Thalaiva On Discovery டிஸ்கவரி சேனலில் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் பியர் கிரில்ஸ்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.
இவரைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். Into The Wild with Bear Grylls என்ற புதிய நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் உடன் ரஜினி கலந்து கொண்ட எபிசோடு வரும் 23 ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இது தொடர்பான அறிவிப்பு அண்மையில், டிஸ்கவரி சேனலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியானது.
இந்த நிலையில், தற்போது #ThalaivaOnDiscovery என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. நேற்றிரவு டிஸ்கவரி சேனலின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது.
டிஸ்கவரி சேனல் சேலஞ்ச் Discovery Channel’s challenge
அதில், நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம். சேலஞ்சை எடுத்துக் கொண்டு பார்ட்டியில் இணைந்திடுங்கள்.
Thalaiva On Discovery
மேலும், http://discoverychannel.co.in/thalaivaondiscovery என்ற லிங்கில் உள்ள பாடலை பதிவிறக்கம் செய்து உங்களது டான்ஸ் சேலஞ்சை #ThalaivaOnDiscovery தலைவா ஆன் டிஸ்கவரி என்ற ஹேஷ்டேக்குடன் பகிருங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் கொடுத்த பியர் கிரில்ஸ், இந்தியா மீது தனது அன்பை வெளிப்படுத்தியதோடு, என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்த போது அதில் ஏராளமான டான்ஸ் சேலஞ்ச் செய்யப்பட்டிருந்த வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்தது. பாடலும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் ரஜினிகாந்த், பியர் கிரில்ஸ் உடன் இணைந்து Into The Wild with Bear Grylls என்ற புதிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் தொலைக்காட்சி அறிமுகம் Rajinikanth Television Debut
சமீபத்தில், இந்நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானது குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
பல பிரபலங்களின் உயிர் வாழும் திறன்களை பியர் கிரில்ஸ் சோதித்துள்ளார். இந்தியாவின் வனப்பகுதியில் இந்த சவாலை நானும் எதிர்நோக்குகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
Into The Wild with Bear Grylls
இதையடுத்து, ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்து பியர் கிரில்ஸ் கூறியிருப்பதாவது: ரஜினியின் டெலிவிஷன் அறிமுகத்திற்காக Into The Wild with Bear Grylls என்ற நிகழ்ச்சி தயாராகி வருகிறது.
உலகம் முழுவதும் பல நட்சத்திரங்கள் உடன் நான் நடித்துள்ளேன். ஆனால், ரஜினியுடன் இணைந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு சிறப்பான தருணம்.
ரஜினிகாந்த் எப்போதும் நடைபயணத்தை விரும்பும் ஒரு நட்சத்திரமாக இருக்கிறார். ஆனால், காடுகளில் அது எல்லாம் சற்று வித்தியாசமானது.
ரஜினியுடன் இணைந்து நடித்தது ரொம்பவும் சந்தோஷமான தருணமாகவும் கேளிக்கை நிறைந்ததாகவும் இருந்தது.
அவரை முற்றிலும் புதிய பாதையில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சனி தோஷம் நீக்கும் சனி மகா பிரதோஷம். பிரதோஷ காலம் என்றால் என்ன? சனி பிரதோஷத்தின் சிறப்புகள் என்ன? எவ்வாறு விரதம் இருந்து சிவனை பூஜிக்க வேண்டும்?
கையிலையில் வீற்றிருக்கும் பரமனுக்கு பல்வேறு விஷேச தினங்கள் உண்டு.
அதில் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை தினங்களில் வரும் பிரதோஷ தினங்களும் ஒன்று.
பிரதாஷமானது நித்திய பிரதோஷம், பிரளய பிரதோஷம், பட்ச பிரதோஷம் என்று 20 வகையான பிரதோஷங்கள் உள்ளது.
பிரதோஷ வேளை என்பது மாலை 04:30 முதல் 06:00 மணி வரை ஆகும்.
இது தினந்தோறும் வரும் நேரமாகும், இருப்பினும். திரியோதசி திதி தினங்களே “ பிரதோஷ தினம்” எனப்படுகிறது.
மேலும் சனிக்கிழமையுடன் திரியோதசி திதி சேர்ந்து வருவதே சனி மகா பிரதோஷம் ஆகும்.
