Home Blog Page 239

பொன் மாணிக்கவேல் ரிலீஸ் ஒத்திவைப்பு!

0
Pon Manickavel Release PostPoned

Pon Manickavel; பொன் மாணிக்கவேல் இன்று வெளியாக இருந்த நிலையில், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பொன் மாணிக்கவேல் (Pon Manickavel) படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பொன் மாணிக்கவேல்

முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் பொன் மாணிக்கவேல்.

ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் பிரபு தேவா முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

மேலும், இது பிரபு தேவாவின் 50 ஆவது படம். அதனால், இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், பொன் மாணிக்கவேல் (Pon Manickavel) படம் இன்று வெளியாகயிருந்தது. இதன் காரணமாக, விளம்பரங்களும், புரோமோஷன்களும் விறுவிறுப்பாகவே நடந்தது.

Pon Manickavel Release Postponed

எனினும், இறுதியில், பணப்பிரச்சனை காரணமாக பொன் மாணிக்கவேல் வெளியாகவில்லை.

பொன் மாணிக்கவேல் வெளியாகாததால், படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு எப்போது வெளியாகும் என்று அறிவிக்கப்படும். இன்று மாலை கூட வெளியாகலாம்.

கடந்தாண்டு பிரபு தேவா (Prabhu Deva) நடிப்பில் தேவி 2, சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்கள் வெளியாகியது. தற்போது தேள், ஊமை விழிகள், பாகீரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் வந்த தபாங் 3 படத்தை பிரபு தேவா இயக்கியிருந்தார். அண்மையில், திரைக்கு வந்த இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் ராதே படத்தை இயக்கி வருகிறார்.

பிரபு தேவாவின் பொன் மாணிக்கவேல் வெளியாகாத போதிலும், ஜிப்ஸி, வெல்வெட் நகரம், எட்டுத்திக்கும் பற, காலேஜ் குமார், இம்சை அரசி, இந்த நிலை மாறும், முரட்டு சிங்கம், ஈவர் கரவாது ஆகிய படங்கள் இன்று திரைக்கு வருகிறது.

3

பெர்செவரென்ஸ் ரோவர் மெஷின்; நாசாவின் மார்ஸ் 2020ன் புதிய பெயர்

0
பெர்செவரென்ஸ் ரோவர் மெஷின்

பெர்செவரென்ஸ் ரோவர் மெஷின்; நாசாவின் மார்ஸ் 2020ன் புதிய பெயர்

வருகிற ஜூலை மாதம் செவ்வாய் செல்ல இருக்கும் ரோவர் மெஷின்க்கு பெர்செவரென்ஸ்(Perseverance) என்னும் பெயர் தேர்வு செய்துள்ள நாசா விண்வெளி மையம். பெர்சேவரன்ஸ் என்பதற்கு தமிழில் விட முயற்சி என்று பொருள்.

இதற்கு முன் இந்த ரோவர் மெஷின்க்கு மார்ஸ் 2020 என பெயர் வைக்கப்பட்டு இருந்தது. வருகிற ஜூலை 17ஆம் தேதி விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளனர்.

Perseverance Rover Machine Aim

வெர்ஜினியா மாகாணத்தில் நடந்த போட்டியில் 7ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தேர்வு செய்த பெயர் இதுவாகும்.

மாணவனுக்கு பெர்சேவரேன்ஸ் விண்ணில் செலுத்தும் நாளில் வாட்ச் ஒன்று பரிசலிக்கப்பட உள்ளதாம்.

பெர்செவரென்ஸ் ரோவர் மெஷினின் நோக்கம் அங்கு வாழ்ந்த நுண்ணுயிர், வேற்று கிரக வாசிகளின் வாழ்ந்த சான்றுகளையும் எதிர்காலத்தில் பூமியில் இருந்து அங்கு செல்வதற்கான வாய்ப்புகளை கண்டறிவதே.

நிலவில் தண்ணீர் நகர்வை கண்டறிந்த நாசா

3

Dim Dip Trailer Audio Launch; டிம் டிப் படத்தின் டிரைலர், இசை வெளியீடு!

0
Dim Dip Trailer Audio Launch

Dim Dip Trailer Audio Launch டிம் டிப் டிரைலர் இசை வெளியீடு!

டிம் டிப் (Dim Dip) படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் பிரமாண்டமாக நடந்துள்ளது.

