Home Blog Page 277

மைக்கேல் ஜாக்சன் இறந்தது போல் நாடகம்? டிஎன்ஏ டெஸ்ட் நடக்குமா?

0
மைக்கேல் ஜாக்சன் ஜெர்சியோ கோர்டெஸ்

மைக்கேல் ஜாக்சன் இறந்தது போல் நாடகம் ஆடுகிறார். டிஎன்ஏ டெஸ்ட் செய்ய வேண்டும் என சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

ரப்பர் உடம்பு

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகில் உள்ள அனைவரையும் தன்னுடைய ரப்பர் உடம்பு நடனத்தால் அசரவைத்தவர் மைக்கேல் ஜாக்சன்.

மைக்கல் ஜாக்சன் கடைசி நிகழ்ச்சியில் நடனம் ஆடப்போவதாக அறிவித்தார். ஆனால் அதற்கு முன்பே 2009-ம் ஆண்டு இறந்து விட்டார்.

ஜெர்சியோ கோர்டெஸ்

10 வருடம் கழித்து மைக்கேல் மறையவில்லை. உயிருடன் தான் உள்ளார் என அவரது ரசிகர்கள் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

இந்த சர்சைக்கு காரணம் அர்ஜென்டினாவை சேர்ந்த பாப் நடனக் கலைஞர் ஜெர்சியோ கோர்டெஸ். இவர் மைக்கேல் ஜாக்சனை போன்றே மேக்கப் செய்துகொண்டு நடனம் ஆடி வருகிறார்.

சமீபத்தில் செர்ஜியோ கோர்டெஸ் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில்,  என் ரசிகர்களுக்கு வணக்கம். உங்களை மிகவும் நேசிக்கிறேன். என்னுடைய இசை நிகழ்ச்சியை கட்டாயம் பார்க்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதைப் பார்த்த மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள். இவர் தான் ஒரிஜனல் மைக்கேல் ஜாக்சனே. இறந்து போனது வேறு ஒருவர்.

இவர் உண்மையான மைக்கல் ஜாக்சன் இல்லை எனில் டி.என்.ஏ. பரிசோதனை செய்து நிரூபிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

டி.என்.ஏ. சோதனை

இதுகுறித்து செர்ஜியோ கோர்டெஸ் கூறியதாவது, நான் உண்மையான மைக்கேல் ஜாக்சன் கிடையாது. டி.என்.ஏ. சோதனை செய்யத் தயார்.

நான் அந்த வீடியோவில் பேசியது, பத்திரிக்கை நிரூபர் மைக்கேல் வேடமிட்டு பேச சொன்னார். அதனாலேயே அப்படி பேசினேன் எனத் தெரிவித்தார்.

இந்த வீடியோவைப் பார்த்து இவர், ஒரிஜினல் மைக்கேல் ஜாக்சனா? என நீங்களே முடிவு செய்யுங்கள்.

3

இரண்டு மணி நேரப் போராட்டம்; பத்திரமாக மீட்கப்பட்ட நித்தீஷ்

0
இரண்டு மணி நித்தீஷ்

இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு சுவர் இடுக்கில் மாட்டிக்கொண்ட சிறுவன் நித்தீஷ் பத்திரமாக மீட்கப்பட்டான்.

சென்னை செங்குன்றம் அருகில் உள்ள முண்டியம்மன் நகரைச் சேந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் நித்தீஷ் (12) தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நித்தீஷ் நேற்று இரவு, தெருவில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது அவனுடைய நண்பர்கள் வீட்டின் முன் இருந்த ஒரு சிறிய சுவற்றின் இடுக்கில் நுழைய முடியுமா? எனக் கேட்டுள்ளனர்.

சிறுவயதில் இருந்து நுழைந்து விளையாடிய சுவர் தானே என்று ஒரு வேகத்தில் லபக் என் சுவற்றின் நடுவில் புகுந்தான் அச்சிறுவன்.

பின்பு தான் அவனுக்கு புரிந்தது… நம் உடல் சற்று தடித்து விட்டோமே என்று. உடனே பதற்றத்தில் அலறித் துடித்தான்.

