Home Blog Page 325

பொங்கலுக்கு எத்தனை நாள் அரசு விடுமுறை?

0
பொங்கலுக்கு லீவ்

பொங்கலுக்கு எத்தனை நாள் அரசு விடுமுறை? ஒரு நாள் லீவ் விட மாட்டீங்களோ?

தைப்பொங்கல் ஜனவரி 15-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. 16-ல் மாட்டுப்பொங்கல், 17-ல் காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

செவ்வாய், புதன், வியாழன்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே விடுமுறை நாளாக அரசுக் குறிப்பீட்டில் இருந்தது.

அதேவேளை, பொங்கலுக்கு முந்தைய 12, 13 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். இடையில் 14-ம் தேதி மட்டுமே வேலைநாள்.

இந்த ஒருநாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டால் 6 நாட்கள் விடுமுறையாகிவிடும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர்.

அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழகஅரசு 14-ம் தேதியை விடுமுறை தினமாக அறிவித்துவிட்டது.

வெளியூர்களில் இருந்து நீண்ட நாட்கள் விடுமுறையுடன் பொங்கலை சிறப்பாக கொண்டாடவேண்டி இந்த விடுமுறையை வழங்கியுள்ளது.

இந்த ஒருநாள் விடுமுறையை பிப்ரவரி 9-ம் தேதி சனிக்கிழமை அரசு வேலைநாளாக அறிவித்துள்ளது.

எனவே வெளியூரில் இருக்கும் அரசு ஊழியர்கள், மாணவர்கள் வெள்ளிக்கிழமை மாலையே ஊருக்குச்செல்லத் தயாராகலாம்.

3

சமந்தா கர்ப்பம்: சர்ச்சைக்கு காரணம் ரசிகரே!

0
சமந்தா கர்ப்பம்

சமந்தா கர்ப்பம்: சர்ச்சைக்கு காரணம் ரசிகரே!

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை 2017-ல் திருமணம் செய்துகொண்டார்.

திருமணமான சில மாதங்களிலேயே சமந்தா, கர்ப்பமாகியதாக வதந்தி பரவியது. ஆனால், அவர் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டுள்ளார்.

மீண்டும் சமந்தா கர்ப்பம் என செய்தி பரவியுள்ளது. இப்படி ஒரு சர்சையைக் கிளப்பியவர் சமந்தாவின் ரசிகர்.

சமந்தா, கணவர் சைதன்யாவுடன் நெதர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவ்வபோது அங்கிருந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.

அவ்வாறு, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில், சில வார்த்தைகளைக் கூறியுள்ளார். “Strolling into the new year.. 2019 ❤ Great expectations” எனவும் “The ‘ But why can’t I get a few pickles’ look” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

pickles, great expectations இந்த வார்த்தையைப் பார்த்த ரசிகர் ஒருவர் “சமந்தா நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்களா” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

உடனே, சமந்தா கர்ப்பம் என மீடியாக்கள் செய்திகள் வெளியிடத் துவங்கிவிட்டனர். கோலிவுட், டோலிவுட் என செய்திகள் விரைந்து பரவி வருகின்றது.

ஆனால், இதுவரை சமந்தா இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. உறுதிப்படுத்தவும் இல்லை. இந்த சர்ச்சைக்கு காரணம் முழுக்க முழுக்க அந்த ரசிகரே!!!

அந்த ஐ.டியில் ஒரு பெண்ணின் புகைப்படம் உள்ளத்தால் அவர் பெண் ரசிகராக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது

3

Golden Globes Awards 2019 – கோல்டன் க்ளோப்ஸ்

0
Golden Globes Awards 2019

Golden Globes Awards 2019 – கோல்டன் க்ளோப்ஸ் விருது 2019

Golden Globes Awards 2019 The winners list for Movies

Best Motion Picture – Musical or Comedy

  • Mary Poppins Returns
  • The Favourite
  • Crazy Rich Asian
  • Vice
  • Green Book – WINNER

Best Motion Picture – Drama

  • Black Panther
  • BlackKklansman
  • If Beale Street Could Talk
  • A Star Is Born
  • Bohemian Rhapsody – WINNER