இயக்குநர் அருணாச்சலம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் மோனிஷ்குமார் மற்றும் சஞ்சனா சிங் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் டிம் டிப்.

டிம் டிப் (Dim Dip) படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன், தயாரிப்பாளர் மருத்துவர் தணிகா செல்லம், பெரைரா ஆகியோர் நடித்துள்ளனர்.

டிம் டிப் படத்தின் தயாரிப்பாளரான தணிகா செல்லம் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவியும் ஒரு மருத்துவர். தனது இரு மகள்களையும் மருத்துவம் படிக்க வைத்து வருகிறார்.

Dim Dip Trailer Audio Launch

க்ரைம் த்ரில்லர் கதையை மையப்படுத்திய டிம் டிப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் நேற்று நடந்தது.

இதில், படக்குழுவினருடன் ஜாக்குவார் தங்கம் மற்றும் பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தயாரிப்பாளர் தணிகா செல்லம், தான் கர்நாடகாவில் இருந்து வந்திருப்பதகாவும், ரஜினியைப் போன்று தனக்கும் ஆதரவு தரவேண்டும்.

தொடர்ந்து தமிழில் அதிக படங்களை எடுக்க ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், ரசிகர்களை கவர்ச்சிப்படுத்தவும், மகிழ்ச்சிப்படுத்தவும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

பொன் மாணிக்கவேல் ரிலீஸ் ஒத்திவைப்பு!

Dim Dip Promo Song

டிம் டிப் படத்தின் புரோமோ சாங் டிரெண்டாகி வருகிறது. இறுதியில், ஜெய்ஹிந்த் டிம் டிப், ஜெய்ஹிந்த் டிம் டிம், ஜெய்ஹிந்த் டிம் டிப் என்று நகைச்சுவையும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து சஞ்சனா சிங் பேசினார். படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு மனைவியாக நடித்துள்ள நிலையில், விழாவில் பேசும் போது பாக்யராஜ்க்கு மனைவியாக நடித்துள்ளேன் என்று குறிப்பிட்டார்.

இதைக்கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பாக்யராஜ் சாரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என்றார். பிறகு தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

ஜாக்குவார் தங்கம் பேசுகையில், கர்நாடகாவில் தமிழர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுங்கள். தமிழர்களை வாழவிடுங்கள்.

தமிழ் பேனர்களை கிழிக்காதீர்கள். தண்ணீர் கொடுப்பதற்கு அறிவுறுத்துங்கள் என்று தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் வைத்தார்.

அடுத்தடுத்து படக்குழுவினர் பலரும் பேசினர். இறுதியாக சிறப்பு விருந்தினர், பாக்யராஜ் பேசினார்.

விழா மேடையின் போது நடிகரின் பெற்றோரையும் அழைத்து சிறப்பு செய்வது என்பது பெருமையான விஷயம். அதனை டிம் டிப் படக்குழுவினர் செய்துள்ளனர்.

தயாரிப்பாளர் நகைச்சுவை உணர்வோடு பேசினார். வந்தாரை வாழ வைப்பது தமிழ்நாடுதான். உங்களையும் வாழ வைக்கும்.

காமெடி நடிகர் சார்லிக்கு இன்று பிறந்த நாள்

நீங்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால், நான் ஒரு உண்மையைச் சொகிறேன். மைசூரில் எனது படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது பள்ளி விடுமுறை.

எனது மனைவி பூர்ணிமா குழந்தைகளை அழைத்துக் கொண்டு மைசூருக்கு வருவதாக கூறினார்.

நானும் சரி என்று கூறியதைத் தொடந்து அவரும், குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெங்களூரு விமான நிலையம் வந்து இறங்கினார். அதன் பிறகு சிறிது நேரத்திலேயே கலவரம் வெடிக்க ஆரம்பித்துவிட்டது.

எனது கார் டிரைவர் அவர்களை அழைப்பதற்கு அங்கு சென்றிருந்தார். ஆனால், தமிழ்நாடு வாகனம் என்பதால், வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும், அதையெல்லாம் கடந்து ஒரு வழியாக எங்கெங்கோ சென்று அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்றுவிட்டனர்.

அங்கிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ராசைய்யா என்பவர் எனது மனைவி, குழந்தைகளைக் கண்டதும், அவரது வீட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்தார்.

முதலில் எங்களை யார் என்று கேட்காமல் தான் இடம் கொடுத்தார். அதன் பிறகு பாக்யராஜ் மனைவி என்று தெரிந்து கொண்டார்.