 

அவனுடைய பெற்றோர்கள், அக்கம் பக்கத்தினர் வந்து முயற்சித்துப் பார்த்தனர். அப்பொழுதும் அவனை வெளியே கொண்டு வர முடியவில்லை.

உடனே, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் சிறுவன் மயக்கமாகிவிட்டான்.

தீயணைப்பு வீரர்கள் சிறுவனின் ஆடையைக் கத்தரிக்கோலால் கிழித்து அகற்றினர். பின்னர் சுவரை லேசாகப் பெயர்த்து சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே நித்தீஷை பத்திரமாக மீட்க முடிந்தது.

3

கோப்ரா – Cobra: விக்ரம் நடிக்கும் புதிய படத் தலைப்பு!

0
கோப்ரா cobra vikram movie still first look

கோப்ரா – Cobra: விக்ரம் நடிக்கும் புதிய படத் தலைப்பு ‘கோப்ரா‘ என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

The King Cobra

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தலைப்பே மிகவும் டெரராக வைத்துள்ளனர்.

Cobra என்ற தலைப்பை விக்ரமின் புதிய படத்திற்கு சூட்டியுள்ளனர். இந்த தலைப்பை கிறிஸ்துமஸ் அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Kobra என்றால் ராஜ நாகம். படத்தில் விக்ரம் கெட்டப் எப்படி இருக்கும் என தெரிய வேண்டுமானால் கிறிஸ்துமஸ் வரை காத்திருக்கவும்.

படம் எப்படி?

விக்ரம் தற்பொழுது, துருவநட்சத்திரம் படத்தில் நடித்து முடித்து விட்டார். ஆர்.எஸ். விமல் இயக்கத்தில் ‘மகாவீர் கர்ணா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் தலைப்பை கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட முடிவு செய்துள்ளனர். இருப்பினும், இப்படம் எப்பொழுது முடிவடையும்?

எப்பொழுது ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு உள்ளனர்? என்பது பற்றிய தகவல்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

3

புரட்சித் தலைவி ஜோதிகா; நக்மாவின் மாஸ்டர் ப்ளான்!

0
புரட்சித் தலைவி ஜோதிகா நக்மாவின் மாஸ்டர் ப்ளான்

புரட்சித் தலைவி ஜோதிகா என்றவுடன் பதற வேண்டாம். ஜோதிகாவை அரசியலுக்குள் இழுக்கும் முயற்சியில் அவருடைய அக்கா, நக்மா மும்முரம் காட்டி வருகிறார்.

புரட்சிப் பட்டம்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு, கட்சியைக் கைப்பற்றியவர் ஜெயலலிதா. அன்று முதல் புரட்சித் தலைவியாக உருவெடுத்தார்.

அதன் பிறகு பல நடிகர்கள் புரட்சி என்ற வார்த்தையைப் பெயருக்கு முன் சேர்த்துக் கொண்டு நாற்காலி கனவில் மிதந்தனர். ஆனால் அது எல்லோருக்குமே எட்டாக்கனியாக உள்ளது.

ஜெயலலிதா-கருணாநிதி என அடுத்தடுத்து மரணம். அரசியலில் அடுத்து நிலைக்கப்போகும் தலைவர்கள் யார்? கட்சிகள் எது? என ஒரு பெரிய கேள்விக்குறி உருவாகியுள்ளது.

சீனியர் நக்மா

கமல் வந்துவிட்டார், ரஜினி வரப்போகிறார், விஜய் வந்துவிடுவார் என தமிழக அரசியலே ஒரு குழப்பமான சூழலை நோக்கி நகர்ந்து கொண்டு உள்ளது.

ரஜினி, கமல் இவர்களுடன் ஜூனியர் நடிகையாக அறிமுகமான நக்மா, அரசியலில் சீனியராக இருவருக்கும் முன்பே குதித்துவிட்டார்.

நக்மாவின் அரசியல் பார்வை தமிழகம் பக்கம் திரும்பி உள்ளது. தமிழகத்தில் தங்கை ஜோதிகா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிகவும் நற்பெயர் உண்டு. அதைப் பயன்படுத்திக்கொள்ள நக்மா முயற்சித்து உள்ளார்.

