Home Blog Page 35

கணவர் பீட்டர் பால் மீது புகார்: கூலாக பதில் சொன்ன வனிதா!

0
Vanitha Reacts For Complaint

Vanitha Peter Paul; கணவர் பீட்டர் பால் மீது புகார்: கூலாக பதில் சொன்ன வனிதா! கணவர் பீட்டர் பால் மீது அவரது முன்னாள் மனைவி ஹெலன் எலிசபெத் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கணவர் பீட்டர் பால் மீது அவரது முன்னாள் மனைவி அளித்துள்ள புகார் குறித்தி வனிதா கூலாக பதில் கூறியுள்ளார்.

விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்தப் படத்திற்கு அவர் நடித்த படங்கள் போதுமான வரவேற்பு பெறாத நிலையில், சினிமாவில் இருந்து ஒதுங்கினார். கடந்தாண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆகாஷ் என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.

கருத்து வேறுபாடு கரணமாக 2007 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து அதே ஆண்டில், ராஜன் ஆனந்த் என்பவரை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்த திருமணமும், 2010 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், தற்போது வனிதா 3ஆவதாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், கொஞ்ச நேரத்திலேயே பீட்டர் பால் மீது அவரது முதல் மனைவி எலிசபெத் ஹெலன் (41) சென்னை வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

2 குழந்தைகளுடன் 7 வருடங்களாக பிரிந்து வாழும் தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், இன்னும் விவாகரத்து கூட பெறவில்லை என்றும் பீட்டர் பால் மீது புகார் அளித்துள்ளார்.

இது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கொள்ளப்போவது முன்னதாகவே தெரிந்த நிலையில், ஏன், திருமணம் செய்து கொண்ட பிறகு புகார் அளித்துள்ளார் என்பது பலரது கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில், இந்த புகார் குறித்து மிகவும் கூலாக வனிதா பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

எலிசபெத் ஹெலன் கொடுத்த புகாரால் நான் என்னவோ ஏமாந்துவிட்டதாக பலரும் நினைக்கிறார்கள். நான் ஒன்றும் ஏமாறவில்லை.

கடந்த 8 வருடங்களுக்கு முன்னரே தனது மனைவியை பீட்டர் பால் பிரிந்துவிட்டார். அவரைப் பற்றி முழுமையாக எனக்கு தெரியும். இருவருமே தனித்தனியாகத்தான் வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களுக்கு இடையில் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது. இந்தப் பிரச்சனையை எங்களது வழக்கறிஞர் பார்த்துக் கொள்வார்.

எலிசபெத் ஹெலன் ஒரு கோடி ரூபாய் கேட்பதாகச் சொல்கிறார்கள். அவ்வளவு பணத்துக்கு நாங்கள் எங்கே போவது? இந்த புகார் காரணமாக எனது திருமண வாழ்க்கையில், எந்தப் பிரச்சனையும் இல்லை.

பணம் பறிப்பதற்காகச் இப்படி செய்கிறார்கள். இந்தப் பிரச்சனையை சட்ட ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சிம்புவின் கெட்டவன் முடியவேயில்லை: லேகா வாஷிங்டன் வருத்தம்!

0
Kettavan: Lekha Washington

Kettavan Lekha Washington; சிம்புவின் கெட்டவன் முடியவேயில்லை: லேகா வாஷிங்டன் வருத்தம்! சிம்புவின் கெட்டவன் படம் எடுத்து முடிக்கப்படவில்லை என்று நடிகை லேகா வாஷிங்டன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கெட்டவன் படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்படாததால் நடிகை லேகா வாஷிங்டன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு வந்த காதலர் தினம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லேகா வாஷிங்டன்.

ஜெயம்கொண்டான் படத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்திருந்தார். நடிகர் பிரசன்னா நடித்த கல்யாண சமையல் சாதம் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

மேலும், உன்னாலே உன்னாலே, வா, அரிமா நம்பி என்று ஒரு சில படங்களில் நடித்துள்ளார். லேகா நடிகர் சிம்பு நடிப்பில் உருவான கெட்டவன் படத்தில் பிராமின் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

முதலில் இந்தப் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க நடிகை சனா கான் தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அதன் பிறகு என்னவோ காரணம் காரணமாக, சனா கானுக்குப் பதிலாக லேகா ஒப்பந்தமானார். இந்த நிலையில், கெட்டவன் படம் குறித்து லேகா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கெட்டவன் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பின் போது இயக்குநர் நந்துவிற்கும், சிம்புவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படமும் ரத்து செய்யப்பட்டது.

