நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை 2017-ல் திருமணம் செய்துகொண்டார்.
திருமணமான சில மாதங்களிலேயே சமந்தா, கர்ப்பமாகியதாக வதந்தி பரவியது. ஆனால், அவர் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டுள்ளார்.
மீண்டும் சமந்தா கர்ப்பம் என செய்தி பரவியுள்ளது. இப்படி ஒரு சர்சையைக் கிளப்பியவர் சமந்தாவின் ரசிகர்.
சமந்தா, கணவர் சைதன்யாவுடன் நெதர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவ்வபோது அங்கிருந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.
அவ்வாறு, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில், சில வார்த்தைகளைக் கூறியுள்ளார். “Strolling into the new year.. 2019 ❤ Great expectations” எனவும் “The ‘ But why can’t I get a few pickles’ look” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
pickles, great expectations இந்த வார்த்தையைப் பார்த்த ரசிகர் ஒருவர் “சமந்தா நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்களா” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
உடனே, சமந்தா கர்ப்பம் என மீடியாக்கள் செய்திகள் வெளியிடத் துவங்கிவிட்டனர். கோலிவுட், டோலிவுட் என செய்திகள் விரைந்து பரவி வருகின்றது.
ஆனால், இதுவரை சமந்தா இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. உறுதிப்படுத்தவும் இல்லை. இந்த சர்ச்சைக்கு காரணம் முழுக்க முழுக்க அந்த ரசிகரே!!!
அந்த ஐ.டியில் ஒரு பெண்ணின் புகைப்படம் உள்ளத்தால் அவர் பெண் ரசிகராக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது
நாயைக் கல்லால் அடித்ததற்கு துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
புதுடெல்லியைச் சேர்ந்த 30 வயதான அபாஃக் (afaq) என்பவர் வழக்கம்போல், நார்த் ஈஸ்ட் வெல்கம் காலனியில் நடந்துவரும்போது, அங்கு இருந்த நாய் அவரைப் பார்த்து குரைத்துள்ளது.
நாய், அவரைக் கடிக்க முயன்றதால் வேறுவழியில்லாமல், தன்னைப் பாதுகாத்துக்கொள்ள கல்லால் அடித்துள்ளார்.
அபாஃக், நாயைக் கல்லால் அடிக்கும்போது, நாயின் முதலாளி மெக்தாப் இதைக் கவனித்துவிட்டார். கோபத்துடன் வீட்டிற்குள் சென்றவர் துப்பாக்கியுடன் திரும்பி வந்துள்ளார்.
நீண்டநேரம் இருவருக்குமிடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இறுதியில் ஆத்திரமடைந்த நாயின் உரிமையாளர் பட்டப்பகலில் நட்ட நடுரோட்டில் அபாக்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.
அபாஃக் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாயின் உரிமையாளர் மெக்தாப் (mehtab) தப்பித்து ஓடிவிட்டார். போலீஸ் அவரை வலைவீசித் தேடிவருகின்றனர்.
இதற்குமுன், குருக்ரம் என்ற பகுதியில் இதேபோல் வளர்ப்புப் பிராணியை வதைத்தாகக்கூறி, இரண்டு சிறுவர்கள் அடையலாம் தெரியாத 4 நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
காலீன் கிரேடி (colleen grady) இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். சுற்றுலாவாசி, யோகா ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர்.
இந்தியாவிற்கு சுற்றுலாப் பயணியாக வந்துள்ளார். ஜெய்பூர் நகரின் கடைவீதியில் செல்லும்போது, எதிர்பாராத விதமாக தன்னுடைய ஆப்பிள் ஐபோனை தொலைத்துவிட்டார்.
iPhone x ஐந்து மாதங்களுக்கு முன்பே இந்த போனை வாங்கியுள்ளார். நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை.
ஐபோன் எக்ஸ் சிறப்பம்சம்
ஐபோன் எக்ஸ் மொபைலைத் திருடினால், திருடியவர் அதைப் பயன்படுத்த முடியாது. யாராலும் ஹாக் செய்ய முடியாத அளவிற்கு புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் அவருடைய போனை யாரும் திருடவில்லை. எதேச்சையாக தொலைத்துவிட்டார். அதன்பிறகு அவர் நடந்துகொண்ட விதம், ஒட்டுமொத்த இந்தியர்களையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் பதிவு
காலீன் கிரேடி ஐபோனை தொலைத்தபின் இன்ஸ்டாகிராமில், “நான் என்னுடைய போனை மிகவும் ஏழ்மையான, மக்கள்தொகை அதிகமான மற்றும் சுற்றுலா பயணிகளை மதிக்காத இந்தியாவில் தொலைத்துவிட்டேன்.
