அண்டர் 19 உலகக்கோப்பை ஃபைனல்; வங்கதேசம் வரலாற்று வெற்றி
அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா அண்டர் 19 மற்றும் வங்கதேசம் அண்டர் 19 அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்தியா ஆல் அவுட்
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு திலக் வர்மா (38), ஜெஸ்வால் (88) மட்டும் கைகொடுக்க இந்திய அணி 47.2 ஓவரில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணிக்கு அவிஷேக் தாஸ் அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார்.
வங்கதேசம் நிதான ஆட்டம்
தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய வங்கதேசம் சில விக்கெட்டுகளை இழந்ததால் மிடில் மற்றும் லோ ஆர்டரில் மிகவும் பொறுமையாக ஆடியது. வங்கதேச அணி 41 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது.
இதையடுத்து போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வங்கதேச அணி 42.1 ஓவரில் வங்கதேச அணி 7 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
இதுவே வங்கதேசம் வெல்லும் முதல் ஐசிசி தொடர் ஆகும்.
Let’s see whoever and whichever won Awards in Oscar 2020 in this post.
Best Foreign Language film category won by Korean movie Parasite directed Bong Joon Ho.
Best Make Up and Hairstyle category won by Kazukiro Ji, Anni Morgan, Vivian Baker for the Bombshell movie which directed by Jay Roach.
Best Visual Effects Category won by the most anticipated film 1917 directed by Sam Mendes
Best Film Editing category won by Andrew Buckland and Michel McCausker for Ford vs Ferrari which directed by James Mangold, starring Christian Bale and Matt Damen.
Best Cinematography category won by Roger Deakins for 1917 which directed by Sam Mendes.
Best Sound Mixing category won by Stuart Wilson and Mark Taylor for 1917 movie.
Best Sound Editing Category won by Donald Sylvester for Ford vs Ferrari movie.
Best Supporting Actress category Won by Laura Dern for Marriage Story Movie directed by Noah Boambuch.
Best Short Documentary category won by Carol Dysinger and Elena Andrewa for Learning to Skateboard in a Warzone (If You’re a Girl).
Best Documentary Feature category won by American Factory created by Julia Reichert, Jeff Reichart and Steven Bogner.
Best Costume Design category won by Jacquline Durran for Little women directed by Greta Gerwig.
Best Production Design category won by Nancy Haigh and Barbara Ling for Once upon a time in Hollywood.
Live Action Short Film won category by The Neighbors Window created by Marshell Curry.
Best Adapted Screenplay category won by Taikawaititi for JoJo Rabbit film directed by himself.
Best Original Screenplay category won by Bong Joon Ho and Han Jin-won for Parasite movie.
Best Animated Shortfilm category won by Hair Love created by M Cherry and Karen Rupert.
Best Animated Feature category won by Toy Story 4 by Josh Cooley and Jonash.
மூல முதற் பொருளான கணாதிபன் என்று சொல்லப்படுகின்ற கணபதியை முழுமுதற் கடவுளாக வழிபடும் முறையே காணாபத்யம் ஆகும்.
இதில் விநாயகப் பெருமானை துதித்து அவருக்கு உகந்த பூசனைகள், வேள்விகள் நடத்தி வழிப்படுவர்.
முற்காலத்தில் ஔவையார், நம்பியாண்டார் நம்பிகள் போன்றோர் காணாபத்யத்தை பின்பற்றி விநாயகர் திருவருளாளே ஞானத்தை பெற்று நற்கதி அடைந்ததாக கூறப்படுகிறது.
விநாயகர் இல்லாத இடங்களே இல்லை என சொல்லாம் இந்தியா மட்டுமின்றி உலகில் பல இடங்களில் கணபதிக்கு கோவில்கள் உள்ளன.
இவருக்கும் ஆறு படை வீடுகள் உள்ளன. இருப்பினும் பிள்ளையார் பட்டி மிகவும் பிரசித்தமானதாகும்.
விநாயகர் அகவல், விநாயகர் வெண்பா, கணேச புராணம் போன்ற நூல்கள் காணாபத்தியத்தில் முக்கியமான நூல்கள் ஆகும்.
