எம்எல்ஏ காத்தவராயன் சொத்து ஒரு ஓலை குடிசை, கட்டில், அலமாரி மற்றும் அவர் நின்ற குடியாத்தம் தொகுதி மக்கள். இப்படி ஒரு எம்எல்ஏ 2020-லா என ஆச்சரியமாக உள்ளதா?
எம்எல்ஏ காத்தவராயன் – Kathavarayan MLA
காத்தவராயன் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட குடியாத்தம் தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்று 9 மாதங்களே ஆனா நிலையில் இறந்துவிட்டார்.
இவருக்கென சொந்தமாக ஒரு ஓலை குடிசை, கட்டில், அலமாரி மட்டுமே இருந்துள்ளது. அப்படி ஒரு எளிமை கொண்ட மனிதர்.
இவர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து படிப்படியாக தன்னை வளர்த்துகொண்டு இந்த உயர்த்தை அடைந்துள்ளார்.
Kadhal Mannan, Ajith காதல் மன்னன் வெளியாகி இன்று மார்ச் 6 ஆம் தேதி உடன் 22 வருடங்கள் ஆகியுள்ளது.
இயக்குநர் சரண் இயக்கத்தில், அஜித் Ajith நடிப்பில் கடந்த 1998 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி வெளியான படம் காதல் மன்னன் Kadhal Mannan.
காதல் மன்னன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மானு.
இப்படத்தில் இவருடன் இணைந்து எம்.எஸ்.விஸ்வநாதன், விவேக், கரண் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் அஜித் சிவா என்ற ரோலிலும் மானு திலோத்தம்மா என்ற ரோலிலும் நடித்திருந்தனர்.
சிவா – திலோத்தம்மா என்ற ஜோடியை ரசிகர்கள் யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.
ஒரு மெக்கானிக்காக இருந்து கொண்டு பெட்டிங் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு ஹீரோயினை சந்திக்கும் ஹீரோதான் நம்ம தல.
ஹீரோயினை சந்தித்த பிறகு என்ன காதல்தான். அன்றைய காலகட்டங்களில் அஜித் என்னவோ காதல் படங்களில்தான் அதிகளவில் நடித்திருந்தார்.
இவ்வளவு ஏன், ஷாலினியைகூட காதலித்துதான் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆம், அமர்க்களம் படத்தின் மூலம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
காதல் கோட்டை, காதல் மன்னன், உல்லாசம், பூவெல்லாம் கேட்டுப்பார், நீ வருவாய் என, ஆனந்த பூங்காற்றே, அமர்க்களம் ஆகிய படங்கள் வரிசையாக காதல் படங்களாவே அமைந்தது.
காதல் மன்னன் (Kadhal Mannan)
இந்த நிலையில், காதல் மன்னன் படம் வெளியாகி 22 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது டுவிட்டரில் காதல் மன்னன் #22YearsOfKadhalMannan ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இதனை தற்போது தல ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். காதல் மன்னன் புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.
அதோடு வலிமை ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும், இன்றைய தினத்தில் கூட வலிமை குறித்து ஏதேனும் அப்டேட் வருமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில், காதல் மன்னன் திலோ அண்மையில் அஜித் குறித்து பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
அதில், திலோ கூறியிருப்பதாவது: வெறும் 50 சதவிகித பங்களிப்பை மட்டுமே நான் கொடுத்ததால் அஜித் என்னிடம் கோபப்பட்டார்.
எனக்கு நடிப்பில் விருப்பம் இல்லை. ஆதலால், நான் சினிமாவில் இருந்து விலகிவிட்டேன். நான் அவருடைய பெரிய ரசிகை.
மறுபடியும் என்னை அவர் நடிப்பதற்கு அழைத்தால் கண்டிப்பாக செல்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தைத் தொடர்ந்து அவர் என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
காதல் மன்னன் படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 108 க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அஜித் வலிமை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கிடையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 2ம் ஆண்டு நினைவு தின திதி நிகழ்வில் அஜித் கலந்து கொண்டார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி வைரலானது. மேலும், அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாள் கொண்டாட்டமும் சிறப்பாக நடந்தது.