அரசியல் பக்கமே வரமாட்டேன் எனச் சொன்ன நடிகர் கமலே கட்சி துவங்கிவிட்டார். அதனால் எந்த புத்துக்குள், எந்த பாம்பு இருக்கும் என எப்போதும் உறுதியாக சொல்ல முடியாது.

நக்மாவின் மாஸ்டர் ப்ளான்

விசயம் என்னன்னா? தம்பி படத்திற்கு பிறகு, ஜோதிகா 8 படங்களில் நடிக்கத் திட்டமிட்டு உள்ளார். இதற்காக நக்மா ஒரு பெரும் தொகையை முதலீடு செய்து மாஸ்டர் ப்ளான் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இந்த 8 படங்களுமே மக்கள் பிரச்சனைகள், பெண்களின் பெருமைகள் பேசும் படங்கள். மக்களிடம் ஜோதிகாவின் செல்வாக்கை உயர்த்தும் விதமாக இக்கதைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

புரட்சித் தலைவி ஜோதிகா

இப்படங்கள் மூலம் திட்டமிட்டபடி மக்களிடம் செல்வாக்கு உயர்ந்தால், 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகும் தமிழக அரசியலில் வெற்றிடம் தொடர்ந்து நிலவினால், ஜோதிகாவும், புரட்சித் தலைவி போன்று ஒரு அவதாரம் எடுப்பார் என்பது உறுதி.

அதேவேளை அவர் தேசியக்கட்சியில் இணைவாரா? புதிய கட்சி துவங்குவாரா? அவருடைய கணவரும் நேரடி சப்போர்ட் கொடுப்பாரா? என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியவரும்.

3

ராகுல் ட்ராவிட் மகன் இரட்டை சதம்; 295 ரன்கள்

0
ராகுல் ட்ராவிட் மகன்

ராகுல் ட்ராவிட் மகன் சமித் ட்ராவிட் அண்டர் 14 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரட்டை சதம் உட்பட 295 ரன்கள், 3 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

கிரிக்கெட் சம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தந்தையை போன்றே இந்திய அணியில் இடம் பெற்று சாதிக்க வேண்டும் என கடுமையாக பயிற்சி பெற்று வருகிறார்.

அவரை போன்றே முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ராகுல் ட்ராவிட் மகன் சமித் ட்ராவிட் 14 நான்கு வயதில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

டெஸ்ட் தொடர்

கர்நாடகா மாநில கிரிக்கெட் அமைப்பு 14 வயதிற்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தியது.

வைஸ்   ப்ரெசிடென்ட் லெவன் அணியும், தர்வாத் ஜோன் அணியும் மோதியது. வைஸ் ப்ரெசிடென்ட் அணிக்காக சமித் ட்ராவிட் விளையாடினார்.

இரட்டை சதம்

அப்போட்டியில் 256 பந்துகளில் 22 பவுண்டரிகள் உட்பட 201 ரன்கள் விளாசினார் சமித். இரண்டாவது இன்னிங்க்ஸிலும் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் குவித்தார்.

பேட்டிங் மட்டுமல்ல பந்து வீச்சிலும் சமித் படு சுட்டி. 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருப்பினும் இந்தப் போட்டி ட்ராவில் முடிந்தது.

முதல் போட்டி அல்ல

இது ஒன்றும் புதிதல்ல, இதற்கு முன் கர்நாடக மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 150 ரன்கள் குவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த டைகர் கோப்பை போட்டியில் 125 ரன்கள் குவித்து அசத்தினார்.

தடுப்புச்சுவர் ட்ராவிட்

இந்திய அணியின் தடுப்புச்சுவர் எனப் பெயர் பெற்றவர் ராகுல் ட்ராவிட். ட்ராவிட்டின் விக்கெட்டை கைப்பற்றுவது அவ்வளவு எளிதல்ல.

அதேபோல், அவருடைய மகனும் விக்கெட்டையும் எளிதில் விடாமல் ரன்களையும் வேகமாக குவிக்கின்றார். மேலும் பவுலிங்கிலும் அசத்துகிறார்.

3

தம்பி திரைவிமர்சனம் – இப்டி சொதப்பிட்டியே ஜீத்து!!!

0
தம்பி திரைவிமர்சனம் thampi review drishyam 2

தம்பி திரைவிமர்சனம் (Thampi Review): பாபநாசம் படத்திற்குப் பிறகு தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கி உள்ள இரண்டாவது படம்.

