Home Blog Page 183

தினமும் எலுமிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்: பார்வதி நாயர் கொரோனா விழிப்புணர்வு!

0
Parvati Nair Corona Awareness

பார்வதி நாயர் விழிப்புணர்வு வீடியோ ஒன்று பதிவிட்டு அதன் மூலம் நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கிக் கூறியுள்ளார்.

அஜித் நடிப்பில் வந்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.

இப்படத்தைத் தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆலம்பனா என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், உலகத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதன் மூலம் நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளாலாம் என்பது குறித்து டிப்ஸ் கொடுத்துள்ளார்.

பார்வதி நாயர் கொரோனா விழிப்புணர்வு

சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், பார்வதி நாயர் பதிவிட்ட வீடியோவில், தினந்தோறும் எலுமிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில்தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது.

மருந்து மாத்திரைகள் மூலம் குணமாகாத சில காய்ச்சல் இந்த வைட்டமின் சி எடுத்துக் கொண்டால் உடனே குணமாகும்.

எலுமிச்சை மற்றும் தேன் தினமும் காலையில் எடுத்துக் கொள்ள வேண்டும். மாலையில் எலுமிச்சை ஜூஸ் குடிக்க வேண்டும். மேலும், ஸ்லிம்மாக, ஃபிட்டாக இருப்பதற்கும் இது ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.

சாப்பாட்டில் மஞ்சள் பயன்படுத்த வேண்டும். இதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒருவகை மருந்துதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, சூடா தண்ணீர் குடித்தால் நமக்கு எந்த வைரஸூம் வரவே வராது என்று பார்வதி நாயர் தெரிவித்துள்ளார்.

நல்ல பையனாக, பெண்ணாக அனைவருமே வீட்டிலேயே இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், 1117 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 32 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொரோனா வைரஸ் : முதல் நபரை கண்டு பிடித்தது சீனா

0

சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்த முதல் நபரான வுகான் மாகாணத்திலுள்ள சந்தையில் இருந்த சியங் ஜிஸ்யான் என்பவரை கண்டுபிடித்து உள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் பரவி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்று பல லட்சம் மக்களை பாதித்து வருகிறது.

இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகள் குறைவான வைரஸ் ஸ்தம்பித்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுபடுத்த முடியாமல் அந்த நாட்டு அரசாங்கங்கள் தவித்து வருகிறார்கள்.

சீனாவை விட உயிர் பலிகளின் இத்தாலி அதிகமாக உள்ளது. சீனாவை விட மக்கள் பாதிப்பில் அமெரிக்கா எண்ணிக்கையில் தாண்டியுள்ளது.

இந்தியாவின் பிரதமர் பல முன்னெச்சரிக்கைகள் எடுத்து 144 தடை உத்தரவு பிறப்பித்து மக்கள் சுய ஊரடங்கு இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

பல நாட்டு அரசாங்கங்கள் ஆறு மாதத்திற்கு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

சீன நாட்டில் வுகான் மாகானத்தில் உள்ள குவானன் சந்தையில் தான் பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு முதல் முறையாக பரவியுள்ளது.

அந்த சந்தையில் இறால் விற்பனையாளர் 57 வயதான சியங் ஜிஸ்யான்  (zhang jixian) என்பவருக்கு 2019ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி இருமல் மற்றும் சளி தொல்லை ஏற்பட்டுள்ளது.

இரண்டு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால், வுகானில் உள்ள யூனியன் மருத்துவமனைக்கு டிசம்பர் 16ஆம் தேதி சென்றுள்ளார்.

அங்குள்ள மருத்துவர்கள் இவரை போன்ற அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனை வருவதாக கூறியுள்ளனர்.

குவானன் சந்தையிலிருந்து இந்த கொரோனா வைரஸ் பரவுவதை அறிந்தது சீன அரசு.

ஒருமாத காலம் சிகிச்சை பெற்று வந்த சியங், ஜனவரி மாத இறுதியில் கொரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ளார்.

