Home Blog Page 191

ஒரே ஒரு தலைவன் அதுவும் தளபதி விஜய்: பிரபல இயக்குநர் ஓபன் டாக்!

0
Thalapathy Vijay

Thalapathy Vijay; ஒரே ஒரு தலைவன் அதுவும் தளபதி விஜய்: பிரபல இயக்குநர் ஓபன் டாக்! என்னுடைய ஒரே ஒரு தலைவன் தளபதி விஜய் என்று பிரபல இயக்குநர் அஜய் ஞானமுத்து ரசிகர்களிடம் உரையாடும் போது தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்சநட்சத்திரங்களில் நடிகர் விஜய் ஒருவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் வரிசையில் இடம் பிடித்துள்ளார். அதிகப்படியான ரசிகர்களைக் கொண்டுள்ளார்.

ரசிகர்கள் மட்டுமல்ல, சினிமா பிரபலங்களிலும் இவரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவருக்குமே இவரை பிடிக்கும்.

டான்ஸ் ஆடுவதில் கில்லாடி. சிலருக்கு விஜய்யின் டான்ஸ் ரொம்ப பிடிக்கும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி ஒருவர் தான் விஜய்யைப் பற்றி ரசிகர்களிடம் வேறு மாதிரி சொல்லியிருக்கிறார்.

அவர் யார்? என்ன சொல்லியிருக்கிறார் என்பதை இங்கு பார்ப்போம். உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர்களில் இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் ஒருவர்.

இவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த 7ஆம் அறிவு மற்றும் துப்பாக்கி ஆகிய படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு டிமாண்டி காலனி என்ற ஹாரர் மற்றும் த்ரில்லர் படத்தின் மூலம் சினிமாவில் தன்னை ஒரு இயக்குநராக அறிமுகம் செய்து கொண்டார்.

டிமாண்டி காலனி படத்தைத் தொடர்ந்து நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யப் ஆகியோரது நடிப்பில் வந்த இமைக்கா நொடிகள் படத்தை கொடுத்தார்.

இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. தற்போது சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.

இதன் காரணமாக யாருமே வீட்டை விட்டு வெளியில் வர முடியாதபடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமூக வலைதளமே கதி என்று இருக்கும் பிரபலங்களில் ஒருவராக இருக்கும் அஜய் ஞானமுத்து ரசிகர்களிடையே உரையாடியுள்ளார்.

அப்போது, நீங்கள்தான் துப்பாக்கி படத்தின் உதவி இயக்குநர் என்று எங்களுக்கு தெரியும். ஆகையால், விஜய் பற்றி சில வார்த்தைகள் கூறுங்கள் என்று ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு, என்னுடைய ஒரே ஒரு தலைவன். சிலரை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அது ரொம்பவும் கடினமான ஒன்று என்று பதிவிட்டுள்ளார்.

இதன் காரணமாக தற்போது ஒரே ஒரு தலைவன் என்ற வார்த்தை டிரெண்டாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

இசை வெளியீட்டு விழா முடிந்து மாஸ்டர் டிரைலர், மாஸ்டர் ரிலீஸ் என்று பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் அறிவித்தபடி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மாஸ்டர் படம் வரும் மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்ட கோமாளி பட நடிகை!

0
Samyukhtha Hegde

Samyuktha Hegde Dance Video; அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்ட கோமாளி பட நடிகை! சம்யுக்தா ஹெக்டே அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வந்த வாட்ச்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பெங்களூர் நடிகை சம்யுக்தா ஹெக்டே.

உளவியல் மற்றும் பத்திரிக்கை துறை பிரிவில் இளங்கலை பயின்று வந்த சம்யுக்தா படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு டான்ஸ் மற்றும் நடிப்பு பற்றி படிக்க தொடங்கிவிட்டார்.

கன்னடத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான சம்யுக்தாவிற்கு தமிழில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

வாட்ச்மேன் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வந்த கோமாளி படத்தில் நடித்தார். இப்படத்தில், ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக நடித்திருந்தார்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பப்பி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இயக்குநர் ஹரிகுமார் இயக்கத்தில் தேள் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில், பிரபு தேவா முன்னணி ரோலில் நடிக்கிறார்.

இந்த நிலையில், உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதன் விளைவாக, நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை ஏற்று சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அப்பாவி ஜனங்கள் என்று அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலை வந்துவிட்டது.

