Home Blog Page 7

மறுஉருவம் எடுத்த கொரோனா! அலறும் பிரிட்டன் – புதிய கொரோனா வைரஸ்

1
புதிய கொரோனா வைரஸ்

புதிய கொரோனா வைரஸ் (new coronavirus) (new covid19): முதன் முதலில் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்த நாடு இங்கிலாந்து. தற்பொழுது பிரிட்டனில் கொரோனா மறுஉருவம் எடுத்து உள்ளது.

கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாமல் பரிணாமம் அடைந்து உள்ளது. புதிய கொரோனா வைரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என பிரிட்டன் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது.

கரோனா வைரஸ் என்றால் என்ன? – Coronavirus Tamil

ஏற்கனவே பரவிய கொரோனா வைரசைவிட இது 70% வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் மீண்டும் பிரிட்டனில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

புதிய கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் அறிகுறிகள், வந்தால் உடனடியாக இதை செய்யுங்கள்

துபாய் அரசு ஐரோப்பிய விமானங்களை ரத்து செய்து உள்ளது. இங்கிலாந்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

 

3

கோவா அணியை விழ்த்தியது சென்னை அணி

0
chennaiyin fc vs fc goa சென்னையின் எப்சி vs எப்சி கோவா

நேற்று நடந்த ஐஎஸ்எல் 33-வது லீக் போட்டியில் சென்னையின் எப்சி (chennaiyin fc) அணியும் கோவா அணியும் மோதியது.

இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தியது. இந்த லீக் போட்டியில் 2-வது வெற்றியை சென்னை அணி ருசித்ததுள்ளது.

சென்னையின் எப்சி வீரர் ரபெல் கிரிவெல்லாரோ 5-வது நிமிடத்திலும், ரஹிம் அலி 53-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கோவா அணி வீரர் மென்டோசா 9-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார்.

இறுதியில் அதிக 2 கோல் அடித்து முன்னிலையில் இருந்த சென்னை வெற்றி பெற்றது. இதுவரை சென்னை அணி மூன்று போட்டிகள் தோல்வி, இரண்டு போட்டிகள் வெற்றி பெற்று உள்ளது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத்-மும்பை மாலை 5 மணிக்கும், கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் இரவு 7.30 மணிக்கும் மோத உள்ளனர்.

3

நடராஜன் மூலம் மன உளைச்சலுக்கு ஆளான இந்திய வீரர்கள்!

0

தமிழக வீரர் நடராஜன் டி.என்.பி.எல். தொடர் மூலம் ஐ.பி.எல். மற்றும் இந்திய ஓடிஐ-டி20 அணிகளில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.

நாடராஜனின் எழுச்சியால் இரண்டு இந்திய பவுலர்களுக்கு தலைவலி ஏற்பட்டு உள்ளது. சமி, புவனேஷ்குமார் இருவரும் அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஷர்துல் தாக்கூர் பேட்டிங் பவுலிங் இரண்டிலும் அசத்தியுள்ளார். எனவே சமி, புவனேஷ் குமார் தங்களின் பவுலிங்கை இன்னும் சிறப்பாக்கினால் மட்டுமே அணியில் நீடிக்க வாய்ப்பு உண்டு.

இந்திய அணி தேர்வுக் குழுவும் நடராஜன், தாக்கூர் இருவரையும் நிரந்தரமாக அணியில் வைத்துக்கொள்வது என முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3

இந்திய வம்சாவளி ராஜா சாரி நிலவிற்கு பயணம்

0

நிலவிற்கு மனிதனை அழைத்து செல்லும் ஆர்டெமிஸ் திட்டத்திற்கான முதல் இந்திய வம்சாவளி உட்பட 18 விண்வெளி வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியான ராஜா சாரி என்ற நபரும் இடம் பெற்று உள்ளார். இவர் 2017-ல் நாசாவில் தன்னை இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா சாரி-யுடன் சேர்த்து ஸ்டெஃபானி வில்சன், கிறிஸ்டினா கோச், விக்டர் களோவர், ஜோசஃப் அகாபா, கேலா பார்ரன், மேத்யூ டோமினிக், கெஜெல் லிண்ட்கிரென், நிகோல் ஏ.மான், ஏன் மெக் கிளென், வாரன் ஹோபர்க், ஜானி கிம்,  கேட் ரூபின்ஸ், பிராங் ரூபியோ, ஜெஸ்ஸிகா மெர், ஜாஸ்மின் மொஹம்பெலி, ஸ்காட் டிங்கிள், ஜெஸ்ஸிகா வாட்கின்ஸ் ஆகியோர் செல்ல உள்ளனர்.