கெட்டவன் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அனைவருமே வருத்தப்பட்டனர். கடந்த 2018 ஆம் ஆண்டு சிம்பு மீது மீடு புகார் கூறினார். ஆம், அவரது டுவிட்டரில் கெட்டவன் மீடு என்று பதிவிட்டிருந்தார்.

அப்போது, அவர் சிம்புவைத்தான் கூறுகிறார் என்று சிம்பு ரசிகர்கள் அவர் மீது விமர்சனம் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஹலோவில் டிரெண்டாகும் கமலின் PanchathanthiramScenes!

0
Kamal Haasan Panchathanthiram

Panchathanthiram; ஹலோவில் டிரெண்டாகும் கமலின் PanchathanthiramScenes! கமல் ஹாசன் நடித்த பஞ்சதந்திரம் படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், PanchathanthiramScenes என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

PanchathanthiramScenes என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி திரைக்கு வந்த காமெடி படம் பஞ்சதந்திரம்.

முதலில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர், சிறிய பட்ஜெட் படம் என்பதால், ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பதிலாக தேவா மாற்றப்பட்டார்.

ஐந்து நண்பர்களுக்கு இடையில் நடக்கும் கதையை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தனக்கே உரிய ஸ்டைலில் காமெடியாக கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தில் உள்ள அனைத்து பாடல்களுக்கும் கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கனடாவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

கிட்டத்தட்ட 17 நாட்கள் கனடாவில் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு லாஸ் ஏஞ்செல்ஸ் செல்வதற்காக டொரோண்டா விமான நிலையத்திற்கு கமல் ஹாசன் வந்த போது, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கமல் ஹாசனிடம் தவறாக பேசியுள்ளார்.

இதையடுத்து, இருவருக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று, தணிக்கைக்கு சென்ற போது இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு பாடல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தணிக்கைக்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் இடம்பெற்றிருந்த பாடல் நீக்கப்பட்டது.

இப்படி பல சர்ச்சைகளுக்கு பிறகு வெளிவந்த படம் பஞ்சதந்திரம். இந்த படம் வெளியாகி நேற்றுடன் 18 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இதன் காரணமாக ஹலோவில் 18YearsOfPanchatanthiram என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. இதைத் தொடர்ந்து, PanchathanthiramScenes என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த காட்சிகளை பதிவிட்டு வருகின்றனர்.

3

பிக் பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் பர்த்டே டுடே!

0
Harish Kalyan Birthday

Harish Kalyan; பிக் பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் பர்த்டே டுடே! நடிகர் ஹரிஷ் கல்யாண் இன்று தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள் இன்று.

தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்த ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் விட்டு வெளியில், வந்த பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வந்த படம் பியார் பிரேமா காதல். இந்தப் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ரைசா வில்சன் ஹீரோயினாக நடித்திருந்தார். காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படம் இளம் பருவத்தினரை வெகுவாகவே கவர்ந்தது.

இப்படத்தைத் தொடர்ந்து, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற மற்றொரு காதல் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருந்தார்.

இவர்களது கெமிஸ்டரி படம் முழுவதும் பார்வையாளர்களை வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்தது. அந்தளவிற்கு அவர்களது நடிப்பும், காதலும் இருந்தது.

தொடர்ந்து தாராள பிரபு நடித்தார். இந்த 3 படங்களுக்குமே ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். தற்போது, கசட தபற, பெல்லி சூப்புலு என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் இன்று தனது 30ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, ஹலோவில், HBDHarishKalyan என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

பாடகி எஸ்.ஜானகி நலமாக இருக்கிறார்: மகன் முரளி கிருஷ்ணா!

