது என்று அந்தமக்கள் கூறுகின்றனர்.

அந்த நாட்டில் விவசாயம் செய்யும் ஆண்கள், நன்கு சூடேற்றப்பட்ட இரும்பினால் காதுகுத்திக்கொள்வது மற்றும் கன்னத்தில் அல்லது முதுகில் குத்திக்கொள்வது போன்ற பல வித்தியாசமான செயல்கள் அந்த பண்டிகையில் அரங்கேறும்.

இந்த வலிகள் எல்லாம் கொஞ்சம் காலம்தான், எதுவும் நிரந்தரமல்ல எனும் நம்பிக்கை மனதில் ஏற்படவும், இந்த நம்பிக்கையினால் எந்த பிரச்சனையையும் எளிதாக வென்றுவிட முடியும் என்பதே இந்த பண்டிகையின் உள்நோக்கம் என்று அங்கிருக்கும் பெரியவர்கள் கூறுகின்றனர்.

இவ்வளவு கடினமான முறைகளில் இறைவனை வேண்டி வழிபட்டாலும், ஒரு சில ஆண்டுகள் சரியான மழை இல்லாமல் இறைவன் அவர்களை ஏமாற்றிவருகிறான் என்று பலர் மனதில் சந்தேகம் ஏற்பட்டது.

சந்தேகப்படுவது மட்டுமல்லாமல் பல இளைஞர்கள் அந்த வழிபாட்டினை வெறுக்கவும் தொடங்கியதாக கூறப்படுகிறது.

தற்போது கொரோனவை காரணம் காட்டி இப்படிப்பட்ட பழமையான பண்டிகையை நடத்தக்கூடாது என்று மத்திய அரசு தடைசெய்துள்ளது.

3

This Day in History April 18; வரலாற்றில் இன்று ஏப்ரல் 18

0
This Day in History

This Day in History April 18; வரலாற்றில் இன்று ஏப்ரல் 18 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இறந்த தினம், Today Birthdays in History, Today Deaths in History.

1906ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிலநடுக்கத்தில் 3000பேர் வரையில் உயிர் இழந்தனர். நகரத்தில் தீ பிடித்ததில் பெரும் சேதம் ஏற்பட்டது.

1942ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் பொழுது ஜப்பானின் டோக்கியோ, யோக்கோகமா, கோபே, நகோயா ஆகிய நகரங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு தாக்குதலை நடத்தியது.

1983ஆம் ஆண்டு லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதகரத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.

1912ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்தோர் 705 பேர் நியூ யார்க் வந்து சேர்ந்தனர்.

1930ஆம் ஆண்டு பி‌பி‌சி தனது வழமையான செய்து அறிக்கையில் இந்நாளில் எந்த செய்தியும் இல்லை என அறிவித்தது.

Today Birthdays in History

1858- இந்தியக் கல்வியாளர், செயற்பாட்டாளர் தொண்டோ கேசவ் கார்வே பிறந்த தினம் இன்று.

1883- தமிழக திரைப்பட வெளியீட்டாளர், தாயாரிப்பாளர், தொழிலதிபர் சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்த தினம் இன்று.

1910- இந்தியக் கல்வியாளர், பொருளியலாளர் மால்கம் ஆதிசேசையா பிறந்த தினம் இன்று.

Today Deaths in History

1859- இந்திய ராணுவ தளபதி தாந்தியா தோபே இறந்த தினம் வரலாற்றில் இன்று.

1916- இந்திய இதழியாளர் ஜி. சுப்பிரமணிய ஐயர் இறந்த தினம் இன்று.

1955- நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இறந்த தினம் வரலாற்றில் இன்று.

3