Best Performance by an Actor in a Motion Picture – Drama

  • Lucas Hedges [Boy Erased]
  • Bradley Cooper [A Star Is Born]
  • John David Washington [BlackKklansman]
  • Willem Dafoe [At Eternity’s Gate]
  • Rami Malek [Bohemian Rhapsody] – WINNER

Best Performance by an Actress in a Motion Picture – Drama

  • Nicole Kidman [Destroyer]
  • Lady Gaga [A Star Is Born]
  • Rosamund Pike [A Private War]
  • Melissa McCarthy [Can You Ever Forgive Me]
  • Glenn Close [The Wife] – WINNER

Best Performance by an Actress in a Motion Picture – Musical or Comedy

  • Emily Blunt [Mary Poppins Returns]
  • Constance Wu [Crazy Rich Asians]
  • Charlize Theron [Tully]
  • Elsie Fisher [Eighth Grade]
  • Olivia Colman [The Favourite] – WINNER

Best Director

  • Bradley Cooper [A Star Is Born]
  • Spike Lee [BlackKklansman]
  • Peter Farrelly [Green Book]
  • Adam McKay [Vice]
  • Alfonso Cuaron [Roma] – WINNER

Best Performance by an Actor in a Motion Picture – Musical or Comedy

  • Vigo Mortensen [Green Book]
  • John C. Reilly [Stan and Ollie]
  • Lin-Manuel Miranda [Mary Poppins Returns]
  • Robert Redford [The Old Man and the Gun]
  • Christian Bale [Vice] – WINNER

Best Supporting Actor in a Motion Picture

  • Adam Driver [BlackKklansman]
  • Sam Rockwell [Vice]
  • Timothee Chalamet [Beautiful Boy]
  • Richard E. Grant [Can You Ever Forgive Me]
  • Mahershala Ali [Green Book] – WINNER

Best Supporting Actress in a Motion Picture

  • Amy Adams [Vice]
  • Rachel Weisz [The Favourite]
  • Claire Foy [First Man]
  • Emma Stone [The Favourite]
  • Regina King [If Beale Street Could Talk] – WINNER

Best Original Song in a Motion Picture

  • All the Stars [Black Panther]
  • Revelation [Boy Erased]
  • Girl in the Movies [Dumplin]
  • Requiem for a Private War [A Private War]
  • Shallow [A Star Is Born] – WINNER

Best Original Score in a Motion Picture

  • Marco Beltrami [A Quiet Place]
  • Alexandre Desplat [Isle of Dogs]
  • Marc Shaiman [Mary Poppins Returns]
  • Ludwig Göransson [Black Panther]
  • Justin Hurwitz [First Man] – WINNER

Best Screenplay in a Motion Picture

  • Barry Jenkins [If Beale Street Could Talk]
  • Alfonso Cuaron [Roma]
  • Adam McKay [Vice]
  • Deborah Davis and Tony McNamara [The Favourite]
  • Peter Farrelly, Nick Vallelonga, Brian Currie [Green Book] – WINNER

Best Motion Picture – Foreign Language

  • Never Look Away
  • Capernaum
  • Girl
  • Shoplifters
  • Roma – WINNER

Best Animated Film

  • Ralph Breaks the Internet
  • Incredibles 2
  • Isle of Dogs
  • Mirai
  • Spider-Man: Into the Spider-Verse  (WINNER)

Best Tamil Movies 2020 | சிறந்த படங்கள் 2020 

3

நாயைக் கல்லால் அடித்ததற்கு துப்பாக்கிச் சூடு

0
நாயைக் கல்லால்

நாயைக் கல்லால் அடித்ததற்கு துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

புதுடெல்லியைச் சேர்ந்த 30 வயதான அபாஃக் (afaq) என்பவர்  வழக்கம்போல், நார்த் ஈஸ்ட் வெல்கம் காலனியில் நடந்துவரும்போது, அங்கு இருந்த நாய் அவரைப் பார்த்து குரைத்துள்ளது.

நாய், அவரைக் கடிக்க முயன்றதால் வேறுவழியில்லாமல், தன்னைப் பாதுகாத்துக்கொள்ள கல்லால் அடித்துள்ளார்.