0
S Janaki

Playback Singer S Janaki; பாடகி எஸ்.ஜானகி நலமாக இருக்கிறார்: மகன் முரளி கிருஷ்ணா! பின்னணி பாடகி எஸ் ஜானகி நலமுடன் தான் இருக்கிறார் என்றும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவரது மகன் முரளி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

எஸ் ஜானகி நலமுடன் தான் இருக்கிறார் என்று அவரது மகன் முரளி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

சினிமாவில் மூத்த பின்னணி பாடகியாக இருப்பவர் எஸ்.ஜானகி (82). ஹைதராபாத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, ஒடியா, பெங்காலி, உருது, குஜராத்தி உள்ளிட்ட 17 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் கிட்டத்தட்ட 48,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

இவரது இசையில் மயங்காதோர் யாரும் இல்லை. தமிழில் சுந்தரி நீயும், சுந்தரன் நானும், காற்றில் எந்தன் கீதம், கண்மணி அன்போடு காதலன், செந்தூர பூவே, எந்த பூவிலும், மச்சான பாத்தீங்களா, ஆகாய கங்கை, நான் ஆளான தாமரை என்று ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

வயது மூப்பு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டுடன் பாடல்கள் பாடுவதை  தவிர்த்துவிட்டார்.

இந்த நிலையில், எஸ் ஜானகி உடல்நிலை குறைவு காரணமாக காலமானதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

இதைப் பார்த்து அதிர்ச்சியைடந்த அவரது மகன் முரளி கிருஷ்ணா கூறுகையில், தனது அம்மா உடல்நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து ஜானகியின் உடல்நலம் குறித்து இசையமைப்பாளர் தீனாவும் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஜானகியுடன் பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது, ஜானகி சிரித்து சிரித்து பேசியதாகவும், இதுவரை 6 முறை அவரது உடல்நலன் குறித்து வதந்தி வந்துவிட்டதாகவும் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு ஏன், எஸ் ஜானகியின் உடல்நிலை குறித்து வதந்தி தொடர்பாக எஸ்பிபி வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது, சமூக வலைதளத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும், ஜானகியின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், காலையிலிருந்து ஜானகி உடல்நிலை குறித்து கிட்டத்தட்ட 20 செல்போன் அழைப்புகள் வரை வந்துவிட்டது.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் செய்தி பரவியது. அவரிடம் நான் பேசினேன். அவர் நலமாகத்தான் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஞாயிற்றுக்கிழமை புதிதாக 2889 கொரோனா தொற்றுகள், மொத்த கொரோனா எண்ணிக்கை 83,077: புதுடெல்லி

புதிதாக 2889 கொரோனா தொற்றுகள்

புதுடெல்லி: ஞாயிற்றுக்கிழமை புதிதாக 2889 கொரோனா தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. டெல்லியின் மொத்த கொரோனா எண்ணிக்கை 83,077 ஆக உள்ளது என அரசு தெரிவித்தது.

புதுடெல்லியில் இன்று மட்டும் 2,889 கொரோனா தொற்றுகள்

“ புதுடெல்லியில் இன்று மட்டும் 2,889 கொரோனா தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. டெல்லியின் மொத்த கொரோனா எண்ணிக்கை 83,077 ஆக உள்ளது, இதில் 52,607 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 27,847 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் மற்றும் 2,633 பேர் கொரோனாவால் இறந்தனர்,” என டெல்லி சுகாதார துறை தெரிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை 65 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்

ஞாயிற்றுக்கிழமை 65 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர் என டெல்லி அரசு தெரிவித்தது. இதனுடன் டெல்லியில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,633 ஆக உயர்ந்தது.

இந்தியாவில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று

இந்திய அளவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரே நாளில் 19,906 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்றாக கருதப்படுகிறது.

மேலும் இன்று ஒரே நாளில் 410 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவால் இறந்த மொத்த இறப்பு 16,095 ஆக உள்ளது.