அப்பா சத்யராஜ், அக்கா ஜோதிகா, தம்பி கார்த்தி இவர்கள் மூவரையும் சுற்றி நடக்கக் கூடிய கதை தான் தம்பி.

த்ரிஷ்யம் விமர்சனம் (Drishyam Review):

த்ரிஷ்யம் (பாபநாசம்) படத்தில் மகள் செய்த கொலையை மறைக்க அப்பாவான மோகன்லால் பல கில்லாடித் தனமான காரியங்களை செய்வார்.

அவரை எப்படியாவது மாட்டிவிடத் துடிக்கும் ஒரு போலீஸ். ஊர் மக்களிடம் மிகவும் நல்ல பெயர் எடுத்தவர் மோகன்லால் என…

ஒரு பக்கம் பரபரப்பு, மறுபக்கம் விறுவிறுப்பு; இன்னொரு புறம் காமெடி என நம்மை எங்குமே அசையவிடாமல் திரைக்கதையால் சீட்டிலேயே கட்டிப்போட்டு அமர வைத்திருப்பார் ஜீத்து ஜோசப்.

புல் ஸ்டாப்.. என்ன, தம்பி திரைவிமர்சனம் னு சொல்லிட்டு த்ரிஷ்யம் விமர்சனம் சொல்லிட்டு இருக்கேன்னு கேக்குறீங்களா.. விஷயம் இருக்கு..

நீங்க தம்பி படம் பாத்திருந்தா? நா என்ன சொல்லப் போறேன்னு முதல் வரியிலேயே கண்டு பிடிச்சிருப்பீங்க…

தம்பி படம் எப்படி?

ஓபன் பண்ணுனா டாப் ஆங்கிள் நான்கு லாரி ப்ளஸ் வடிவில் நிற்கிறது. ஆகா திரும்ப ஒரு லாரி கதையா என நம்ம மைண்ட தீரன், கைதி ரேஞ்சுக்கு யோசிக்க வக்கிறாரு இயக்குனர்.

அந்த லாரி சீனோட சரி.. படத்தின் கதை, இடைவேளை வரை படுத்து தூங்க வச்சிடுச்சு. காரணம், த்ரிஷ்யம் படத்தின் கதையையே வேறு கோணத்தில் கூறியுள்ளார் இயக்குனர்.

த்ரிஷ்யம் 2:

படம் முழுவதும் நாம் கதையை கண்டுபிடித்து விடக்கூடாது என பல இடங்களில் நம்மை வேண்டும் என்றே வேறுவிதமாக யோசிக்க வைத்துவிட்டு கடைசி 15 நிமிடத்தில் பரபரப்புடன் த்ரிஷ்யம் கதையை கூறிவிட்டார் இயக்குனர்.

க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் மிகவும் சுவாரஸ்யம் என்றாலும், அந்த ட்விஸ்டை கண்டுபிடித்து விடக்கூடாது என வைக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் படத்திற்கு பலவீனமாக அமைந்துவிட்டது.

கிளைமேக்ஸ் முடிஞ்சதும் எனக்கு என்ன தோனுச்சுன்னா..? சத்யராஜ் கதாப்பாத்திரத்திற்கு பதில் மோகன்லாலை பிக்ஸ் பண்ணி த்ரிஷ்யம் 2 என்று த்ரிஷ்யம் தொடர்ச்சியுடனே இப்படத்தை எடுத்து இருக்கலாம் என்று தோன்றியது! இதுல ஒன்னும் தப்பில்லையே?

இப்டி சொதப்பிட்டியே ஜீத்து:

ஆரம்பத்திலேயே கதையில் ஒரு பரபரப்பு இருந்திருந்தால் இந்த படம் வேற லெவல் படம். அந்த பரபரப்பு என்ற ஒன்று தான் இப்படத்தை சுமாரான படமாக மாற்றியுள்ளது.

தீரன், கைதி என முரட்டு ஹிட் குடுத்த ஹீரோ. மெமரிஸ், த்ரிஷ்யம் என திரைக்கதையில் கட்டிப்போட்ட இயக்குனர். இப்படி பெரிய எதிர்பார்ப்பின் உச்சத்தில் படம் பார்க்கச் சென்றேன்.