விநாயக சதுர்த்தி விழா காணாபத்யத்தில் மிக முக்கியமான விழாவாகும்.
கௌமாரம் சமயம்
குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறும் அளவிற்கு தமிழகத்தில் குன்றுகள், மலைகளில் எல்லாம் முருகனிற்கு கோவில்கள் உள்ளன.
அப்படிப்பட்ட முருகப் பெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடும் முறையே கௌமாரம் ஆகும். .
கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், கிருபானந்தவாரியார் முதலானோர் கௌமாரத்தில் குமரக் கடவுளால் ஞானம் பெற்றோர் ஆவர்.
ஆறுபடை வீடுகள் மற்றும் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் ஆலயங்கள் குமரக் கடவுளுக்காக உள்ளன.
கந்தர் சஷ்டி கவசம், கந்தர் அநுபூதி, கந்தர் கலி வெண்பா, கந்தகுரு கவசம், பஞ்சாமிர்த வர்ணனை, முத்துகுமார சுவாமி பிள்ளைத்தமிழ், ஸ்கந்த புராணம் போன்ற நூல்கள் கௌமாரத்தில் முக்கியமான நூல்களாகும்.
வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி, தை பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள், சஷ்டி விரதங்கள் கௌமாரத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
சைவம் சமயம்
உலகெலாம் உணர்ந்து ஓதற்கறியவரான அன்பே வடிவான சிவ பெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடும் முறையே சைவம் ஆகும்.
சிவத்தை அடையும் பேரினை பெருவதே சைவத்தின் கொள்கையாகும்.
இறைதன்மையை எவரும் அடையலாம் என்பதே சைவர்களின் நிலைப்பாடாகும்.
அறுபத்து மூன்று நாயன்மார்கள், 18 சித்தர்கள், 7 ரிஷிகள், இராமலிங்க வள்ளலார் முதல் பல சித்த புருஷர்கள் சைவ சமயத்தில் இறைநிலை அடைந்தோர் ஆவர்.
இமயம் முதல் குமரி வரை ஆயிரத்திற்கும் மேல் சிவ பெருமானிற்கு கோவில்கள் உள்ளன. பஞ்ச பூத ஸ்தலங்கள், ஜோதிர் லிங்க ஸ்தலங்கள், அட்டவீரட்ட ஸ்தலங்கள் என பல கோவில்கள் முக்கியமான சைவ ஸ்தலங்கள் ஆகும்.
எண்ணிலடங்கா சைவ சிந்தாந்த நூல்கள் உள்ளன. சிவ ஆகமங்கள், தேவாரம், திருவாசகம், சிவபுராணம், திருவெம்பாவை மிக முக்கியமான சைவ நூல்கள் ஆகும்.
ஆனி திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை, திருகார்த்திகை, சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது.
வைணவம் சமயம்
ஆதி மூலமே என்று யானை அழைத்த உடன் ஓடி வந்த பரந்தாமனை முழு முதற்கடவுளாக கொண்டு வழிபடும் முறையே வைணவம் ஆகும்.
வைகுண்ட பதவி அடையும் வழிமுறைகளை வகுத்தளித்து அதனைப் பின்பற்றுகின்றனர்.
பன்னிரண்டு ஆழ்வார்கள், இராமானுசர், இராகவேந்திரர், கபீர் தாசர், துளசி தாசர், அன்னமய்யா போன்றோர் ஸ்ரீ வைஷ்ணவத்தில் குறிப்பிடத்தக்க அடியார்கள் ஆவர்.
நூற்றி எட்டு திவ்ய தேசங்கள் முதல் பல வைணவ திருத்தலங்கள் உள்ளன.
திருப்பாவை, நாலாயிர திவ்ய பிரபந்தம், வாரணமாயிரம், அன்னமய்யா கீர்த்தனைகள், இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை வைணவத்தில் முக்கியமான நூல்கள் ஆகும்.
திருவோணம், வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, இராம நவமி போன்றவை முக்கியமான வைணவ விழாக்கள் ஆகும்.