தொடர்ந்து அஜித் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட் வந்து கொண்டே தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அனுஷகா, அஞ்சலி, மாதவன் நடிப்பில் உருவாகி வரும் சைலன்ஸ் டிரைலர் Silence Trailer வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுஷ்கா Anushka. விஜய், அஜித், சூர்யா, ரஜினிகாந்த் என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழைத் தவிர, தெலுங்கு மொழியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில், இவரது நடிப்பில் சைரா நரசிம்ஹா ரெட்டி படம் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் நிசப்தம் படத்தில் நடித்து வருகிறார்.
சைலன்ஸ் (Silence Trailer)
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு தமிழில் சைலன்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சைலன்ஸ் படத்தில் அனுஷ்கா Anushka உடன் இணைந்து அஞ்சலி, மாதவன், ஷாலினி பாண்டே ஆகியோர் டித்துள்ளனர். கோபி சுந்தர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் சைலன்ஸ் டிரைலர் Silence Trailer வெளியாகியுள்ளது. இதில், அனுஷ்கா, அஞ்சலி, மாதவன் ஆகியோரது காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டில் நடக்கும் கதை. காட்டுக்குள் இருக்கும் வீட்டில் நடக்கும் சம்பவம் இது. அந்த வீட்டில் இருக்கும் அனுஷ்காவை யாரோ தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் அஞ்சலி விசாரணை மேற்கொள்கிறார். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது.
மர்ம நபரை தேடும் வேட்டையும் நடக்கிறது. டிரைலரும் விறுவிறுப்பாகவே சென்று முடிகிறது.
இந்தப் படத்தில் அஞ்சலி கிரைம் டிடெக்டிவாக நடித்துள்ளார். அனுஷ்கா, பேசமுடியாத கலைஞராக நடித்துள்ளார். மாதவன், மியூசிசியனாக நடித்துள்ளார்.
சுப்பாராஜூ வைல்டுலைஃப் போட்டோகிராஃபராக நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு பிறகு அனுஷ்கா திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு வரன் தேடும் முயற்சியில் அவரது பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தெலுங்கு இயக்குநர் ஒருவரை அனுஷ்கா திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அண்மையில் தகவல் வந்தது.
அவர், அனுஷ்காவின் சைஸ் ஜீரோ படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Yes Bank சேவையை கையில் எடுத்த RBI ஒரே நாளில் 50% மேல் பங்குகள் விலை குறைவு, Yes Bank பங்குகள் 50%க்கு மேல் குறைவு
நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்ட எஸ் பேங்கை தான் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்கு 50000 வரை தான் எடுக்க இயலும் என அறிவித்தது.
இதை அறிந்த வாடிக்கையாளர்கள் இணையத்தில் பணப்பரிமாற்றம் செய்யும் பொழுது அதன் சர்வர்களும் முடக்கப்பட்டன. ஏடிஎம் சென்றும் முயற்சி செய்தும் யாரும் எடுக்க இயலவில்லை.
பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நிர்வாகத்தில் நிதி மோசடி காரணமாக அதை கையில் எடுத்தது போல தற்பொழுது எஸ் பேங்க்கவும் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
500 கோடி வரை நிதி நெருக்கடியை எஸ் பேங்க் சந்தித்ததே ஆர்பிஐயின் இந்த முடிவுக்கு காரணமாகும். இதன் வங்கியின் பயனாளர்கள் யாரும் எந்த விதத்திலும் பாதிக்கபட மாட்டார்கள் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
Yes Bank பங்குகள் 50%க்கு மேல் குறைவு
இதை தொடர்ந்து வங்கியின் சேவைகள் அனைத்தும் முடங்கியதால் இதன் பங்குகளின் விலை வேகமாக குறைந்து விட்டது.
வெள்ளிக்கிழமை மதிய நிலவரப்படி ஒரு பங்கின் விலை 18.90 காசக உள்ளது. இன்று மட்டும் இதன் விலை 51% குறைந்தது.