சந்தையில் இருந்த பொது கழிவறையை பயன்படுத்தியதன் மூலம், எனக்கு இந்த வைரஸ் தொற்று பரவி இருக்கலாம் என்றும், தன்னோடு இருந்த உறவினர்களுக்கும் இந்த குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த சந்தையில் தொடர்பு இருந்த கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 24 பெயர்களில் இவரும் ஒருவர் என வுகான் மருத்துவ ஆணையம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இவரே ஒருவேளை முதல் நபராக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

3

கேஎஸ் ரவிக்குமாருக்கு உதவி இயக்குநராக நடித்த ஜனனி ஐயர் பர்த்டே டுடே!

0
Janani Iyer Birthday

Janani Iyer; கேஎஸ் ரவிக்குமாருக்கு உதவி இயக்குநராக நடித்த ஜனனி ஐயர் பர்த்டே டுடே! ஜனனி ஐயர் இனறு தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னையில் உள்ள கத்திவாக்கம் பகுதியில் கடந்த 1989 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி பிறந்தவர் ஜனனி ஐயர். பிராமின் குடும்பத்தைச் சேர்ந்த ஜனனி ஐயர் படிக்கும் போதே மாடலிங்கும் செய்து வந்துள்ளார்.

இதன் மூலம் கிட்டத்தட்ட 150 விளம்பரங்களில் நடித்துள்ளார். திரு திரு துறு துறு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால், இந்தப் படத்தில் அவரது ரோல் பேசப்படவில்லை. இதே போன்று சிம்பு, த்ரிஷா நடிப்பில் வந்த விண்ணைதாண்டி வருவாயா படத்தில் இயக்குநராக நடித்த கேஎஸ் ரவிக்குமாருக்கு உதவி இயக்குநராக ஜனனி ஐயர் நடித்தார்.

இந்தப் படமும் அவருக்கு பேசப்படவில்லை. அப்போதுதான் பாலாவின் அவன் இவன் படம் கைகொடுத்தது. இந்தப் படத்தில் போலீசாக நடித்திருந்தார்.

தொடர்ந்து, தெகிடி, அதே கண்கள், முப்பரிமாணம், பலூன், விதி மதி உல்டா, தர்மபிரபு என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தொல்லைகாட்சி, வேழம், கசட தபற ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

விஷால் உடன் மட்டும் ஜனனி ஐயர் நடித்துள்ளார். அஜித், விஜய், சிவார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி, விக்ரம் என்று எந்த நடிகருடனும் ஜனனி ஐயர் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

கிட்டத்தட்ட 9 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் ஜனனி ஐயர் இன்று தனது 31ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

அவருக்கு சினிமா பிரபங்கள், நண்பர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மிஸ்டர் புயல் இணையதளம் மூலம் ஜனனி ஐயருக்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். ஹேப்பி பர்த்டே ஜனனி ஐயர் மேம்…

3

Corona virus : ரோகித் சர்மா நிதி வழங்கி உள்ளார்

0

கொரோனா வைரஸ் தடுக்க பிரதமர் கொண்டதால் நேற்று வீராத் கோலி நிதி கொடுத்து நிலையில், இன்று வீரர் ரோகித் சர்மா நிதி வழங்கி உள்ளார்.

உலகத்தையே உலுக்கி வரும் இந்த கொரோனா வைரஸ் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து வருகிறது. பல லட்சம் மக்களை பாதிப்படையச் செய்கிறது.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஸ்தம்பித்துள்ளது. பெரிய இழப்புகளையும் சந்திக்க நேரிட்டுள்ளது.

ஜெர்மனி நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார இழப்பால் நிதியமைச்சர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டு இளவரசி (86 வயது) கொரோனா தொற்றால் காலமானார்.

பிரதமர் பிரிட்டன், பிரிட்டன் இளவரசர் போன்றவர்களின் இந்த கொரோனா  விட்டுவைக்கவில்லை.

மோடி நேற்று தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடம் உங்களால் முடிந்த நிதியை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்டு இருந்தார்.

அதற்கு டாடா குழுமம் 1500 கோடி ,நடிகர் அக்ஷய்குமார் 25 கோடி, சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம், பிசிசிஐ 51 லட்சம், ரகானே 10 லட்சம், ரெய்னா 52 லட்சம்
என பலரும் தங்களது நிதியை நன்கொடையாக கொடுத்து வருகின்றனர்.