சாக்தம் சமயம்
அருளே வடிவான அம்பிகையின் வடிவங்களை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் முறையே சாக்தம் ஆகும்.
அத்வைத மோட்சத்தை அடையக்கூடிய நிலைகளைப் பின்பற்றி அம்பிகையின் பதம் அடைவதே இதன் கொள்கையாகும்.
காளிதாசர், அபிராமி பட்டர், ஆதி சங்கரர், இராமகிருஷ்ணர் போன்றவர்கள் சாக்த அடியார்கள் ஆசக்திகளை சக்தி பீடங்கள் முதல் பல்வேறு சக்தி் ஸ்தலங்கள் இந்தியா மட்டுமின்றி அயல் நாடுகளிலும் உள்ளன.
அம்பிகை புகழ்பாடும் நூல்கள் பல. அதில் அபிராமி அந்தாதி, சரசுவதி அந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளை தமிழ், லலிதா சகஸ்ரநாமம், தேவி மாகாத்மியம், தேவி பாகவதம் மற்றும் பல தாந்திரீக நூல்கள் உள்ளன.
நவராத்ரி விழாக்கள், விஜய தசமி, துர்காஷ்டமி, வசந்த பஞ்சமி, ஆடி பூரம் போன்றவை மிக முக்கியமாக சாக்த விழாக்கள் ஆகும்.
சௌரம் சமயம்
மனிதன் தோன்றிய காலம் முதலே இருந்து வரும் வழிபாடு சூரிய வழிபாடு ஆகும். சூரியனை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடுவதே சௌரம் ஆகும்.
இயற்கையையாகப் புலப்படும் இறை சக்திகளை வழிபடும் வழிமுறைகளை வகுத்து பின்பற்றுகின்றனர்.
சூரிய குலத்தில் இராமன் பிறந்தார் மற்றும் கர்ணன் சூரிய அம்சமாகப் பிறந்தார். சூரியனைப் பூஜித்து பல சக்திகளைப்பெற்ற கதைகள் புராணங்களில் உள்ளன.
குஜராத் மோதேரா, ஒடிசா கொனார்க், கும்பகோணம் சூரியனார் கோவில் போன்றவை சௌரத்தில் முக்கியமான ஸ்தலங்கள் ஆகும்.
ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், ஆதித்ய சூக்தம், சூரிய புராணம் முதலான நூல்கள் சௌரத்தில் முக்கியமான நூல்கள் ஆகும். மகர சங்கராந்தி, ரத சப்தமி ஆகியவை முக்கியமான சௌர விழாக்கள் ஆகும்.
ஷன் மதங்கள்: இந்து மதம் உட்பிரிவு சமயங்கள் இலக்கு
வழிகள் பலவாயினும் இறுதியில் சென்று சேரும் இடம் ஒன்றே ஆகும். இந்த அனைத்து சமயங்களுமே சொல்லும் ஒரே இலக்கு வீடுபேறு அடைதலே ஆகும்.
இந்து மதத்தில் அவரவர் விருப்பதிற்கு ஏற்ப இறைவனை வணங்கலாம் தடையே இல்லை.
ஆனால் இறை பக்தியில் போட்டியும், பொறாமை குணமும், சண்டையும் கூடாது. அது பக்தியும் ஆகாது.
அனைவரிடமும் அன்பு செலுத்தி இறைவனிடத்தே பக்தி செலுத்தி தொண்டுகள் பல செய்து நற்பேரினை பெறுவோம்.
பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாகக் காணப்படுகிறது. அலுவலக நண்பர்களோடு கொண்டாட்டங்களில் ஈடுபடுவீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை கூர்ந்து கவனித்து உள்வாங்குவது லாப முன்னேற்றத்தைப் பெருக்கும். மகளிருக்கு நகை, பொன், பொருள் சேரும் நாளாகக் காணப்படுகிறது.
ராசிநாதன் சுக்கிரன் உச்சமடைந்துள்ளதால் எதிலும் வெற்றி குவியும். ஆடம்பரத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதேசமயம் கேட்ட பொருள் உடனே கிடைக்கும். மிகவும் சுபிட்சமான நாளாகக் காணப்படுகிறது.