தினந்தோறும் பிஸியாக இருந்த பிரபலங்களால் தற்போது 24 மணி நேரத்தைக் கூட எளிதில் கடக்க முடியவில்லை எனும் போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

இதுவரை கிச்சன் பக்கமே சென்றிருக்காத பிரபலங்கள் தற்போது கிச்சனில் அலப்பறையை கூட்டி வருகின்றனர்.

பொழுதுபோகாமல் பிரபலங்கள் செய்யும் அட்டகாசம், லூட்டி ஆகியவற்றிற்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

அந்தவகையில், கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையில், நேற்று, மியூசிக் மற்றும் டான்ஸ் இரண்டுமே என்னை குணமாக்குகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் என்னை நன்றாக உணரவைக்கிறது. வாழ்க்கையை எளிதாக்கியதற்கு நன்றி.

டான்ஸ் ஆடும் வீடியோவை கேட்டுக்கொண்டிருக்கும் எனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இந்த சிறிய டான்ஸ் மூவ்மெண்ட் இதோ…இது எனக்கு பிடித்த பாடலில் இருந்து ஃப்ரீஸ்டைல் செசன் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

நாளை மீள்வாய் தாயகமே: எஸ்பிபி பாடிய கொரோனா பாடல்!

0
SPB Corona Song

SPB Corona Song; நாளை மீள்வாய் தாயகமே: எஸ்பிபி பாடிய கொரோனா பாடல்! வைரமுத்து எழுதிய கொரோனா பாடலுக்கு பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா தாக்கம் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளைக் கடந்து இந்தியாவிலும் வேக வேகமாக பரவி வருகிறது.

யாருமே நினைத்துப் பார்த்திராத வகையில், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என்று பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கவிஞர் வைரமுத்துவும் கொரோனாவுக்கு பாடல் வரிகள் உருவாக்கியுள்ளார்.

அவர் எழுதிய கொரோனா பாடல் வரிகளுக்கு பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தனது குரலில் பாடி அசத்தியுள்ளார்.

கரோனா கரோனா கரோனா… அணுவை விடவும் சிறியது அணுகுண்டைப் போல் கொடியது என்று தொடங்கும் அந்தப் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மெலடியாக தொடங்கும் இந்தப் பாடலின் வரிகளை மட்டுமே கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று எஸ்பிபி வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்பிபி பாடிய கொரோனா பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னதாக சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர், எங்கிருந்து எவனோ வர்றானாம் எல்லாரவையும் வந்து கொல்றானாம்….என்ற கொரோனா விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

என்னது துபாயில கல்யாணமா? வேண்டாம் வேண்டாம்: பிரபல நடிகர்!

0
Nithin Wedding

Nithin Wedding; என்னது துபாயில கல்யாணமா? வேண்டாம் வேண்டாம்: பிரபல நடிகர்! துபாயில் நடக்க இருந்த தனது திருமணத்தை பிரபல தெலுங்கு நடிகர் நிதின் ரத்து செய்து வீட்டிலேயெ எளிமையான முறையில் திட்டமிட்டுள்ளாராம்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நிதின். ஜெயம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் மூலம் நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் பிரபலமானார். சதாவும் பிரபலமானார். படமும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.

நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும், பின்னணிப் பாடகராகவும் இருக்கிறார். Gunde Jaari Gallanthayyinde என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார். Lachhamma and Ding Ding Ding ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி நிதினுக்கும், ஷாலினி என்ற பெண்ணுக்கும் ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், அவர்களது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதையடுத்து, வரும் ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். அதுவும், துபாயில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தனர்.

துபாய்க்கு நடிகர், நடிகைகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்று அனைவரையும் அழைத்து பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்துள்ளன.

இந்த நிலையில், உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் காரணமாக துபாயில் நடக்க இருந்த தனது திருமண நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, ஹைதராபாத்தில் உள்ள வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

3

சேது உடலை சுமந்து சென்று சந்தானம் இறுதி அஞ்சலி: ஓய்வெடு நண்பா!

0

Sethuraman Final Tribute; சேது உடலை சுமந்து சென்ற சந்தானம்! நடிகரும், டாகருமான சேதுராமனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட சந்தானமும் அவரது உடலை சுமந்து சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மருத்துவரும், நடிகருமான சேதுராமனின் இறுதிச் சடங்கு நடந்து முடிந்துள்ளது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சேதுராமன் என்ற சேது.