நேற்று வீராத் கோலி தொகையை ஏதும் குறிப்பிடாமல் டுவிட்டரில் பிரதமரின் நிதிக்கு உதவி விட்டதாக அறிவித்து இருந்தார்.

அவர் மூன்று கோடி கொடுத்ததாக தகவலும் வெளியாகின ஆனால் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

தற்போது இந்தியாவின் தொடக்க மற்றும் அதிரடி ஆட்டக்காரர் மும்பையை சேர்ந்த ரோகித் சர்மா கொரோனா வைரஸ் தடுப்பதற்கு பிரதமர் நிதிக்கு 80 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

3

இன்றைய முக்கிய செய்திகள் 31.03.2020

0

இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள்

அவசியம் இல்லாமல் வெளியே வந்தால் நீதிமன்றம் அதற்கு உதவ முடியாது ஊரடங்கு உத்தரவை மீறி அவசியமில்லாமல் வெளியில் வந்தால் நீதிமன்றம் ஒன்று செய்ய முடியாது.

உதவியாளர் க்கு வைரஸ் பாதித்ததாக இஸ்ரேல் பிரதமர் தனியாக வைக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள 6 பேர் குணமடைந்துள்ளனர் சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றம்.

மருத்துவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் பணியாற்ற வேண்டும் டெல்லி அரசு உத்தரவு.

ஈரோட்டில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று.

இப்போது இருக்கும் சூழலில் பள்ளி கட்டணங்களை உடனடியாக கட்டச் சொல்லி நிர்பந்திக்கும் கல்வி நிலையங்களை கிரிமினல் வழக்கு தொடரப்படும் என கர்நாடக கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சமோசாக்களை கேட்ட இளைஞர். 

சீர்காழியில் கரோனா வைரஸ் பாதிப்பால் வெகுவிமர்சையாக நடைபெறவிருந்த கல்யாணம் 15 உறவினர்கள் மட்டும் பங்குபெற்று மணமகன்கள் உட்பட அனைவரும் சாதாரணமாக மாஸ்க் அணிந்து நடைபெற்றன.

தேனி உழவர் சந்தையில் 18 வகையான காய்கறிகள் அனைத்தும் ஒரு பையாக வைக்கப்பட்டு அதன் விலை வெறும் 150 ரூபாயாக விற்கப்பட்டது.

சீனாவில் மீண்டும் நாய், பூனை, வவ்வால் கறி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

தன்னுடைய பணிக்காக 20 மணிநேரம் நடந்தே சென்று பணியில் சேர்ந்தார் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான constable திக்விஜய் ஷர்மா.

பிப்ரவரி மாதத்தில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை 38 சதவீதம் குறைந்தது என்று கவுன்டர்பாயின்ட் கருத்துக்கணிப்பு.

பிரதமர் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இணைந்து நிதி வழங்கினார்.

 

 

3

15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சக்தி சக்தி “சக்திமான்”!

0
Shaktimaan on DD 1 Channel

15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சக்தி சக்தி “சக்திமான்”! நாளை முதல் மீண்டும் சக்திமான் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சக்திமான் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

திரையரங்குகள் மூடப்பட்டு சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு ஏன், குடும்ப பெண்களின் பொழுதுபோக்கு அம்சமான சீரியல்களின் ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புதிய தொடர்களின் எபிசோடுகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், இனி வரும் காலங்களுக்கு மீண்டும் பழைய தொடர்களையோ அல்லது புதிய தொடர்களின் எபிசோடுகளை மீண்டும் முதல் இருந்தோ ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், தூர்தர்ஷன் சேனலில், 1997 ஆம் ஆண்டுகளில் குழந்தைகளுக்கு சென்று சூப்பர்ஹிட் தொடராக வலம் வந்தது முகேஷ் கண்ணா நடிப்பில் வந்த சக்திமான் தொடரும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ தொடர் என்றும் சக்திமான் அறியப்பட்டது. 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான சக்திமான் 520 எபிசோடுகள் வரை ஓடியுள்ளது.