வெளி வட்டாரத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கூடும் நாள். குடும்ப ரகசியங்களைப் பாதுகாக்க வேண்டிய நாள். யவரை நம்பியும் ரகசியங்களைப் பகிரக் கூடாது. வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
ட்ரம்ப் அதிரடி: செனட் சபையில் தனக்கு எதிராக வாக்களித்தவர்களை பதவி நீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு
அமெரிக்காவின் 45-ஆவது அதிபர் டிரம்ப் இவர் குடியரசு கட்சியின் சார்பில் அதிபரானவர்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு முட்டுக்கைட்டையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டார் செனட் சபையில்.
மேலும் இந்தாண்டு நடைபெற உள்ள தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டி போட உள்ள ஜோ பிடன் மற்றும் அவர் மகன் ஹண்டர் மீதும் ஊழல் நடவடிக்கை எடுக்கும் படு உக்ரைன் அதிபரை மிரட்டியதாகவும் கூறி டிசம்பர் மாதம் பதவி நீக்க விசாரணை செய்ய செனட் சபைக்கு அறிவுறுத்தியது ஜனநாயக கட்சி.
தீர்மானம் தோல்வியில் முடிந்தது
அவர் மீதான குற்றச்சாட்டிற்கு அவர் பதவி விலக வேண்டி வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
முன்பே நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேறி இருந்த நிலையில் செனட் சபையில் பதவி நீக்க தீர்மானம் கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது தோல்வி அடைந்தது.
அதிகாரிகள் பதவி நீக்கம்
இதையடுத்து தனக்கு எதிராக பதவி நீக்கத்திற்கு சாட்சி கூறிய மூத்த அதிகாரிகள் கார்டன் சாண்ட்லேண்ட் (ஐரோப்பிய கூட்டமைப்புக்கான அமெரிக்க தூதர்) மற்றும் அலெக்சாண்டர் (தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசகர்) ஆகிய இருவரையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
டெல்லி தேர்தல்: மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் ஆம் ஆத்மி கட்சிக்கே சாதகமாக உள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னான கருத்துக்கணிப்பில் மீண்டும் ஆம்ஆத்மி முதலிடம். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புகள் அதிகம்.
சட்டப்பேரவைத் தேர்தல்
இன்று 08.02.2020 சனிக்கிழமை நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னான கருத்துக்கணிப்பில், அதாவது காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இதில் மாலை 5 மணி நிலவரப்படி 53.35 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
மொத்த தொகுதிகளும் வாக்கு சதவீதமும்
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் 13,750 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது.
இதில் ஆண் வாக்காளர்கள் 81,05,236 ஆகவும், பெண் வாக்காளர்கள் 66,80,277 ஆக மொத்தம் 1.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டு இருந்தது.
மாலை 5 மணி நிலவரப்படி 52.95 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பூத் ஸ்லிப் இல்லாதவர்கள் க்யூஆர்கோட் உதவியுடன் பெயர் சரிபார்த்து வாக்களித்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை
மொத்த வாக்குகளும் வரும் 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதன் பிறகே 70 தொகுதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் என்பது தெரியவரும். மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 762 என்பது குறிப்பிட்டத்தக்கது.
இருப்பினும் போட்டி களத்தில் மூன்று பெரும் கட்சிகள் மட்டுமே மக்கள் கவனத்தில் உள்ளனர்.
டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
தேர்தலுக்கு பின் கருத்துக்கணிப்பு நடத்திய டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள முடிவில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளது.
மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி
இதில் ஆம்ஆத்மி 48 தொகுதிகளையும், பாஜக 21 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
இதேபோல மற்ற கருத்துக்கணிப்பும் இந்தியாடுடே, நியூஸ் எக்ஸ் போன்றவையும் ஆம்ஆத்மி முதலிடம் வகிக்கும் என்பதை தெரிவித்துள்ளது.
ஆட்சிக்கு வந்ததும் நல்லது செய்வதும், செய்த நல்லதை மட்டுமே கூறி வாக்கு சேகரிப்பதும் நிச்சயம் வெற்றியைத் தரும் என்பது மீண்டும் நிரூபணம் ஆகுமா?பொறுத்திருப்போம் 11ம் தேதி வரை….