இப்டி சொதப்பிட்டியே ஜீத்து ஜோசப் நண்பா…

3

காத்திருந்து புடுசிங்களா; கலாய்க்கும் நெட்டிசன்கள்!

0
காத்திருந்து

காத்திருந்து பிடித்தோம் என நேற்று ஏலத்தில் எடுக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களைப் பற்றி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கருத்து தெரிவித்தார்.

என்னது.. இந்த வீரரை காத்திருந்து புடிச்சீங்களா? என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வாளர்களை கலாய்க்க துவங்கிவிட்டனர் நெடிசன்களும், ரசிகர்களும்.

நேற்றைய ஏலத்தில் சாம் கர்ரனை 5.50 கோடிக்கும், பியூஸ் சாவ்லாவை 6.75 கோடிக்கும் சிஎஸ்கே அணி விலைக்கு வாங்கியது.

சாம் கர்ரனை தேர்வு செய்ததற்காக பலரும் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் பியூஸ் சாவ்லாவை தேவையில்லாமல் அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டதாக கருத்துக்கள் நிலவியது.

சிஎஸ்கே அணியில் ஏற்கனவே ஜடேஜா, இம்ரான் தாஹிர், ஹர்பஜன், கரன் சர்மா என 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது மேலும் ஒரு ஸ்பின்னர் தேவைதானா?

பவுலிங்கை நன்கு பலப்படுத்தி எதிரணியினரை திணறடிக்கவே சிஎஸ்கே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது.

இருப்பினும், பியூஸ் சாவ்லாவின் வருகை எந்த விதத்தில் சிஎஸ்கேவுக்கு உதவும் என்பதை போட்டியின்போது சாவ்லா நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

3

ஒரு பக்கம் ஏலம்; மறுபக்கம் ஓலம் – பற்றி எரியும் இந்தியா!

0
ஒரு பக்கம் ஏலம்

ஒரு பக்கம் ஏலம்; மறுபக்கம் ஓலம் என இந்திய மாநிலங்கள் குடியுரிமை சட்ட மசோதாவால் பற்றி எரிந்து கொண்டு உள்ளது.

ஐபிஎல் 2020 போட்டிகளுக்கான வீரர்கள் கொல்கத்தாவில் ஏலம் விடப்பட்டு வருகின்றனர். கோடிகளை கொட்டி வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர் ஐபிஎல் அணி நிர்வாகிகள்.

அதேவேளையில், உத்திரப்பிரதேச தலைநகர் லக்னோவில் 4 மீடியா வாகனம், 3 பேருந்து, 10 கார்கள், இருசக்கரவாகனங்கள் 10 என தீயில் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் தடை அமலில் உள்ள நிலையில் லக்னோவில் போராட்டம் வெடித்தது.

இப்போராட்டத்தின்போது 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகியது. நகரமே தீ பிழம்பாக காட்சியளித்துள்ளது.

கோராக்பூரில் தடையை மீறி சமாஜ்வாடி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாரணாசியிலும் தடையை மீறி போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதுகுறித்து உத்திரப்பிரதேச டி.ஜி.பி. ஓபி சிங் கூறியதாவது, லக்னோ, வாரணாசி, அலிகார் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

3

10 கோடியா? 15கோடியா? வாயடைக்கவைத்த மேக்ஸ்வெல்-கும்மின்ஸ்

0
10 கோடியா மேக்ஸ்வெல் கும்மின்ஸ்

10 கோடியா? வாயடைக்கவைத்த மேக்ஸ்வெல். 15.50 கோடிக்கு ஏலம்போன கும்மின்ஸ்.! IPL 2020 Auction.

கடந்த ஆண்டு மேக்ஸ்வெல்லை 9 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி. ஆனால் இந்த வருமோ மேக்ஸ்வெல்லுக்கு மேலும் கிராக்கி எகிறிப்போனது.

மேக்ஸ்வெல் ஆரம்ப விலை 2 கோடி. ஏலம் கேட்கப்பட்ட உடனேயே அவரின் விலை படிப்படியாக உயர்ந்தது.