மருத்துவம், படிப்பு போன்ற அவசர செலவிற்கு அவசர செலவிற்கு பேங்க் நிர்வாகியை தொடர்பு கொண்டு 5 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.
Samantha Pregnant; சமந்தா கர்ப்பமாக இருப்பதாக புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமந்தா கர்ப்பமாக (Samantha Pregnant) இருப்பதால் தான் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து விலகியுள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து சமந்தா விலகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
விக்னேஷ் சிவன்
சிம்பு நடிப்பில் வந்த போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக வலம் வந்தவர் விக்னேஷ் சிவன்.
இப்படத்தைத் தொடர்ந்து நானும் ரௌடி தான் படத்தை இயக்கினார். இதில், விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தின் மூலம் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. தற்போது இருவரும் காதல் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.
நயன்தாரா அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருப்பதால் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நயன்தாராவின் கால்ஷீட் பிரச்சனையெல்லாம் விக்னேஷ் சிவன் தான் பார்த்துக்கொள்வதாக கூறப்படுகிறது.
மேலும், அவருக்கு கதை தேர்வையும் விக்னேஷ் சிவனே செய்வதாகவும் கூறப்படுகிறது.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
இந்தப் படத்தின் கதை சமந்தா (Samantha Pregnant) மற்றும் நயன்தாராவிற்கு பிடித்துப் போக இருவருமே இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
காத்துவாக்குல ரெண்டு காதல்
இந்த நிலையில், சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து விலகியுள்ளதாக புதிய தகவல் ஒன்று வந்துள்ளது.
சமந்தா கர்ப்பமாக இருப்பதால் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
Samantha Pregnant? சமந்தா கர்ப்பம்?
தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்துள்ளார். இருவரும், கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் சமந்தா கொஞ்சம் கிளாமரை குறைத்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை என்ற வருத்தமும் ரசிகர்களிடையே இருக்கத்தான் செய்கிறது.
உல்லாச பயணம்: இந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம். கொரானா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. corona virus.
புதுமுக தம்பதிகள் உல்லாச பயணம்
புதியதாக கல்யாணம் ஆகிய தம்பதிகள் நிச்சயம் ஹனிமூன் செல்ல ஏற்பாடுகள் செய்து இருப்பீர்கள். அந்த இடம் நிச்சயம் ஒரு குளிர் பிரதேசமாக இருக்கும்.
மிகவும் வசதியானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சி செய்வார்கள். இவற்றை எல்லாம் சில நாட்கள் தள்ளிவைப்பது நல்லது.
கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம்
கொரோனா வைரஸ் (corona virus) என்பது ருத்ர தாண்டவம் ஆடி வரும் நிலையில் பலர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், சுற்றுலா சென்றவர்கள், ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்கள் இப்படி ஏராளமானவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
தப்பி தவறி சொந்த நாடு திரும்பினாலும் உடனடியாக வீட்டிற்கு செல்ல முடியாது. உடல் வெப்பநிலை சற்று அதிகம் இருந்தாலும் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைக்கப்படுவார்கள்.
வெளிநாடோ, உள் நாடோ கொரோனா தற்பொழுது எந்த அளவில் இந்தியாவிற்குள் பரவி உள்ளது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
இந்த நகரத்தில் இல்லை, அந்த நகரத்தில் இல்லை என பயணிகள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்ப்பதே நல்லது.
சீனாவில் இவ்வளவு பெரிய கட்டுப்பாட்டையும் மீறி கொரானா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவி விட்டது. அப்படி இருக்கையில் நீங்கள் இருக்கும் நகரத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகப்போகிறது.
வருமுன் காப்பதே சிறந்தது என்பதைப்போல புதுமுக நபர்களை அதிகம் சந்திப்பதை தவிர்ப்பது நல்லது.
உலக பெண்கள் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தக் கலாச்சாராம் 100 வருடமாக பின்பற்றப்படுகிறது.
முதன் முதலில் 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் நாள் தேசிய பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. நியூயார்க் நகரத்தில் சோசியல் பார்ட்டி ஆஃப் அமெரிக்காவால் முதலில் தொடங்கப்பட்டது.