தாய்லாந்தில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி. ராணுவ வீரர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் 10 பேர் உயிரிழப்பு.
துப்பாக்கி சூடு
தாய்லாந்து பேங்காக்கின் வடகிழக்கு பகுதியில் 250 கி.மீ தொலைவில் உள்ள நாக்ஹோன் ரட்சசிமா நகரில் வணிக வளாகம் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழப்பு மேலும் பலர் படுகாயம்.
வணிக வளாகம் முன்பு காரில் வந்திறங்கிய ராணுவ வீரர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அங்கிருந்த ராணுவ வீரர்கள் மற்றும் பெண் ஒருவர் மீதும் முதலில் சுட்டுள்ளார்.
பின் அங்கிருந்தவர்கள் அனைவரையும் நோக்கி சுட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
வணிக மையத்தில் தாக்குதல் நடத்தி பலரை கொன்ற அந்த நபரை பாதுகாப்பு துறை அமைச்சரக செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் கொங்க்சீப் தந்திரவானி அடையாளம் காட்டியுள்ளார். கொலையாளியின் பெயர் ஜக்ராபந்த் தொம்மா (32) என்பது தெரியவந்துள்ளது.
நகரின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோல தாக்குதல் நடித்தியதாக தெரிகிறது. இதையடுத்து அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் கிரைம் ரேட்
இவர் ராணுவ முகாமில் இருந்து துப்பாக்கியை திருடி வந்துள்ளார். மேலும் அந்த நபர் வந்த காரும் திருடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி அவர் சுட்டத்தில் வணிக வளாகத்தில் இருந்த கடை ஒன்றின் சிலிண்டர் வெடித்து சிதறியதாகவும் கூறப்படுகிறது.
மிக முக்கிய குற்றவாளியாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பேஸ்புக் மூலம் தான் மிகவும் ஆனந்தமாக இருப்பதாகவும் மரணத்தை யாராலும் வெல்ல முடியாது என்பது போன்ற ஸ்டேட்டஸ்களை பதிவிட்டு வருகிறார்.
விரைவில் அவரை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடித்து விடுவோம் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
லோகஸ்டு (Locust); இதன் தன்மையும் அபாயமும், உலகை அச்சுறுத்தும் லோகஸ்ட் என்ற வகை வெட்டுக்கிளி பற்றி இந்த பதிவில் காண்போம்.
லோகஸ்டு வெட்டுக்கிளி வாழ்வியல்
அதிக எண்ணிக்கையிலான குட்டி கொம்புடைய வெட்டுக்கிளிகள் லோகஸ்ட் என்றழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் பாலைவனத்தில் காணப்படும்.
அதாவது, ஆப்பிரிக்கா மற்றும் தென்மேற்கு ஆசியாவில் பெரும்பாலும் இவ்வகை வெட்டுக்கிளிகள் காணப்படும். பாலைவன வெட்டுக்கிளிகளான லோகஸ்ட் பெரும்பாலும் தனித்தே வாழ விரும்பும்.
இவை கூட்டமாக பயணிக்கும் போது பூக்கள், பழம், விதைகள் மற்றும் முழு தாவரத்தையும் அழித்து உண்ணக்கூடியது.
லோகஸ்டுகள் தங்கள் நிறங்களை மாற்றக்கூடிய தன்மை கொண்டவை இதனால் இவற்றால் எதிரிகளிடம் இருந்து எளிதில் தப்பிக்க முடிகிறது.
உலகநாடுகள் பலவற்றில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் லோகஸ்ட் எனப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் விவசாயத்தை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்றன.
கூட்டமாக திரியும் இவை 150 கிலோமீட்டர் வரை உணவைத்தேடி பயணிக்கும் தன்மை கொண்டவை. இவை 2,000 கிலோமீட்டர் உயரம் வரை பறக்கும் சக்தி வாய்ந்தவை.
