Home Blog Page 235

Bhoomi Teaser: டுவிட்டரில் டிரெண்டாகும் பூமி!

0
Bhoomi Teaser

Bhoomi Teaser, Jayam Ravi; பூமி டீசர் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

Jayam Ravi, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பூமி படத்தின் டீசர் எப்போது என்ற அறிவிப்பு வந்துள்ளது.

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரவி. இப்படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார்.

மேலும், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் இளம் புயல் என்று ஜெயம் ரவியின் ஒவ்வொரு படத்திற்கும் டைட்டில் கார்டில் வைக்கப்பட்டார்.

இப்படத்தைத் தொடர்ந்து பேராண்மை, நிமிர்ந்து நில், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், டிக் டிக் டிக், மிருதன், அடங்க மறு, கோமாளி என்று மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

பூமி (Bhoomi)

இந்த நிலையில், தற்போது ஜெயம் ரவி நடிப்பில் பூமி படம் உருவாகி வருகிறது. பூமி படத்தை இயக்குனர் லட்சுமண் இயக்கி வருகிறார்.

பூமி படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நித்தி அகர்வால், சதீஷ், ரோனித் ராய், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர்.

வரும் மே மாதம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டும் தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டும் பூமி படம் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், பூமி படத்தின் டீசர் Bhoomi Teaser எப்போது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 9 ஆம் தேதி பூமி டீசர் வெளியாகிறது.

இதன் காரணமாக பூமி டீசர் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. ஜெயம் ரவியின் 25 ஆவது படமாக உருவாகி வரும் பூமி விவசாயத்தை மையப்படுத்திய படம் என்று போஸ்டரைப் பார்த்தாலே தெரிகிறது.

இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுஜா விஜயகுமார் தயாரித்துள்ளார்.

3

என்ற ஒய்ப் தான் முக்கியம் சாரே; அதிரவைத்த மஞ்ச சட்டை வீரர்

0
மஞ்ச சட்டை வீரர் ஒய்ப் தான் முக்கியம் மகளிர் உலகக்கோப்பை

என்ற ஒய்ப் தான் முக்கியம் சாரே; அதிரவைத்த மஞ்ச சட்டை வீரர். மனைவி உலகக்கோப்பை பைனலில் விளையாடுவதை நேரில் காணச் சென்றுவிட்டார்.

ஆஸ்திரேலியா vs தென்ஆப்ரிக்கா

ஆஸ்திரேலியா – தென்ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் முடிவுவடைந்து உள்ளது. இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ளது.

இந்நிலையில் போட்டியில் இருந்து விலகி உள்ளார் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க். காரணம் காயம் இல்லை அவரின் மனைவி.

மகளிர் உலகக்கோப்பை டி20 2020

வேகபந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மனைவி அலிசா ஹீலி. இவர் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்.

மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணி மோத உள்ளது. மனைவிக்கு ஆதரவாக போட்டியை நேரில் காணச் செல்கின்றார் ஸ்டார்க்.

தன்னுடைய கேரியரை விட மனைவி உலகக்கோப்பை வெல்வது முக்கியம் என கிளம்பியது மற்ற ஆஸ்திரேலிய அணி வீரர்களை சற்று வாய்பிளக்க வைத்துள்ளது.

மகளிர் தினத்தன்று இந்த உலக கோப்பை போட்டி நடக்கிறது. மேலும் டி20 போட்டி நடக்கும் வருடமும் 20 20.

இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த தருணத்தை இப்போட்டியை நேரில் சென்று பார்ப்பதில் என்ன தவறு உள்ளது.

3

வாசிம் ஜாபர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

0

வாசிம் ஜாபர் அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்

இந்திய அணியில் 2000ம் – 2007 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரனாக விளங்கியவர் வாசிம் ஜாபர்.

31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 1946 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 212 ரன்கள் குவித்துள்ளார்.