அவரும் கர்நாடகாவைச் சேர்ந்தவர். அவர் பெயர் ராசைய்யா. அதன் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் எனது மனைவியையும், குழந்தைகளையும் அங்கிருந்து அழைத்துவந்தனர்.

மனிதநேயமும், மனிதாபிமானமும் எங்கெல்லாம் இருக்குமோ அங்கெல்லாம் கலவரம் இருக்காது என்று குறிப்பிட்டார்.

இறுதியில் படத்தைப் பற்றி பேசுகையில், டிம் டிப் (Dim Dip Trailer Audio Launch) படத்தில் சஞ்சனா சிங் மற்றும் மோனிஷ் இருவரும் வரும் பெட்ரூம் பாடல் காட்சியில், இருவருமே அப்படியே அமைதியாகவே இருக்கிறார்கள்.

ஏன், என்று தெரியவில்லை. அவர்களிடம் கெமிஸ்டரி வரவில்லை. அந்த நேரத்தில் அப்படி இப்படி என்று இருந்திருக்க வேண்டும் என்றார்.

அதற்கு ஹீரோதான் கிளாமர், கவர்ச்சி வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

Valimai Shooting Spot Video; தல அஜித் மாஸ் காட்டும் பைக் ரேஸ்

பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு மனைவியாக நடித்த சஞ்சனா சிங், ஏன் ஹீரோவுடன் டான்ஸ் ஆடுகிறார். ஒன்னுமே புரியவில்லையே என்றார். அதான் சார் த்ரில்லர் என்றனர்.

இறுதியில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து அங்கிருந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. படத்திற்கு கு கார்த்தில் பாடல் வரிகள் அமைத்துள்ளார். ஹமரா சிவி, ஆதிப் மற்றும் கு கார்த்திக் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இயக்குநர் அருணாச்சலம் ஆனந்தே படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்சி நீரஜா பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தணிகாச்சலம் (தணிகா செல்லம்) படத்தை தயாரித்துள்ளார்.

3

500 கோடி செலவில் திருமணம்; பெங்களூர் அமைச்சரின் ஆடம்பர ஆட்டம்

0
500 கோடி செலவில் திருமணம்

500 கோடி செலவில் திருமணம்; பெங்களூர் அமைச்சரின் ஆடம்பர ஆட்டம்

பெங்களூருவில் இருக்கும் அரண்மனை மைதானாத்தில் பெங்களூர் அமைச்சர் ராமுவின் மகளுக்கு 9 நாட்களாக மொத்தம் 500 கோடி செல்வில் திருமணம் நடைபெற்றது.

பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கிய இந்த திருமணம் 9 நாட்களாக ஆடலும் பாடலுமாக மொத்தம் 500 கோடி செலவில் திருமணத்தை முடித்தனர்.

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சரும் பெல்லாரி ஜனார்த்தன ரெட்டியின் நெருங்கிய நண்பருமான ராமுலுவின் மகள் ரஷ்மிகாவுக்கும், பெல்லாரி சுரங்க அதிபர் ரவிகுமாரின் மகன் லலித் சஞ்சீவ் ரெட்டிக்கும் சில மாதங்களுக்கு முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணத்திற்கு வந்த முக்கிய அரசியல் புள்ளிகள்

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் ஈஸ்வரப்பா, அசோகா, சுரேஷ்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.

3

உலக பல் மருத்துவர் தினம்; வரலாற்றில் இன்று மார்ச் 06

0
உலக பல் மருத்துவர் தினம்

உலக பல் மருத்துவர் தினம்; வரலாற்றில் இன்று மார்ச் 06.  today what special day in world – india – tamil.

நம் வாழ்க்கையில் நம்முடைய ஆரோக்கியத்திற்கு அழகிற்கும் முக்கிய பங்கு வகிப்பவர்களில் பல் மருத்துவர்களும் ஒருவர் ஆவர். அவர்களை சிறப்பிக்கும் நாள் வரலாற்றில் இன்று மார்ச் 06.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 06ஆம் நாள் உலக மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. அவர்களுக்கு ஊக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்கும் விதமாக இந்த நாள் அமையும்.

சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு நம்முடைய அன்பை பாராட்டையும் வெளிப்படுத்தலாம். மேலும் நாம் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை வெளிக்காட்டுவதே மருத்துவர்களுக்கு சிறந்த பரிசு.

