Home Blog Page 308

அக்தர் திரும்பி வந்துட்டாரு; தொடை நடுங்கும் பேட்ஸ்மேன்கள்!

0
அக்தர் திரும்பி வந்துட்டாரு

அக்தர் திரும்பி வந்துட்டாரு; தொடை நடுங்கும் பேட்ஸ்மேன்கள்!

கிரிக்கெட்டி விளையாட்டில் வேகப்பந்து வீச்சாளர் என்றாலே எல்லாருக்கும் நினைவுக்கு வரும் முதல் வீரர் பாகிஸ்தானின் ஷோயப் அக்தர்.

அக்தர் பந்து வீச வந்தாலே எதிரே நிற்கும் பேட்ஸ்மேன்கள் தொடை நடுங்குவார்கள். மிடில் ஸ்டம்ப் தெறித்து ஓடும்.

வேகப்பந்து வீச்சில் மிகவும் பேர் போன அக்தர் மீண்டும் கிரிக்கெட் விளையாடப் போவதாக அறிவித்துள்ளார்.

மேலும் தற்பொழுது கிரிக்கெட் பார்க்கும் 2k குழந்தைகளுக்கு வேகம் என்றால் என்னவென்று நான் காட்டுகிறேன்.

கபாலி பட ரஜினி வசனம் போல, 25 வருசத்துக்கு முன்னாடி கபாலி எப்படி போனானோ அப்படியே வந்துட்டானு சொல்லு என்ற ஸ்டைலில் ட்வீட் செய்த அக்தர் பிப்ரவரி 14-ஆம் தேதி வருவதாக கூறினார்.

பிப்ரவரி 14-ம் தேதி பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் தொடங்குகிறது, இதனையடுத்து 6 பிஎஸ்எல் அணிகளில் எந்த அணியில் ஷோயப் அக்தர் ஆடுகிறார் என்று ரசிகர்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு வருகின்றனர்.

வாசிம் அக்ரமும், ஷோயப் மாலிக்கும் அக்தரின் மீள்வருகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

3

தமிழ்செல்வியை கடத்திய கொடூரன்; விரட்டி விரட்டி அடித்த திருச்சி மக்கள்!

0
தமிழ்செல்வியை

தமிழ்செல்வியை கடத்திய கொடூரன்; விரட்டி விரட்டி அடித்த திருச்சி மக்கள்!

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே, நடுப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் தமிழ் செல்வி. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.

சிறுமி தமிழ்செல்வி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்துள்ளார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியை காரில் கடத்திக்கொண்டு கிளம்பிவிட்டார். அங்கு இருந்த பள்ளி மாணவர்கள் இதைக் கவனித்து விட்டனர்.

தமிழ்செல்வியை அவர்களுக்கு நன்கு தெரியும் என்பதால், அவரை யாரோ கடத்திக்கொண்டுபோவதை உணர்ந்துவிட்டனர்.

உடனே கூச்சலிட்டு அனைவரையும் அழைத்துள்ளனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் சிலர், காரை விரட்டிச்சென்று பொன்னம்பலம் பட்டியில் உள்ள டோல்கேட்டில் மடக்கிப் பிடித்தனர்.

காரில் இருந்த தமிழ்செல்வியை மீட்டதுடன், கடத்தல் நபரை அடித்துத் துவைத்தனர். தமிழ் செல்வி இட்லி கேட்டதால் வாங்கிக்கொடுக்க அழைத்து வந்ததாக அந்த கடத்தல் நபர் தெரிவித்துள்ளார்.

வாய்பேச முடியாத சிறுமி எப்படி இட்லி கேட்பாள் என வெளுவெளுவென அந்த கொடூரனை மீண்டும் அடித்துத் துவைத்தனர்.

பின்பு அங்கு வந்த போலீசார் அந்த நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அந்த கொடூரன் திருச்சி மாவட்டம் தென்னூரைச் சேர்ந்த இஸ்மாயில் எனத் தெரிய வந்துள்ளது.

3

புதிய டிடிஎச் கட்டணம்: மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம்!

0
புதிய டிடிஎச் கட்டணம்

புதிய டிடிஎச் கட்டணம்: மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம்!

இந்தியா முழுவதும் அரசு கேபிள் டிவியை டிஜிட்டலாக மாற்றும் பணி விரைவில் நிறைவடைய உள்ளது.