பிரதோஷ கால சிவ நடனம்
இந்த பிரதோஷ காலத்தில் பார்வதி பரமேஸ்வரன் இருவரும் இணைந்து நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிகின்றனர் என்பது ஐதீகம்.
இதனை முப்பது முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும் காண வருவர். இந்த வேளையில் நந்தியெம்பெருமானை அபிஷேகித்து ஆராதனை செய்யும் போது சிறந்த பலன்களை தரும்.
பிரதோஷ விரத முறை
பிரதோஷ தினத்தில் காலை முதல் உண்ணா நோன்பிருந்து மாலையில் சிவ தரிசனம் செய்து. அதற்கு பின்பே உணவு உண்டு விரதம் முடிக்க வேண்டும்.
மாலை பிரதோஷ வேளையில் நந்திக்கு அபிஷேகம் செய்து நந்தியாவிட்டம், சங்குப்பூ, தாமரை, மலர்மாலைகள், அருகம்புல், வில்வம் சாற்றி அவருக்கு பிடித்தமான பச்சரிசி, வெள்ளம் கலந்த நைவேத்திங்கள் படைத்து வழிபட வேண்டும்.
மேலும் இன்றைய தினம் பார்வதி பரமேஸ்வரன் தம்பதி சகிதராக இடப வாகனத்தில் ஆலய திருச்சுற்றில் மூன்று முறை வலம் வருவார்.
கையிலை வாத்தியம், வேத பாராயணம், தேவார திருவாசகம் ஓதுவார்கள் ஓத அற்புதமாக திருக்கோயில் வலம் நடைபெறும். இதனை காண கண்கோடி வேண்டும்.
நாம் நந்தியிடம் இந்நாளில் வேண்டுகின்ற வேண்டுதல்கள் அனைத்தும் சிவனிடம் கொண்டு சேர்த்து உடனே பலன் தருவார் என்பது நம்பிக்கை.
சனி தோஷங்களை நீக்கும் சனி பிரதோஷம்
சனி கிழமையில் வரும் சனி மகா பிரதோஷமானது மற்ற பிரதோஷங்களை காட்டிலும் சிறப்பானதாகும்.
கிரகங்களில் சனியைக் கண்டால் அனைவரும் அஞ்சுவர். ஆனால் அவரைப் போல் ஒரு நீதிமான் எவரும் இலர்.
அவரவர் செய்த வினைகளுக்கு தகுந்த பலன் அளிப்பவர். இவர் “சிவ பக்தர்”. ஈஸ்வர பட்டம் பெற்று சனீஸ்வரன் என்ற நாமம் கொண்டவர்.
இவருடைய நாளில் வரும் பிரதோஷ தினங்களில் சிவ பூஜை செய்பவர்களுக்கு நல்ல பலன்களை அளிப்பார்.
ஏழைரை சனி, கண்ட சனி, அஷ்டம சனி என்று வக்ர சனியின் பார்வையாள் துன்புறுவோரின் துன்பங்கள் சனி பிரதோஷ தினத்தில் சிவனையும் நந்தியையும் பூஜித்தால் குறையும்.
இன்று (07/03/2020) சனி பிரதோஷ தினமாகும்.
இந்நாளில் மாலை சிவாலயம் சென்று வழிபட்டால் அனைத்து சனி தோஷங்களும் நீங்கி இந்திரன் போன்று சுகமான வாழ்வு பெற்று மோட்சத்தை அடைவர் என்று புராணங்கள் கூறுகின்றன.
தவறாமல் இன்று சிவாலயம் சென்று ரிஷபாரூடராக பார்வதி பரமேஸ்வரனை தரிசித்து நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று நற்கதி அடைவோம்.
Pudhupettai 2; புதுப்பேட்டை 2 படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
தனுஷ் Dhanush நடிக்கும் புதுப்பேட்டை 2 (Pudhupettai 2) படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் புதுப்பேட்டை.
இப்படத்தில் தனுஷ் கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.
புதுப்பேட்டையில் சாதாரண ஒரு வாலிபராக தனது வாழ்க்கையை தொடங்கிய கொக்கி குமார் அதன் பிறகு கேங்ஸ்டராக மாறுவது தான் இப்படம்.