3

முதியவர் தனது மனைவியை கொன்று தானும் தூக்கில் தொங்கி தற்கொலை: சென்னை

முதியவர் தனது மனைவியை கொன்று

சென்னை: ஞாயிற்றுக்கிழமை பெருங்களத்தூரில் 72 வயது முதியவர் தனது மனைவியை கொன்று பின்னர் தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

மின்சார உற்பத்தி சாதன பழுதுபார்ப்பவர்

இறந்தவரின் பெயர் ஜகன்நாதன் என்பதும் அவர் மின்சார உற்பத்தி சாதன பழுதுபார்ப்பவர் என்பதும் தெரியவருகிறது மற்றும் அவரது மனைவி சுலோச்சனா வயது 62. இருவரும் டேவிட் நகரில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் குடியிருந்து வந்துள்ளனர்.

இவர்களின் மூன்று மகள்களின் திருமணத்திற்கு பின் தனியாக வசித்து வந்துள்ளனர்.

ஜகன்நாதன் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியுள்ளார்

இறந்தவர்களின் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் சென்று அந்த கட்டிடத்தின் மாடியை சென்று பார்த்த பொழுது ஜகன்நாதன் தண்ணீர் தொட்டியில் இருந்து வரும் குழாயில் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியுள்ளார்.

கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்த சுலோச்சனாவை 

அருகில் இருந்த ஜகன்நாதனின் மனைவியான சுலோச்சனாவை எழுப்ப முயற்ச்சித்த பொழுது அவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்த பீர்க்கங்கரனை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்விற்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தெரிவிக்கையில், இருவரும் வழக்கமாக  சண்டையிட்டு வந்துள்ளனர் ஞாயிரும் வழக்கமான சண்டை என அக்கம்பக்கத்தினர் நினைத்துள்ளனர் என கூறப்பட்டது.

3

தமிழ் சினிமாவில் போலீஸ்: வைரலாகும் நடிகர்களின் போலீஸ் புகைப்படங்கள்!

0
Tamil Cinema Police

Tamil Cinema Police; தமிழ் சினிமாவில் போலீஸ்: வைரலாகும் நடிகர்களின் போலீஸ் புகைப்படங்கள்! தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் தங்களது குரல் எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குநர் ஹரி, காவல்துறையை பெருமைப்படுத்தும் விதமாக சாமி, சாமி ஸ்கொயர், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய 5 படங்களை எடுத்ததற்கு மிகவும் வருத்தப்படுவதாகவும், வெட்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது ஹலோவில், தமிழ் சினிமாவில் போலீஸ் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதில், சினிமாவில் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள், நடிகைகளின் புகைப்படங்களை பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த சிறந்த போலீஸ் நடிகர், நடிகைகள் யார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழக மக்களை கவர்ந்த காவல்துறை அதிகாரி விஜயகாந்த் தான் தமிழ் சினிமாவின் மிக சிறந்த காவல்துறை அதிகாரி என்று பலரும் கூறி வருகின்றனர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், அஜித் குமார், விஜய், சரத்குமார், விஷால், கார்த்தி, சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சத்யராஜ், சிவாஜி கணேசன், எம்ஜிஆர், அமலா பால்,

விஜயசாந்தி, பானுப்ரியா, காஜல் அகர்வால், சினேகா என்று நடிகர்கள், நடிகைகள் பலரும் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஹலோவில் டிரெண்டாகும் AdvanceHBDHarishKalyan ஹேஷ்டேக்!

0
AdvanceHBDHarishKalyan

Harish Kalyan; ஹலோவில் டிரெண்டாகும் AdvanceHBDHarishKalyan ஹேஷ்டேக்! நடிகர் ஹரிஷ் கல்யாண் நாளை தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், AdvanceHBDHarishKalyan என்ற ஹேஷ்டேக் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது.

ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளுக்கு முன்னதாக AdvanceHBDHarishKalyan என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

நடிகர் ஹரிஷ் கல்யாண் நாளை தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்த ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் விட்டு வெளியில், வந்த பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வந்த படம் பியார் பிரேமா காதல். இந்தப் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ரைசா வில்சன் ஹீரோயினாக நடித்திருந்தார். காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படம் இளம் பருவத்தினரை வெகுவாகவே கவர்ந்தது.