இன்றும் சக்திமானுக்கு 90ஸ் கிட்ஸ்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், அவர்களை மகிழ்விக்கும் வகையில், மீண்டும் சக்திமான் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆம், நாளை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தூர்தர்ஷன் நேஷனல் டிடி 1 சேனலில் பிற்பகல் 1 மணிக்கு சக்திமான் ஒளிபரப்பாகிறது.

பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்கிற ‘சக்திமான்’ கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இந்தத் தொடரைத் தயாரித்திருந்தார்.

இந்திய மக்களிடையே அதிக ஆதரவை பெற்று வந்த இந்த தொடரின் 2 ஆம் பாகமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

இது குறித்து முகேஷ் கன்னா கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக சக்திமான் 2 பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும், இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரியும் இருக்கும்.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு சக்திமான் 2ம் பாகம் குறித்து தெளிவாக சொல்லும் நிலையில் நான் இருப்பேன்.

அதற்கான எதிர்பார்ப்பு எப்போதும் இல்லாத அளவில் தற்போது அதிகமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

சக்திமான் 2 ஆம் பாகம் வருவதற்கு முன்னதாக மீண்டும் சக்திமான் முதல் பாகம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதே போன்று ராமாயணம், மகாபாரதம் ஆகிய தொலைக்காட்சி தொடர்களும் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

Corona : எந்த ராசிக்காரர்களுக்கு கொரோனா பரவாது?

0

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் பரவி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்று பல லட்சம் மக்களை பாதித்து வருகிறது.

இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகள் குறைவான வைரஸ் ஸ்தம்பித்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுபடுத்த முடியாமல் அந்த நாட்டு அரசாங்கங்கள் தவித்து வருகிறார்கள்.

சீனாவை விட உயிர் பலிகளின் இத்தாலி அதிகமாக உள்ளது. சீனாவை விட மக்கள் பாதிப்பில் அமெரிக்கா எண்ணிக்கையில் தாண்டியுள்ளது.

இந்தியாவின் பிரதமர் பல முன்னெச்சரிக்கைகள் எடுத்து 144 தடை உத்தரவு பிறப்பித்து மக்கள் சுய ஊரடங்கு இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

பல நாட்டு அரசாங்கங்கள் ஆறு மாதத்திற்கு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

தற்போது ஜோதிடர்கள் சொல்லும்படி இந்த ராசிக்காரர்களுக்கு தான் கொரோனா பரவும், அந்த ராசிக்காரர்களுக்கு பரவாது என்றும் கூறிவருகிறார்கள்.

இது மிகப் பெரிய தவறான செய்திகளில் ஒன்று. மக்கள் அனைவரும் சமூக விலகலை பின்பற்ற வேண்டும்.

வெளியில் சென்று வீடு திரும்பும் பொழுது கைகளை தழுவ வில்லை என்றால் கண்டிப்பாக இந்த கரோனா வைரஸ் பரவும்.

கண்டிப்பாக கைகளை 20 நொடிகள் சோப் போட்டு கழுவ தாழ்அமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

கொரோனா வைரஸ்க்கு ராசி, நட்சத்திரம் கண்களுக்கு தெரியாது. வைரஸுக்கு மக்கள் மீது பரவ தான் தெரியும்.

பரவி மக்களை கொல்ல தான் தெரியும். அதை கட்டுப்படுத்தும் வரை மக்கள் அனைவரும் வீட்டினுள்ளேயே சமூக விதிகளை பின்பற்ற வேண்டும்.

3

அஜித் மங்காத்தா படத்தில் ஏன் கைவிலங்கு டாலர் அணிந்திருந்தார் தெரியுமா?

0
Thala Mankatha Movie

Mankatha; மங்காத்தா படத்தில் அஜித் கைவிலங்கு வடிவிலான டாலர் ஒன்றை கழுத்தில் அணிந்திருந்ததற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

அஜித் மங்காத்தா படத்தில் கைவிலங்கு வடிவிலான டாலர் அணிருந்திருந்தார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜூன், த்ரிஷா, ராய் லட்சுமி, பிரேம்ஜி அமரன், வைபவ், ஆண்ட்ரியா, அஞ்சலி, மகத் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் மங்காத்தா.

