Home Blog Page 140

விஜய்க்கு போன் செய்து சஞ்சய் பற்றி விசாரித்த தல அஜித்!

0
Vijay And Ajith

Vijay; விஜய்க்கு போன் செய்து சஞ்சய் பற்றி விசாரித்த தல அஜித்! கனடா நாட்டில் படித்து வரும் விஜய்யின் மகன் சஞ்சய் பற்றி விஜய்க்கு போன் செய்து தல அஜித் நலம் விசாரித்துள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

விஜய்க்கு போன் செய்து அவரது மகன் சஞ்சய் எப்படி இருக்கிறான் என்பது குறித்து அஜித் நலம் விசாரித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரங்களாக இருப்பது அஜித் மற்றும் விஜய். இவர்களது படங்கள் வெளிவந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அஜித் படம் வந்தால் விஜய் ரசிகர்கள் விமர்சிப்பதும், மோதிக் கொள்வதும், விஜய் படம் வந்தால் அஜித் ரசிகர்கள் விமர்சிப்பதும், மோதிக் கொள்வதும் காலம் காலமாக நடந்து வருகிறது.

ரசிகர்கள் மோதிக் கொண்டாலும், அஜித், விஜய் எப்போதும் நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் பெருமையாக பேசிக் கொள்வதும் நடந்து வருகிறது.

அண்மையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் அஜித்தைப் போன்று உடை அணிந்து வரவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி கோட் சூட்டில் வந்ததாக விஜய் கூறினார்.

இந்த நிலையில், தற்போது விஜய்க்கு போன் செய்த அஜித், சஞ்சய் எப்படி இருக்கிறான் என்று நலம் விசாரித்துள்ளார் என்று செய்தி பரவி வருகிறது.

படிப்பை முடித்து விட்டு விஜய் மகன் சஞ்சய், குறும்படங்களை இயக்கி வந்தார். அதில், நடிக்கவும் செய்திருந்தார்.

இந்த நிலையில் சினிமா தொடர்பாக படிப்பதற்காக சஞ்சய் கனடா சென்றிருந்தார். தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பவும், இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் விளைவாக சஞ்சய் நாடு திரும்ப முடியவில்லை. இதை நினைத்து விஜய் ஒவ்வொரு நாளும் கவலை அடைந்து வருவதாக தகவல் வந்தது.

தினமும் சஞ்சய்க்கு போன் செய்து எப்போதும் தனிமையில் இருக்குமாறும், வெளியில் செல்ல வேண்டாம் என்றும் விஜய் அறிவுரை வழங்கி வருகிறார்.

இந்த தகவல் சமூக வலைதளங்களிலும் மீடியாவிலும் வெளியானது. இது குறித்து அஜித்தும் அறிந்துள்ளார்.

உடனடியாக விஜய்க்கு, தல அஜித் போன் செய்துள்ளார். அப்போது, சஞ்சய் எப்படி இருக்கிறான்? கனடாவில் இன்றைய சூழல் எப்படி இருக்கிறது? என்று அஜித் கேட்டுள்ளாராம்.

இதற்கு பதிலளித்த விஜய், சஞ்சய் பாதுகாப்பாக இருக்கிறான், பயப்படும்படி எதுவுமில்லை என்று கூறியுள்ளாராம்.

இது போன்று அஜித் – விஜய் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொள்வார்கள் என்று நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொரோனாவை வென்று குணமடைந்தவர்களின் உணர்ச்சிகரமான தகவல்கள்

0
thomas mariyamma corona recovery

கொரோனாவை வென்று குணமடைந்தவர்களின் உணர்ச்சிகரமான தகவல்கள், Corona Recover Stories from around the World. கொரோனா குணமடைந்தவர்களின் கதை.

கேரளாவில் கொரோனா பாதித்த வயதில் மூத்த தம்பதியரான தாமஸ் 93வயது, மரியம்மா 88வயது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்து உலகையே ஆச்சரியப்படுத்தினார்கள். அரிதிலும் அரிது என இந்த நிகழ்வை அனைவரும் புகழ்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரில் போராடிய 95 வயதான வில்லியம் கெல்லி சிறுநீரக குறைபாடு, ரத்த அழுத்தம் மற்றும் இருதைய கோளாறுகள் இருந்தும் கொரோனா பாதிப்பில் உயிர் பிழைத்தார்.