3

திருப்பதி வைகுண்ட ஏகாதசி டிக்கெட் முன்பதிவு துவக்கம்

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்கள் கலந்து கொள்ளவதற்கான முன்பதிவு இன்று துவங்கி உள்ளது.

ஏகாதசியை நேரில் காண விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். http://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் வழியாக இந்த முன்பதிவை மேற்கொள்ளலாம்.

முதன்முறையாக 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெற உள்ளது. நாள் ஒன்றுக்கு 20,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட உள்ளனர்.

3

விஸ்வநாத் ஆனந்த் செஸ் அகடாமி துவங்கியுள்ளார்

0

செஸ் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது விஸ்வநாத் ஆனந்த். ஒரு முறை, இரண்டு முறை அல்ல, ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

விஸ்வநாத் ஆனந்த் செஸ் அகடாமி

சர்வதேச போட்டியில் போட்டில் உலக அளவில் சாதித்த விஸ்வநாத், தன்னைபோலவே பல இந்திய இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என புதிய “செஸ் அகடாமி” துவங்க முடிவு செய்து உள்ளார்.

விஸ்வநாத் ஆனந்த் – வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் நிறுவனத்துடன் இணைந்து துங்கவுள்ள இந்த அகடாமி பெயர் “வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த்”.

இந்த அகடாமியில் முதல் கட்டமாக இந்திய இளம் செஸ் வீரா்களான பிரக்யானந்தா, நிகல் சரின், ரௌனக் சாத்வனி, குகேஷ், வைஷாலி ஆகியோருக்கு பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

3

மாஸ்டர் படம் வெளிவரும் முன் விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு

0

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விரைவில் வெள்ளித்திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. விஜய் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை சன்பிக்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கொரானா காலம் என்பதால்  விஜய் அடுத்த பட அறிவிப்பு தாமதமாக வெளிவந்துள்ளது.

தற்பொழுது நெல்சன் திலீப்குமார் டாக்டர் படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக இப்படத்தில் நடித்துள்ளார்.

3

கடன் பிரச்சனை தீர: கடன் தொல்லை நீங்க வேண்டுமா? தினமும் இதனை பாராயணம் செய்யுங்கள்!

0

கடன் பிரச்சனை தீர: கடன் தொல்லை நீீீீங்க வேண்டுமா? தினமும் இதனை பாராயணம் செய்யுங்கள்.

நமது அன்றாட வாழ்வில் அனைவரும் கடன் தொல்லையாலும், கஷ்டங்கள் மற்றும் தாரித்திரியங்களால் அவதிப்பட்டு வருகின்றோம்.

எப்படிப்பட்ட துயரம் ஆனாலும் நாம் நம்பிக்கை இழக்காமல் இறைவனை மனதார பிராத்தனை செய்ய அவர் அதிலிருந்து மீண்டு்வர நல்வழிக்காட்டுவார்.

மேலும் நம்பிக்கையோடு ரிஷிகள் அருளிய சில ஸ்தோத்திரங்களை பாராயாணம் செய்ய மனமகிழ்ந்து விரைவில் நமக்கு நற்பலன்களை பெற்று தரும்.

அப்படி நமது பிரச்சனைகள் தீர வசிஷ்டர் அருளிய ஸ்தோத்திரம் தான் தாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்திரம் ஆகும்.இதை தினமும் பாராயணம் செய்து பயன் பெறுவோம்.

