Home Blog Page 262

ராஜீவ் காந்தி கொலையாளிகள்: விரைவில் விடுதலை?

0
ராஜீவ் காந்தி கொலையாளிகள் தமிழக சட்டமன்ற தேர்தல்

ராஜீவ் காந்தி கொலையாளிகள்: விரைவில் விடுதலை? தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதால் ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக கருத்து நிலவி வருகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை

கடந்த 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்த தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையில், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. எழுவரும் ஏக காலத்தில் தண்டனை அனுபவித்து விட்டதால் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கருத்துருவினை அனுப்பியிருந்தார். ஆனால் அப்போது இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இது குறித்த வழக்கில் பல்வேறு சட்ட முறையிலான வாதங்களுக்குப்பின் அனைவரையும் விடுதலை செய்ய  தமிழக ஆளுநருக்கு முழுஅதிகாரம் உள்ளதாக தெரிவித்து உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியிருந்தது .

எனவே, தீர்ப்பினை செயல் படுத்தும் விதமாக கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை கூடி ராஜிவ் காந்தி கொலையாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய பரிந்துரைப்பதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருந்தது.

உச்சநீதிமன்றம் கேள்வி

ஆனால் கடந்த ஒன்றரை வருடங்களாக அந்த தீர்மானத்தின் மீது இதுவரை எந்த முடிவும் ஆளுநரால் எடுக்கப்படவில்லை எனக் கூறி தணடனை பெற்றவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆளுநர் இன்னமும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏன் என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதில் அளித்த தமிழக அரசு எங்களால் தீர்மானம் மட்டுமே நிறைவேற்ற முடியும் எனவும் ஆளுநரை நிர்பந்திக்க முடியாது எனவும் கூறியது.

இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆளுநர் காலம் எடுத்துக்கொள்வதை தமிழக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க கூடாது எனவும் அரசின் கடைமையை நிறைவேற்ற முழு முயற்சி எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த வழக்கில் ஆளுநருக்கு நேரடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கைவிரித்து விட்டனர்.

மேலும் தமிழக அமைச்சரவை தீர்மானத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு இருவரும் காலம் அவகாசம் வழங்கி வழக்கினை ஒத்திவைத்துள்ளனர் .

எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் கண்டனம் :

உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவினை விமர்சனம் செய்துள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் எழுவர் விடுதலையில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார் .

மேலும் இனியும் தாமதம் செய்யாமல் எழுவர் விடுதலையில் தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .

விடுதலையாக வாய்ப்பு

உச்ச நீதிமன்றத்தின் இந்த  கருத்தினை தொடர்ந்து எழுவர் விடுதலையில் தமிழக அரசு மற்றும் தமிழக ஆளுநருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இருவாரங்களுக்குள் எழுவர் விடுதலையில் ஆளுநரின் முடிவு தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்ட எழுவரும் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 முன்னிட்டு நிச்சயம் விடுதலை செய்யப்படலாம் என கருத்து நிலவி வருகிறது. இது தமிழர் ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3

முன்னேறிய பாஜக; காணாமல் போன காங்கிரஸ்

0
முன்னேறிய பாஜக; காணாமல் போன காங்கிரஸ் ஆம் ஆத்மி பின்னடைவு

முன்னேறிய பாஜக; காணாமல் போன காங்கிரஸ். வாக்கு வங்கியில் ஆம் ஆத்மி பின்னடைவு.  திமுகவுடன் பிரசாந்த் கிஷோர்.

டெல்லி தேர்தல் 2020

கடந்த ஒரு மாதமாக  அனல் பறக்கும் பிரச்சாரம், குடியுரிமை சட்ட போராட்டம், பொது பட்ஜெட் தாக்கல் என பரபரப்புடன் காணப்பட்ட டெல்லி இன்று கொஞ்சம் பரபரப்பு குறைந்து காணப்படுகிறது.

எனினும் இன்று முதல் பாராளுமன்றத்தில் விவாதங்கள் அனல் பறக்கும் என்பதால் டெல்லி மக்கள் நிம்மதி இல்லாமல் தவித்து வருகின்றனர் என்றால் மிகை ஆகாது.

சொல்லி அடித்த ஆம் ஆத்மி

கடந்த 8 தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின, அதில் எதிர்பார்த்த மாதிரியே ஆளும் ஆம் ஆத்மி அரசு மீண்டும் அசுர பலம் பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்க உள்ளது.