அபாஃக், நாயைக் கல்லால் அடிக்கும்போது, நாயின் முதலாளி மெக்தாப் இதைக் கவனித்துவிட்டார். கோபத்துடன் வீட்டிற்குள் சென்றவர் துப்பாக்கியுடன் திரும்பி வந்துள்ளார்.

நீண்டநேரம் இருவருக்குமிடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இறுதியில் ஆத்திரமடைந்த நாயின் உரிமையாளர் பட்டப்பகலில் நட்ட நடுரோட்டில் அபாக்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

அபாஃக் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாயின் உரிமையாளர் மெக்தாப் (mehtab) தப்பித்து ஓடிவிட்டார். போலீஸ் அவரை வலைவீசித் தேடிவருகின்றனர்.

இதற்குமுன், குருக்ரம் என்ற பகுதியில் இதேபோல் வளர்ப்புப் பிராணியை வதைத்தாகக்கூறி, இரண்டு சிறுவர்கள் அடையலாம் தெரியாத 4 நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

3

இந்தியா vs ஆஸ்திரேலியா: சாதனைப் பட்டியல்

0
இந்தியா vs ஆஸ்திரேலியா

இந்தியா vs ஆஸ்திரேலியா: சாதனைப் பட்டியல்

ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய-ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான டெஸ்ட் தொடரை வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. 4-வது டெஸ்ட் போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது ஆஸ்திரேலியா.

ஆனால் ஆஸ்திரேலியா, தொடர்ந்து மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. 5வது நாள் ஆட்டம் எஞ்சியிருந்த நிலையில் மழையால் போட்டி நின்றது.

இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் சாதனையும், ஆஸ்திரேலியாவின் சோதனையும்

இந்திய அணியின் சாதனைகள்

  • முதல்முறை ஆஸ்திரேலிய மண்ணில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
  • 71 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இதுவே முதல்முறை
  • ஆஸ்திரேலியாவை, சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய முதல் ஆசிய அணி, இந்தியா.

ஆஸ்திரேலியாவின் சோதனைகள்

  • சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முதல்முறையாக இந்தியாவிடம் பறிகொடுத்துள்ளது.
  • டெஸ்ட் போட்டியில் ஒரு ஆஸ்திரேலிய வீரர்கூடச் சதம் அடிக்காதது இதுவே முதல்முறை.
  • முதல் முறையாக டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலியா அணி, பலோஆன் வாங்கியுள்ளது .

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி

1947-48-ம் ஆண்டு அப்போதைய கேப்டன் லாலாஅமர்நாத் தலைமையில் இந்திய அணி முதல்முறையாக ஆஸ்திரேயா சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

அன்றிலிருந்து இன்றுவரை எந்த கேப்டன் தலைமையிலும் கிடைக்காத வெற்றியை, விராட் கோலி தலைமையிலான அணி பெற்றுள்ளது.

இந்த வெற்றி போரடிப்பெற்ற வெற்றியில்லை. ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது கூடுதல் சிறப்பு.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றில், அந்த அணி சந்தித்த மிகமோசமான தோல்வி இதுவாகத்தான் இருக்க முடியும்.

புஜாராவின் சதங்களும், பும்ராவின் பந்து வீச்சும் ஆஸ்திரேலியாவை வீழ்த்த மிகவும் பக்கபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற தொடரில் 8-ல் தோல்வியும், 3-ல் ட்ராவும், 1-ல் வெற்றியும் பெற்றுள்ளது இந்திய அணி.

3

லிப்ட் அருகில் இருக்கும் கண்ணாடி இதற்குத்தானா?

0
லிப்ட் கண்ணாடி

லிப்ட் அருகில் இருக்கும் கண்ணாடி இதற்குத்தானா?

ஒவ்வொரு முறையும் நீங்கள் லிப்டில் ஏறும்போதும், இறங்கும்போதும் அதன் அருகே இருக்கும் கண்ணாடியைக் கவனித்தது உண்டா?

ஒவ்வொரு மாடியிலும், லிப்டுக்கு அருகே ஒரு கண்ணாடி இருக்கும். அது ஏன் எனத் தெரிந்துகொள்ள 100 வருடங்கள் பின்நோக்கி செல்லவேண்டும்.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது, வீரர்கள் எலவேட்டரை பயன்படுத்துவதில் பெரிய நெருக்கடி ஏற்பட்டது.