இந்தப் படத்தில் தான் சந்தானம் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து சேதுராமன், மீண்டும் சந்தானம், விசாகா சிங் கூட்டணியில் வாலிபராஜா படத்தில் நடித்தார்.

மேலும், சந்தானத்தில் சக்க போடு போடு ராஜா படத்திலும், 50/50 படத்திலும் நடித்தார். 50/50 என்ற படத்தில் சேது என்ற கதாபாத்திரமாகவே நடித்து சேதுவாகவே மறைந்தார்.

ஆம், மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சேதுராமனின் மறைவு சினிமா பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சேதுவுக்கு 2016ல் உமா என்ற பெண்னுடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு சஹானா என்ற ஒரு வயது பெண் குழந்தை இருக்கிறது.

இளம் வயதில் அவரது மரணம் பேரதிர்ச்சியை கொடுத்திருப்பதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டரில் கூறியுள்ளார்.

சேது பற்றி பேசியுள்ள நடிகை அதுல்யா, “இது உண்மையிலேயே அதிர்ச்சியான செய்தி. அவர் இறந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை”என கூறியுள்ளார்.

“36 வயதிலேயே மரணமா.. இது நியாயமில்லை கடவுளே” என வெங்கட் பிரபு தன் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளார்.

இதே போன்று நடிகரும், சேதுவின் நண்பருமான காமெடி நடிகர் சந்தானம், எனது அன்பு நண்பர் டாக்டர் சேதுவின் மறைவில் அதிர்ச்சியும், மனச்சோர்வும் அடைந்தேன். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என்று பதிவிட்டிருந்தார்.

இவரைப் போன்று சினிமா பிரபலங்கள் பலரும் டுவிட்டர் மூலமாக இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சேதுராமனின் இறுதிச் சடங்கு தற்போது நடந்துள்ளது. சேதுவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட சந்தானம், அவரது உடலை சுமந்துபடி சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

3

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இறப்பு: சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி!

0

Visu Died; ஒரே வாரத்தில் அடுத்தடுத்து துயரம்: சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி! ஒரே வாரத்தில் சினிமா பிரபலங்களின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஒரே வாரத்தில் அதுவும் 4 நாட்களில் சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து மறைந்தது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசு மறைவு

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை வகுத்துக் கொண்டவர் மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் விசு. கடந்த 1941 ஆம் ஆண்டு பிறந்தார்.

திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னதாக, மேடை நாடகங்களிலும், தொலைக்காட்சியிலும் நடித்துள்ளார்.

இவரது இயக்கத்தில் வந்த படங்கள் பெரும்பாலும், சமூக, குடும்பக்கதையை மையப்படுத்தியே திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்து வைப்பதில், இவரை மிஞ்ச யாருமில்லை.

குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இதே போன்று கண்மணி பூங்கா என்ற படத்தின் மூலம் இயக்குநரானார்.

1977 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் கால்பதித்து வந்தார். விசு, தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என்று பல திறமைகளை கொண்டவராக திகழ்ந்துள்ளார்.

விசு இயக்கத்தில் வந்த சம்சாரம் அது மின்சாரம் படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்திற்கு பிலிம் பேர் விருது கிடைத்தது.

இந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக கடந்த 22 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 74. விசு உயிரிழந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சேதுராமன் மறைவு

ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம், அதன் பிறகு விசு மறைவு என்று அடுத்தடுத்து அதிர்ச்சிதரும் சம்பவம் நிகழ்ந்தது.

இந்த துயரிலிருந்து மீள்வதற்குள் ஒரு வாரத்தில் அதுவும் 4 நாட்களில் மற்றொரு சினிமா பிரபலம் சேதுராமன் மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு வயது 36. சேதுராமன் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தோல் நோய் (Dermatology) பிரிவில் மருத்துவம் படித்த சேதுராமன், கடந்த 2016 ஆம் ஆண்டு ZI Clinic எனப்படும் தோல் நோய் சிகிச்சை மருத்துவமனையை திறந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி இரண்டாவது முறையாக ZI Clinic எனப்படும் தோல் நோய் சிகிச்சை மருத்துவமனையை சென்னை அண்ணா நகரில் திறந்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து, வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 ஆகிய படங்களில் நடித்துள்ளார். 50/50 என்ற படமே சேதுராமனுக்கு கடைசி படமாக அமைந்துள்ளது.

