Sivakarthikeyan; எஸ்கேவை நான் அறிமுகம் செய்ய வேண்டியது: மனம் திறந்த பெண் இயக்குநர்! சிவகார்த்திகேயனை நான் அறிமுகம் செய்ய வேண்டியது ஏதோ ஒரு காரணத்தால் தவறிவிட்டது என்று பிரபல பெண் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனை நான் தான் அறிமுகம் செய்ய வேண்டியது என்று இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது முதல் படம் மெரினா. அதுவும், இயக்குநர் பாண்டிராஜ் இவரை அறிமுகம் செய்துள்ளார்.
மெரினா படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, நம்ம வீட்டு பிள்ளை என்று பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயனை தான் அறிமுகம் செய்திருக்க வேண்டியது என்று நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இவர் அம்மணி, நெருங்கி வா முத்தமிடாதே, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் அவரது பழைய குறும்படம் ஒன்றை பதிவிட்டு இதனை எப்போது ரிலீஸ் செய்வீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் இது வெறும் குறும்படம் மட்டும் இல்லை. சிவகார்த்திகேயனை நான் தான் அறிமுகம் செய்து இருக்க வேண்டும்.
அந்த சமயத்தில் நான் அதனை கைவிட்ட பின்னரே அவர் மெரினா படத்தில் ஒப்பந்தம் ஆனார் என்று கூறியுள்ளார்.
அதோடு, சிவகார்த்திகேயனை தான் அறிமுகம் செய்யமுடியவில்லை என்று கவலைப்பட்டதாகவும் இதன் மூலம் தெரிவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக்கிடம் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு புகழும் இங்கிலாந்து வீரர், இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்த கேப்டன் மோர்கன் புகழாரம்.
கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஒரு சிறந்த வீரர் மற்றும் திறமை மிகுந்த கேப்டன் ஆவார். அவரிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கு என மார்கன் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு முதல் உலகக்கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமை கொண்ட இவர் கொல்கத்தா அணியில் ஆடிய முன்னாள் வீரர் ஆவார்.
2012ல் ஐ.பி.எல் கோப்பை வென்ற கோல்கட்டா அணியில் இடம் பெற்றவர். 50 ஐ.பி.எல் போட்டிகளில் 854 ரன்கள் எடுத்தார். இரண்டாவது முறையாக மீண்டும் இந்த அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
தினேஷ் கார்த்திக் பற்றி மோர்கன் கூறியதாவது, கார்த்திக் சிறந்த பண்பு கொண்டவரும் துடிப்பாக செயல்படக்கூடியவர் ஆவார்.
இந்திய அணிக்காக விளையாடும் பொழுது போது சரியாகத் தெரியாது. ஆனால் கோல்கட்டா அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் துடிப்பாக செயல்படுகிறார்.
என்னால் முடிந்த உதவி செய்து அவரிடம் எனக்கு தேவையானதை கற்றுக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஈயன் மோர்கன்.
Simbu Workout Video; தீவிரமாக வீட்டையே சுத்தி சுத்தி வரும் சிம்பு! சிம்பு வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிம்பு தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில், சிம்பு வீட்டிலேயே உடற் பயிற்சி செய்து வருகிறார்.
வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்தைத் தொடர்ந்து சிம்பு மஹா மற்றும் மாநாடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். பல பிரச்சனைகளையும் தாண்டி அண்மையில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
அதற்குள்ளாக கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள், வீட்டு வேலை செய்வது, சமையல், துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, தோட்டத்தை பராமரிப்பது, உடற்பயிற்சி, யோகா செய்வது என்று பிஸியாக இருக்கின்றனர். மேலும், ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சிம்பு வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்து வருகிறார். அதுவும் வீட்டையே சுத்தி சுத்தி வருகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு பிரபலங்கள் பலரும் உதவி வரும் நிலையில் நடிகர் சிம்பு இதுவரை எந்த நிதியுதவியும் வழங்கவில்லை என்ற விமர்சனம் எழுந்து வருகிறது. இதற்கு விரைவில் சிம்பு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்ற கேள்வி தற்போது எழுகிறது.
இதே போன்று நடிகர் விஜய்யும் கொரோனா நிதியுதவி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த பொருளுதவிகளை தினமும் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக #SilambarasanTR என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என்ன? சீனாவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க காரணம் என்ன?
சீனாவில் ஒருகட்டத்தில் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருந்தனர். ஆனால், கடந்த இரு தினங்களாகப் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய தினம் இது 108 ஆக இருந்தது.
இதில் பெரும்பாலோனோர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களாகவே இருந்தனர். புதிதாக பாதிக்கப்பட்ட 89 பேரில் 86 பேர் ரஷ்யாவில் இருந்து வந்தவர்கள்.