ஐந்து சதங்களும், 11 அரை சதங்களும் இதில் அடங்கும்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 16 பிப்ரவரி 1988 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் வாசம் ஜாபர்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2000 ஆம் ஆண்டு அறிமுகமான இவர்.

அதே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 2008 ஆம் ஆண்டு கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

இவர் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். பெரிதாக ஒருநாள் போட்டியில் சோபிக்கவில்லை.

1996 – 2015 ஆம் ஆண்டு வரை மும்பை அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடிய இவர், 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு விதர்பா அணியில் விளையாடி வந்தார்.

இவரை முதல் தர மற்றும் உள்ளூர் போட்டிகளில் இந்தியாவின் ஜாம்பவான் என்றே கூறலாம்.

256 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 19,220 ரன்கள் குவித்துள்ளார்.

இதில் 57 சதங்களும் 89 அரை சதங்களும் அடங்கும்.

முதல் தர போட்டியில் அதிக பட்சம் 314 ரன்கள் ஆகும் சராசரியாக 50.00 வைத்துள்ளார் .

2008-2009 ஆம் ஆண்டு ஐபிஎல் இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி உள்ளார்.

2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆன்டிகுவே வில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டிகளில் 212 ரன்கள் குவித்து 500 நிமிடங்கள் களத்தில் நின்றார்.

டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் ஒரு இந்தியர் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.

2007ம் ஆண்டு உலக டெஸ்ட் லெவன் அணியில் இவர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் 11000 ரன்களுக்கு மேல் குவித்து அதிக ரன் குவித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அதிக ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடி உள்ள வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

தற்போது இவர் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 7ஆம் தேதி, இன்று வாசம் ஜாபர் தனது 42வது வயதில் அனைத்து வகை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

3

லிசிபிரியா கங்குஜம்; டியர் மோடி என்னை கொண்டாடாதீர்கள் என்ற 9 வயது சிறுமி

0
லிசிபிரியா கங்குஜம்
லிசிபிரியா கங்குஜம்

லிசிபிரியா கங்குஜம்; டியர் மோடி என்னை கொண்டாடாதீர்கள் என்ற 9 வயது சிறுமி, Who is Licypriya Kangujam

சமீபத்தில் அனைத்து சமூக வலைதளங்களையும் கைவிடுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் பெண்கள் தினத்தன்று மட்டும் அவரது கணக்கை பெண்களுக்காக பயன்படுத்த முடிவு செய்தார்.

govtofindia என்ற ட்விட்டர் பக்கத்தில் 9 வயது சிறுமி லிசிபிரியா கங்குஜம் (Licypriya Kangujam) இளம் காலநிலை ஆர்வலர் டாக் செய்யப்பட்டு இவரைப்போன்று சிறந்து விளங்கும் பெண்கள் யாரும் உங்களுக்கு தெரியுமா?

2019-ம் ஆண்டு இவர் அப்துல் கலாமின் குழந்தைகள் விருதை வென்றுள்ளார். மேலும், உலக அமைதி மற்றும் இந்திய அமைதிக்கான விருதையும் பெற்றுள்ளார்.

இவர் போன்ற பெண்மணிகள் தெரிந்தால் #SheInspiresUs என்ற ஹஷ்டக்கில் பதிவிடுங்கள். அவர்களின் கருத்தை திரு மோடி அவர்களின் கணக்கில் போட்டு உலகம் முழுவதும் தெரிய செய்வோம் என பதிவிடப்பட்டது.

இதைபார்த்த அந்த சிறுமி டியர் மோடி நீங்கள் என்னுடைய கருத்தையோ நான் சொல்வதையோ கேட்கபோவதில்லை. அதனால் என்னை கொண்டாடுவதை விட்டு விடுங்கள்.

இந்த ஹஷ்டக்கில் என்னை குறிப்பிட்டதால் நான் பெருமிதம் கொள்கிறேன். ஆனால் நீங்கள் கொடுத்த இந்த மரியாதையை நான் நிராகரிக்கிறேன்.