வரலாற்றில் இன்று March 06. இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

3

காமெடி நடிகர் சார்லிக்கு இன்று பிறந்த நாள்

0
காமெடி நடிகர் சார்லி

காமெடி நடிகர் சார்லிக்கு இன்று பிறந்த நாள்

இவரின் இயற்பெயர் டாக்டர். வேல்முருகன் தங்கசாமி மனோகர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மார்ச் 6 ஆம் தேதி 1960 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் நடிகர் சார்லி.

இவர் 800 படங்களுக்கு மேல் காமெடி நடிகராகவும் மற்றும் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இவரது பெயரில் உள்ள சார்லி என்பது ஹாலிவுட்டில் வரும் பிரபல காமெடி நடிகர் சார்லி சாப்ளின் பெயரிலுள்ள சார்லி ஆகும்.

1982 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ கே பாலச்சந்தர் அவர்களால் சார்லி என்ற பெயரில் பொய்க்கால் குதிரை என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

‘ஹுமர் ஆப் தமிழ் சினிமா’ என்ற தலைப்பில் பிஎச்டி டாக்டர் பட்டம் தஞ்சாவூரில் உள்ள தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் முன்னாள் பேராசிரியர் கே புள்ளி ரவீந்திரன் இவருக்கு வழங்கினார்.

2004 ஆம் ஆண்டு இவருக்கு தமிழ் சினிமா கலைமாமணி விருது வழங்கியது. 2018 ஆம் ஆண்டு கலைச் சிகரம் விருதும் வாங்கியுள்ளார்.

இவர் நடித்த பூவே உனக்காக, பிரண்ட்ஸ், வெற்றிக்கொடி கட்டு, கூர்க்கா, மாநகரம், உழைப்பாளி போன்ற இவரது நடிப்பை இன்றும் பேசும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரண்ட்ஸ் படத்தில் நேசமணியும் அவருக்கு அசிஸ்டெண்டாக வலம்வரும் கோபாலு என இந்த இரு கதாபாத்திரம் உலகமே  சமூக வலைதளங்களில் பெரிதாகப்பேசப்பட்டது.

இவர் தமிழ் சினிமாவில் இன்று உள்ள அனைத்தும் ஜாம்பவான்கள் படங்களில் நடித்திருக்கிறார். இவரது காமெடி அருவெறுப்பு அடையாமல் மக்களை சிரிக்க வைப்பதாகவே இருக்கும்.

இவர் கடந்த சில காலங்களாக நல்ல குணச்சித்திரமான உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் நடித்த சில படத்தின் காமெடிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் ஆக  வருவதை நாம் காணலாம். இன்று இவர் தன்னுடைய 59வது பிறந்தநாளை  கொண்டாடுகிறார்.

3

AUSW vs SAW: மகளிர் உலககோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

0
AUSW vs SAW

AUSW vs SAW; மகளிர் உலககோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா. மகளிர் உலககோப்பை போட்டி அரையிறுதியை தாண்டியுள்ளது.

இன்று இரண்டு அரையிறுதி போட்டியும் ஒரே மைதானத்தில் நடந்தது. முதல் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுவதாக இருந்தது.

ஆனால் மழை குறிக்கிட்டு ஆட்டம் கைவிடப்பட்டது. புள்ளிபட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதால், இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியது.

வேதனையுடன் இங்கிலாந்து அணி வெளியேறியது. மற்றோரு போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணி மோதியது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் லன்னிங் 49 ரன்கள், மூனே 28 ரன்கள், ஹீலி 18 ரன்கள் மற்றும் ஹயனஸ் 17 ரன்கள் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேளர்க் 3 விக்கெட்டும், லபா மற்றும் ஹாகா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்யும் முன்னதாக மழை மீண்டும் குறுக்கிட்டது. சிறிது நேரம் மழை நின்றவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

13 ஓவர்களாக குறைக்கப்பட்டு தென்னாபிரிக்க அணிக்கு 98 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

13 ஓவர்களுக்கு தென் ஆப்பிரிக்கா அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டிஎல் முறைப்படி 5 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக வால்வேர்ட் 41 ரன்கள், சுனே லோஸ் 21 ரன்கள், நைகிரேக் 12 ரன்கள், லீ 10 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் மேகன் ஸ்கட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் மேக் லெனிங் வாங்கினார்.