தற்போது மீண்டு சமூக பரவல் மெதுவாக தொடங்கியதாக தெரிகிறது. முடிந்த வரை சீனா அனைத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
Ramya Pandiyan; இது யாருப்பா? ரம்யா பாண்டியன் சித்தப்பாவா? அப்போ புகழுக்கு என்ன மாமாவா? ரம்யா பாண்டியன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவருடைய சித்தப்பா அருண் பாண்டியன் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ரம்யா பாண்டியன் தனது சித்தப்பா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு சினிமா வாய்ப்பு இல்லை.
இதையடுத்து, என்ன செய்வது என்று யோசித்த ரம்யா பாண்டியன் தனது கிளாமர் புகைப்படங்களை டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அப்படி இவர் பதிவிட்ட மொட்டை மாடி ஹாட் போட்டோ ஷூட் புகைப்படம் சமூக வலைதளங்களை எகிற வைத்தது. ஒட்டு மொத்த சினிமா சேனல்களும் இவரது பக்கம் திரும்பின.
தொடர்ந்து விதவிதமான கெட்டப்புகளில் போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் – புகழ் காம்பினேஷனுக்கு தான் அதிக வரவேற்பு கிடைத்தது. புகழ் வெளியில் செல்லும் போது கூட ரம்யா பாண்டியன் எங்க? வரவில்லையா? என்றெல்லாம் கேட்பார்களாம்.
இருவருக்கும் அப்படி ஒரு கெமிஸ்டரி ஒர்க் ஆச்சு. எப்போதும், ரம்யா பாண்டியனை தனது டார்லிங், இதயம் என்றுதான் புகழ் அழைப்பாராம்.
ரம்யா பாண்டியன் தனக்கு ஜோடியாக வரவில்லை என்றால் அன்று முழுவதும் புகழுக்கு தூக்கமே வராதாம். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலுன், ரம்யா பாண்டியனுக்கு இந்நிகழ்ச்சி நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு 9 நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் பிரபல நடிகரின் புகைப்படத்தை பகிர்ந்து அவர் தனது சித்தப்பா என்று தெரிவித்துள்ளார்.
நடிகை ரம்யா பாண்டியனும் தன் சித்தப்பா அருண்பாண்டியனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ஹேண்ட்ஸம் ஜென்டில்மேன் சித்தப்பா என்று குறிப்பிட்டுள்ளார்.
ரம்யா பாண்டியனுக்கு அருண் பாண்டியன் சித்தப்பா என்றால் புகழுக்கு மாமாவா என்று அவரது ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ரம்யா பாண்டியனின் சித்தப்பா அருண் பாண்டியன் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர். சிதம்பர ரகசியம், ஊமை விழிகள், விலங்கு, இணைந்த கைகள், ரிஷி, தேவன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Nikhila Vimal; கொரோனா ஊரடங்கில் மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசு நடத்தும் கால் சென்டரில் நடிகை நிகிலா விமல் பணியாற்றி வருகிறார்.
நடிகை நிகிலா விமல் மக்களுக்கு உதவும் வகையில் அரசு நடத்தும் கால் சென்டரில் பணியாற்றி வருகிறார்.
சசிகுமார் நடிப்பில் வந்த வெற்றிவேல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிகிலா விமல். இப்படத்தைத் தொடர்ந்து கிடாரி, பஞ்சுமிட்டாய், ஒன்பது குழி சம்பத், தம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தமிழைத் தவிர மலையாளம் மொழியிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், லாக்டவுன் ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த இந்லையில், நடிகை நிகிலா விமல், சமூக பணிகளில் இறங்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.
ஆம், லாக்டவுன் உத்தரவு காரணமாக வீடுகளில் முடக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொடுப்பதை ஒருங்கிணைக்க கேரள மாநிலம் கண்ணூரில் கால் சென்டர் செயல்பட்டு வருகிறது.
அந்த கால் சென்டரில் வேலை பார்க்க தன்னார்வலர்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
இதையறிந்த நிகிலா விமல், உடனடியாக அந்த கால் சென்டரில் சேர்ந்து வேலை பார்க்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், மக்களுக்கு உதவக்கூடிய கால் சென்டரில் பணியாற்றுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
நிகிலா விமலின் இந்த செயலுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரியாஷ்கான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
ரியாஷ்கான் தான் தாக்கப்பட்டது குறித்து வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது ஊரடங்கு தடை உத்தரவு முடியும் நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவற்றிற்கு பிறபகல் 1 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையே காரணமாக வைத்துக் கொண்டு மக்கள் கொரோனாவின் உண்மை நிலவரம் குறித்து கவலை கொள்ளாமல் ஜாலியாக வெளியில் சுற்றி வருகின்றனர்.
அந்த வகையில் தான் வில்லன் நடிகர் ரியாஷ்கான் வீட்டருகில் வெளியில் சுற்றி வந்த ஒரு கும்பலை அவர் கண்டித்துள்ளார்.
ஆனால், அவர்கள் அதையெல்லாம் பெரிதாக நினைக்காமல் ரியாஷ்கானை தாக்கியுள்ளனர்.