நீண்ட நேரம் லிப்டில் பயணிக்கவும் காக்கவும் வேண்டியிருந்தது. இதற்கு ஒரு முடிவுகட்டவே கண்ணாடிகள் பொருத்தப்பட்டன.

கண்ணாடிக்கும், காத்திருப்பிற்கும் என்ன சம்பந்தம்?

பொதுவாக அனைவரும் எந்த ஒரு செயலுக்காகவும் நீண்ட நேரம்  காத்திருப்பதை விரும்புவதில்லை.

எனவே, காத்திருக்கும் நேரத்தில் வேறு ஏதாவது ஒருசெயலைச் செய்துகொண்டிருந்தால் நேரம் கழிவதே தெரியாது.

இதற்காகவே லிப்ட் அருகில் கண்ணாடியைப் பொருத்தியுள்ளனர். கண்ணாடி அங்கு இருப்பதால், முகம் பார்க்கின்றனர். பெண்கள் மேக்கப் செய்து கொள்கின்றனர்.

நீண்ட நேரம் முகத்தைப் பார்த்து ரசிப்பவர்களும் உண்டு. தலைமுடி அலங்கோலமாக இருந்தால் உடனே சரி செய்துகொண்டு அலுவலகத்திற்குள் நுழைய முடியும்.

நம் அருகில் உள்ள நபரை, நேருக்குநேராக நோக்காமல் கண்ணாடி வழியே பார்க்க முடியும். இதனால் காதல் மலருவதற்கும் வாய்ப்புண்டு.

அதேபோன்று, இளம் ஜோடிகள் கசமுசா செயலில் ஈடுபட நினைத்தால் அருகில் உள்ள நபருக்கு கண்ணாடி காட்டிக்கொடுத்துவிடும்.

ஒரு கண்ணாடியில் இப்படி பலவசதி உள்ளதை அறிந்தே அன்றே கண்ணாடியைப் பொருத்தியுள்ளனர்.

3

ஐபோன் மிஸ்: யோக டீச்சரின் அடாவடித்தனம்!

0
ஐபோன் மிஸ்

ஐபோன் மிஸ்: யோக டீச்சரின் அடாவடித்தனம்!

காலீன் கிரேடி (colleen grady) இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். சுற்றுலாவாசி, யோகா ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர்.

இந்தியாவிற்கு சுற்றுலாப் பயணியாக வந்துள்ளார். ஜெய்பூர் நகரின் கடைவீதியில் செல்லும்போது, எதிர்பாராத விதமாக தன்னுடைய ஆப்பிள் ஐபோனை தொலைத்துவிட்டார்.

iPhone x ஐந்து மாதங்களுக்கு முன்பே இந்த போனை வாங்கியுள்ளார். நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை.

ஐபோன் எக்ஸ் சிறப்பம்சம்

ஐபோன் எக்ஸ் மொபைலைத் திருடினால், திருடியவர் அதைப் பயன்படுத்த முடியாது. யாராலும் ஹாக் செய்ய முடியாத அளவிற்கு புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் அவருடைய போனை யாரும் திருடவில்லை. எதேச்சையாக தொலைத்துவிட்டார். அதன்பிறகு அவர் நடந்துகொண்ட விதம், ஒட்டுமொத்த இந்தியர்களையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பதிவு

காலீன் கிரேடி ஐபோனை தொலைத்தபின் இன்ஸ்டாகிராமில், “நான் என்னுடைய போனை மிகவும் ஏழ்மையான, மக்கள்தொகை அதிகமான மற்றும் சுற்றுலா பயணிகளை மதிக்காத இந்தியாவில் தொலைத்துவிட்டேன்.

மேலும், என்னுடைய போனை எடுத்து என்ன செய்வதென்றுகூட அவர்களுக்குத் தெரியாது. தங்களுடைய வாழ்நாளில் சம்பாதிக்கும் மொத்தப் பணத்தையும்விட என்னுடைய ஐபோன் அதிக மதிப்பு கொண்டது” எனப் பதிவிட்டுள்ளார்.