சமூக ஆர்வலர் தெரசா மல்கில் தான் பெண்கள் தினம் கொண்டாட வென்றும் என்ற கருத்தை முன் வைத்தார். 1913ஆம் ஆண்டு ரஸ்சியா பெண்கள் பிப்ரவரி மாத கடைசி சனிக்கிழமையில் கொண்டாடி வந்தார்கள்.
1914ஆம் ஆண்டு ஜெர்மனி பெண்கள் மார்ச் மாதம் 8ஆம் தேதி உலக பெண்கள் தினமாக கொண்டாடினார். ஏனென்றால் ஜெர்மனி பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது.
யுனைடெட் நேஷன்ஸ்(UN) 1975-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அன்றிலிருந்து உலக பெண்கள் தினம் மார்ச் 8ஆம் நாள் உலக முழுவதும் கொண்டாடபட்டு வருகிறது.
பெண்ணியவதியும் சமூக ஆர்வலறுமான குளோரியா ஸிடைனிம் கூறுகையில் ‘ பெண்களின் சம உரிமைக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடி பெற்று கொடுத்தது எந்த ஒரு தனி பெண்ணியவாதியோ அல்லது ஒரு நிறுவனமோ அல்ல.
மனித சம உரிமையை புரிந்து அதற்கு ஆதரவாக பேசி பாலினத்தைப் பாராமல் தங்கள் பங்களிப்பை கொடுக்கும் ஒவ்வொரு மனிதரும் தான்.
சமூதாயத்தில் பெண்களின் வளர்ச்சி, சம உரிமை, சுதந்திரம் ஆகியவற்றை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக மகளிர் தினத்தின் நோக்கம்.
பெண்கள் சாதிக்காத துறை இல்லை. அவர்களுக்கு வேண்டிய சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் கொடுத்தால் இந்த சமுதாயம் மனித வளர்ச்சிக்காக அவர்களின் பங்களிப்பை நிச்சயம் அளிப்பார்கள்.
உலகத்தில் ஊதா (Purple) வண்ணம் பெண்களை குறிக்கும். ஊதா, பச்சை மற்றும் வெள்ளை பெண்களின் சமத்துவத்தை குறிக்கிறதாம்.
ஊதா வண்ணம் குறிப்பது தன்மானம் மற்றும் நியாயம். பச்சை வண்ணம் நம்பிக்கையை குறிக்கிறது. வெள்ளை நிறம் தூய்மையை குறிக்கிறதாம்.
எவ்வாறு சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது
சமூக வலைதளங்கள் பிரபலமான பிறகு மகளிர் தினம் அதிகமாக பகிரப்பட்டு பெண்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்படுகிறது.
கூகிள் டூடுல் பக்கத்தில் கூகிள் நிறுவனம் புதிய புதிய ஓவியங்கள், புகைப்படங்களை வைத்து சிறப்பிக்கிறது. மெட்ரோ நகரங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறுகின்றன.
Bigg Boss Raiza முத்தங்கள் ரொம்பவே முக்கியம் என்று பிக் பாஸ் புகழ் ரைசா தெரிவித்துள்ளார்.
Raiza Wilson ரைசா வில்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
தனுஷ் நடிப்பில் வந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்தவர் ரைசா வில்சன் (Raiza Wilson). இப்படத்தில் பாலிவுட் நடிகை கஜோலுக்கு மேனேஜராக நடித்திருந்தார்.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. எனினும், ரைசாவிற்கு வரவேற்பு என்னவோ கம்மிதான்.
இந்த நிலையில், தான் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் Bigg Boss Tamil நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ரைசாவிற்கு கிடைத்தது.
இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 63 நாட்கள் தாக்குப்பிடித்தார். அதன் பிறகு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் ரைசாவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து, ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.
ரொமாண்டிக், காதல் காட்சிகளை மையப்படுத்திய இப்படத்தை எலன் இயக்கியிருந்தார்.
இப்படத்தைத் தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.