முதல் ஆட்டத்தில் போல் இரண்டாவது ஆட்டத்தில் மழை குறுக்கீடும் இதனால் தென் ஆப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

உலகக் கோப்பையை நடத்தும் ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அந்த நாட்டு ரசிகர்களை உற்ச்சாகப் படுத்தியுள்ளது..

இறுதிப் போட்டி வருகிற மார்ச் 8-ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் தொடங்குகிறது.

3

6/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
6/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil
astrology horoscope background

6/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்றைய நாள் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். பணியில் வெற்றி நிச்சயம்.

துணையுடன் நல்ல நிலை இருக்கும். தன வரவு மற்றும் செலவு சமமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மகாலட்சுமிக்கு விளக்கு ஏற்றி வர நன்மை கிடைக்கும்.

ரிஷபம் ராசிபலன்

விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாள். மனதில் தெளிவு வேண்டும். பணியில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

குடும்பத்தில் உற்சாகம் பெருகும். நெருங்கிய உறவினர்கள் மூலம் ஆலோசனைகள் கிடைக்கும்.

பணவரவு சுமாராக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். துர்கைக்கு விளக்கேற்றி வர நற்பலன் கிடைக்கும்.

மிதுன ராசிபலன்

உங்கள் திறமையை வெளிபடுத்த ஏதுவான நாளாக இருக்கும். பணியாளர்களிடம் சகஜமான சூழல் நிலவும்.

காதலை வெளிபடுத்த ஏதுவான நாள். நிதி விஷங்கள் சாதகமான இருக்கும். நல்ல பலத்துடன் இருப்பீர்கள். அற்புதமான நாளாக அமையும்.

சுக்ர பகவானை வழிபட நன்மைகள் கூடும்.

கடக ராசிபலன்

செயலில் அக்கரை காட்டாமல் இருப்பீர்கள். மந்தமான சூழல் நிழவும். பணியில் சுமூகமான சூழ்நிலை இருக்காது.

காதலில் சிக்கல் ஏற்படும். பணத்தை கவனமாக செலவிடவும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். கருடனிற்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.

சிம்மம் ராசிபலன்

உங்கள் முடிவுகளை எடுப்பதில் உறுதியாக இருங்கள். மனதில் உள்ள குழப்பத்தை நீக்கி விடுங்கள்.

மேலதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் நீங்கும். அதிர்ஷ்டமான நிதி நிலை இருக்காது. மனதில் உற்சாகமாக இருப்பீர்கள்.

சிவபெருமானை வழிபட கவலைகள் குறையும்.

கன்னி ராசிபலன் 

இன்று சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

தங்கள் துணையிடம் புரிதல் நன்றாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெருமாளிற்கு விளக்கேற்றி வர நன்மைகள் கூடும்.

துலாம் ராசிபலன்

இன்று பொன்னான நாள். நன்றாக ஆற்றலுடன் இருப்பீர்கள். பணி மாறுதல்கள் இருக்கலாம்.

மேலதிகாரிகளிடம் அங்கீகாரம் கிடைக்கும். காதல் மேம்படும். நிதியில் எந்த பாதிப்பும் இல்லை. ஆரோக்கியத்தில் குறையில்லை. சுக்ர பகவானை வழிபட கூடுதல் பலன் உண்டு.

விருச்சிக ராசிபலன்

இன்று அசௌகரியமான நாளாக இருக்கும். பணியில் ஆக்கப்பூர்வமான செயல்கள் இருக்காது. திருமண உரையாடல்களை தள்ளி போடவும். தன வரவு லாபகரமாக இருக்காது.

தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தன்வந்திரியை விளக்கேற்றி பூஜியுங்கள் நல்ல பலன் உண்டு.

தனுசு ராசிபலன்

இன்று லாப நஷடம் கலந்த நாளாக இருக்கும். புதிய தொடர்புகள் நல்ல பலன் தரும்.

பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. துணையிடம் வேண்டாத மோதல்கள் வரலாம். பண வரவு மகிழ்ச்சிகரமாக இல்லை.

வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம். சுக்ர பகவானிற்கு விளக்கேற்றி வழிபட நற்பலன்கள் கிடைக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்று வளர்ச்சிகள் நன்றாக இருக்கும். சுய முன்னேற்றம் இருக்கும். உழைத்து வெற்றி பெறலாம்.