“அரசாங்கம் எனது குரலைக் கேட்கவில்லை. ஆனால், இன்று அவர்கள் என்னை நாட்டின் எழுச்சியூட்டும் பெண்ணாகத் தேர்ந்தெடுத்தனர். இது நியாயமா?” எனக் கேள்வி எழுப்பி மற்றொரு டிவிட் போட்டுள்ளார்.

Who is Licypriya Kangujam

மணிப்பூரைச் சேர்ந்த 9 வயது சிறுமி லிசிபிரியா கங்குஜம். இவர் 2018-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி மங்கோலியாவில் நடந்த ஐ.நா நிகழ்வில் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான என்னுடைய குரலை முதன்முதலாக உயர்த்தினார்.

காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலகத் தலைவர்கள் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

2019-ம் ஆண்டு இவர் அப்துல் கலாமின் குழந்தைகள் விருதை வென்றுள்ளார். மேலும், உலக அமைதி மற்றும் இந்திய அமைதிக்கான விருதையும் பெற்றுள்ளார்.

3

மயிலாடுதுறை தனி மாவட்டம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

0
மயிலாடுதுறை தனி மாவட்டம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

மயிலாடுதுறை தனி மாவட்டம் ஆக்குவது குறித்து விரைவில் பரிசீலிக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி மருத்துவக்கல்லூரி விழாவில் பேசியுள்ளார்.

நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை நகரை தலைமையாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க இங்குள்ள மக்கள் விரும்புகின்றீர்கள்.

தமிழக அரசு இது குறித்து பரிசீலனை செய்யும். என மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மேலும் அவர் பேசியதாவது, ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் பயிலும் வகையில்  ஒரத்தூரில் புதிய மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டு உள்ளது.

இங்கு ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக டெல்டா மாவட்டங்களில் எந்த ஒரு தொழிற்சாலைகளுக்கும் இனி அனுமதி இல்லை. விவசாயிகளுக்கு மேலும் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் விழாவில் பேசினார்.

3

தாராள பிரபு; ஸ்பெர்ம் டொனேட் செய்யலாமா?

0
தாராள பிரபு
தாராள பிரபு

தாராள பிரபு; ஸ்பெர்ம் டொனேட் செய்யலாமா? விக்கி டோனர் படத்தின் ரீமேக்

ஸ்பெர்ம் டொனேட் செய்யலாம் என்பதை மையப்படுத்தி உருவாகி வரும் படம் தாராள பிரபு (Dharala Prabhu). Dharala Prabhu Sneak Peek வீடியோ.

தாராள பிரபு படத்தின் ஸ்னீக் பீக் Dharala Prabhu Sneak Peek வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண் Harish Kalyan. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் ரொமாண்டிக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ரைசா நடித்திருந்தார். படத்தில் திருமணத்திற்கு முன்பாகவே இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். அதன் பிறகு ஹரிஷ் கல்யாண் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், அதில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார். இறுதியில், மீண்டும் ரைசா உடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வார்.

இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் இது போன்ற ஒரு காதல் கதையை மையப்படுத்திய படத்தில் நடித்தார்.

ஆம், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த ரொமாண்டிக் த்ரில்லர் படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.

காதல் ரொமாண்டிக் காட்சியை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே உற்சாக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார். தற்போது, இந்தப்படத்தில் நடித்துள்ளார்.

விக்கி டோனர் படத்தின் ரீமேக்

இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் தாராள பிரபு.

வரும் 13 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இந்தப் படம் விந்து தானம் செய்வதையும், செய்த பிறகு அதனால், ஏற்படும் பிரச்சனைகளையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ஹரிஷ் கல்யாண், விவேக் ஆகியோரது காட்சி இடம்பெற்றுள்ளது.

படத்தில் வேண்டுமென்றால் விந்து தானம் Donate Sperm Sells செய்து கொள்ளலாம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அதெல்லாம் சாத்தியம் இல்லை என்று ஹரிஷ் கல்யாண் தெரிவித்திருக்கிறார்.