ஒரு மருத்துவர் என்பதால், கொரோனா வைரஸ் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் திடீரென்று உயிரிழந்துள்ளார். சேதுராமனின் திடீர் மறைவு கோலிவுட் பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, சேதுராமனின் இறுதிச் சடங்கில் பிரபலங்கள் கலந்து கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விசுவிற்கும் இதே நிலை தான் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சேதுராமன் மறைவிற்கு சினிமா பிரபலங்கள் டுவிட்டர் வாயிலாக கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்த யோகி பாபு?

0

Yogi Babu Wedding Reception; திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்த யோகி பாபு? கடந்த மாதம் யோகி பாபு ரகசியமாக திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி நடக்க இருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியை கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

கடந்த மாதம் காமெடி நடிகர் யோகி பாபு திருமணம் செய்து கொண்டார். செந்தில், கவுண்டமனி, வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, ரோபோ சங்கர் வரிசையில் இடம்பெற்றவர் காமெடி நடிகர் யோகி பாபு.

தமிழ் சினிமாவில் இவர் இல்லை என்றால் படங்கள் இல்லை என்றும் கூறும் அளவிற்கு ஏராளமான படங்களில் வரிசை கட்டி நடித்து வருகிறார்.

தற்போது இவரது கால்ஷீட் கிடைக்கவில்லை என்று பொலம்பும் அளவிற்கு ரொம்பவே பிஸியாக இருக்கிறாராம். காமெடி படங்களைத் தவிர ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 5 ஆம் தேதி யோகி பாபு ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

சென்னையின் திருத்தணி அருகிலுள்ள தனது குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

யோகி பாபுவின் திருமண நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

யோகி பாபுவின் திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடப்பதாக தகவல் வந்தது.

முதலில் மாநில அரசால் வரும் 31 ஆம் தேதி வரையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சரி, ஏப்ரல் 5 ஆம் தேதி தானே அதற்குள்ளாக நிலவரம் சரியாகிவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்த யோகி பாபுவிற்கு திடீரென்று பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போது உலகத்தையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஏப்ரல் 5 ஆம் தேதி என்று சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலருக்கும் நேரில் சென்று அழைப்பிதல் கொடுத்துள்ளார்.

தற்போது ஏப்ரல் மாதம் நடக்க இருந்த தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு மே மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார் என்று தகவல் வந்துள்ளது.

பிரதமர் மோடி அறிவித்ததும் அறிவித்தார், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவில் 24 மணி நேரத்தைக் கூட எங்களால் சமாளிக்க முடியவில்லை என்று கதறும் அளவிற்கு சினிமா பிரபலங்களின் நிலை வந்துவிட்டது.

வீட்டில் இருந்தபடி அவர்கள் வெளியிடும் வீடியோக்கள் காமெடியாக இருந்தாலும், ஒருபுறம் பரிதாபமாகவும் இருக்கிறது. தினந்தோறும் வீட்டில் இருந்து பழக்கப்பட்டவர்களுக்கு அந்த 21 நாட்கள் என்பது புதிதல்ல.

ஆனால், ஒருநாள் கூட வீட்டில் இல்லாதவர்களுக்கு 21 நாட்கள் என்பது அதுவும் வீட்டிற்குள்ளேயே என்பது கொஞ்சம் கஷ்டம்தான். என்ன செய்வது கொரோனாவை ஒழிக்க வேண்டுமே.

3

கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த நண்பர்கள், சினிமா பிரபலங்கள்!

0

Sethuraman; கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த நண்பர்கள், சினிமா பிரபலங்கள்! நடிகர் சேதுராமனின் திடீர் மறைவிற்கு நண்பர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் டுவிட்டர் வாயிலாக கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகரும், மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று மரணமடைந்தார். அவரது மறைவு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்தையே அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ். சீனாவில் தொடங்கி 100 நாடுகளையும் கடந்து தற்போது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸிற்கு 13 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளை கூட அவ்வளவு எளிதில் கடக்க முடியாமல் தவிப்பது எத்தனையோ பேர். அப்படியிருக்கும் போது ஒரே அடியாக நம்மைவிட்டுச் சென்றுவிட்டார் நடிகரும், மருத்துவருமான சேதுராமன்.