இப்படத்தைத் தொடர்ந்து, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற மற்றொரு காதல் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருந்தார்.

இவர்களது கெமிஸ்டரி படம் முழுவதும் பார்வையாளர்களை வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்தது. அந்தளவிற்கு அவர்களது நடிப்பும், காதலும் இருந்தது.

தொடர்ந்து தாராள பிரபு நடித்தார். இந்த 3 படங்களுக்குமே ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். தற்போது, கசட தபற, பெல்லி சூப்புலு என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நாளை தனது 30ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

இதன் காரணமாக HarishKalyanBdayCDP என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. தொடர்ந்து, AdvanceHBDHarishKalyan என்ற ஹேஷ்டேக் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது.

மேலும், ஹரிஷ் கல்யாணின் ஆசை என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதில், ஹரிஷ் கல்யாண் தன்னுடைய ஆசையை கவிதையாக எழுதியுள்ளார்.

இப்போது இருக்கிற இந்த இக்கட்டான காலகட்டத்தில் என்னால், இருக்க பிடிக்கவில்லை. எனக்க பறக்க வேண்டும். அந்த நட்சத்திரங்களை தொட வேண்டும் என்று டுவிட் செய்துள்ளார்.

நான் உயரமாக பறந்து நட்சத்திரங்களை தொட வேண்டும்

ஆத்மாத்மாக பாடவேண்டும்

உங்களது முகத்தில் புன்னகையை பார்க்க வேண்டும்

இயற்கையை கட்டியணைத்து அழ வேண்டும்

ஒரு பழத்தை எடுக்க வேண்டும்

அதனை சேமிக்க வேண்டும்

ஓ கடவுளே

என் இதயங்களை அவிழ்த்துவிட்டு, என்னை விடுவிக்க வேண்டும்

இந்த குழப்பத்தை நான் வெறுக்கிறேன்

நீங்கள் என்னை கேட்கிறீர்களா? என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கோப்ரா முதல் சிங்கிள் டிராக்: தும்பி துள்ளல் பாடல் புகைப்படங்கள் வெளியீடு!

0
Thumbi Thullal Song Stills

Thumbi Thullal Song Stills; கோப்ரா முதல் சிங்கிள் டிராக்: தும்பி துள்ளல் பாடல் புகைப்படங்கள் வெளியீடு!  சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கோப்ரா தும்பி துள்ளல் பாடல் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இமைக்கா நொடிகள் புகழ் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கோப்ரா.

வித்தியாசமான தலைப்பு கொண்ட இந்தப் படத்தில் சியான் விக்ரம் முதல் முறையாக 15 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கோப்ரா படத்தின் சியான் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே எஸ் ரவிக்குமார், ஜான் விஜய், கனிகா, ரோபோ சங்கர், பூவையார், பத்மபிரியா ஜானகிராமன், மிர்ணாளினி ரவி, டிஎஸ்ஆர், ரோஷன் மேத்யூ ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

கிட்டத்தட்ட இப்படத்தின் அதிகப்படியான காட்சிகள் முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கிறது. கொரோனா பாதிப்பு முற்றிலும் சரியான பிறகு கோப்ரா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் முதல் சிங்கிள் டிராக் தும்பி துள்ளல் வரும் 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த அழைப்பிதழில், சியான் விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி இருவரும் மணக்கோளத்தில் இருக்கின்றனர்.

இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆம், மதியழகன் என்ற கதாபாத்திரத்தில் விக்ரமும், பாவனா மேனன் என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீநிதி ஷெட்டியும் நடிக்கின்றனர்.

மதியழகன் மற்றும் பாவனா மேனன் திருமண நிச்சயதார்த்தம் என்று அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தும்பி துள்ளல் பாடல் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதியழகனாக வரும் விக்ரமுக்கும், பாவனா மேனனாக வரும் ஸ்ரீநிதி ஷெட்டிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.

அப்போது வரும் பாடல் தான் தும்பி துள்ளல். இந்தப் பாடலின் புகைப்படங்கள் தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக டுவிட்டரில் கோப்ரா ஹேஷ்டேக் டிரெண்டானது.

3