விநாயக் மகாதேவ் என்ற கதாபாத்திரத்தில் மும்பையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அசிஸ்டன்ட் கமிஷனர்.

என்னதான் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்திருந்தாலும், கோடிக்கணக்கான பணத்தை வில்லன் கும்பலிடமிருந்து கொள்ளையடிப்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது.

அதற்கு சரியாக ஸ்கெட்ச் போட்டு, பிளான் பண்ணி பணத்தை ஆட்டையபோட்டா, அவரை ஏமாற்றி பிரேம்ஜி பணத்தை கொண்டு செல்வார்.

இறுதியில் பணம், அஜித்துக்கு சென்றதா, இல்லை போலிசுக்கா, இல்லை வில்லன்களிடமே சென்றதா என்பதுதான் படத்தின் கதை.

அஜித்தை வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்டிய இந்தப் படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

இந்த நிலையில், அஜித் மங்காத்தா படத்தில் ஏன் கைவிலங்கு வடிவிலான டாலரை அணிந்திருந்தார் என்பதற்கான காரணம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இது குறித்து மங்காத்தா படத்தின் வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் கூறுகையில், பணத்தை கொள்ளையடிக்கும் ஒரு டானாக நடித்திருந்த அஜித் முதலில் பணத்தைப் போறு இருக்கும் டாலர் போன்ற ஒன்றை அவரது கழுத்தில் அணிய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால், படத்தின் கிளைமேக்ஸில் பணம் தீயில் எரிவது போன்று காட்சி வருவதால், அஜித் டாலர் போன்ற ஒன்றை தான் அணிய வேண்டும் என்று வெங்கட் பிரபு கூறியதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு அஜித் மறுப்பு தெரிவிக்கவே, தான் ஒரு போலீஸ் என்பதால், கைவிலங்கு வடிவில் இருக்கும் டாலரை கழுத்தில் அணிந்து கொள்ள முடிவு செய்தார்.

இதற்கு இயக்குநர் தரப்பும் ஓகே சொல்லவே படம் முழுவதும் அஜித் கைவிலங்கு வடிவிலான டாலர் ஒன்றை கழுத்தில் அணிந்திருந்தார் என்று வாசுகி பாஸ்கர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.20 முதல் 40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.130 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்கிறது விக்கிப்பீடியா தகவல்.

நேற்று டுவிட்டரில் #Mankatha ஹேஷ்டேக் உருவாக்கி தல ரசிகர்கள் கொண்டாடினர். ஏன் என்று பார்த்தால், கேடிவியில் பிற்பகல் 1 மணிக்கு மங்காத்தா படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

எத்தனையோ முறை யூடியூப்பிலும், டவுன்லோடு செய்தும் படத்தை பார்த்திருந்தாலும், தற்போது கொரோனாவால் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலையில், கேடிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது கொண்டாட்டமான விஷயம்தானே. அதான் தல ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.

3

அரசுக்கு உதவிய அஜித்: 3 லட்சம் ஸ்கொயர் மீட்டர், 900 லிட்டர் மருந்து தெளித்த தக்‌ஷா ட்ரோன்!

0
Dhaksha Drones

கொரோனா வைரஸ் காரணமாக, மக்களை காப்பாற்றும் நோக்கத்தில் தமிழக அரசு தல அஜித்தின் உதவியை நாடியுள்ளது. அதற்கேற்ப அஜித்தும் மக்களுக்காக உதவி செய்துள்ளார்.

உலகத்தையே அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ். சீனாவில் தொடங்கிய தென் கொரியா, ஜப்பான், ஈரான், அமெரிக்கா, சிங்கப்பூர் என்று 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளைக் கடந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக, 32 பேர் பலியாகியுள்ளார். நாளுக்கு நாள் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என்று பலரும் நமக்காக இரவு, பகலாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ்க்கு எதிராக தல அஜித்தின் உதவியை தமிழக அரசு நாடியுள்ளது. ஏனென்றால், தமிழகம் முழுவதும் கொரோனா எதிராக மருந்து தெளித்து வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், அங்கு வேலையாட்களைக் கொண்டு மருந்து தெளிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.

