2020ஆண்டின் பெண்கள் தினத்தில் ‘பெண்களின் உரிமை மற்றும் ஆண் பெண் சமத்துவம்’ ஆகிய இரண்டும் முதன்மையாக எடுத்துக்கொள்ளப்பட்டு பேரணிகளும் விழிப்புணர்வு முகாம்களும் நடைபெறவுள்ளன.
சமூக வலைத்தளங்களில் #IWD2020 #EachforEqual and #GenerationEquality ஆகிய ஹஷ்டக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
இந்த பாலின சமத்துவ பேரணி ஜாதி, மதம், இனம், பாலினம், மொழி, நாடு, நிறம் மற்றும் வயது இவை அனைத்தையும் தாண்டி உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களையும் ஒன்றிணைக்கும் என்ற நோக்கத்தோட நடக்கவுள்ளது.
இந்த மகளிர் தின பேரணி மூலம் பாலினத்தை மையமாக வைத்து வரும் மன மற்றும் பாலியல் ரீதியான பிரச்சனைகளை எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்ள உதவும்.
Master USA Premiere Show; விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி அமெரிக்காவில் பிரிமியர் ஷோ வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் Master படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கைதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாஸ்டர் ரிலீஸ் Master Release
வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. மாஸ்டர் குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ வெளியாகி உலக முழுவதும் வைரலானது.
இந்த நிலையில், தற்போது மாஸ்டர் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாஸ்டர் பிரிமியர் ஷோ (Master Premiere Show)
அதன்படி, வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி அமெரிக்காவில் பிரிமியர் ஷோ (Master Premiere Show) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திங்க் பிக் பிக்சரஸ் நிறுவனம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து மாஸ்டர் படத்தை அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிடுவதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளது.
இந்திய திரைப்படங்களை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ள திங்க் பிக் நிறுவனம் ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து மாஸ்டர் படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது.
இதனால் படம் எப்படி இருக்கிறது என்ற தகவல் டுவிட்டரில் ஒரு நாள் முன்னதாக வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, கோடிக்கணக்கான ரசிகர்கள் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆம், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசுவார் என்பதை காண்பதற்கு ஆர்வமுடன் இருக்கின்றனர்.
நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பின் போது விஜய்யைப் பார்ப்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்தனர். அது அந்தப் பகுதியில் மட்டுமே உள்ள ரசிகர்கள்.
அவர்களை பார்த்து விஜய் கையெடுத்து கும்பிடுவதும், செல்ஃபி எடுத்துக் கொள்வதும் என்று அவரது புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch)
தற்போது மாஸ்டர் டிரைலர், மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக், மாஸ்டர் இசை வெளியீடு என்று மாஸ்டர் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.
இது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், ரசிகர்கள் யாரும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு வர வேண்டாம் என்று விஜய் கேட்டுக்கொண்டதாக தகவல் வந்தது.
பிகில் படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இது போன்று விஜய் வேண்டுகோள் வைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரர்த்தில் இருந்து தகவல் வந்துள்ளது.
விஜய் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்169 என்ற படத்தை இயக்க இருக்கிறார்.
வரும் மார்ச் முதல் வாரத்தில் அதுவும் 5 ஆம் தேதி தலைவர்169 படத்தின் பூஜை நடக்க இருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால், இதுவரை தலைவர்169 படத்திற்கு பூஜை போடப்பட்டதாக தகவல் வரவில்லை.
இதே போன்று விஜய்யும் தனது 65 ஆவது படத்தில் சுதா கொங்கராவுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாஸ்டர் படம் வெளியான பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் சேனல் தடை செய்யப்பட்டது. மத்திய அரசு இரண்டு சேனலையும் 48 மணி நேரம் தடை செய்து உள்ளது.
நேற்று இரவு 7:30 மணிக்கு தடைசெய்யப்பட்டு உள்ளது. மார்ச் 8-ஆம் தேதி 7:30 வரை இந்த தடை நீடிக்கும் என மத்திய தகவல் ஒளிபரபுத்துறை கூறியுள்ளது.
காங்கிரஸ் கண்டனம்
மீடியாவின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. அரசுக்கு எதிராக வாய் திறக்கக்கூடாத நிறையை பாஜக அரசு உருவாகியுள்ளது எனக் கூறியுள்ளார் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி.
பல்வேறு மீடியாக்கள் இதற்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளன. மீடியாவின் சுதந்திரம் கடந்த சில வருடங்களாகவே ஒடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
IPL Corornavirus; கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் தடையா?
உலகம் முழுவதும் மிகவும் அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து ஜப்பானில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளும் கைவிடும் நிலைமையில் உள்ளது.
இது வரை இந்தியாவில் மட்டும் 30 உறுதிபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர். இதனால் ஐபிஎல் போட்டி நடைபெருமா என சந்தேகம் எழுந்தது.
கொரோனா பாதிப்பு குறித்து கங்குலி
ஐபிஎல் 2020 நடைபெறுவதற்கான அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்து வருகிறோம். வீரர்களும் யாரும் அச்சப்பட தேவை இல்லை.
மேலும் ரசிகர்களும் எந்த வித கவலையும் பட தேவை போட்டி குறித்த நாளில் நடக்கும் குறித்த இடத்தில் நடக்கும் என படையப்பா ஸ்டைலில் கூறி விட்டார்.
கருணாநிதியின் ஆருயிர் நண்பர் மற்றும் தி.மு.கவின் மூத்த தலைவருமான க.அன்பழகன் காலமானார். இவர் 98 வயது வரை வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூச்சுத்திணறல் காரணமாக பிப்ரவரி 25-ம் தேதி சென்னை கிரீம்ஸ் ரோடில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல் நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருந்து வந்தது.