திடமான உடலும் மனதும் இருந்ததே இவர் பிழைக்க காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது உண்மையில் வைரம் பாய்ந்த்த கட்டை தான்.

william kelly WW2 corona won
95 age William Kelly WW2 veteran won corona

இரண்டு உலகப்போர்களை சந்தித்த 101 வயதான இத்தாலியை சேர்ந்த ஒருவர் 1918ஆம் ஸ்பெயின் காய்ச்சல் பரவும் பொழுது பிறந்தவர்.

தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்துள்ளார் என்றால் அதிசயம் தான். இவர் தான் நாம் எதிர்காலத்திற்கு நம்பிக்கை.

104 வயதான அடா சன்சுஸ்ஸோ என்ற பாட்டி ஸ்பெயின் காய்ச்சல் மற்றும் கொரோனா காய்ச்சல் இரண்டில் இருந்துமே மீண்டுள்ளார். இவர்தான் நம்பிக்கையின் மறுவடிவம்.

Ada sunso
104 age Ada Sunsso recovered from corona

சீனாவில் 100 வயதான தாத்தா கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து நம்பிக்கை அளித்துள்ளார். மேலும் அவருக்கு ஏற்கனவே மறதி நோய் உள்ளது.

79வயதான இத்தாலியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பதிப்படைந்த பின் பரிசோதனை மருந்து அளிக்கப்பட்டது. அதில் அவரின் உடலில் முன்னேற்றம் அடைந்து குணமடைந்தார் என்பது அதிசயமே.

அதே மருந்து இன்னும் பல்வேறு நபர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

107age dutch women
107 age dutch women recovered from corona

107 வயதான டச்சு பெண்மணி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த வயதான மனிதர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் தினமும் நன்றாக நடக்கிறாராம். இது அதிசயத்திலும் அதிசயம்.

3

சித்தார்த் சூரியநாராயணன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

0
HBD Siddharth

Siddharth; கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சித்தார்த் இன்று தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சித்தார்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கடந்த 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகை சித்தார்த். இவரது இயற்பெயர் சித்தார்த் சூரியநாராயணன்.

பிஸினஸ் மேனேஜ்மெண்ட் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். அதன் பிறகு சினிமா மோகத்தால் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வந்த பாய்ஸ் படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், த்ரிஷா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோரது நடிப்பில் வந்த ஆயுத எழுத்து படம் விமர்சன ரீதியாகவும், வணீக ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

இதையடுத்து தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஆயுத எழுத்து படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

ஒரு நடிகரோரு இல்லாமல், உதவி இயக்குநர், டப்பிங் ஆர்டிஸ்ட், தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகராகவும் திகழ்கிறார்.

கடந்தாண்டு இவரது நடிப்பில் வந்த சிவப்பு மஞ்சள் பச்சை படம் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.

அருவம் படம் ஒரு சிறந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரது மூலமாக இந்த உலகிற்கு எடுத்துக் காட்டிய சமூக அக்கறை கொண்ட படம்.

இதே போன்று தான் சிவப்பு மஞ்சள் பச்சை படமும், சமூக அக்கறை கொண்ட படமாக உருவாக்கப்பட்டது. போக்குவரத்து விதிகளை பின்பற்றி நடக்கும் ஒரு பழக்கத்தை சமூகத்தில் வெளிக்காட்டியது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இன்று தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு சினிமா பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3

கலாமின் ஆசையை நிறைவேற்றவே கொரோனா இந்தியா வந்துள்ளது! – அதிர்ச்சி தகவல்

0
கலாமின் ஆசையை இந்தியா வல்லரசு கனவை india superpower 2020

2020 இந்தியா வல்லரசு நாடாக முன்னேற கொரோனா வைரஸ் எப்படி உதவும்? சீனா மீது உலக நாடுகள் முற்றிலும் உறவை முறித்துக்கொள்ளும் போது இந்தியா வல்லரசாக மாற வாய்ப்பு.