பச்சை நிறத்தில் எங்கு பயிர்களைக் கண்டாலும் அவற்றை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விடும். லோக்ஸ்டுகள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பதால் அடிக்கடி உணவுப் பஞ்சம் ஏற்படுகிறது.
லோகஸ்டுகளால் ஏற்பட்ட பாதிப்புகள்
1880-ல் ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் மக்கள் இவற்றைக் கண்டு பயந்து பல நாட்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்களாம்.
1955-ம் ஆண்டு மொராக்கோவிற்கு வந்த லோகஸ்டுகள் கூட்டம் 20 கிலோமீட்டர் வரை இருந்ததாம். மொராக்கோவில் தினம் 1000 கிலோமீட்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதம் செய்தனவாம்.
அமெரிக்காவின் உட்டா பகுதியில் அழிவை ஏற்படுத்தி சென்ற லோகஸ்டுகள் எண்ணிக்கையில் 1250 கோடியாம்.
பாகிஸ்தான் மற்றும் சோமாலியா அவசரநிலை பிரகடனப்படுத்தின. மேலும் மேற்கு ஆசியா, தெற்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளின் விளைநிலங்களும் பெரும்பாலும் லோகஸ்டுகள் அழிவில் இருந்து தப்பிக்கவில்லை.
பாகிஸ்தானின் பாலைவனத்தில் இருந்து வந்த லோகஸ்டுகள் இந்தியாவின் ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதியில் பயிர்களை சேதம் செய்தன.
2003-05 ஆப்பிரிக்காவில் மட்டும் 2.5 பில்லியன் உணவுப் பயிர்களை சேதம் செய்துள்ளது. 1,75,000 ஏக்கர் பயிர்கள் 1.8 மில்லியன் டன்ஸ் உணவுப் பொருட்கள் 350 சதுரகிலோமீட்டர் பரப்பளவிலான பயிர்களை நாசம் செய்தது.
இது ஓராண்டுக்கு 10 லட்சம் பேருக்கான தேவையான உணவு பொருள் உற்பத்தியாகும் பயிர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) நடத்திய ஆய்வில் பாதிக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்ட இடங்கள் முறையே,
1. ஆப்பிரிக்காவின் சோமாலியா, எரித்திரியா, சியூட்டி, எத்தியோப்பியா ஆகியவையும்
2. செங்கடல் பகுதிகளான சவுதி, ஓமன் மற்றும் ஏமன்
3.தெற்கு ஆசியாவின் பகுதிகளான ஈரான், இந்தியா, பாகிஸ்தான் போன்றவையும் அடங்கும்.
மிக அதிக பாதிப்பு ஆப்பிரிக்காவின் பகுதிகளான சோமாலியா எத்தியோப்பியா போன்றவைகள்.
இங்கிருந்து கிளம்பிய லோகஸ்டுகள் கென்யா வழியாக உலகின் 14 நாடுகளுக்கு பரவியது. கடந்த 25 ஆண்டுகள் இல்லாத அளவு எத்தியோப்பியா, சோமாலியா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
அதேபோல கென்யாவும் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பை தற்சமயம் ஏற்படுத்தியுள்ளது இந்த லோகஸ்டுகள்.
FAO அமைப்பின் கெய்த் கிரிஸ்மென் ஒரு சிறு லோகஸ்ட் கூட்டம் 2,500 பேருக்கான ஒரு வருடத்திற்கான உணவு தரும் பயிர்களை அழிக்க முடியும் என்கிறார். ஒரு பூச்சியானது 10 பேரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிக்கரம்
மார்ச் மற்றும் ஏப்ரலில் அறுவடைக்காலம் என்பதால் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யாவிற்கு உதவிக்கரம் நீட்ட ஐக்கிய நாடுகள் சபை முன்வந்துள்ளது.
தற்போது அங்கு தேவையான அளவு மழை பொழிந்து பயிர்கள் விளைச்சல் நன்றாக இருப்பதாலும் ஈரப்பதம் காரணமாகவும் 10 கோடிக்கும் அதிகமான பூச்சிகள் உருவாக வாய்ப்பு இருப்பதால் நிலைமையைக் கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை 71 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது.