மேலும், என்னுடைய போனை எடுத்து என்ன செய்வதென்றுகூட அவர்களுக்குத் தெரியாது. தங்களுடைய வாழ்நாளில் சம்பாதிக்கும் மொத்தப் பணத்தையும்விட என்னுடைய ஐபோன் அதிக மதிப்பு கொண்டது” எனப் பதிவிட்டுள்ளார்.
ஐபோனை திருப்பிக்கொடுத்த இந்தியர்
காலீன் கிரேடி தன்னுடைய அறைக்குத் திரும்பிவந்து, போனின் லொகேஷனை ட்ராக் செய்துள்ளார். அப்போது போன் ப்ளைட் மோடில் இருந்ததாக கூறியுள்ளார்.
அதன்பின்பே யாரோ திருவிட்டனர் எனப் பதிவு செய்துள்ளார். ஆனால், ஹவுஸ் ஓனர் ஹிந்தியில் அந்த ஐபோனுக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.
உடனே, அந்த போனை வைத்திருந்த இந்தியர் தான் இருக்கும் இடத்தைத் தெரிவித்துள்ளார். காலீன் கிரேடி உடனே அந்த இடத்திற்கு சென்று ஐபோனை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
இந்தியர்கள் கோபம்
இவரே ஐபோனைத் தொலைத்துவிட்டு, ஒட்டுமொத்த இந்தியர்களையும் வசைபாடியதைப் பார்த்த இந்தியர்கள், கண்டபடித் திட்டத்துவங்கிவிட்டனர்.
இந்தச் செய்தி பத்திரிக்கைகள் வரை சென்றதால் உடனே இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டெலீட் செய்துவிட்டார்.
இன்ஸ்டாகிராம் போட்டோஸ்
நாய் குட்டி மீது அன்பு, யோக பற்று, பக்தி மயம், இயற்கை ரசனை… என விதம் விதமாக போட்டோ பதிவிட்டு நல்ல குணம் படைத்தவர் எனக் காட்டியுள்ளார்.
ஒரு ஐபோன் தொலைந்ததும் அவரின் உண்மை முகம் என்ன எனத் தெரிந்துவிட்டது. நாட்டில் பெரும்பாலானோர் இப்படித்தான் சமூக சேவர்கள் போர்வையில் சுற்றித்திரிகின்றனர்.
ஹவாய் நிறுவனம் புத்தாண்டு தினத்தன்று தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தது.
Tweet via iPhone
சீனாவில், அமெரிக்க சமூக வலைதளங்களுக்குத் தடை உள்ளது. எனவே, சீனாவில் பேஸ்புக், டிவிட்டர்களைப் பயன்படுத்த VPN அவசியம்.
அவ்வாறு, VPN துணையுடன் புத்தாண்டு வாழ்த்து ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இதனால், ட்வீட் ஆப்பிள் ஐபோன் மூலம் போடப்பட்டுள்ளது என ட்விட்டர் தெரிவித்துவிட்டது.
அவர்கள் நேரத்திற்கு விபிஎன் கனெக்சன் ஐபோன் தளத்தில் இயங்கியுள்ளது. இதன் காரணமாகவே Tweet via iPhone எனக் காட்டியுள்ளது.
ஊழியர்கள் இதை உடனே கவனிக்கவில்லைபோல, ஹவாய் நிறுவனத்தினரே ஐபோன் வழியாக ட்விட் செய்கின்றனர் என ட்ரோல் செய்யத் துவங்கிவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஹவாய் மேலதிகாரிகள், ட்விட் செய்யும் பொறுப்பிலிருந்த இரண்டு ஊழியர்களைப் பணி குறைப்பு செய்துள்ளது.
அவர்களின் சம்பளத்தைக் குறைத்துவிட்டது. அடுத்த 12 மாதங்களுக்கு அவர்களுக்கு எவ்வித பதவி உயர்வும் இல்லை. மேலும், 50000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம்.