கொரோனா அச்சுறத்தல்

உலகத்தையே தற்போது வீட்டில் முடங்க செய்துவிட்டது இந்த கொரோனா எனும் கொடிய வைரஸ். இந்த வைரஸினை தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு ஊசியினை கண்டுபிடிப்பதில் உலகில் உள்ள பல நாடுகள் விடாமல் முயற்சித்து வருகின்றன.

பல நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்த இந்த வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்தியாவில் டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிகமாக பரவியுள்ள இந்த வைரஸால், 21 நாட்கள் இருந்த ஊரடங்கு தற்போது மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல கடுமையான முயற்சிகளை எடுத்து வரும் இந்திய அரசிற்கு, பல உலக நாடுகள் பாராட்டு தெரிவிக்கும் வேலையில் ஒரு சில ஆய்வாளர்கள் இந்தியாவில் இந்த வைரஸினால் ஏற்படப்போகும் மாற்றங்களையும் கணித்து வருகின்றனர்.

உலகில் உள்ள பல நாடுகளின் பொருளாதாரத்தை பாதித்த இந்த வைரஸ், இந்தியாவின் பொருளாதாரத்தில் சுணுக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த பொருளாதார சுணுக்கத்தில் இருந்து இந்தியா மீண்டு வரவும், அப்துல்கலாம் கண்ட 2020 இந்தியா வல்லரசு கனவும் பலிப்பதற்காக ஒரு சில வழிகள் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து எப்படி வந்தது என்று இன்றுவரை தெரியப்படாத இவ்வேளையில், கொரோனாவிலிருந்து மீண்ட சீனா இந்த சூழ்நிலையை பல வழிகளில் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது.

இந்த செயலினால் பல நாடுகள் சீனாவினை ஒத்திவைக்க இருப்பதாக பல பேச்சுக்கள் உள்ளன. கூடியவிரைவில் அது நடக்க வாய்ப்பு இருப்பதாக பலர் கூறுகின்றனர்.

உலகில் பல நாடுகளின் வணிகம் மற்றும் பொருளாதாரம் சீனாவின் பெரும்பங்கில் உள்ளது. அப்படி அவர்கள் சீனாவினை ஒதுக்க முடிவெடுத்தால் இதற்கான மாற்றுவழியினை அவர்கள் தேடியே ஆக வேண்டும்.

india superpower 2020

சீனாவிற்கு அடுத்தபடியாக அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இந்தியா தான். ஒருவேளை பல நாடுகள் இந்தியாவிடம் வணிகத்தையோ அல்லது பொருளாதாரம் சார்ந்த விஷயங்களுக்கு இந்தியாவினை நாட வாய்ப்புள்ளது.

இந்த வாய்ப்பினை இந்தியா சரியாகப் பயன்படுத்தினால், உலகின் பல நாடுகளுடன் வணிகம் செய்து பொருளாதாரத்தை எளிதாக மேம்படுத்திக்கொள்ள முடிவதோடு மட்டுமல்லாமல் வேலையில்லாத் திண்டாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க வாய்ப்புள்ளது.

அப்துல் கலாமின் ஆசையை நிறைவேற்றுமா கொரோனா?

இந்தியாவிற்கு அப்படியொரு வாய்ப்பு கிட்டி இந்திய அரசு அதனைச் சரியாக பயன்படுத்தினால், அறிவியல் மேதையான டாக்டர் அப்துல்கலாமின் 2020 இந்திய வல்லரசு கனவு பலிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

3

காதலில் விழுந்தேன் நடிகை சுனைனா பர்த்டே டுடே!

0
HBD Sunaina

Sunaina; கடந்த 2008 ஆம் ஆண்டு திரைக்கு வந்த காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா.

ரஜினிகாந்த் நடிப்பில் வந்த சிவாஜி படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்திருந்தார். ஆனால், இறுதி கட்ட பணியின் போது அவரது காட்சி நீக்கப்பட்டுவிட்டது.