தேர்தல் கருத்து கணிப்புகள்

ஏற்கனவே தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிலும்  ஆளும் ஆம் ஆத்மிக்கு சுமார் 55 முதல் 63 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை மெய்ப்பிக்கும் வகையில் நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62-யை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

எனினும் கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருந்த மாதிரிகளில் தேசிய கட்சியான பாஜகவுக்கு சுமார் 4 முதல் 14 இடங்கள் வரையிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வெறும் 8 இடங்களை மட்டுமே பாரதிய ஜனதா கட்சியால் கைப்பற்ற முடிந்தது. காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்ஜியம் மட்டுமே கிடைத்தது.

முன்னேறிய பாஜக

இது ஒருபுறம் இருந்தாலும் நேற்று வெளியான தேர்தல் முடிவுகளின் வாக்கு சதவீத அடிப்படையில் கட்சிகளின் தரத்தை பிரித்தால் ஆம் ஆத்மி பின்னடைவைச் சந்தித்துள்ளது.

கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதங்களின்படி ஆளும் ஆம் ஆத்மி கட்சி சுமார் 1 சதவீத வாக்குகளை இம்முறை இழந்துள்ளது. சிறிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அதேநேரம் 8 தொகுதிகளைப் பெற்றிருக்கும் பாஜக கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் சுமார் 5 விழுக்காடு வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. பஜாவின் வாக்கு சதவீதம் வளர்ந்துள்ளது.

பாஜக வெல்லும் மக்களவை தேர்தல்

சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், உடனடியாக மக்களவைத் தேர்தல் நடைபெறுமானால் பாஜகவே அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றும் எனக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக தேசிய தலைவர் ஜெ பி நட்டா

தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ பி நட்டா, “தேர்தல் முடிவுகளை ஏற்பதாகவும் பாஜக ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக செயல்படும்” எனக் கூறியுள்ளார்.

காணாமல் போன காங்கிரஸ்

ஒரு காலத்தில் டெல்லியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காங்கிரஸ் நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியவில்லை.

மேலும் வாக்குசதவீதம் முன்னெப்போதும் இல்லாதவகையில் 5 சதவீதத்திற்கும் கீழ் சென்றிருப்பது அக்கட்சித் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இலவசம் மூலம் வென்ற ஆம் ஆத்மி

மேலும் இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெரும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையில் இலவச திட்டங்கள் அதிகம் இடம் பெற்றியிருந்தன என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

முக்கிய காரணமான பிரசாந்த் கிஷோர்

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணமாக  i pack நிறுவனர் பிரசாந்த் கிஷோர் வகுத்துத் தந்த வியூகங்கள் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது

இதனிடையே நேற்று வெளியான தேர்தல் முடிவுகள் குறித்து தனது வாழ்த்தினை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தெரிவித்துள்ளார் நவீன சாணக்கியன் எனப்படும் பிரசாந்த் கிஷோர்.

மேலும் அடுத்ததாக அவர் அடுத்த வருடம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக எதிர்க்கட்சியான திமுகவுடன் கைகோர்த்து வியூகங்களை வகுத்து கொடுக்க உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

3

ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ்  யாத்வ் மீது துப்பாக்கி சூடு

1
ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ்  யாத்வ் மீது துப்பாக்கி சூடு

ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ்  யாத்வ் மீது துப்பாக்கி சூடு. சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற நிலையில் மர்ம நபர் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார்.

புதுடில்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி 62  இடங்களைப் பிடித்து அமோக வெற்றி பெற்றது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி அமைய உள்ளது.

நரேஷ்  யாத்வ் ஆம் ஆத்மி எம்எல்ஏ

நரேஷ் யாத்வ் என்ற ஆம் ஆத்மி வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து கோவிலுக்குச் சென்று வழிபட்டு இரவு காரில் ஆதரவாளர்களுடன் வீடு திரும்பியுள்ளார்.

இவர் மெஹரூலி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்க உள்ளார். அருணா மார்க் சாலையில் வந்தபோது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

மர்ம நபர் 4 முறை துப்பாக்கியால் நரேஷ் யாதவை நோக்கி சுட்டுள்ளான். அதிஷ்டவசமாக நரேஷ் காயமின்றி தப்பிவிட்டார்.