கேபிள், டி.டி.ஹெச் ஆகியவற்றிற்கு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என ட்ராய் மாதக்கட்டண முறையை மாற்றியமைத்தது.

விரும்பிய சேனலுக்கு மட்டும் பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

தற்போதைய புதிய கட்டணம் அதிகமாக உள்ளதாக கருத்துக்கள் நிலவி வருகிறது. மேலும் கேபிள் டிவி ஆபரேட்டர்களும் இதை எதிர்த்துள்ளனர்.

இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டம் என ட்ராய் தொடர்ந்து கூறி வருகிறது.

டிடிஹெச்சின் (DTH) புதிய கட்டண பிப்ரவரி 1-ம் தேதியே அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மார்ச் 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.

புதிய கட்டண முறைப்படி சேனல்களைத் தேர்வு செய்வதில் இன்னும் பெரும்பாலானவர்களுக்கு குழப்பம் உள்ளது. எனவே கால அவகாசத்தை நீட்டித்து உள்ளதாக ட்ராய் கூறியுள்ளது.

3

டிக் டாக் செயலி விரைவில் ஊத்தி மூடப்படும்!

0
டிக் டாக்

டிக் டாக் செயலி விரைவில் ஊத்தி மூடப்படும்!

செல்போன் முதன் முதலில் பரவலாக பயன்பாட்டிற்கு வந்த பிறகு பெண்கள் தங்களுடைய மொபைல் எண்ணைக் கொடுப்பதற்கே தயங்கினர்.

முகநூல், வாட்ஸ்ஆப் என வந்த பிறகும் கூட பலர் செல்போன் எண், பேஸ்புக் அட்ரஸ் ஆகியவற்றை கொடுக்கத் தயங்கினர்.

டப்ஸ்மாஸ், மியுசிக்கலி, டிக் டாக், ஸ்முல் போன்ற செயலிகள் அறிமுகம் செய்தபின்பு பல பெண்கள் முற்றிலும் மாறிவிட்டனர்.

செல்போன் எண்களைக் கொடுப்பதற்கே தயங்கிய பலர், ஆபாச அரங்கேற்றத்தை உலகுக்கே காட்ட துணிந்துவிட்டனர்.

இந்த செயலியின் வடிவம் அப்படி அமைக்கப்பட்டுள்ளது. முதலில் தங்களுடைய திறமையை வளர்த்துக்கொள்ளும் பொழுதுபோக்கு செயலியாக இதைப் பயன்படுத்துவார்கள்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு அடிமையாகி விடுகின்றனர். மற்றவர்களைப்போல தானும் பிரபலம் அடைய வேண்டும் என எண்ணி எதையும் செய்ய துணிந்துவிடுகின்றனர்.

அதிக லைக்குகள், அதிக பார்வையாளர்களை பெற ஆடைகளை குறைத்து கவர்ச்சியாக வீடியோவை வெளியிடுகின்றனர்.

ஊரே அம்மணமாக உள்ளபோது ஒருவன் மட்டும் கோவணத்துடன் சென்றால் அவனை பைத்தியக்காரன் எனக் கூறுவார்கள்.

அப்படி தான் ஆகிவிட்டது டிக்டாக் பயனர்களின் நிலமை. இதை எதிர்பவர்களை அனைவரும் தங்களுடைய வளர்ச்சியைப் பார்த்து பொறமை கொள்வதாய் நினைத்து விட்டனர்.

மேலும் எல்லோரும் ஆபாசமாக வீடியோ வெளியிடுவதால் அதை ஒரு பொருட்டாகவே யாரும் எடுத்துக்கொள்வதில்லை.

இதைத் தடை செய்யவேண்டும் என சட்டசபை வரை சென்று பேசினார் தமிமுன் அன்சாரி. மேலும் இது குறித்து மத்திய அரசிடமும் பேச உள்ளனர்.

ஆளும் கட்சி முதல் எதிர் கட்சிகள் வரை அனைவரும் டிக்டாக் செயலியை தடை செய்ய ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விரைவில் இந்தியாவில் டிக்டாக் செயலி ஊத்தி மூடப்பட போகிறது.