தற்போது அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப் ஐ ஆர் (ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்) மற்றும் ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் எஃப்.ஐ.ஆர். படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து வருகிறார்.
மேலும், ரைசா வில்சனுடன் இணைந்து மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், கௌதம் மேனன், கௌரவ் நாராயணன் ஆகியோர் நடிக்கின்றனர். விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.
ரைசா இஸ்டாகிராம் Raiza Wilson Instagram
இந்த நிலையில், தனது இஸ்டாகிராம் பக்கத்தில் நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதில், முத்தங்கள் ரொம்பவே முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் அளித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல், தனது கவர்ச்சி புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற மார்ச் 29 ஆம் தேதி13வது ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் பஞ்சாப் அணியின் பலம் மற்றும் பலவீனம் பற்றிப் பார்ப்போம்.
பெரிதாக சோபிக்காத அணி
2008 தொடங்கிய ஐபிஎல், அந்த ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டனாக இருந்தார்.
மிகவும் வலுவான அணியாக இருந்தது பஞ்சாப், யுவராஜ் சிங் இருந்த வரை சென்னை அணியின் பரம எதிரியே பஞ்சாப் அணி தான்.
அந்த ஆண்டு ப்ளே ஆஃப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு மட்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி கொல்கத்தா அணியிடம்
3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
மற்ற அனைத்து ஐபிஎல் போட்டியிலும் புள்ளிபட்டியலில் 5 லிருந்து 8 வது இடைத்தை மட்டுமே பிடித்தது.
நிலையான வீரர்கள் இல்லை
மொத்தம் இந்த அணியில் 12 கேப்டன்கள், வருடத்திற்கு ஒரு கேப்டன் என்று மாற்றேவதால இந்த நிலையான வீரர் என்று யாருமில்லை.
இந்த அணியில் இதற்கு முந்தைய சீசன்களில் பிரட் லீ, ஷான் மார்ஷ், சேவாக், யுவராஜ் சிங், கில்கிறிஸ்ட் போன்ற வீரர்கள் விளையாடியுள்ளனார்.
டேவிட் மில்லர் மட்டும் இந்த அணியில் 5 ஆண்டுகளாக விளையாடி இருக்கிறார்.
கடந்த வருடம் அஷ்வின் கேப்டனாக இருந்தார், அவர் இந்த வருடம் டெல்லி அணிக்கு மாற்றப்பட்டார்.
கடந்த ஒரு ஆண்டாக இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் கே.எல் ராகுல் இந்த வருடம் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியின் பேட்ஸ்மேன்கள்.
இந்த அணியில் டி20 அசுரன் கிரிஸ் கெயில் இந்த அணியில் இருப்பது இந்த அணிக்கு சிறப்பு அம்சமாகும்.
இவருடன் தொடக்க ஆட்டாகாரர்களாக களமிறங்க கே எல் ராகுல் இருப்பதால், அணியின் முதல் பத்து ஓவர்களில் அதிரடியாகவும் வேகமாகவும் ரன் சேர்க்க உதவும் என்பதில் சந்தேகமில்லை.
இவர்களுடன் மற்றோரு இந்திய தொடக்க ஆட்டகாரர் மயங்க் அகர்வாலும் இருப்பதால் கண்டிப்பாக அணிக்கு கூடுதல் சிறப்பு.
பேட்ஸ்மேன்களாக கருன் நாயர், சார்பரஸ் கான், மந்தீப் சிங் போன்ற வீரர்கள் உள்ளனர்.
அணியின் ஆல்ரவுண்டரகள்
ஆல்ரவுண்டராக சர்வதேச டி20 வீரர் மேக்ஸ்வேல் இருக்கிறார், இது அணிக்கு பலம் சேர்க்கும்.
கூடுதல் ஆல்ரவுண்டரகளாக கிரிஸ் ஜோர்டான், கிருஷ்னப்பா கௌதம், ஜேம்ஸ் நிஷாம் போன்ற வீரர்கள் இருப்பதால் நடுவரிசை அணி தரமாக உள்ளது.