ஆம் ஆத்மி கட்சி தொண்டர் மற்றும் அவருடைய ஆதரவாளர், அசோக் மான் என்பவர்  குண்டடிபட்டு பலியானார்.

தேர்தல் தோல்வியை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் என்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளனர். இது தான் டெல்லியின் சட்ட ஒழுங்கு எப்படி உள்ளது என்பதற்கு உதாரணம் என நரேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து ஆம் ஆத்மி கண்டனம் தெரிவித்துள்ளது. துப்பாக்கியால் சுட்டுவிடு தப்பிய மர்ம நபர் குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

ட்ரம்ப் மீது அமேசான் குற்றச்சாட்டு எதற்காக இருக்கும்?

0
trump vs amazon ட்ரம்ப் மீது அமேசான் குற்றச்சாட்டு

ட்ரம்ப் மீது அமேசான் குற்றச்சாட்டு எதற்காக இருக்கும்?

அமேசான் நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய 10 பில்லியன் டாலர் ராணுவ ஒப்பந்தம் கைமாறியதற்கு ட்ரம்ப் தான் காரணம் என அவரை விசாரிக்க அமேசான் வழக்கு தொடர்ந்துள்ளது.

Cloud computing திட்டத்திற்கான ஒப்பந்தத்தை பென்டகன் கடந்த அக்டோபர் மாதம். மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வழங்கியது.

இந்த ஒப்பந்தம் முதலில் அமேஸானுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

Oracle மற்றும் IBM அதற்கு முந்தைய சுற்றில் வெளியேறியதால் அமேசானுக்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தது.

Cloud computing or jedi என்பது அமெரிக்க ராணுவ பாதுகாப்பு அமைப்பின் உள்கட்டமைப்பு மற்றும் அமெரிக்க ராணுவ அலுவலகத்தில் இருந்தே போர்க்களத்தில் உள்ள வீரர்களோடு தொடர்பு ஏற்படுத்துவது.

அவர்களின் திறனை மேம்படுத்துதல், திட்டமிடல் போன்றவற்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கான ஒப்பந்தம் ஆகும்.

முதலில் இந்த ஒப்பந்தம் அமேசானுக்கு தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தலையீட்டால் இது கைமாறிப்போனது.

அமேசானுக்கு எதிராக களமிறங்கிய ட்ரம்ப்

ஜூலை மாதம் இந்த ஒப்பந்தத்தில் திடீரென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையிட்டு அதன் போக்கை திசை திருப்பியதாக, ட்ரம்ப் மீது அமேசான்  அமேசான் குற்றச்சாட்டு கூறியது.

ட்ரம்ப் வந்த பின் மீண்டும் அனைத்து ஏல விவரங்களையும் சரி பார்ப்பதாகவும் மற்ற நிறுவனங்கள் போட்டித்தன்மையில் ஏலம் எடுக்கப்படவில்லை என்று குறை கூறுவதாகவும் ட்ரம்ப் கூறும் முன்பே பென்டகன் முடிவினை வெளியிட ஆயத்தமாக இருந்தது.

ட்ரம்ப் தங்கள் நிறுவனத்தின் மீது இருந்த முன்பிரச்சனை காரணமாகவே தங்களை நிராகரித்து விட்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக அமேசான் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

மேலும் தற்போது உள்ள பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் மற்றும் பிற அரசு அதிகாரிகளையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

இதற்கு ஆதாரமாக 2018-ல் வெளியான தகவல் ஒன்றையும் அமேசான் மேற்கோள் காட்டியுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அப்போதைய பாதுகாப்பு அமைச்சரிடம் அமேசானை வெளியேற்றும் படி கூறியதாக குறிப்பிட்டிப்பதை சுட்டிக்காட்டியுள்ளது அமேசான்.

மேலும் தகவல்களை சேகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. ட்ரம்ப் தனது பதவியின் அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி வருகிறது.

இதற்கு பாதுகாப்பு அதிகாரி பதவி விலகுவது இயலாத காரியம் என்பது போல பென்டகன் கருத்து தெரிவித்துள்ளது.

3

12/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
14/2/2020 ராசிபலன் இன்றைய தின ராசிபலன் Horoscope Tamil மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

12/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இத்தனைநாள் வேலை வாய்ப்பு இல்லாதிருந்தவர்களுக்கு ஒரு நல்ல வேலை இன்று கிடைக்கும்.