விந்து தானத்தை மையப்படுத்தி ஹிந்தியில் வெளியான படம் விக்கி டோனர். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக தாராள பிரபு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

3

ஜாம்பவான் விவியன் ரிச்சார்ட்ஸ் பிறந்த நாள் இன்று

0

ஜாம்பவான் விவியன் ரிச்சார்ட்ஸ் பிறந்த நாள் இன்று.

1975 மற்றும் 1979 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பையை இரண்டு தடவை தொடர்ந்து வாங்கி கிரிக்கெட் ஜாம்பவானாக வலம் வந்தது.

அந்த அணியில் ஒரு வீரராக இருந்து, அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய வீரராக இருந்தவர் தான் விவியன் ரிச்சார்ட்ஸ்.

இவரது முழுப்பெயர் ஐசக் விவியன் அலெக்சாண்டர் ரிச்சார்ட்ஸ்.

பிரிட்டிஷ் லிவார்டு ஐலாந்தில் (இன்றைய வெஸ்ட் இண்டீஸ்) உள்ள செயின்ட். ஜான் நகரில் மால்கோம் மற்றும் கீரிடல் ரிச்சார்ட்ஸ்க்கு பிறந்தவர் தான் விவியன் ரிச்சார்ட்ஸ்.

121 டெஸ்ட் மற்றும் 187 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி மொத்தம் 15261 ரன்கள் சேர்த்துள்ளார்.

இரண்டு வகையான போட்டிகளையும் சேர்த்து 35 சதங்கள் மற்றும் 90 அரைசதங்கள் அடித்துள்ளார்.

இவரின் டெஸ்ட் சராசரி 50.00, ஒருநாள் சராசரி 47.00 வைத்துள்ளார்.

ஆல்ரவுண்டராக வலம் வந்த இவர் பந்து வீச்சிலும் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெஸ்டில் அதிகபட்சமாக 291 ரன்னும், ஒருநாள் 189 ரன்னும் அடித்துள்ளார்.

கேப்டனாக 50 போட்டிகளில் 27வெற்றி 8 தோல்வி கண்டுள்ளார்.

1984 மற்றும் 1991 ஆண்டு வரை வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக திகழ்ந்தார்.

முதல் தர போட்களில் 100சதங்கள் அடித்த நான்கு வீரர்களில் இவரும் ஒருவர்.

1976, 1977, 1980, 1981, 1982, 1986 ஆண்டுகளில் இறுதிவரை தரவரிசையில் முதல் இடத்தில் இருந்துள்ளார்.

விஸ்டன் பத்திரிகை வெளியிட்ட 150 வருட டெஸ்ட் வீரர்களில் இவரும் இடம் பிடித்துள்ளார்.

1986 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆண்டிகுவாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டில் 56 பந்துகளில் 100 சதம் அடித்தது, டெஸ்ட் அதிவேக சதத்தில் முதலிடத்தில் 28 வருடமாக இருந்து வந்தது, 2014 ஆம் ஆண்டு மிஸ்பாக் உள் ஹாக் முறியடித்தார்.

அதிவேகமான ஒரு நாள் போட்களில் 1000 ரன்களை (21 இன்னிங்ஸ்) கடந்த வீரர்களில் முதலிடத்தை ஐந்து வீரர்களுடன் பகிரந்து வருகிறார்.

ஒரு நாள் போட்களில் நான்காவது வீரராக களமிறங்கி தனிநபர் அதிக ரன் எடுத்ததில் (189* ரன்கள்) இன்றளவும் இவர் முதலிடத்தில் உள்ளார்.

இவரை பெருமை படுத்தும் விதமாக 2007 ஆம் ஆண்டு உலககோப்பையில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற போது ஆண்டிகுவாவில் உள்ள நாரத் சவுண்ட் நகரில் சர்வதேச மைதானத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.

இவர் சர்வதேச கால்பந்து போட்டியில் ஆண்டிகுவா ம்றறும் பார்போடஸ் அணிக்காக தகுதி சுற்றில் விளையாடியுள்ளார்.