ஆனால், அதற்கு முன்னதாக கடந்த 2005 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

காதலில் விழுந்தேன் படத்தைத் தொடர்ந்து வரிசையாக தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

மாசிலாமணி, நீர்ப்பறவை, சமர், வனம், தெறி, நம்பியார், கவலை வேண்டாம், தொண்டன், காளி, எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

படங்களில் நடிப்பதைத் தொடர்ந்து, வெப் சீரிஸ்லும் நடித்து வருகிறார். ஆம், தனது நிலா நிலா ஓடி வா, ஹை பிரைஸ்டெஸ், ஃபிங்கர்டிப், சதரங்கம் ஆகிய வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் பகுதியில் கடந்த 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பிறந்துள்ளார். இந்த நிலையில், இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சினிமா பிரபலங்கல், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என்று பலரும் சுனைனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சுனைனாவின் பிறந்தநாளை முன்னிட்டு HBD Sunaina என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

வெளியான 2 நாளில் இத்தனை மில்லியன் வியூஸா? சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ!

1
Soorarai Pottru Making Video

Soorarai Pottru Making Video; வெளியான 2 நாளில் இத்தனை மில்லியன் வியூஸா? சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ! சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி 2 நாட்களில் யூடியூப்பில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ வெளியாகி 2 நாட்களில் யூடியூப்பில் 1 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவன ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

மேலும், கருணாஸ், மோகன் பாபு, ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது.

வரும் மே மாதம் திரைக்கு வரயிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் நிலையில், சூரரைப் போற்று படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சூரரைப் போற்று மேக்கிங் வீடியோவில் சூர்யா உடற்பயிற்சி செய்யும் காட்சிகள், டான்ஸ் காட்சிகள் ஆகியவை இடம்பெற்றிருந்தது.

இந்த வீடியோ வெளியான 2 நாட்களில் 1 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

சூர்யா இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Zoom Cloud; வீடியோ கால் ஜும் ஆப் ஆபத்தானதா? உங்கள் மொபைலில் உள்ளதா?

0

Zoom Cloud; வீடியோ கால் ஜும் ஆப் ஆபத்தானதா? உங்கள் மொபைலில் உள்ளதா? ஜும் செயலி பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் கூறுவது என்ன? zoom app news

கொரோனா பாதிப்பால் உலகமே ஊரடங்கில் இருப்பதால் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வீடியோ கால் செய்யும் தேவையும் அதிகரித்துள்ளது. ஜும் கிளவுட் செயலி 100 மில்லியன் நபர்கள் பயன்படுத்திவருகின்றனர்.

மக்கள் அதிகமாக இணையத்தை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைக்குறிவைத்து சில ஹேக்கர்கள் சட்டவிரோதமாக இணைய திருட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகம் முழுக்க ZOOM செயலியில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன.

இதனால் ZOOM செயலி பாதுகாப்பானது இல்லை என்றும், அது எளிதாக ஹேக் செய்ய முடியும் என்பதால், அதை பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

3

உலகமகா நடிகனாக திகழும் சியான் விக்ரம்!

0
Chiyaan Vikram Birthday Today

Chiyaan Vikram; உலகமகா நடிகனாக திகழும் சியான் விக்ரம்! கமல் ஹாசனைத் தொடர்ந்து உலகமகா நடிகனாக சியான் விக்ரம் திகழ்கிறார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

சியான் விக்ரம் இன்று தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோரைத் தொடர்ந்து அதிக வயதானவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர் சியான் விக்ரம்.

இன்று அவருக்கு வயது 54. ஆனால், பார்ப்பதற்கு இன்றும் அதே இளமையான தோற்றத்தோடுதான் தோற்றமளிக்கிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அப்படி ஒன்றும் பேசப்படவில்லை. விக்ரமின் முதல் படமே 1990 ஆம் ஆண்டு வந்த என் காதல் கண்மணி.

சியான் சேது

என் காதல் கண்மணி படத்திற்குப் பிறகு 9 வருட போராட்டத்திற்குப் பிறகு பாலாவின் சேது படம் விக்ரமை ஒரு மாஸ் ஹீரோவாக உயர்த்தியது.