சங்கடஹர சதுர்த்தி நாளில் வழிபாடு செய்ய வாழ்க்கை நிலை மேலோங்கும். வயிற்று உபத்திரவம் இன்று சரியாகும்.

அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம்.

ரிஷபம் ராசிபலன்

எட்டில் கேது இருப்பதால் இன்று சுத்தபத்தமாக இருப்பது அவசியம். இனம்புரியாத நோய் ஒன்று இன்னலைத் தர நேரலாம்.

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சங்கடஹர சதுர்த்தி வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மரகத வண்ணம், அதிர்ஷ்ட எண்: 5

மிதுன ராசிபலன்

தைரியமும் தன்னம்பிக்கையும் மிகுந்து காணப்படும் நாளாகக் காணப்படுகிறது. வெற்றிகரமான நாளாக அமையும்.

சூரியனை வழிபட வாழ்க்கை பிரகாசிக்கும். நன்னல மேம்பாடுடை காரியங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம் : முத்து வண்ணம்

கடக ராசிபலன்

நல்ல தனவரவுடைய நாளாகக் காணப்படுகிறது. மிகச் சிறந்த யோகங்கள் காணப்படுகிறது.

கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மங்களம் உண்டாகும். பிசினஸ் பார்ட்னரிடம் இருந்த பகை மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: மாணிக்க வண்ணம், அதிர்ஷ்ட எண் : 1

சிம்மம் ராசிபலன்

ராசியில் சந்திரன் தங்கி, பிறகு தனஸ்தானத்திற்கு இடம்பெயருகிறார். நல்ல தனவரவு, நண்பர்களோடு கேளிக்கை, அரட்டை, மகிழ்ச்சி, என்று ஆனந்தப்படும் நாள்.

குடும்பத்தில் சந்தோஷம் கூடிவரும் நாள். வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: இலைப்பச்சை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 5

கன்னி ராசிபலன் 

காதலில் வசீகரம் அதிகரிக்கும் நாளாகக் காணப்படுகிறது. மனதில் நினைத்தவர்கள் மனமிறங்கி வருவார்கள்.

கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும் நாள். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வாயை அடக்கியாள்வது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 6

துலாம் ராசிபலன்

திருமண வாழ்க்கையின் உன்னதத்தை உணரும் நாள். மனமினிக்கும் தருணங்களை கணவன் மனைவியர் மகிழ்ந்து பாராட்டிச் சிறக்கும் நாள்.

உணவை அளவறிந்து உண்ண வேண்டி நாள்.

அதிர்ஷ்ட நிறம் : பவள வண்ணம். அதிர்ஷ்ட எண் : 9

விருச்சிக ராசிபலன்

பொறுமை கடைபிடிக்க வேண்டிய நாளாகக் காணப்படுகிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்தக் காரியமும் செய்தல் கூடாது.

அதேபோல கருத்தும் சொல்லக் கூடாது. மாமியாரின் உடல்நிலையில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட நிறம் : தேன்வண்ணம் வண்ணம், அதிர்ஷ்ட எண் : 3

தனுசு ராசிபலன்

தங்களது பிள்ளைகளின் மீதான அக்கறையை அதிகப்படுத்த வேண்டிய நாள். படிப்பில் கவனம் சிதறும் பிள்ளைகளுக்கு ஆலோசனை அளித்து ஆறுதல் சொல்லி தேற்றுவது அவசியம்.

விவாகரத்து போன்ற விவகாரங்களில் அவசர முடிவு எடுக்காமல் இருப்பது நலம்.

அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம், அதிர்ஷ்ட எண் : 4

மகரம் ராசிபலன் 

மதியத்திற்கு மேல் நன்மைகள் அதிகரிக்கும் நாளாகக் காணப்படுகிறது. சகோதரருடைய உடல்நலத்தில் அக்கறை தேவை.

மனதிற்கும் செயல்பாட்டுக்கும் இடையே ஒருவித மாறுபாடு வந்து கொண்டேயிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஜா வண்ணம், எண் : 7

கும்ப ராசிபலன்

காலைப்பொழுது அருமையாக காணப்படுகிறது. மாலையிலிருந்து மௌனம் காக்க வேண்டியது அவசியம். எதிலும் அவசரப்பட்டு கருத்துச் சொல்லாமை நலம்.