3

கிட்னி, கண், இதயம் திருட்டு? நடிகை சந்தியா கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

0
கிட்னி

கிட்னி, கண், இதயம் திருட்டு? நடிகை சந்தியா கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

சென்னையில் நடிகை சந்தியா கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். சந்தியாவின் கணவர் இயக்குனர் பாலகிருஷ்ணன்.

பள்ளிக்கரணை பகுதியில் சந்தியாவின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. கைகளில் குத்தியிருந்த டாட்டூவை வைத்து அவருடைய உடற் பாகம் தான் என போலீசார் உறுதி செய்தனர்.

அவரைக் கொலை செய்தது அவரது கணவர் தான் என போலீசார் பாலக்கிருஷ்ணனை கைது செய்தனர்.

கொலை நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் கை, கால், இடுப்பு பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. தலை கிடைக்கவே இல்லை.

இந்நிலையில் சந்தியாவின் உடல் உறுப்புகளை, மர்ம கும்பல் திருடியிருக்கலாம் என அவரது சகோதரி சஜிதா அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

இந்தக் கொடூரக் கொலையை ஒருவர் மட்டுமே செய்திருக்க வாய்ப்பில்லை. இதில் ஏதோ சதி உள்ளதாக சந்தியாவின் உறவினர்களும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

கிட்னி, இதயம், கண் ஆகிய உடலுறுப்புக்களுக்காக சந்தியா கொலை செய்யப்பட்டு இருக்கலாம்.  இதில் பலர் தொடர்புடையவர்களாக இருக்கலாம்.

போலீசார் இவ்வழக்கை திசைதிருப்ப முயற்சி செய்கின்றனர் என சந்தியாவின் உறவினர்கள் சந்தேகித்துள்ளனர்.

3

மோடி முன் தில்லாக சக்மாவின் இடுப்பை தடவிய அமைச்சர் – வீடியோ

0
மோடி முன்

மோடி முன் தில்லாக சக்மாவின் இடுப்பை தடவிய அமைச்சர் – வீடியோ

திரிபுரா மாநிலத்தில் பிரமர் நரேந்திர மோடி, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று அகர்தலா பகுதியில் பாஜக கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

திரிபுரா ஆளுநர் கப்தான் சிங், முதலைமைச்சர் பிப்லப் தேவ் மற்றும் முக்கிய அமைச்சர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது கல்வெட்டு ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

மோடி கல்வெட்டை திறக்கும் முன், ஒரு பக்கமாக இருந்த அமைச்சர்கள் சிலரை எதிர்புறமாக செல்லச் சொன்னார்.

திரிபுரா விளையாட்டுத்துறை அமைச்சர் மனோஜ் காந்தி, சமூக நலத்துறை அமைச்சர் சாந்தனா சக்மா ஆகியோர் எதிர்புறம் சென்றனர்.

மோடி கல்வெட்டை திறந்து கொண்டிருந்தபோது, அமைச்சர் மனோஜ் காந்தி அருகில் நின்று இருந்த பெண் அமைச்சர் சாந்தனா சக்மாவை உரசிக்கொண்டு நின்றார்.

ஏதோ கூட்ட நெரிசல் மிகுதியில் நிற்பது போன்றே பெண்ணின் பின்பக்கத்தில் இடித்துக்கொண்டே இருந்தார். மேலும் இடுப்பில் கையை வைத்து தடவினார்.

பொது இடம் என்பதால் சக்மா எந்தவித ரியாக்சனும் கொடுக்காமல் நைசாக அவரது கையைத் தட்டிவிட்டார்.

ஆனால் இது கேமராவில் நன்கு பதிவாகிவிட்டது. தேர்தல் நேரம் என்பதால் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மனோஜை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.  இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண் அமைச்சர் எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை.

இருவருக்கும் ஏற்கனவே நெருக்கமான தொடர்பு இருந்திருக்கலாம், அதன் காரணமாகவே மேடையில் நெருக்கமாக இருந்திருப்பார் என சிலர் டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

3

சென்னைக்கு மீண்டும் நிலநடுக்க அபாயம்? ஒரே இடத்தில் 4 முறை ஏற்பட்டுள்ளது!

0
சென்னைக்கு

சென்னைக்கு மீண்டும் நிலநடுக்க அபாயம்? ஒரே இடத்தில் 4 முறை ஏற்பட்டுள்ளது!