ஆம், 36 வயதாகும் சேதுராமன் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று மரணமடைந்துள்ளார். அவரது மறைவு சினிமா பிரபலங்கள், நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நேரில் சென்று ஆறுதல் கூற முடியாத நிலையில் தவிக்கும் பிரபலங்கள் டுவிட்டர் வாயிலாக தங்களது இரங்கலை கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர்.

இதில், அவரது உயிர் நண்பர்களும் அடங்கும். கடந்த 2016 ஆம் ஆண்டு உமா என்பவரை திருமணம் செய்த சேதுராமனுக்கு ஒரு வயதில் சஹானா என்ற மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடித்த படம் 50/50. இந்தப் படத்தில் சேது என்ற கதாபாத்திரத்திலேயே நடித்தார்.

மருத்துவரான சேதுராமன் சென்னையில் மட்டும் 2 ZI Clinic எனப்படும் தோல் நோய் சிகிச்சை மருத்துவமனையை திறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் குறித்தும், அதன் விபரீதம் குறித்தும், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதன் மூலமாக மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே தான் வீடியோ வெளியிடுவதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

3

மக்களை பாதுகாக்க சேதுராமன் பேசிய கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

0

Sethuraman Corona Awareness Video; மக்களை பாதுகாக்க சேதுராமன் பேசிய கொரோனா விழிப்புணர்வு வீடியோ! உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து நடிகரும், மருத்துவருமான சேதுராமன் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டிருந்தார்.

உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடிகரும், மருத்துவருமான சேதுராமன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸ் 649 பேருக்கு பரவியுள்ளது. இதில், 13 பேர் பலியாகியுள்ளனர். 42 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 593 பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்த நடிகர் சேதுராமன் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தோல் நோய் சிகிச்சை மருத்துவரான சேதுரமான் சென்னையில் மட்டும் 2 ZI Clinic எனப்படும் தோல் நோய் சிகிச்சை மருத்துவமனையை திறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் தான் கொரொனா வந்து சாகமாட்டேன் என்று கூறியுள்ள்ளார்.

36 வயதாகும் சேதுராமன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் என்ற செய்தி கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

 

3

2 மருத்துவமனைக்கு சொந்தக்காரர் சேதுராமன் MBBS and MD!

0
Dr and Actor Sethuraman

Sethuraman; 2 மருத்துவமனைக்கு சொந்தக்காரர் சேதுராமன் MBBS and MD! மருத்துவமரும், நடிகருமான சேதுராமன் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி சினிமா உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என்ற அதிர்ச்சி செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

சேதுராமனுக்கு வயது 36தான் ஆகிறது. இளம் வயதில் மாரடைப்பா என்று சினிமா பிரபலங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

யார் இந்த சேதுராமன்?

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தோல் நோய் (Dermatology) பிரிவில் மருத்துவம் படித்துள்ளார். சேதுராமன் ஒரு மருத்துவர்.

சேதுராமன் MBBS and MD

சேதுராமன் MBBS and MD என்று தனது பெயருக்கு பின்பு இருக்கக்கூடிய ஒரு மருத்துவருக்கே இந்த நிலையா? என்று கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது அதிர்ச்சி.

ZI Clinic

மருத்துவம் படித்து முடித்த சேதுராமன், கடந்த 2016 ஆம் ஆண்டு ZI Clinic எனப்படும் தோல் நோய் சிகிச்சை மருத்துவமனையை திறந்துள்ளார்.

ZI Clinic மருத்துவமனை திறப்பு விழாவிற்கு நடிகர் பாபி சிம்ஹா, நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், இசையமைப்பாளர் தரண் குமார், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் பிரம்மகுமாரி சகோதரிகள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி இரண்டாவது முறையாக ZI Clinic எனப்படும் தோல் நோய் சிகிச்சை மருத்துவமனையை திறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா

கடந்த 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் தான் சந்தானம் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து சேதுராமன், மீண்டும் சந்தானம், விசாகா சிங் கூட்டணியில் வாலிபராஜா என்ற படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சக்க போடு போடு ராஜா படத்தில் மீண்டும் சந்தானத்துடன் இணைந்து சரவணா என்ற ரோலில் நடித்தார்.

இறுதியாக கடந்தாண்டு திரைக்கு வந்த 50/50 என்ற படத்தில் சேதுவாகவே நடித்தார். இது இவரது கடைசி படமாகவும் அமைந்துவிட்டது.

சேதுராமனுக்கு ஒரு வயதில் சஹானா என்ற மகளும், மனைவியும் இருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருந்திருக்கிறார் என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம்…

3