இன்றும் விக்ரமை சேதுவாக பார்ப்பதற்கு கோடான கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சேது இரண்டாம் பாகம் கூட எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகின்றனர்.

விக்ரமிற்கு சியான் என்ற ஒரு அடையாளத்தை கொடுத்தது சேது படம் தான்.

சேது விக்ரமிற்கு மட்டுமல்ல, சினிமா உலகிற்கும் சிறந்த படமாக அமைந்தது. பாடல்களும் ரசிகர்கள் விரும்பும்படியாகவே அமைந்தது.

இந்தப் படத்தில் விக்ரம் ஒரு முரட்டுத்தனமான காதலனாகவே பார்க்கப்பட்டார்.

சேது படம் தான் விக்ரமை சிறந்த நடிகனாக அறிமுகம் செய்தது.

மசாலா படங்கள்

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் விக்ரம் மசாலா படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். அப்படி அவர் நடித்து வெளிவந்த படங்கள் தான் தில், ஜெமினி, தூள், சாமி ஆகிய படங்கள் வணீக ரீதியாக நல்ல வரவேற்பு கொடுத்தது.

அன்றைய காலகட்டங்களில் எந்த ஒரு நடிகரும் எடுத்து நடிப்பதற்கு தயங்கும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை எடுத்து நடித்தார்.

காசி, சாமுராய்

ஆம், அப்படி அவர் நடித்த படம் தான் காசி. கண்பார்வையற்றவர் கதாபாத்திரம். அதன் பிறகு ராபீன்ஹூட் போன்ற ஒரு கதாபாத்திரம் என்றால் அது சாமுராய் படம்.

பிதாமகன்

கடந்த 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பாலாவின் பிதாமகன் படத்தில் சுடுகாட்டில் புதை குழு தோண்டுபவன், பிணங்களை எரிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து, தன்னை ஒரு சிறந்த நடிகனாக காட்டினார்.

பிதாமகன் படம் விக்ரமிற்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றுக் கொடுத்தது.

அந்நியன்

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வந்த சூப்பர் ஹிட் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் அந்நியன். இந்தப் படம் விக்ரமை ஒரு மல்டிபிள் பெர்சனாலிட்டி டிசார்டர் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது. இப்படம் மூலம், தன்னால், ஒரே நேரத்தில் எத்தனை ரோல்களில் வேண்டுமானாலும் நடிக்க முடியும் என்று காட்டினார்.

அந்நியன் படத்தில் அம்பியாகவும், ரெமோமாகவும், அந்நியனாகவும் கொண்டுவரப்பட்டார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு அந்நியன் படம் சிறந்த பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

தெய்வ திருமகள்

கண் பார்வையற்றவனாக நடிக்க முடிந்த தன்னால், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை தனமாக கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்றும் காட்டினார். இதற்காக உடல் மெலிந்து வித்தியாசமான ஒரு பேச்சு, சைகை, நடை, உடை, பாவணை என்று எல்லாவற்றையும் மாற்றினார்.

இப்படத்தில் ஒரு குழந்தையாகவே நடித்தார் என்றே கூறலாம். இந்தப் படம் 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

ஷங்கர் இயக்கத்தில் வந்த ரொமாண்டிக் த்ரில்லர் படம் ஐ. இந்தப் படத்திற்காக 35 கிலோ எடை வரை குறைத்துக் கொண்டுள்ளார். அந்நியன் படத்திற்குப் பிறகு மீண்டும் பல கதாபாத்திரங்கள் கொண்ட சிறந்த படம்.

இதில், மாடலிங் ஹீரோவாக, பாடிபில்டராக, ஒரு வயதான முதிர்ச்சியடைந்த கூணி குறுகியப்போன பெரியவர் போன்ற கதாபாத்திரம் என்று விதவிதமான ரோல்களில் நடித்து தனது திறமையை காட்டிக் கொண்டிருந்தார்.