இவரின் மனைவி பெயர் மரியம், இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

2009 ஆம் ஆண்டு ஐசிசி யின் “கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபோம்” விருதை வாங்கியுள்ளார்.

இவர் இன்று தன்து 67 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

3

இயக்குநர் மாரி செல்வராஜ் பிறந்தநாள் இன்று!

0
Mari Selvaraj Birthday

Mari Selvaraj  மாரி செல்வராஜ் இன்று தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் மிஸ்டர் புயல் டீம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்.

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ் Mari Selvaraj.

வறட்சி காலங்களில் விவசாயம் இல்லாமல், இவரது தந்தை வெளியூர்களுக்கு சென்று வேஷமிட்டு ஆடியிருக்கிறார்.

சென்னைக்கு வந்த மாரி செல்வராஜ் Mari Selvaraj இயக்குநர் ராம்-மிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

சில வருடங்கள் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த நிலையில், கதிர், யோகி பாபு நடிப்பில் வந்த பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.

மாரி செல்வராஜ் Mari Selvaraj

பரியேறும் படத்தின் மூலம் சிறந்த இயக்குநருக்காக Behindwoods Gold Medal, 16ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விருது கைப்பற்றியுள்ளார்.

அதோடு இல்லாமல், இந்தப் படத்திற்காக, சிறந்த இயக்குநருக்காக, நார்வே தமிழ் திரைப்பட விருது, 8 ஆவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, 66 ஆவது பிலிம்பேர் விருது (தெற்கு) ஆகிய விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.

இப்படி பல விருதுகளை கைப்பற்றிய இயக்குநர் மாரி செல்வராஜ் இன்று தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு மிஸ்டர் புயல் டீம் சார்பில் நாம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

பரியேறும் பெருமாள் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார்.

யார் கேள்வி கேட்கிறார்? யார் கேள்வி கேட்கவில்லை? யாருடைய கேள்விக்கு பதில் கிடைக்கிறது, யாருக்கு பதில் கிடைக்கவில்லை என்பது போன்ற பல சாராம்சங்களை கொண்டு கர்ணன் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

3

பீர் குடித்தால் கொரோனா பரவாதாமே? – WHO விளக்கம்

0
பீர் குடித்தால் கொரோனா பரவாதாமே? - WHO விளக்கம் CORONA BEER

பீர் குடித்தால் கொரோனா பரவாதாமே? – WHO விளக்கம். கொரோனா பீர் (corona beer) என்ற பெயரில் உள்ள மது குடித்தால் வைரஸ் பரவாது என ஒரு செய்தி பரவி வருகிறது.

கொரோனா

கொரோனா வைரஸ் சைனாவில் பரவ ஆரம்பித்த காலம் முதலே நான் மருந்து கண்டுபிடித்து விட்டேன் என ஒரு கூட்டமே கிளம்பியது.

எந்த எந்த நாட்டில் எல்லாம் இப்படி காமெடி செய்தனரோ அந்த நாட்டில் எல்லாம் தற்பொழுது கொரோனா பரவிவிட்டது.

மருந்து கண்டுபிடித்த அந்த ஆசாமிகளை தான் காணவில்லை. இது மட்டுமல்ல கொரானா பற்றி எக்கச்சக்க வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது.

CORONA BEER

கொரோனா பீர் என்ற ஒரு நிறுவனம் மது தயாரித்து வருகிறது. இதை அருந்தினால் கொரோனா வைரஸ் பரவாது, சரக்கடித்தால் கொரோனா பரவாது எனத் தகவல் பரவியது.

இதற்கு உலக சுகாதார நிறுவனம் WHO விளக்கம் அளித்து உள்ளது. மது அருந்தினால் கொரோனா பரவாது என நம்பி கொரோனா வைரஸ் உள்ளவர்களிடம் செல்ல வேண்டாம்.

கொரோனா எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் பரவும் என உலக சுகாதார நிறுவனம் அனைவரையும் எச்சரித்து உள்ளது.

3