சொத்துக்கள் சேரும் நாளாகக் காணப்படுகிறது. வேலைவாய்ப்பு பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

மீனம் ராசிபலன் 

திடீர் திடீர் என்று கோபம் வரும் நாளாகக் காணப்படுகிறது. சகிப்புத்தன்மை, பொறுமை அவசியம். அலுவலகத்தில் எரிச்சலடையாமல் எச்சரிக்கையாக இருப்பது மிக உத்தமம். நல்ல வேலை கிடைக்கும் நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம் : அடர்சிகப்பு வண்ணம், அதிர்ஷ்ட எண் : 9

12/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

டெல்லி சட்டமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி

0
டெல்லி சட்டமன்ற தேர்தல்

டெல்லி சட்டமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைகிறது.

டெல்லி சட்டமன்ற தேர்தல்

டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆம்ஆத்மி தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறது.

பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைக் காட்டிலும் அதிக இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.

சட்ட மன்றத் தேர்தல்

70 தொகுதிகளில் கடந்த 8-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி 62 இடங்களில் முதலிடம் பிடித்துள்ளது ஆம்ஆத்மி கட்சி.

இதர கட்சிகள் பின்னடைவு

மும்முனை போட்டி நடைபெற்ற நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பயங்கர பின்னடைவை சந்தித்துள்ளது.

மொத்தம் உள்ள 70 இடங்களில் 62 இடங்களை ஆம் ஆத்மியும் 8 இடங்களில் பாஜகவும் முதலிடம்.

இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் பாஜகவிற்கு அந்த 8 இடங்களும் நிலைக்குமா என்பது தெரியவில்லை.

ஆம் ஆத்மி அலுவலகத்தில் கொண்டாட்டம்

மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டம் 3-வது முறையாக டெல்லியில் ஆட்சி அமைக்க போகிறது ஆம்ஆத்மி.

டெல்லி முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் மிகப்பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாராட்டுகள்

டெல்லி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் பிரிவினை அரசியலில் ஈடுபட்டவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் தெரிவித்தார்

நன்றி தெரிவித்த பிரசாந்த் கிஷோர்

ஆம்ஆத்மி கட்சிக்கு பரப்புரை வியூகங்களை வகுத்து கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியதற்கு நன்றி” என்று ட்விட் செய்துள்ளார்.

இனிப்புகளை பகிர்ந்து ஆம்ஆத்மி தொண்டர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

3

Rise of Vijay: எதிர்க்கும் பாஜக; ஆதரித்த திமுக

0
vijay selfie neyveli

Rise of Vijay: எதிர்க்கும் பாஜக; ஆதரித்த திமுக. ஐடி ரெய்டு நடந்த பின்பு விஜய் தைரியமாக ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் செல்பி எடுத்து தன்னுடைய முழு பலத்தை காட்டியுள்ளார்.

விஜய் ஐடி ரெய்டின் பின்னணி

இந்த ஐடி ரெய்டு நேரடியாகவே விஜய்யை குறிவைத்தே நடத்தப்பட்டது. அதே வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக அன்பு செழியன், கல்பாத்தியில் இருந்து ஆரம்பித்தனர்.

விஜய் சமீபக காலமாக தன்னுடைய படங்களில் நேரடியாகவே பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளை விமர்சனம் செய்கின்றார்.

இந்த முறையும் படம் வெளியாகும் வரை தாமதப்படுத்தினால், பாஜகவை பற்றி விமர்சித்து வலுவான கட்சிகள் வைத்துவிடுவார்கள்.

எனவே, படம் வெளியாகும் முன்பே விஜய்யை அட்டாக் செய்து மிரட்டி பணிய வைக்க வேண்டும் என்பதுவே இந்த ரெய்டின் நோக்கம்.

பாஜகவின் தப்புக்கணக்கு

பாஜக போட்ட இந்த கணக்கு தப்பாகி போனது. திடீர் ரெய்டு என்றதுமே விஜய் சற்று பதற்றம் ஆகியே இருந்தார்.