புதுப்பேட்டை படத்தில் சினேகா மற்றும் சோனியா அகர்வால் ஆகிய இருவரையும் தனுஷ் திருமணம் செய்து கொள்வார்.
புதுப்பேட்டை 2 (Pudhupettai 2)
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தின் 2 ஆம் பாகமும் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் செல்வராகவன் தனது 43 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதையடுத்து, தனியார் கல்லூரி ஒன்றில் நடந்த விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறுகையில்,
என்ஜிகே படத்தைத் தொடர்ந்து நான் தற்போது தனுஷ் உடன் புதுப்பேட்டை 2 (Pudhupettai 2) படத்திற்காக இணைந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
தனுஷ் – செல்வராகவன் இணையும் 5 ஆவது படம் புதுப்பேட்டை 2.
இதற்கு முன்னதாக இந்த கூட்டணியில், துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் புதுப்பேட்டை மட்டும் கேங்க்ஸ்டர் படம். மற்ற படங்கள் அனைத்தும் காதலை மையப்படுத்தி வெளியான படங்கள்.
புதுப்பேட்டை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். புதுப்பேட்டை 2 படத்திற்கு சியன் ரோல்டன் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
புதுப்பேட்டை 2 படத்தின் மூலம் கொக்கிகுமாராக தனுஷ் தனது அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் Dhanush நடிப்பில் கர்ணன், ஜகமே தந்திரம் மற்றும் D43 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
1876ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கிரகாம்பெல் தன்னுடைய கண்டுபிடிப்பான தொலைபேசிக்கு காப்புரிமை வாங்கிய தினம் வரலாற்றில் இன்று மார்ச் 07.
Alexander Graham Bell History
1847ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி ஸ்காட்லாந்தில் இருக்கும் எடின்பர்க் மாகாணத்தில் பிறந்தார். இவரின் பெற்றோருக்கு இரண்டாவது குழந்தை ஆகும்.
இவருடைய அம்மாவும் காது கேளாதவராக இருந்தது இவருக்கு வாழ்வில் ஒரு அதிர்ஷ்டமாக அமைந்தது. இறுதியில் இவர் காது கேளாதொருக்கு என ஒரு தனி அறக்கட்டளை ஆரம்பித்தார்.
இவரின் தொலைபேசி கண்டுபிடிப்பும் பெல் டெலிகாம் கம்பெனி தொடங்கியதும் உலகம் முழுவதும் புகழ்பெற காரணமாக அமைந்தது.
ரஷ்யாவைச் சேர்ந்த கணித மேதையான ஆல்கா லேடிசென்ஸ்கயாவின் 97வது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகிள் டூடுல் (Google Doodle).
பகுதி வகையீட்டு சமன்பாடுகள் (partial differential equations) மற்றும் திரவ இயக்கவியல் (fluid dynamics) ஆகிய பிரிவுகளில் இவரது பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது.
இவரது தந்தையும் கணித ஆசிரியர் ஆவார். ரஷ்யாவின் சோவியத் யூனியனால் இவரது தந்தை துரோகி என்று குற்றம் சாற்றப்பட்டு சிறையில் அடைத்து கொல்லப்பட்டார்.
அப்போது ஆல்காவுக்கு 15 வயது தான் ஆகும். கணிதத்தில் சிறந்து விளங்கினாலும் இவருடைய தந்தையின் அவப்பெயரால் இவருக்கு ரஷ்யாவின் சிறந்த பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஜோசப் ஸ்டாலின் மறைவுக்குப்பின் இவருக்கு மீண்டும் படிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு பல்வேறு சாதனைகளை கணிதத்தில் செய்து விட்டு ஜனவரி 12, 2004 ஆம் ஆண்டில் தனது 81வது வயதில் ஆல்கா லேடிசென்ஸ்கயா இறந்து விட்டார்.
இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.
அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
zimvsban: மார்ச் 7, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோற்று வங்கதேச அணியிடம் தொடரை இழந்தது.
zimvsban
மூன்றாவது ஒருநாள் போட்டி சில்கட் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஏற்கனவே இரு போட்டிகளிலும் வங்கதேச அணியை கணிசமாக ரன் சேர்க்க விட்டது தன்னுடைய பந்துவீச்சு பலத்தை நிரூபித்த ஜிம்பாப்வே அணி, மீண்டும் பந்து வீச்சை தேர்வு செய்தது தான் சோகம்.
எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வில்லன் சொல்வது போல் நமக்கு கிடைத்த அடிமை இவன்தான் என்று வங்கதேசதிடம் ஜிம்பாப்வே சிக்கியது.
மூன்று ஒருநாள் போட்டிகளிலும் 322 எங்களை தாண்டவில்லை, நேற்றைய போட்டியில் 322 ரன்களை எடுத்தது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தொடக்க ஆட்டக்காரர் லிதன் தாஸ் மற்றும் தமிம் இக்பால் இருவரும் சேர்ந்து 40.5 ஓவர்களில் 292 ரன்கள் குவித்தனர்.
ஜிம்பாப்வே அணி வங்கதேச அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்த 40 ஓவர்கள் எடுத்துக் கொண்டது தான் சோகம்.
வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர்.
லிட்டன் தாஸ் 143 பந்துகளில் 176 ரன்கள் எடுத்து தன்னுடைய சொந்த அதிகபட்ச ரன்னை உருவாக்கிக்கொண்டார். தமிம் இக்பால் 150 பந்துகளில் 128 ரன்கள் எடுத்தார்.
ஆட்டம் மழை காரணமாக 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 43 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்தது வங்கதேச அணி.
43 ஓவர்களில் 342 ரன்கள் கடின இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே விக்கெட்டுகள் சரிந்தது.
ஜிம்பாவே அணியை 37.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 218 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 123 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி டிஎல் முறைப்படி வென்றது.
வங்கதேச தரப்பில் முகமது சைபுதீன் 4 விக்கெட்டுகளும், இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
வங்கதேச அணிக்கு தோக்க மாட்டிய ஜிம்பாப்வே அணியை 3-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வைத்து செய்தது.
முதல் போட்டியில் தமிம் இக்பால் சதம் எடுக்க, இரண்டாவது போட்டியில் லித்தன் தாஸ் சதம் எடுக்க, மூன்றாவது போட்டியில் இருவரும் சேர்ந்து சதம் எடுத்தது தான் குறிப்பிடத்தக்கது.
மூன்று போட்டிகளில் இருவரும் தலா 2 சதங்கள் விளாசினார். ஆட்டநாயகன் விருதை லிட்டன் தாஸ் வென்றார் தொடர் நாயகன் விருதை தமிம் இக்பால் வென்றார்.
வங்கதேச அணியின் கேப்டன் மோர்தசா மார்ச் 5ம் தேதி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் வங்கதேச கேப்டன்களில் 83 போட்டிகளில் 50 வெற்றிகள் பெற்று வங்கதேச கேப்டன் களில் அதிக வெற்றிகளை குவித்தவர் ஆவார்.
கேப்டன் மோர்தசாவிற்கு இது கேப்டனாக ஐம்பதாவது வெற்றி.
ஜெயலலிதா சிறை; குன்ஹா தீர்ப்பு – காரணம் க.அன்பழகன். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா தப்ப முடியாமல் போனதற்கு கரணம் அன்பழகன் தொடுத்த வழக்கு.
அன்பழகன் காலமானார்
திமுக கட்சியின் மூத்த தலைவர் க.அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக 98 வயதில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவருக்கு ஏராளமான தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என ஸ்டாலின், முதல்வர் பழனிசாமியை வலியுறித்தி உள்ளார்.
ஜெயலலிதா சிறை
ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை 1996-ல் தொடுத்தவர் சுப்ரமணியம் சுவாமி. இந்த வழக்கு தமிழக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நீண்ட வருடமாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா தப்பிவிடக்கூடாது என வழக்கை பெங்களூரு நீதிமன்றத்திற்கு மற்ற வேண்டும் என அன்பழகன் வழக்கு தொடுத்தார்.
2003-ஆம் உச்ச நீதிமன்றத்தில் க.அன்பழகன் மனு தாக்கல் செய்தார். இதன் காரணமாகவே ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
நீதிபதி குன்ஹா வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை தைரியமாக வழங்கினார். தீர்ப்பு வழங்கிய உடனேயே ஜெயலலிதா அக்ரஹாரம் சிறைக்கு அனுப்பப்பட்டார்.