தமிழ் சினிமாவில் அதிகப்படியாக வசூல் கொடுத்த படங்களில் ஐ படம் 6ஆவது படமாக கருதப்படுகிறது.

சமூக சேவை

சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக சேவையிலும் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித தீர்வு திட்டத்திற்கான இளைஞர் தூதராக இருக்கிறார். சஞ்சீவானி அறக்கட்டளையின் பிராண்ட் தூதராக இருக்கிறார்.

ஐ படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வரும் படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்து வருகிறது.

10 எண்றதுக்குள்ள, இரு முகன், ஸ்கெட்ச், சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான் ஆகிய படங்கள் அந்தளவிற்கு ஒன்றும் வசூல் குவிக்கவில்லை என்றும், திரையரங்குகளில் ஓடவில்லை என்றும் கூறப்படுகிறது.

திரைக்கு வரும் படங்கள்

தற்போது அஞய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா என்ற படத்தில் கிட்டத்தட்ட 10க்கும் அதிகமான ரோல்களில் நடித்து வருகிறார்.

கோப்ரா படத்தைத் தொடர்ந்து துருவ நட்சத்திரம், மகாவீர் கர்ணா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

முக்கிய இயக்குநர்கள்

விக்ரமின் சினிமா வாழ்க்கையில் இயக்குநர் பாலா மற்றும் ஷங்கர் ஆகிய மிக முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள்.

இந்த நிலையில் விக்ரம் இன்று தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் நியூஸ் வெப்சைட் சார்பாக நாமும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம். ஹாப்பி பர்த்டே சியான் விக்ரம் சார்….

3

மொபைல் பேட்டரி அதிக நேரம் நீடிக்க என்ன செய்யலாம்?

0
மொபைல் பேட்டரி செல்போன் ஜார்ஜ் Extend moblie battery performance saver
Abstract Battery supply digital concept

மொபைல் பேட்டரி திறனை எப்படி அதிகரிக்க வைப்பது? அதிக நேரம் செல்போனில் சார்ஜ் நிற்க என்ன செய்ய வேண்டும்? how to Extend moblie battery performance saver?

இன்றைய மின்னல் வேக வாழ்க்கை முறையில் மொபைல் போன் இன்றி எதுவுமில்லை. காலை எழுவது முதல் இரவு உறங்க செல்வது வரை மொபைல் மட்டுமே நம்மை விட்டு இணை பிரியாமல் இருப்பது. மொபைலில் பேட்டரி எதனால் குறைகிறது என்பதே அதிமுக்கியம். 

சில நேரங்களில் அது உற்பத்தி பிழையாகக் கூட இருக்கலாம் , மொபைல் வாங்கி ஒரு ஓரிரு நாளிலே பேட்டரியின் திறன் மோசாமாவது போல் உணர்ந்தால், உடனடியாக “ரீ பிளேஸ்“ எனப்படும் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

என்னதான் 3000 MAH , 5000 MAH திறன் கொண்ட பேட்டரியை வாங்கினாலும், லித்தியம் அயன் போன்ற பாகுபாடு உணர்ந்து வாங்கி வந்தாலும் பலருக்கு பத்துவதே இல்லை. நீங்கள் விளம்பரங்களில் கானும் “For long lasting mobile battery”  , “To extend moblie battery performance ” இதைப் பொருத்து தான்.

நமது நவீன உலாப்பேசிகளில் நமக்கு மிக நிறைவான வசதிகள் உள்ளது. இருந்தும் நம்முடையை ஆர்வகோளாறில் சில ஆப்களை பதிவிறக்கம் செய்து வைத்துவிட்டு பயன்படுத்தாமல் விட்டுவிடுகின்றோம்.

ஆனால், அந்த ஆப்கள் நமது பேட்டரிக்கு ஆப்பு வைக்கிறது. உதாரணமாக “செய்திகள்” செயலிகள் ஓயாமல் தகவல்களை திரையில் தள்ளிக்கொண்டே இருக்கும்.