தன்னை காரில் வைத்து அழைத்துச் சென்றதைப் பார்த்து மேலும் பதற்றமடைந்தார். ஆனால், விஜய் பதற்றமடைந்த அளவிற்கு எந்த ஒரு பொருளும் சிக்கவில்லை.

ரெய்டு முடிந்தவுடன் நேராக அனுமதிக்கப்பட்ட நாளுக்குள் படத்தை முடிக்க வேண்டும் என மீண்டும் நெய்வேலி பறந்தார் விஜய்.

இதற்கு இடையில் பல கட்சிகளின் சப்போர்ட் விஜய்க்கு வந்து குவிந்தது. முக்கியமாக திமுக கட்சி விஜய்க்கு முழு ஆதரவு கொடுத்தது.

பராளுமன்றத்தில் எதிரொலி

விஜய் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தியதை பற்றி தயாநிதி மாறன் பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதத்தை முன்வைத்தார்.

விஜய் வீட்டில் ரெய்டி நடத்தியவர்கள், 100 கோடி சம்பளம் வாங்கும் ரஜினி வீட்டுப்பக்கம் ஏன் இதுவரை ரெய்டு நடத்தவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

இதன் மூலமே புரிந்து இருக்கும் விஜய்க்கு அதரவு கொடுத்து ரஜினிக்கு எதிர்ப்பை காட்டியுள்ளது திமுக.

Rise of Vijay – விஜய்யின் அரசியல் எழுச்சி

பாஜக அரசு, விஜய்யை சீண்டியது யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையே? விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கு மிகவும் மகிழ்ச்சி.

ஏனெனில் அவர் தான் விஜய் வளர்ந்து வரும் காலகட்டத்தில் இருந்தே முடிவு செய்துவிட்டார். தன் மகனை ஒரு அரசியல் தலைவராக்குவது என்று.

மக்கள் இயக்கம் துவங்கி விஜய்யின் அரசியல் பாதைக்கு அன்றே அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர் அவருடைய அப்பா தான்.

இன்று பாஜக சீண்டிய உடன் ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் விஜய் செல்பி எடுத்துக்கொண்டது எஸ்.ஏ.சி. மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகமும் விஜய் மேல் பார்வையைத் திருப்பி உள்ளது.

விஜய்யின் அரசியல் வருகைக்கு முதல் படி என்றால் அது இந்த ஐடி ரெய்டு தான் காரணம். எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பிக்க காரணமே ஐடி ரெய்டு என்பது குறிப்பிடத்தக்கது.

கண்மூடித்தனமான ரசிகர் படை

இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்த காலகட்டத்திலும் விஜய் மீது வெறித்தனமான அன்பை வைத்துள்ள ரசிகர் படை என்பது அவருக்கு இருக்கும் செல்வாக்கை நிச்சயம் காட்டுகிறது.

இதற்கு மேலும் அவரை சீண்டுவது என்றால் வரும் தேர்தலில் விஜய் வாய்ஸ் ஒலிக்கும் அல்லது விஜய்யே கூட காட்சி துவங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

3

டிரம்ப் இந்தியா வருகை; பிரதமர் மோடி டிரம்பை அழைத்தது ஏன்?

1
trump india visit
டிரம்ப் இந்தியா வருகை

டிரம்ப் இந்தியா வருகை; பிரதமர் மோடி டிரம்பை அழைத்தது ஏன்?

புதுடெல்லி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் 24 மற்றும் 25ல் இந்தியா வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

ட்ரம்பின் இந்திய வருகை

2018ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களை இந்தியா வருமாறும் குடியரசு தின விழாவில் சிறப்பு உறுப்பினராக கலந்து கொள்ளும் படியும் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் சரிவர அமையாத நிலையில் மீண்டும் கடந்த நவம்பர் மாதம் இந்தியா வருமாறு மோடியால் அழைக்கப்பட்டார்.

அதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியா வருவார் என வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதமரின் அழைப்புக்கு ட்ரம்ப் பதில்

கடந்த நவம்பர் மாதம் இந்தியா பிரதமர் மோடியின் கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அளித்த பதில் ” அவர் நான் இந்தியா வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நான் இந்தியா சென்று வருவேன்” என்பதாகும். அதற்க்கான நேரம் இப்போ தான் வந்துள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாடுகள்

ட்ரம்பின் இந்தியா வருகையை ஒட்டி அகமதாபாத்தில் மோடியின் தலைமையில் பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்றிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ட்ரம்ப் தங்குவதற்கான ஏற்பாடுகள் ITCமயூரா ஹோட்டலில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப் வருகையை ஏன் இந்தியா எதிர்பார்க்கிறது

ட்ரம்ப் இந்தியா வருகையின் போது இந்தியா அமெரிக்கா இடையான உறவு பலப்பெறும் என்பது மட்டுமன்றி வர்த்தக ஒப்பந்தம் குறித்த முடிவு எடுக்கப்படும் என்பதேயாகும்.