ஐபோனை திருப்பிக்கொடுத்த இந்தியர்

காலீன் கிரேடி தன்னுடைய அறைக்குத் திரும்பிவந்து, போனின் லொகேஷனை ட்ராக் செய்துள்ளார். அப்போது போன் ப்ளைட் மோடில் இருந்ததாக கூறியுள்ளார்.

அதன்பின்பே யாரோ திருவிட்டனர் எனப் பதிவு செய்துள்ளார். ஆனால், ஹவுஸ் ஓனர் ஹிந்தியில் அந்த ஐபோனுக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.

உடனே, அந்த போனை வைத்திருந்த இந்தியர் தான் இருக்கும் இடத்தைத் தெரிவித்துள்ளார். காலீன் கிரேடி உடனே அந்த இடத்திற்கு சென்று ஐபோனை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

இந்தியர்கள் கோபம்

இவரே ஐபோனைத் தொலைத்துவிட்டு, ஒட்டுமொத்த இந்தியர்களையும் வசைபாடியதைப் பார்த்த இந்தியர்கள், கண்டபடித் திட்டத்துவங்கிவிட்டனர்.

இந்தச் செய்தி பத்திரிக்கைகள் வரை சென்றதால் உடனே இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டெலீட் செய்துவிட்டார்.

இன்ஸ்டாகிராம் போட்டோஸ்

நாய் குட்டி மீது அன்பு, யோக பற்று, பக்தி மயம், இயற்கை ரசனை… என விதம் விதமாக போட்டோ பதிவிட்டு நல்ல குணம் படைத்தவர் எனக் காட்டியுள்ளார்.

ஒரு ஐபோன் தொலைந்ததும் அவரின் உண்மை முகம் என்ன எனத் தெரிந்துவிட்டது. நாட்டில் பெரும்பாலானோர் இப்படித்தான் சமூக சேவர்கள் போர்வையில் சுற்றித்திரிகின்றனர்.

3

விஜய்மல்லையா நாடுகடத்தல்: நாளை மறுதினமா?

0
விஜய்மல்லையா நாடுகடத்தல்

விஜய்மல்லையா நாடுகடத்தல்: நாளை மறுதினமா?

விஜய் மல்லையாவை நாடுகடத்த சம்மதம் தெரிவித்து கடந்த டிசம்பர் 10-ம் தேதி லண்டன் நீதிமன்றம் உறுதிசெய்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என லண்டன் நீதிமன்றம் 14 நாட்கள் விஜய் மல்லையாவிற்கு அவகாசம் கொடுத்தது.

14 நாட்களுக்குள், விஜய் மல்லையா எந்த மேல்முறையீடு மனுவையும் தாக்கல்செய்யவில்லை.

இதனால், விஜய்மல்லையா நாடுகடத்துவதற்கு சம்மதம் தெரிவித்ததாக லண்டன் நீதிமன்றம் பொருள்கொள்ளும்.

எனவே, 28 நாட்கள் கழித்து விஜய் மல்லையாவை நாடு கடத்துவது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவித்தது.

நாளையுடன் தீர்ப்பு வழங்கி 28 நாட்கள் முடிவடைய உள்ளது. எனவே, விஜய் மல்லையா குறித்து முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நாளை அல்லது நாளை மறுதினம் விஜய்மல்லையா, நாடுகடத்தப்படும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தப்பி ஓடிய பொருளாதாரக் குற்றவாளி

விஜய்மல்லையா வழக்கை விசாரித்து வந்த மும்பை நீதிமன்றம், விஜய்மல்லையாவை “தப்பி ஓடிய பொருளாதாரக் குற்றவாளி” என அறிவித்துள்ளது.

கடந்த வருடம்தான் இந்தச் சிறப்புச் சட்ட மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்ற கூடத்தொடரில் நிறைவேற்றியது.

இந்தச் சட்டத்தின் மூலம், முதலில் தண்டிக்கப்பட உள்ளவர் விஜய் மல்லையா. இந்தியாவின் முதல் தப்பி ஓடிய பொருளாதாரக் குற்றவாளி விஜய் மல்லையா ஆவார்.