அதற்காகத்தான் அரசு அஜித்தின் உதவியை நாடியுள்ளது. அஜித், பைக், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் ஸ்பெஷலிஸ்ட் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது.

கடந்தாண்டு அஜித் தலைமையிலான எம்.ஐ.டி. மாணவர்கள், ஆளில்லா விமானமான தக்‌ஷா விமானம் கண்டுபிடித்திருந்தனர்.

அந்த ட்ரோனை உருவாக்குவதற்கு அஜித்தான் முழுக்க முழுக்க எம்.ஐ.டி. மாணவர்களுக்கு பயிற்சியும் கொடுத்திருந்தார்.

அவர்களை வைத்து அஜித் உருவாக்கிய தக்‌ஷா என்ற ஆளில்லா விமானம் உலக அளவில் பல சாதனைகளை படைத்தது. அதுவும், உலகத்திலேயே அதிக நேரம் கிட்டத்தட்ட 6 மணி நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமான என்ற சாதனையை தக்‌ஷா ட்ரோன் படைத்திருந்தது.

அதோடு, சுமார் 10 கிலோ எடைகொண்ட ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தக்‌ஷா ட்ரோனால் எடுத்துச் செல்ல முடியும் என்பதையும் நிரூபித்துக் காட்டியது.

இந்த நிலையில்,தான், அஜித்தின் தக்‌ஷா ட்ரோனை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் மருந்துகளை தெளித்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

உலக அளவில் சாதனை படைத்திருந்தாலும் தமிழக மக்களுக்கே உதவுகிறது என்று எண்ணும் போது மனதில் சந்தோஷம்தான்.

வெறும் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த அஜித், கண்டுபிடித்த ட்ரோன் தமிழக மக்களுக்கே உதவியாக இருக்கிறது.

இந்த தக்‌ஷா ட்ரோன் மூலமாக இதுவரை 3 லட்சம் ஸ்கொயர் மீட்டர் வரையில் 900 லிட்டர் கிருமி நாசினி மருந்துகளை தெளித்துள்ளனர்.

இதன் காரணமாக தல ரசிகர்கள் அஜித்தை கொண்டாடிவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அரசுக்கு உதவியாக இருந்த அஜித்திற்கும், அவரது குழுவினர் மற்றும் தக்‌ஷா ட்ரோனுக்கும் வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துள்ளனர்.

அஜித் ரசிகர்களுக்கு ஒரேயொரு ஏக்கம் மட்டும்தான் இப்போது வரையிலும் இருக்கிறது. இதுவரை கொரோனா விழிப்புணர்வு வீடியோ எதுவும் அஜித் பதிவிடவில்லை என்பதுதான்.

யார் சொன்னால் கேட்கிறார்களோ இல்லையோ ஆனால், அஜித் சொன்னால், அவரது ரசிகர்கள் கண்டிப்பாக கேட்பார்கள். ஆதலால், கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ அஜித் வெளியிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

3

ஒலிம்பிக் போட்டி தேதி அறிவிப்பு

0

கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டியை அடுத்த வருடம் ஜூலை 23 தேதி ஆரம்பமாகும் என ஒலிம்பிக் நிர்வாகம்
அறிவித்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது.

ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகின்றன.

சீனாவில் விடவும் அமெரிக்காவில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இத்தாலி சீனாவைவிட இறப்பு எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.

இந்த வருடம் ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் நடைபெறுமா என்கிற சந்தேகம் ஒலிம்பிக் ரசிகர்களிடையே இருந்து வந்தது.

ஜப்பான் அரசு கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக்கை அடுத்த வருடம் நடத்தலாம் என ஒலிம்பிக் நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டது

ஜப்பான் அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் ஒலிம்பிக்கின் உருவாகும் ஒலிம்பிக் போட்டியை அடுத்த வருடம் நடத்தலாம் என முடிவெடுத்து தேதி அறிவித்துள்ளது.

அடுத்த வருடம் 2021 ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.

ஒலிம்பிக் நடக்காது என்கிற சந்தேகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வருடம் கண்டிப்பாக ஒலிம்பிக்கில் பதக்கம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த வீரர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கும்.

3