அதை நாம் சற்று மாற்றி, நாம் விரும்பும் நேரத்தில் தகவல்களை பெற்றுக்கொள்ளும்படி மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

கூகிள் செயலியும் ஓயாமல் “போக்கு வரத்து“ “நடப்பு நிகழ்வுகள்” என்று தகவல்களை தள்ளும், அத்துடன் மொபைலின் பேட்டரியைக் கொல்லும். அவற்றை நமது வசதிக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம் .

மொபைலின் வெளிச்சக்கட்டுப்பாடு முறையைப் பயன்படுத்தினால் நேரத்திற்கு தகுந்தாற்போல அவை செயல்படும் .

தற்போது சாதாரணமாகவே 8 GB நினைவுத்திறன் கொண்ட மொபைல் போன் கிடைக்கின்றது . நம்முடைய பயன்பாடு தான் அதிலும் சூட்சமமானது .

பிளைட் மோடில் போனை வைத்துவிட்டு சார்ஜ் செய்தால் எந்த இடையூறுமின்றி துரிதமாக சார்ஜ் ஏறும், அப்படி இல்லாவிடில் மொபைல் டேட்டா/வைபை ஆகியவற்றை  துண்டித்துவிட்டு சார்ஜ் போடலாம்.

உறங்கச் செல்ல சில மணிநேரத்திற்கு முன் சார்ஜ் போட்டுவிட்டு உறங்கும் முன் ஆப் செய்து விடலாம்.

நாம் பரபரப்பாக மொபைலை இயக்கும்போது நம்மை அறியாமலே “ப்ளூ டூத் “ , “ஆட்டோ ரொட்டேட்“ போன்ற எதையாவது தட்டி வைத்துவிட்டாலும் அதுவும் பேட்டரியை விழுங்கும்.

அக்ஷயை குமார் நடித்த “மைக்ரோ மாக்ஸ்” மொபைல் விளம்பரத்தில் வருவது போல் இல்லாமல், மொபைலை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தினால் நம்மை அது படுத்தாது .

பேட்டரி சேவர் முறை மிகவும் பயனுள்ளது ஆனால் அதையும் நாள் முழுக்க பயன்படுத்துவது உகந்தது அல்ல .

ஓயாமல் பவர் பேங்க், சார்ஜர் கொண்டு மொபைல் போனை துன்புறுத்தினாலும் அவற்றின் திறன் மட்டுப்படும். 

மொபைல் பேட்டரி 10% கீழ்வந்து விட்டால் அதில் நாம் பேசுவதை தவிர்க்கலாம், ஏன்எனில் அப்போது கதிர் வீச்சு அதிகமாகவே இருக்கும்.

ஒருநாளைக்கு குறைந்தது 2 மணிநேரமாவது மொபைலுக்கு ஓய்வு அளிக்கவேண்டும் என்கிறது ஒரு ஆய்வு. அவர்கள் கூறுவது உறங்கும் நேரம் தவிர.

சா.ரா 

3

மும்பையில் புதிதாக கொரோனா பாதித்தோருக்கு 7 நாட்கள் தனிமைக்கு பிறகே பரிசோதனை ஏன் தெரியுமா?

0

மும்பையில் புதிதாக கொரோனா பாதித்தோருக்கு 7 நாட்கள் தனிமைக்கு பிறகே பரிசோதனை ஏன் தெரியுமா? Mumbai Corona Updates.

இந்தியாவில் மும்பை மாநகரத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

புதிதாக கொரோனா அறிகுறி இருப்போருக்கு 7 நாடகள் தனிமைக்கு பிறகே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறதாம்.

உடனடியாக பரிசோதனை செய்தால் 7 நாட்களுக்கு பிறகு கூட முடிவில் மாற்றம் வார வாய்ப்பு இருக்கிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 7 நாட்கள் தனிமையில் கொரோனா பாதிப்பா இல்லை சாதாரண காய்ச்சலா என தெரிந்து விடும்.

இந்தியாவில் இது வரை கொரோனோவால் 13 ஆயிரத்து 387 பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏப் 13 வரை மும்பையில் மட்டும் 27,397 பேருக்கு கொரோனா வைரஸ் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 2,17,554 சோதனைகளில் 12.59 சதவீதமாகும்.

3