பந்துவீச்சாளர்கள்
பந்து வீச்சாளர்கள் சலியூட் மன்னன் கோட்ரால், வில்ஜோன், முகமது ஷமி, முஜிப் ரஹ்மன், முருகன் அஸ்வின் இருக்கிறார்கள்.
பந்து வீச்சளார்கள் பெரிதாக இந்த அணியில் இல்லை,
ஏலத்தில் இந்த அணி பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
இந்த அணி டாஸ் வெல்லும் பட்சத்தில் பேட்டிங்கை தேர்வு செய்யும் என்பது எங்களின் கணிப்பு.
அணியின் பலம்
கடந்த சீசன்களில் 2014 ஆம் ஆண்டு ஜார்ஜ் பெய்லி இந்த அணியை திறம்பட வழி நடத்தினார்.
கே எல் ராகுல் அதை போல வழி நடத்தினால் அணிக்கு கூடதல் சிறப்பு.
இந்த அணி இந்திய இளம் வீரர்கள் அதிகம் கொண்ட அணி, இந்த வருடமாவது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடும் என்று நம்புவோம்.
தற்போது உள்ள அணி முதலில் விக்கெட் விழுந்தாலும் நடுவரிசை பக்க பலமாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
பந்துவீச்சு ரன்களை கட்டு படுத்தி விக்கெட்களை வீழ்த்தினால் இந்த அணி வெற்றி பெறும்.
அணியின் பலவீனம்
இந்த அணியில் அதிரடியாக ஆடிய மில்லர் இந்த ஆண்டு ஏலத்தில் எடுக்காமல் விட்டது இந்த அணிக்கு சிறு இழப்பு.
அணியை முழுமையாக புரிந்தவர் டேவிட் மில்லர், இந்த அணியில் நடுவரிசையில் ரன் சேர்த்து நிலைத்து விளையாட கூடியவர்.
இந்த அணியின் பலவீனமாக வருட வருடம் நிலையாக ஒரு வீரர்களை விளையாட வைப்பதில்லை, அணியை மாற்றியும், கேப்டனகளை மாற்றேவதால், தவறுகளை திருத்திக் கொள்ளமால், மேல் மேலும் புதிய தவறுகளை செய்து தோல்வி அடைகிறது.
தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 30 ஆம் தேதி டெல்லி அணியை சந்திக்கிறது.
இந்த வருடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கோப்பையை வென்று அதிசயத்தை நிகழ்த்துமா?
சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள டக்கர் Takkar Release Date படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சித்தார்த். மணி ரத்னம் இயக்கத்தில் வந்த கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார்.
எனினும், பாய்ஸ் படத்தின் மூலமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.
இப்படத்தைத் தொடர்ந்து ஆய்த எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, காவிய தலைவன், எனக்குள் ஒருவன், அரண்மனை 2, ஜில் ஜங் ஜக், அவள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கடந்தாண்டு வெளிவந்த சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது, சைதான் கா பச்சா, டக்கர், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். எனினும், கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் சைதான் கா பச்சா தாமதமாகியுள்ளது.
இப்படத்தில் சித்தார்த் உடன் இணைந்து ராஷி கண்ணா, கருணாகரன், யோகி பாபு, வம்சி கிருஷ்ணா, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தைத் தொடர்ந்து டக்கர் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடன் இணைந்து யோகி பாபு, திவ்யன்ஷா கவுசிக், விக்னேஷ்காந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.
முதல் முறையாக யோகி பாபு இந்தப் படத்தில் அப்பா – மகன் என்று இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கப்பல் படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் டக்கர் படத்தை இயக்கியுள்ளார். நிவாஸ் பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார்.
டக்கர் ரிலீஸ் தேதி (Takkar Release Date)
இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி வரும் ஏப்ரல், 17 ஆம் தேதி தமிழ் புத்தாண்டைத் தொடர்ந்து டக்கர் படம் வெளியாகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிக்கிறார்.
மேலும், இந்தப் படத்தில் காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, மனோபாலா, தம்பி ராமையா, விவேக், டெல்லி கணேஷ், லிவிங்ஸ்டன், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்து வருகின்றனர்.