ஓம் நமசிவாய

தாரித்ர்யதஹன சிவ ஸ்தோத்ரம்

விச்வேச்வராய நரகார்ணவதாரணாய கர்ணாம்ருதாய சசிசேகரதாரணாய |
கர்பூரகாந்திதவளாய ஜடாதராய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||

கௌரிப்ரியாய ரஜனீசகலாதராய காலாந்தகாய புஜகாதிபகங்கணாய |
கங்காதராய கஜராஜவிமர்தநாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||

பக்திப்ரியாய பயரோகபயாபஹாய உக்ராய துர்கபவஸாகரதாரணாய |
ஜ்யோதிர்மயாய குணநாமஸுந்ருத்யகாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||

சர்மாம்பராய சவபஸ்மவிலேபனாய பாலேக்ஷணாய மணிகுண்டலமண்டிதாய |
மஞ்ஜீரபாதயுகளாய ஜடாதராய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||

பஞ்சாநநாய பணிராஜவிபூஷணாய ஹேமாம்சுகாய புவநத்ரயமண்டிதாய |
ஆனந்தபூமிவரதாய தமோமயாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||

பாநுப்ரியாய பவஸாகரதாரணாய காலாந்தகாய கமலாஸனபூஜிதாய |
நேத்ரத்ரயாய சுபலக்ஷணலக்ஷிதாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||

ராமப்ரியாய ரகுநாதவரப்ரதாய நாகப்ரியாய நரகார்ணவதாரணாய |
புண்யேஷு புண்யபரிதாய ஸுரார்ச்சிதாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||

முக்தேச்வராய பலதாய கணேச்வராய கீதப்ரியாய வ்ருஷபேச்வரவாஹனாய |
மாதங்கசர்மவஸனாய மஹேச்வராய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||

வஸிஷ்டேன க்ருதம் ஸ்தோத்ரம் ஸர்வரோகநிவாரணம் |
ஸர்வஸம்பத்கரம் சீக்ரம் புத்ரபௌத்ராதிவர்தனம் |
த்ரிஸந்த்யம் ய: படேந்நித்யம் ஸ ஹி ஸ்வர்கமவாப்நுயாத் ||

இதி ஸ்ரீவஸிஷ்டவிரசிதம் தாரித்ர்யதஹனசிவஸ்தோத்ரம் சம்பூர்ணம்.

3

கால பைரவாஷ்டமி 2020: சத்ருக்களை அழிக்கும் தட்சிண காசி பைரவர் திருக்கோவில்!

1

கால பைரவாஷ்டமி 2020: சத்ருக்களை அழிக்கும் தட்சிண காசி பைரவர் திருக்கோவில். அதியமானால் கட்டப்பட்ட தனி கால பைரவர் கோவில். காசிக்கு இணையான அதியமான் கோட்டை தட்சிண காசி பைரவர்.

கலியுகத்தில் நன்மைகளை விட தீமையே தலைத்தோங்கி நிற்கும். அப்படிப்பட்ட இந்த யுகத்தில் பகைவர்களால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் துயரங்களை அதிகமாகவே காணப்படும்.

பொறாமை, கோபம் வஞ்சகத்தால் ஏற்படும் பகைமையை போக்கி நல்வாழ்வு அருளும் காவல் தெய்வமாக விளங்குபவர் கால பைரவர் ஆவார்.

சேத்திர பாலகராக அனைத்து சிவன் கோவில்களிலும் விளங்குபவர் பைரவர் ஆவார். இவர் பரமேஸ்வரரின் ருத்ர அவதாரமாக கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் அவதரித்தவர்.

கால பைரவருக்கு இந்தியாவில் காசியில் தனி திருக்கோவில் அமைந்துள்ளது. அதற்கு அடுத்து தமிழகத்தில் தர்மபுரியில் மட்டுமே தனி திருக்கோவில் உள்ளது.

சத்ருக்களை அழிக்கும் தட்சிண காசி பைரவர்

தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்தவர் அதியமான் நெடுமான் அஞ்சி ஆவார்.
இவர் கடையைழு வள்ளல்களில் ஔவைக்கு நெல்லிக்கனி அளித்த வள்ளல் ஆவார்.