குடும்பத்தில் நல்ல உறவு இருக்கும். உறவினர் வர வாய்ப்புண்டு. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பெருமாளிற்கு விளக்கேற்றி வர கூடுதல் பலன் கிடைக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று விரக்தியான நாளாக இருக்கும். பணி சுமை அதிகமாக இருக்கும். மனதை அமைதியாக வைத்து கொள்ளவும். துணையுடன் மோதல்கள் இருக்கும்.

பண வரவு போதுமான அளவு இருக்காது. பதட்டை தவிர்க்க யோகா அவசியம். பெருமாளிற்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் வரவும்.

மீனம் ராசிபலன் 

இன்று யோசித்து விவேகத்துடன் செயல்பட வேண்டும். மற்றவர்கள் மீது கோபம் கொள்வதை தவிர்க்கவும்.

பணியில் திட்டமிடல் அவசியம். துணையிடம் சுமூகமான நிலை இருக்கும். வீண் செலவை தவிர்க்கவும்.

ஆரோக்கியம் சாதாரண நிலையில் இருக்கும். அம்பிகை தரிசனம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

6/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

Happy birthday selvaraghavan: செல்வராகவன் எனும் ஜீனியஸ்

0
Happy birthday selvaraghavan

Happy birthday selvaraghavan: செல்வராகவன் எனும் திரையுலக ஜீனியஸ்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! புதுப்பேட்டை படம் மூலம் தமிழ் சினிமா விதிகளை மாற்றியவர்.

செல்வராகவன் எனும் ஜீனியஸ்

மனித உணர்வுகள் எப்போதுமே ஒரே மாதிரியாக இருப்பதில்லை. குறிப்பாக உறவுகளின் விஷயத்தில் அனைவருக்கும் உணர்வுகள் நிலையாகவோ, அனைவரும் ஒத்தக்கருத்துடையவராகவோ இருப்பதில்லை.

மனித ஆழ்மனம் பலவித வினோதங்களை கொண்டது. அப்படிப்பட்ட வினோதங்களை அடிப்படையாக கொண்டு திரைப்படங்களை கொடுப்பவர்களில் செல்வராகவன் மிகமுக்கியமானவர்.

நம் கோலிவுட்டை பொறுத்தவரையில் செல்வராகவன் எடுத்த அனைத்து கதைகளுமே அதற்கு முன் யாரும் காட்டாத பாணியிலே திரையில் இருக்கும்.

துள்ளுவதோ இளமையில் இருந்து இறுதியாக வெளிவந்த என்.ஜி.கே வரை அவருடைய திரைக்கதை பாணி சற்றே மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானதாக இருக்கும்.

காதல் கொண்டேன் வந்த சமயத்தில் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா இன்டஸ்ட்ரியும் அதிர்ந்தது.

இப்படியொரு கதைக்களத்தை எப்படி மக்கள் அங்கிகரிப்பார்கள் என்ற எண்ணமும் பரவலாக அச்சமயத்தில் இருந்தது.  படம் வெளியானபிறகு அவ்வெண்ணங்கள் எல்லாம் சில்லறைகளாக தெறித்தன.

மனித மனங்களில் உள்ள போற்றப்படும் நிகழ்வுகளையும் பண்புகளை கொண்டவர்களையே கதையின் நாயகர்களாக வைத்து படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது, வெகு சிலர் மட்டுமே மனித மனதின் ஆழத்தில் உள்ள குழப்பங்களையும் கேள்விகளையும் கொண்ட மனிதனை கதையின் நாயகர்களாக வைத்து படமெடுப்பர்.

அவர்களுள் செல்வராகவனுக்கு தனியிடமுண்டு. இவரது கதையில் அன்பு, காதல், காமம், குரோதம், துரோகம், வன்முறை என எல்லாவித உணர்வுகளும் இவர் படங்களில் நாம் வெவ்வேறு கோணங்களில் காண முடியும். எமோஷனல் கணக்ட் என்பது இவர் படத்தில் எளிதாக நிகழும்.

செல்வராகவனும் இசையும்:

செல்வராகவன் படங்களில் பாடல்களுக்கேன தன்யிடமுன்டு. கதையோடு ஒன்றி எப்போதைக்குமான பாடலாக அது திகழும்.குறிப்பாக

யுவன்-செல்வராகவன்-நா.முத்துக்குமார் கூட்டணியில் வெளிவந்த அனைத்து பாடல்களுக்குமே ஏகப்பட்ட காதுகள் சொந்தமாகிருக்கிறது.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி படங்களின் ஆல்பங்களெல்லாம் கேட்பவர்களை துடிதுடிக்க வைக்கும்.