இந்த வருடத்தில் 10 கோடிக்கு மேல் விலைபோன முதல் ஏல வீரர் என்ற பெருமையையும் மேக்ஸ்வெல் தட்டிச்சென்றார்.

10.75 கோடி கொடுத்து பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. இது சற்று அதிகம் என்றே பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல், ஆஸ்திரேலிய அணி வீரர் பாட் கும்மின்ஸ் 15.50 கோடி விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார்.

ஏலத்திற்கு வராதவர்கள் பட்டியலில் விராட் 17 கோடி, தோனி 15 கோடி, ரிஷப் பண்ட் 15 கோடி, ரோஹித் சர்மா 15 கோடி என அணியில் தக்கவைக்கப்பட்டனர்.

தற்பொழுது ஏலத்தில் 15.50 கோடிக்கு கும்மின்ஸ் எடுக்கப்பட்டதால், விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் உள்ளார். கிறிஸ் மோரிசும் 10 கோடி பட்டியலில் இணைத்துள்ளார்.

சாம் கர்ரன்னை 5.50 கோடிக்கும், பியுஸ் சாவ்லாவை 6.75 கோடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்திய வீரர்களான யூசுப் பதான், பின்னி, மோஹித் சர்மா ஆகியோர் இந்த முறை ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

3

ஐபிஎல் ஏலம் 2020: எந்த அணிக்கு எத்தனை கோடிகள்

0
ஐபிஎல் ஏலம் 2020 கோடிகள்

ஐபிஎல் ஏலம் 2020-ம் ஆண்டிற்கான போட்டிகளுக்கு கொல்கத்தாவில் இன்று ஏலம் நடக்க உள்ளது. இதில் 2 கோடி வீரர்கள் பட்டியல், 1.5 கோடி வீரர்கள் பட்டியல் என ஆரம்பவிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் எந்த வீரர் அதிக விலை கொடுத்து வாங்க உள்ளனர் என இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

ஐபிஎல் அணிகளின் பட்ஜெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

தேவையான வீரர்கள்: ஐந்து (2 வெளிநாடு, 3 உள்நாடு). இதுவரை செலவு செய்த தொகை 70.40 கோடிகள்.

மீதம் உள்ள தொகை 14.60 கோடி. இந்த தொகையை வைத்துக்கொண்டு ஐந்து வீரர்களை சென்னை அணி ஏலம் எடுக்க வேண்டும்.

டெல்லி கேப்பிடல் அணி

தேவையான வீரர்கள்: 11 (5 வெளிநாடு, 6 உள்நாடு). இதுவரை செலவு செய்த தொகை 57.15 கோடிகள்.

மீதம் உள்ள தொகை 27.85 கோடி.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

தேவையான வீரர்கள்: 9 (4 வெளிநாடு, 5 உள்நாடு). இதுவரை செலவு செய்த தொகை 42.30 கோடிகள்.

மீதம் உள்ள தொகை 42.70 கோடி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தேவையான வீரர்கள்: 11 (4 வெளிநாடு, 7 உள்நாடு). இதுவரை செலவு செய்த தொகை 49.35 கோடிகள்.

மீதம் உள்ள தொகை 35.65 கோடி.

மும்பை இந்தியன்ஸ்

தேவையான வீரர்கள்: 7 (2 வெளிநாடு, 5 உள்நாடு). இதுவரை செலவு செய்த தொகை 71.95 கோடிகள்.

மீதம் உள்ள தொகை 13.05 கோடி.

ராஜஸ்தான் ராயல்ஸ்

தேவையான வீரர்கள்: 11 (4 வெளிநாடு, 7 உள்நாடு). இதுவரை செலவு செய்த தொகை 56.10 கோடிகள்.

மீதம் உள்ள தொகை 28.90 கோடி.

ராயல் சேலஞ்சர் பெங்களூரு

தேவையான வீரர்கள்: 12 (6 வெளிநாடு, 6 உள்நாடு). இதுவரை செலவு செய்த தொகை 57.10 கோடிகள்.

மீதம் உள்ள தொகை 27.90 கோடி.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

தேவையான வீரர்கள்: 7 (2 வெளிநாடு, 5 உள்நாடு). இதுவரை செலவு செய்த தொகை 68 கோடிகள்.

மீதம் உள்ள தொகை 17 கோடி.

3