இவர் சிறுபகுதியை ஆண்டு வந்த சிற்றரசர் ஆவார். இவருக்கு பேரரசர்களால் இன்னல்கள் ஏற்பட்டுவிடும் என்கிற அச்சம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

இதனால் தன்னை சத்ருக்கள் நெருங்கா வண்ணம் இருக்க வேண்டி குருமார்களிடம் ஆலோசனை வேண்டினார். அவர்களின் ஆலோசனைப்படி காசியில் இருந்து கால பைரவரை கொண்டு வந்து பிரதிட்டை செய்ய ஆயத்தமானர்.

தமது வீரர்களை அனுப்பு காசியில் இருந்து கால பைரவரை எடுத்து வர சொல்லிவிட்டு கோவில் கட்ட துவங்கினார்.

கால பைரவர் விக்ரகம் வந்ததும் , கோவில் திருப்பணி நிறைவும் ஒரே நேரத்தில் பூர்த்தியானது. அதன் பின் பைரவரை பிரதிட்டை செய்தார்.

கருவறை விதானத்தில் நவநாயகர்களை வடித்து பைரவரை நடுநாயகமாக பிரதிட்டை செய்து வழிப்பட்டார்.

அன்று முதல் தட்சிண காசி பைரவர் என்ற திருநாமத்தோடு இரண்டு திருக்கரத்தோடு கையில் திரிசூலமும் கபாலமும் தாங்கி திருக்காட்சி புரிகிறார். சத்ருக்களை அழிப்பவர் என்பதால் வாளும் இவருக்கு அருகே வைக்கப்பட்டுள்ளது.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

பைரவர் அஷ்டமி தினத்தில் அவதரித்தவர் என்பதால் இவருக்கு தேய்பிறை அஷ்டமி தினங்கள் உகந்த நாட்கள் ஆகும்.

இங்கே ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சிறப்பு பூஜைகளும், ஒவ்வொரு மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியில் மிளகாய் வற்றல் மற்றும் மிளகினை சிறப்பு யாகங்கள் நடைபெறுகிறது.

இவருக்கு பூசணிக்காய், தேங்காய் மற்றும் மிளகு முடிச்சினை கொண்டு விளக்கேற்றி நேர்த்தி கடன்களை செலுத்துகின்றனர் பக்தர்கள்.

தமிழகம், கர்நாடகம் என அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் வருகின்றது. காலபைரவாஷ்டமி தினத்தில் தேர் திருவிழா நடைபெறுகிறது.

வியாபார முடக்கம், எதிரிகள் தொல்லை, கடன் பிரச்சினை, திருமணத்தடை, குழந்தையின்மை என அனைத்து பிரச்சனைகளும் தீர்த்து அருள் புரிகிறார் தட்சிண காசி பைரவர்.

அனைவரும் கால பைரவரின் ஜெயந்தி விழாவான “கால பைரவாஷ்டமி” ஆன இன்று (07/12/2020) அனைவரும் தர்மபுரி அதியமான் கோட்டை ஸ்ரீ தட்சிண காசி பைரவரை சென்று வழிப்பட்டு அவர் அருள் பெறுவோம்.

அமைவிடம்: ஸ்ரீ தட்சிண காசி பைரவர் திருக்கோவில், அதியமான் கோட்டை, தர்மபுரி.

தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் வழியில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

3

cyclone burevi puyal live tracking map location – புரெவி புயல்

0
cyclone burevi puyal live tracking map location - புரெவி புயல்

cyclone burevi puyal live tracking map location – புரெவி புயல் நகரும் வரைபடம். cyclone live tracking map. wind speed in tamilnadu.

wind speed rameshvaram, ramanathapuram, kanyakumari, thoothukudi, tirunelveli, tenkasi, burevi puyal location in indian ocean.

burevi name meaning, purevi puyal name meaning, cyclone burevi name meaning in dhivehi, how cyclone named.

புரேவி புயல் எங்கு உள்ளது? புரேவி புயல் எப்போது கரையைக் கடக்கும்? புரெவி வரும் பாதை, பாம்பன்-கன்னியாகுமரி புரெவி புயல்

 

3