இச்சட்டத்தின் மூலம், விஜய் மல்லையாவின் அனுமதியின்றி அவருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்துகொள்ளலாம்.

100 கேடிக்குமேல் கடன்மோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டுத் தப்பிக்கும் நபர்கள் அனைவருமே பொருளாதாரக் குற்றவாளி என அறிவிக்கப்படுவார்கள்.

எனவே, அவர்களுடைய சொத்துகளை எளிதில் அமலாக்கத்துறையினர் முடக்கி பறிமுதல் செய்யமுடியும்.

லண்டன் தீர்ப்பும், இந்தியத் தீர்ப்பும்

விஜய்மல்லையா இன்னும் சில தினங்களில் நாடுகடத்தப்பட உள்ளதாலேயே இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகைக்குள் விஜய்மல்லையா இந்தியாவில் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

3

முன்னாள் காதலி மற்றும் காதலை மறப்பது எப்படி?

0
முன்னாள் காதலி மற்றும் காதலை மறப்பது எப்படி? காதலியால் கழற்றி விடப்பட்டவர்கள் காதல் தோல்வி

முன்னாள் காதலி மற்றும் காதலை மறப்பது எப்படி? காதல் தோல்வி-யில் இருந்து விடுபடுவது எப்படி? காதலியால் கழற்றி விடப்பட்டவர்கள் படிக்கவும்..

சமூக வலைதளங்கள் வந்தபின், காதலர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. காதலிக்க ஏதுவாக பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற செயலிகள் உள்ளன.

அதேநேரம் காதல் தோல்வி அடைந்தபின், அதை மீண்டும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வருவதும் இந்த சமூக வலைதளங்களே!

முன்னாள் காதலியை மறக்க நினைத்தாலும், சமூக வலைத்தளம் மூலம் கண் முன்னே வந்து நிற்பாள். காதலியால் கழற்றி விடப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?

எடுத்துக்காட்டாக, வாட்ஸ்ஆப்பில் லாஸ்ட்சீன் செக் செய்வது. பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அப்டேட் உள்ளதா? எனப்பார்ப்பது போன்ற செயல்களே!

ஒருவேளை நீண்ட நேரம் வாட்ஸ்ஆப்பில் இருந்தால் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள் என அவளை நினைத்து நினைத்து வேதனையடைவது.

முன்னாள் காதலி மற்றும் காதல் தோல்வியில் இருந்து எப்படி மீள்வது? 

சமூக வலைதளங்களில் உங்கள் காதலியின் ஐடியை ப்ளாக் செய்துவிடுங்கள். பெண்கள், காதலனுடைய ஐடியை ப்ளாக் செய்துவிடுங்கள்.

முடிந்தால், சிலநாட்களுக்கு சமூகவலைதளப் பக்கமே வரவேண்டாம். உங்களுடைய மொபைல் என்னை முடிந்தால் மாற்றிவிடுங்கள்.

உங்களுடைய எக்ஸின் புகைப்படம், செல்பி, அந்தரங்கப் படங்கள் இருந்தால் அதை அழித்துவிடுங்கள்.

அதைவைத்து அவர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம். அச்செயல் உங்களுடைய வாழ்க்கையையும் சீரழிக்க வாய்ப்பு உள்ளது.

அவளைவிட்டு பிரிந்து விட்டதை, எல்லோருக்கும் தெரியும்படி அறிவித்துவிடுங்கள். அதாவது, நீங்கள் காதலித்தது யாருக்கெல்லாம் தெரியுமோ அவர்களுக்கு…

இதனால் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் யாரும் உங்கள் எக்ஸ்யைப் பற்றி நினைவூட்டுவது தவிர்க்கப்படும்.

இவை அனைத்தையும் செய்தும் உங்களால் பழைய நியாபகங்களில் இருந்து மீளமுடியவில்லையா?

காதலை மறப்பது எப்படி?

புதிய நபர்களிடம் பேசுங்கள். புதிய காதலைக்கூட தேடிக்கொள்ளுங்கள். ஆனால் முடிந்தவரை காதலில் மீண்டும் விழாமல் இருப்பதே சிறந்தது.