கடந்த ஆண்டு திரும்பப்பெறப்பட்ட இந்தியாவிற்கான வர்த்தக சலுகைகளை மீட்டெடுக்கும் நோக்கமாகவும் இருக்கலாம் இந்த பயணம்.

மேலும் சீனா மற்றும் ஈரான் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இருப்பினும் இந்த தேதியும் இன்னும் சரிவர உறுதிப்படுத்தப்பட்டவில்லை. ஐ.நா.வில் பாகிஸ்தான் ஆர்டிகள் 370ன் படி பிரச்சனை ஆரம்பிக்க உள்ள நிலையில் ட்ரம்ப் இந்திய வருகைக்கான தேதி நேரம் மாற்றியமைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

3

11/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
11/2/2020 ராசிபலன் இன்றைய தின ராசிபலன் மேஷம் மீனம் Horoscope Tamil

11/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாகக் காணப்படுகிறது. இதுவரை இருந்த கல்யாணத்தடை விலகி சுபமுண்டாகும். அவ்வப்போது மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். தாயாரின் உடல்நலத்தைப் பேணுவது அவசியமாகும்.

அதிர்ஷ்ட எண்: 7அதிர்ஷ்ட நிறம்: ஊதா வண்ணம்.

ரிஷபம் ராசிபலன்

மிகவும் தனவரவு மிகுந்த நாளாகக் காணப்படுகிறது. ராசிநாதன் உச்சம் பெற்றுள்ளதால் எதிலும் வெற்றி வாகை சூடலாம். காது சம்மந்தப்பட்ட கோளாறு வத்து நிவர்த்தியடையும். பொறுமையாக எதிலும் ஈடுபடுவது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

மிதுன ராசிபலன்

மிகவும் தையரிமான நாளாகக் காணப்படுகிறது. பாக்கிய நாதன் உச்சத்தில் இருப்பதால் பூர்வ புண்ணிய பலன் கூடும். கோபத்தைக் கட்டுப்படுத்தி இருக்க வேண்டிய நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு வண்ணம்

கடக ராசிபலன்

சுபமான நாளாகக் காணப்படுகிறது. மனைவி வழி உறவினர்களிடையே பகைமை கொள்ளக் கூடாது. மனைவியை அன்போடு அனுசரனையாக நடந்து கொள்வது அவசியமாகும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனை வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

சிம்மம் ராசிபலன்

ராசியிலேயே சந்திரன் உலவுவதால் சிறு சிறு மனக் குழப்புங்கள் வரக்கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் அதிகாரம் ஓங்கும். தங்கு தடையற்ற லாபம் பெருகும் நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: மரகத வண்ணம், அதிர்ஷ்ட எண் : 5

கன்னி ராசிபலன் 

சந்திரன் பன்னிரெண்டில் உலவுவதால் சற்று விரயம் இருக்கும். செலவினங்களைக் குறைப்பது அவசியம். யோகமான நாளாகக் காணப்படுகிறது. தந்தை, தாய் வழி உறவினர்களின் மகத்துவமான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: முத்து வண்ணம், அதிர்ஷ்ட எண்: 2

துலாம் ராசிபலன்

மிகவும் அற்புதமான ஆசீர்வாதமான நாளாகக் காணப்படுகிறது. தெய்வங்களின் அனுக்கிரகம் மிகுந்த நாளாகக் காணப்படுகிறது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. இடது காலில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. மூளை சம்மந்தப்பட்ட பிரச்சினை ஏற்படலாம் மருத்துவ சிகிச்சை தேவை.