இந்த நிதியில் மருந்து தெளித்து பூச்சிகளை அழிக்க முடிவு செய்து, கென்யா அரசு 5 சிறிய ரக விமானங்களை வாங்கி மருந்து தெளித்து வருகிறது.
ரஜினி அரசியல் எண்ட்ரி; எப்போது எந்தக் கட்சியுடன் கூட்டணி தமிழருவி மணியன் கூறுவது என்ன?
ரஜினியின் அரசியல் ஆரம்பம்
30 ஆண்டுகளாக அரசியலில் நிற்பார் என்று எதிர்பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயத்தை ரஜினியின் அரசியல் ஆலோசகர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். ரஜினி வரும் ஏப்ரல் 14-ல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளார்.
மாநாடு மற்றும் சுற்றுப்பயணம்
ஏப்ரல் 14-ல் கட்சி அறிவித்த பிறகு ஆகஸ்டில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்த திட்டம் இருப்பதாகவும், அதையடுத்து செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டம் இருப்பதாகவும் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
ரஜினி கூட்டணிக் கட்சிகள்
பாமக அல்லது பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், இருப்பினும் அது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கண்டிப்பாக டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்க விருப்பமில்லை என்பதையும் தெரிவித்தார்.
நிறைவேறுமா ரஜினியின் கட்சி ஆரம்பிக்கும் பணி
தொடர்ந்து தமிழகத்தில் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவே பேசி வரும் ரஜினிகாந்த் 2 ஆண்டுகளுக்கு முன்பே சட்டசபை தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்து பின்னர் தோல்வியுற்றது.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற பாஜக பின்புலமாக செயல்படுகிறது என்றும் ரஜினியின் வெற்றி வாய்ப்பு உறுதி என்றும் கூறப்படுகிறது.
எனவே ரஜினி இந்த முறை நிச்சயம் ஏப்ரல் 14-ல் கட்சி துவங்குவார் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
உங்களுடைய அதீத தைரியத்தால் எதனையும் வெல்லும் திறன் வாய்க்கும். உடல் நலக் கோளாறுகள் இருந்தால் இன்று ராகு கேதுகளை வழிபட நிவர்த்தியாகும். சகோதர உறவினர்களின் உடல்நலத்தைப் பேணுங்கள்.
குடும்பத்தில் மனமகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இருந்தாலும் சிறு சிறு மனக்குழப்பம் அவ்வப்போது வந்து போகும். யாரிடமும் அதிக எதிர்பார்ப்பு கூடாது. ஏமாந்து போவீர்கள். நடுநிலையான மனதுடன் இருப்பது சிறந்தது.
மனக்குழப்பங்கள் வரலாம். எதிலும் நிதானம் தேவை. வயதானோர்களுக்கு வாந்தி, பித்தம், மயக்கம் வரலாம். தெய்வ நாம சங்கீர்த்தனம் செய்வது அவசியம். வேலைப்பளு மற்றும் பொறுப்புகள் கூடும் நாள்.
சந்திரன் பத்தில் இருப்பதால் நல்ல வேலை கிடைக்கும் நாள். முயற்சித்தால் முன்னுதாரணமான வேலையைப் பெறுவீர்கள். தந்தை வழி உறவினர்களால் தன லாபம் உண்டு. நல்ல நாள்.
மிகவும் பாக்யமான நாளாகக் காணப்படுகிறது. தந்தை வழி உறவுகளால் சந்தோஷம் கூடும். தூர தேசத்திலிருந்து நல்ல செய்தி வரும். நரம்பு எலும்பு சம்மந்தப்பட்ட் நோய்கள் வரலாம்.
சந்திரன் அஷ்டமத்தில் உலவுவதால் வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்கும் நாளாகக் காணப்படுகிறது. எவரிடமும் கருத்துச் சொல்லாமல் இருப்பது நலம். பொறுமை காப்பது கூடுதல் நலம். திருமணப் பேச்சுகள் சுபமாகும்.
உடல் நலத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றலும். வாழ்க்கை நிலைமை மேம்படும். உடனுக்குடனான கடனுதவி கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் உண்டு. எதிலும் லாபங்கள் பெருகி வரும் நாள்.