யுவன் இல்லாமலும் செல்வராகவனின் படங்கள் வெளிவந்திருக்கிறது. அத்தகைய படங்களிலுமே பாடல்கள் நன்றாகவே இருக்கும்.

இவரின் அனைத்து படங்களுக்குமே பின்னனி இசைக்கு முக்கியப்பங்குண்டு. அவரின் படங்களில் கூட இப்படம் நன்றாக இல்லை என்று குறிப்பிட்டு சொல்ல முடியும்.

ஆனால் அவர் பட பாடல் ஆல்பங்களை நன்றாக இல்லை என்றெல்லாம் தவிர்க்கவே முடியாது. ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை படங்களுக்கான இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ஒரு பட்டாளமே இருக்கிறது.

சமீபத்தில் ஒரு தியேட்டரில் மறுவெளியீடு செய்யப்பட்ட புதுப்பேட்டைக்கும், ஆயிரத்தில் ஒருவனுக்கும் கிடைத்த வரவேற்பை கண்டு ஆச்சரியமடைந்தவர்கள் ஏராளம்.

செல்வராகவனும் காலம் வந்தால் எடுக்கலாம் போன்ற பதிலைத்தான் சொல்கிறார்.

பெரிய நடிகர்களுக்கே தொடர்ந்து படம் பெரிதும் சோபிக்கவில்லையெனில் ரசிகவட்டம் குறைவதை பார்க்க முடிகிறது.

அப்படியிருக்கையில் பெரிய வெற்றி என்று எந்த ஒன்றையும் செல்வராகவன் பெற்று வருடக்கணக்காகிறது.

இருப்பினும் செல்வராகவனை ரசிக்கும் கூட்டம் என்பது துளியும் குறையவில்லை. என்.ஜி.கே திரைப்படம் ஏமாற்றமாக இருந்தது உண்மைதான். ஆனாலும் அவர் கொடுக்க போகிற படங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது.

நிறைய படங்கள் எடுங்கள். உங்கள் கதைக்காக எப்போதும் இரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் பாணியிலேயே நீங்கள் படமெடுங்கள் போன்ற கோரிக்கைகளோடு, என்றும் நலமுடன் வாழுங்கள் என்ற வாழ்த்துகளுடனும் செல்வராகவன் எனும் ஜீனியஸ்-க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

Happy birthday selvaraghavan

3

பியூஸ் சாவ்லா சிக்ஸ்; அடித்த அடியில் கண்ணாடி உடைந்தது

0
பியூஸ் சாவ்லா

பியூஸ் சாவ்லா சிக்ஸ்; அடித்த அடியில் கண்ணாடி உடைந்தது

வருகிற மார்ச் 29ம் தேதி 13 வது ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் 8 அணிகள் வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மார்ச் 2-ஆம் தேதி டோனி மற்றும் ரெய்னா சென்னை வந்தனர்.

மார்ச் 3-ஆம் தேதியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தோனி, ரெய்னா, ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு, பியூஸ் சாவ்லா போன்றவர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் தோனி பயிற்சி ஈடுபடுவதால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது

சுழற்பந்து வீச்சாளரான பியூஸ் பியூஸ் சாவ்லா 6.25 கோடிக்கு சென்னை அணி இந்த வருடம் ஏலத்தில் வாங்கியது.

சுழற்பந்து வீச்சாளாருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வாங்க வேண்டுமா என்று விமர்சனங்கள் எழுந்தது. ப்யூஷா சாவ்லாவுக்கு ஆதரவாகவும் சில குரல்கள் எழுந்தது.

பியுஷ் சாவ்லா சிக்ஸ் 

நேற்று பயிற்சியின்போது பியூஸ் சாவ்லா பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். இதில் பந்துவீச்சாளர் வீசிய பந்தை சிக்சருக்கு தூக்கி மைதானத்தில் உள்ள கண்ணாடி உடையும் அளவிற்கு அற்புதமான ஷாட் ஒன்றை அடித்தார்.

சேப்பாக்கம் மைதானத்தில் கண்ணாடி ஒன்று உடைந்தது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. சமூக வலைதளங்களில் பியூஸ் சாவ்லா தற்போது பேசும் பொருளாகி வருகிறார்.

இதை தோனியும் ரெய்னாவும் அசந்து பார்த்தார்கள். கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் லில் பியூஸ் சாவ்லா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய குறிப்பிடத்தக்கது.

3