சென்னைக்கும் அந்தமானுக்கு இடையில் உள்ள வங்கக்கடல் பகுதியில் இன்று காலை 7 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதேவேளை சென்னை தி.நகர் பகுதியில் நள்ளிரவு 1:30 மணிக்கே லேசான நில அதிர்வு ஏற்பட்டதை அங்குள்ள மக்கள் உணர்ந்துள்ளனர்.

திடிரென இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலர் அதிர்ச்சியில் உள்ளனர். அதேவேளை இந்த நிலநடுக்கம் தொடர்பாக பல்வேறு வதந்திகளும் பரவியுள்ளது.

அதாவது மீண்டும் நிலநடுக்க அபாயம் உள்ளது. சுனாமி வரவும் வாய்ப்பு உள்ளது என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியுள்ளன.

இதனால் வெளியூரில் வசிக்கும் சொந்த பந்தங்கள் அச்சமடைந்து உள்ளனர். வெளியூர் வாசிகள் அதிகம் சென்னையில் வசிப்பதால் தமிழகம் முழுவதும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் நிலநடுக்கம் வருமா?

இந்த நிலநடுக்கம் 4.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதற்குமுன் மூன்று முறை அதே பகுதியில் அருகருகே ஏற்பட்டு உள்ளது.

1999, 2006, 2007 மற்றும் 2019 இதுவரை நான்கு முறை அதே பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது.

ஆனால் இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை. ஒருவேளை வரும் ஆண்டுகளில், மீண்டும் அதேபகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சென்னைக்கு பெரிய பாதிப்பு இருக்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள் நிலநடுக்கத்தை தாங்கும் அளவிற்கு கட்டிடங்களை வலுவாக கட்டுவதே நல்லது.

3

4 குழந்தைகள் பெற்றால் வருமானவரி செலுத்தத் தேவையில்லை

0
4 குழந்தைகள்

4 குழந்தைகள் பெற்றால் வருமானவரி செலுத்தத் தேவையில்லை

4 அல்லது அதற்கு மேல் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பெண்கள் வருமானவரி செலுத்தத் தேவையில்லை என ஹங்கேரிய அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாடும், மக்கள் தொகை கட்டுப்பாட்டில் ஒவ்வொரு விதமான சட்ட திட்டங்களை கடைபிடிக்கிறது.

சீனா, இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வர பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நீண்ட நாட்களாக சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற சட்டத்தை முதியோர்கள் நலன் கருதி சற்று தளர்த்தியது.

அதேபோன்று மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள நாடுகள், மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்க பல சலுகைகளை வழங்குகிறது.

அதில் ஒன்று தான் ஹங்கேரிய நாடு. நாட்டின் மக்கள் தொகை விகிதத்தை அதிகரிக்க நான்கு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள பெண்களை ஊக்குவிக்கிறது.

ஹங்கேரிய பிரதமர் இதுகுறித்து பேசியதாவது, குடியேற்றத்தை மட்டுமே பாராமல், நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வழிகளில் இதுவும் ஒன்று.

ஹங்கேரியின் வலதுசாரி கட்சியினர் முஸ்லீம்கள் குடியேற்றத்தை எதிர்க்கின்றனர். நாட்டின் மக்கள்தொகையும் ஆண்டுக்கு 32,000 என வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

சரிந்துவரும் மக்கள்தொகையை சரி செய்ய, புதுமணத் தம்பதிகளுக்கு 10 மில்லியன் ஹங்கேரி பணம் வட்டியில்லாக் கடனாக வழங்கப்படுகிறது. மூன்று குழந்தைகள் பிறந்தவுடன் இது ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

3

பாம்பை வைத்து உண்மை அறியும் சோதனை: அத்துமீறிய போலீஸ் விசாரணை

0
பாம்பை

பாம்பை வைத்து உண்மை அறியும் சோதனை: அத்துமீறிய போலீஸ் விசாரணை

இந்தோனேசியாவின் பப்புவா நியூ கினியா பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் செல்போன் திருடியதாக சந்தேகித்து போலீசார், அவரை கைது செய்தனர்.

குற்றவாளியை எப்படியாவது ஒப்புக்கொள்ள வைக்கவேண்டும் என இந்திய காவல்துறை அதிகாரிகளை விஞ்சிய செயல்களில் ஈடுபட்டனர்.