அதிர்ஷ்ட நிறம் : நீல வண்ணம். அதிர்ஷ்ட எண் : 2

விருச்சிக ராசிபலன்

பலரும் ஏறெடுத்துப் பாராட்டும் வண்ணம் பல செயல்கள் செய்து வெற்றி பெறுவீர்கள். நிதானமாக செயல்கள் செய்து புகழ் பெறுவீர்கள். புத்துணர்வோடு செயல்படும் நாள். சிலருக்கு தண்ணீரில் கண்டம் ஏற்படலாம். கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : இலைப்பச்சை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 5

தனுசு ராசிபலன்

மிகவும் பாக்யமான நாளாகக் காணப்படுகிறது. வரசித்தி விநாயகரை வழிபடுவது வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும். தவறான கருத்துக்களைச் சொல்ல வேண்டாம். ஏதேனும் சொல்லப் போய் வம்பில் முடியும். மாணவர்கள் கவனமுடன் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

மகரம் ராசிபலன் 

சந்திரன் எட்டில் இருப்பதால் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் அக்கறை தேவை. தனிநபர் தாக்குதல் செய்யாதிருப்பது மிக அவசியம். நம்பி மோசமடையும் நாளாகக் காணப்படுகிறது. எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பவள வண்ணம், எண் : 9

கும்ப ராசிபலன்

சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். குழந்தைகளிடத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வீடு விற்றல், பத்திரம் பதிவு செய்தல் போன்றவற்றில் கவனம் தேவை. நல்ல வேலைவாய்ப்பைப் பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : தேன் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

மீனம் ராசிபலன் 

தெய்வத்தை வழிபட தீமைகள் விலகும் நாள். கடன் கொடுத்து வசூலிக்க கஷ்டப்படும் நாள். பண விவகாரங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பணம் கொடுத்து ஏமாந்து விடும் நாளாகக் காணப்படுகிறது. ஸ்கின் நோய்கள் வந்து போகலாம்.

அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம், அதிர்ஷ்ட எண் : 4

11/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

நாளைய 12/2/2020 ராசிபலன்

3

வாழ்வே போராட்டம் இதில் வாழ்வாதாரத்திற்காக போராட்டமா?

0
வாழ்வே போராட்டம் கோவை வால்பாறை நடைபயணம்

வாழ்வே போராட்டம் இதில் வாழ்வாதாரத்திற்காக போராட்டமா? கோவை வால்பாறை பகுதியில் உள்ள மக்கள் வாழ்வதற்காக நடைபயணம் மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரம் கேட்டு இன்று நடைபயணத்தில் ஈடுபட உள்ளனர்.

வாழ்வாதாரத்திற்கான போராட்டம்

வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் அனைத்து பழங்குடி மக்களுக்கும் வீட்டுமனை மற்றும் விவசாய பூமிக்கான பட்டா, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம், அனைத்து கிராமங்களையும் வருவாய் கிராமங்களாக மாற்றுதல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டம் நடைபெற உள்ளது.

வருவாய் கிராமமாக மாற்றப்பட்டால் குடிநீர், மின்சாரம், சாலை வசதி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை வசதிகள் அவர்களால் பெற முடியும்.

போராட்டத்தின் முதல் கட்டம்

போராட்டத்தின் முதல் கட்டமாக இன்று காலை முதல் பொள்ளாச்சி டி.எஃப்.ஓ அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அறவழியில் போராட்டம்

போராட்டம் என்றால் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் அனைவரும் அமைதியாக 120 கி.மீ. நடைப்பயணம் மேற்க்கொள்ள போகின்றனர்.

இன்று பேரணி துவங்கி நான்கு நாட்கள் நடைபெறும் இந்தப் போராட்டம் 13-ம் தேதி கோவை மாவட்ட ஆட்சித் தலைவரை அவர் அலுவலகத்தில் சந்தித்து மனு கொடுப்பதில் முடிவுக்கு வர உள்ளது.

தடைகளை தவிடு பொடி ஆக்கு

இதையடுத்து வால்பாறை எம்.எல்.ஏ கஸ்தூரி தலைமையில் அதிகாரிகள் அவசர அவசரமாக பழங்குடி மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து போராட்டத்தை ஒடுக்குவதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருவதாக பழங்குடி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதாவது போராட்டத்தில் கலந்து கொள்ளும் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கிவிடுவோம் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எவ்வளவு தடைகள் வந்தாலும் போராட்டம் தொடரும் என அம்மக்களும் உறுதிபட கூறியுள்ளனர்.

3