தி.மு.க தலைவர் ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அன்பழகனின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
கடந்த சில நாட்களாக செயற்கை சுவாசத்தில் சுவாசித்து வந்த அன்பழகன் நள்ளிரவு திடீரென காலமானார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள். நகைச்சுவை உணர்வுடன் நடந்து கொண்டால் பிரச்சனைகள் அண்டாது.
அன்பான வார்த்தைகள் கணவன் மனைவியையே அவசியம். நட்புணர்வை வளர்த்து கொள்ளுங்கள். விரைய செலவுகள் வரலாம். கண்களில் பிரச்சனைகள் வரலாம்.
மாரியம்மனிற்கு விளக்கேற்றி வர நற்பலன்கள் கிடைக்கும்.
7/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
Marakkar Trailer மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மோகன் லால், கீர்த்தி சுரேஷ், ஆக்ஷன் கிங் அர்ஜூன், பிரபு ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தின் டிரைலர் Mohanlal Marakkar Trailer வெளியாகியுள்ளது.
குஞ்ஞாலி மரைக்காயர் என்பது கோழிக்கோடு சாமுத்திரி மன்னனுக்கு கடற்படை தலைவர்களாக திகழ்ந்தவருக்கு வழங்கப்பட்ட புனைப்பெயர்.
முதலாம் குஞ்ஞாலி, 2ம் குஞ்ஞாலி, 3ம் குஞ்ஞாலி மற்றும் 4ம் குஞ்ஞாலி என்று குஞ்ஞாலி மரைக்காயர் பதவியை நால்வர் வகித்தனர். மரக்கலம் என்பதைத் தழுவி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர்.
16 ஆம் நூற்றாண்டில் கேரள நாட்டில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்ஞாலி மரைக்காயர் என்று போற்றப்பட்டனர். இவர்கள், போர்ச்சுக்கீசியர்களுக்கு எதிராக போரிட்டனர்.
இவர்களில் வீர, தீரம் கொண்டவராக கருதப்பட்டவர் 4ஆவது குஞ்ஞாலி மரைக்காயர். தற்போது இவரது வாழ்க்கையை மையப்படுத்தி மரைக்காயர் அரப்பிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகி வருகிறது.
இதில், குஞ்ஞாலி மரைக்காயர் என்ற ரோலில் மோகன்லால் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், அர்ஜூன், சுனில் ஷெட்டி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. வரும் 26 ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா என்ற ரோலில் நடித்துள்ளார்.
இந்த கதாபாத்திரத்திற்காக கேரளத்து பாரம்பரிய உடையுடனும், வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடனும் தோற்றமளிக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சாமுத்திரி மண்ணிற்கு அத்துமீறி வரும் பரங்கியர்களை எதிர்த்து போரிடும் மாவீரன் குஞ்ஞாலியின் வரலாற்றை இந்த டிரைலர் சிறப்பிக்கிறது.
மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம் டிரைலரில் அர்ஜூன், பிரபு, மோகன் லால், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி ஆகியோர் அடங்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்திய மகளிர் அணி-யைக் கண்டு மிரளும் ஆஸ்திரேலியா. இந்திய வீராங்கனைகள் சிக்சர் மழை பொழிவதைக் கண்டால் சற்று அச்சமாக உள்ளது என ஆஸ்திரேலிய பவுலர் மேகன் ஷட் கூறியுள்ளார்.
அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் vs இங்கிலாந்து மகளிர் அணியினர் மோத தயாராக இருந்தனர். ஆனால் வருண பகவான் இந்திய அணியை போட்டியின்றி தேர்வு செய்ய வைத்தார்.
அதேபோன்று மற்றொரு அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி தென்ஆப்ரிக்கா மகளிர் அணியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
INDW vs AUSW
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் லீக் சுற்றில் ஏற்கனவே மோதிக்கொண்டன. இதில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.
உலகக்கோப்பைக்கு முன்பு நடந்த முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் மேகன் ஷட் வீசிய முதல் ஓவரில் முதல் பந்தில் சிக்சர் அடித்தார் மந்தனா.
ஷபாலி தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 16 அடித்தனர். மேகன் ஷட் கேரியரில் முதல் பந்தில் மற்றும் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிக பட்ச ரன்கள்.
இதனால் உலக கோப்பை இறுதிப்போட்டியில் மந்தனா மற்றும் ஷபாலியை கண்டாலே பயமாக உள்ளது. அவர்களுக்கு பந்து வீச நான் விரும்ப வில்லை.
என்னுடைய ஓவரை எளிதாக அடித்து நொறுக்குகின்றனர். எனவே அவர்கள் களத்தில் இருக்கும்போது என்னை ஓவர் போட நிர்பந்திக்க வேண்டாம் என கேப்டனிடம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் 2020; பெண்களுக்கு இலவச பெட்ரோல். petrol price low free in Coimbatore. womens day celecbration. பெண்கள் தின கொண்டாட்டம் பெட்ரோல் இலவசம்
உலக பெண்கள் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தக் கலாச்சாராம் 100 வருடமாக பின்பற்றப்படுகிறது.
இதை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருக்கும் மத்திய தகவல் பரப்பு மையம் பேரணி ஒன்றை நடத்தியது. இதில் குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி பங்கேற்றார்.
சமூதாயத்தில் பெண்களின் வளர்ச்சி, சம உரிமை, சுதந்திரம் ஆகியவற்றை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக மகளிர் தினத்தின் நோக்கம்.
கோயம்பெத்தூரில் உள்ள எச்.பி பெட்ரோல் நிலையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ஆம் நாள் முதலில் வாகனம் ஒட்டி வரும் 100 பெண்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாகவும் பெண்கள் முன்னேற்றம் பற்றி முகமும் நடத்த இருப்பதாக கூறியுள்ளனர்.