குற்றம் சுமத்தப்பட்டவர் கழுத்தில் மலைப்பாம்பை சுற்றிவிட்டு, ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பாம்பை வாய்க்குள் விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

இதை வீடியோவும் எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ வைரல் ஆனதும் மனித உரிமை ஆணையம் கண்டனத்தை வெளிப்படுத்தியது.

1969-ம் ஆம் ஆண்டு பப்புவா நியூ கினியா பகுதி இந்தோனேசியாவுடன் இணைக்கப்பட்டது. நீண்ட வருடங்களாக அங்குள்ள மக்கள் தனிநாடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் அங்கு அடிக்கடி மனித உரிமை மீறல் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. தற்பொழுது இந்த வீடியோ மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தப்பட்ட அந்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

3

குளிரிலும் அணியலாம், வெயிலிலும் அணியலாம்: ஸ்மார்ட் ஃபேப்ரிக்

0
குளிரிலும் அணியலாம்

குளிரிலும் அணியலாம், வெயிலிலும் அணியலாம்: ஸ்மார்ட் ஃபேப்ரிக்

குளிர் காலத்தின் இறுதியில் இருந்து கோடைகாலத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். நமது சுற்றுச்சூழலின் வெப்பநிலைக்கு ஏற்ப நாம் அணியும் உடைகளும் மாறுபடும்.

ஆனால் புதிதாக கண்டறியப்பட்ட ஒரு துணி, உடலின் வெளிப்புற வெப்பதிற்கு எதிர்மறையாக செயல்பட்டு உடலின் உட்புற வெப்பத்தை சீராக்குகிறது.

அதாவது வெளிப்புற வெப்பம் துணியின் உட்புறம் சென்று உடலின் வெப்பநிலையை அதிகப் படுத்துவதை தடுக்கும்.

அதேபோல், குளிராக இருக்கும் பொழுது நமது உடலின் வெப்பத்தை வெளியேற்றாமல் தக்க வைத்துக்கொள்ளும் தன்மையும் கொண்டது.

யூனிவர்சிட்டி ஆஃப் மேரிலாண்ட்

ஜர்னல் சயின்ஸ் வெளியிட்ட ஆய்வில் இந்த துணியில் இருக்கும் நூலுடன், கடத்தும் திறன் கொண்ட ஒரு உலோக அடுக்கு அல்லது பூச்சு இணைக்கப்பட்டுள்ளது.

வெப்பத்தை சீர்படுத்தும் தன்மை கொண்ட ஒரே துணி இதுவாகும். இந்த துணியில் ஃபைபர் என்ற பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.

இரண்டு வகையான சிந்தெடிக் மெட்டீரியல் கார்பன் நானோ ட்யூப்ஸ் மற்றும் லேசான கடத்தும் திறன் கொண்ட ஒரு பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் துணி வெப்பத்தை பரிமாற்றம் செய்யவும், தடுக்கவும் செய்யும்.

அதிக வெப்பத்துடன் இருக்கும் சூழ்நிலையில் துணியில் இருக்கும் நூற்கட்டமைப்பு உலோகப்பூச்சை தூண்டுவதால், துணி அகச்சிவப்பு கதிர்களுக்கு (Infrared Radiation) எதிராக செயல்படுகிறது.

துணியானது அகச்சிவப்பு கதிர்களை தடுக்கவும் செய்யவும். அதைவேளை உள்ளே இழுக்கவும் செய்யும். இதனால் வெளிப்புறத்தில் இருக்கும் வெப்பத்திற்கு நேர் எதிராக செயல்படும் தன்மை கொண்டது.

பேராசிரியர் மின் ஒயாங்க் கூறியது

மனித உடல் நன்கு வெப்பத்தை கடத்தும் திறன் கொண்டது. வெப்பத்தை குறைக்கவோ இல்லை அதிகரிக்கவோ நாம் ஆடை அணிகிறோம். ஒரு சில நேரம் வெப்பம் தாங்காமல் ஆடை அணிவதில்லை.

ஆனால் இந்த துணி எந்த வெப்பநிலையிலும் உங்கள் உடலின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் கொண்டது எனக் கூறியுள்ளார்.

3