ஒருவரை மறக்க இன்னொருவருடன் பேசி பழகுவது, பழைய காதலில் இருந்து எளிதில் வெளிவர உதவும். அதேவேளை, புதிய நபருடன் ஒரு எல்லை வைத்துப் பழகுங்கள்.

தனிமையில் அமர்ந்து புத்தகம் படியுங்கள். இது உங்கள் சிந்தனையைச் சிதறவிடாமல் இருக்க உதவும்.

உங்களுக்கு எதில் விரும்பம் அதிகமோ, அதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். செக்ஸ்-யை தவிர. அது, மீண்டும் உங்கள் எக்ஸ்-யை நினைவுபடுத்த வாய்ப்புள்ளது.

மீம்ஸ்களை அதிக அளவில் பாருங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். நண்பர்களுடன் விளையாடுங்கள்.

அறைக்குள் முடங்குவதைத் தவிருங்கள். பூட்டிய அறைக்குள் இருப்பது உங்களின் மன நிம்மதியைக் கெடுக்கும். மனநோயாளியாகக் கூட மாற்றிவிடும்.

3

ஹவாய் vs ஆப்பிள்: பலியாடாய் சிக்கிய பெண்!

0
ஹவாய் vs ஆப்பிள்

ஹவாய் vs ஆப்பிள்: பலியாடாய் சிக்கிய பெண்!

ஹவாய் நிறுவனம் புத்தாண்டு தினத்தன்று தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தது.

Tweet via iPhone

சீனாவில், அமெரிக்க சமூக வலைதளங்களுக்குத் தடை உள்ளது. எனவே, சீனாவில் பேஸ்புக், டிவிட்டர்களைப் பயன்படுத்த VPN அவசியம்.

அவ்வாறு, VPN துணையுடன் புத்தாண்டு வாழ்த்து ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இதனால், ட்வீட் ஆப்பிள் ஐபோன் மூலம் போடப்பட்டுள்ளது என ட்விட்டர் தெரிவித்துவிட்டது.

அவர்கள் நேரத்திற்கு விபிஎன் கனெக்சன் ஐபோன் தளத்தில் இயங்கியுள்ளது. இதன் காரணமாகவே Tweet via iPhone   எனக் காட்டியுள்ளது.

ஊழியர்கள் இதை உடனே கவனிக்கவில்லைபோல, ஹவாய் நிறுவனத்தினரே ஐபோன் வழியாக ட்விட் செய்கின்றனர் என ட்ரோல் செய்யத் துவங்கிவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஹவாய் மேலதிகாரிகள், ட்விட் செய்யும் பொறுப்பிலிருந்த இரண்டு ஊழியர்களைப் பணி குறைப்பு செய்துள்ளது.

அவர்களின் சம்பளத்தைக் குறைத்துவிட்டது. அடுத்த 12 மாதங்களுக்கு அவர்களுக்கு எவ்வித பதவி உயர்வும் இல்லை. மேலும், 50000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம்.

ஐபோன் விற்பனை சரிவு

கடந்த வருடம் அதிக மொபைல் ஃபோன் விற்பனையில், ஆப்பிள் ஐபோனை முந்தி ஹவாய் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. சாம்சங் நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது.

இதனால் ஆப்பிள் நிறுவனத்திற்கும், ஹவாய் நிறுவனத்திற்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது.

அமெரிக்க சீன வர்த்தகப்போர்

கடந்த வருடம் டிசம்பர் 1ஆம் தேதி, ஹவாய் நிறுவனரின் மகளும் அதிகாரியுமான ‘மேங் வான்ஸோ’ கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் ஒப்பந்தத்தை மீறி, ஈரான் நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஹவாய் செய்துவிட்டதாக, மேங் வான்சோவை கைது செய்ததாக அமெரிக்கா கூறியது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கடுமையான வர்த்தகப்போர் நடைபெற்று வருகின்றது. சீன நிறுவனங்களின் வளர்ச்சி, அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை.

எனவே சீனத் தயாரிப்புகளை, அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற மேலை நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்குட்பட்டே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஹவாய் நிறுவனத்தின் பங்குகளை அமெரிக்காவில் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

3