இது குறித்து ரியாஷ்கான் புகார் அளிக்க அந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்த வீடியோ ஒன்றை ரியாஷ்கான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அனைவரும், வீட்டில் பாதுகாப்பாக இருப்பீர்கள். எனக்கு நடந்த சம்பவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
என் வீடு தெரு முனையில் இருப்பதால், இருபுறமும் சாலைகள்தான். மாலை 5 மணியளவில் வீட்டின் பெட்ரூம் பால்கனியில் நின்று காஃபி குடித்துக் கொண்டிருந்தேன். என் வீடு இருக்கும் கார்னரில் 10 பேர் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள்.
உடனே நான் கீழே சென்று அவர்களிடம் என்ன எல்லோரும் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறீர்கள் எங்கு போறீங்க என்று 10 அடி தூரத்திலிருந்து கேட்டேன்.
நாங்க காற்று வாங்க வந்தோம் சார் என்றார்கள். நான் உடனே தப்பான பதில் அல்லவா 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிற்து. கொரோனா வைரஸ் பற்றி உங்களுக்கு தெரியும்.
அப்படியிருக்கும் போது இப்படி கும்பலாக வரலாமா? இப்படி நின்றால் உங்களுக்கும் கெடுதல், எனக்கும் கெடுதல். நீங்கள் எந்த ஏரியாவிலிருந்து வர்றீங்க என்று கேட்டேன்.
நாங்க ரோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கோம். சும்மா இங்கிட்டு வந்தோம் என்றார்கள். நான் உடனே உங்கள் வீட்டிற்கு சென்று காத்து வாங்குங்கள் என்றேன்.
அதற்கு நாங்கள் ரோட்டுல தானே நிற்கிறோம். உங்கள் வீட்டிற்கு வரவில்லையே என்று சொன்னார்கள். நடிகர் ரியாஷ்கானா இருந்தால் சினிமாவில் இருக்கட்டும்.
எங்களிடம் இதெல்லாம் சொல்ல வேணாம். இந்த கொரோனா வைரஸ் எங்களுக்கு வராது. நீங்கள் எங்களுக்குப் புத்திமதி சொல்ல வேண்டாம் என்றார்கள்.
உடனே நான், புத்திமதி சொல்லவில்லை. என்னோட குடும்பத்தை நான் காப்பாற்ற ஆசைப்படுகிறேன். பக்கத்து வீடு, எதிர் வீடு அவர்களுக்கு எல்லாம் எதுவும் வரக்கூடாது என்று சொல்கிறேன்.
உங்கள் நன்மைக்கும் தான் சொல்கிறேன். தயவுசெய்து கலைந்து செல்லுங்கள். உங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். அப்படிப் போகும்போது கூட தனித்தனியாகச் செல்லுங்கள். கும்பலாகச் செல்லாதீர்கள் என்றேன்.
அப்போது பேசிக்கொண்டே என்னருகில் நடந்து வந்து, அதில் ஒருவன் எகிறிக் குதித்து என் மண்டையில் அடிக்க வந்தான்.
அப்போது நான் விலகவே, என் தோளில் அடிபட்டுவிட்டது. ஏன் இதெல்லாம் யாருக்குமே ஏன் புரியவில்லை? லாக்டவுன் தொடங்கி 17 நாட்கள் ஆகின்றன.
இதுவரைக்கும் அவர்களுக்கு அதன் சீரியஸ் என்னவென்று புரியவில்லை. ரொம்பக் கவலையாக இருக்கிறது என்றார்.
மேலும், இது குறித்து காவல்துறையினர் தரப்பினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் வந்து அந்த கும்பலைக் கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் ஜோதி மேடத்துக்கு நன்றி. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்களது பசங்களைக் கைது செய்ததற்கு எவ்வளவு கவலைப்படுவார்கள்.
தயவுசெய்து பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்தால் மட்டுமே இந்த கொரோனா வைரஸை ஒழிக்க முடியும்.
இல்லையென்றால் முடியவே முடியாது. அனைவருமே பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vivek என்னை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க? அஜித், விஜய் ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள்! முன்னணி நடிகர்களாக திகழும் விஜய், அஜித் ரசிகர்களுக்கு விவேக் டுவிட்டர் மூலமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.
குறிப்பாக அஜித், விஜய் ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள் வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கவுடண்மனி, செந்தில் ஆகியோரது காமெடி வரிசையில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்தவர் நடிகை விவேக்.
சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். கிரீன் கலாம் என்ற அமைப்பு மூலமாக நாடு முழுவதும் மரக்கன்றுகள் நட்டு வருகிறார்.
மக்களிடையே இது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில், உலகையே உலுக்கிய கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியிருக்கின்றனர்.
இந்த நிலையில், டிஆர்பியை எகிற வைப்பதற்காக சேனல்கள் விஜய், அஜித் படங்களை அடிக்கடி தங்களது சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.
எப்போதெல்லாம், அஜித், விஜய் படங்கள் திரையில் மட்டுமல்ல, சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறதோ, அப்போதெல்லாம், விஜய், அஜித் ரசிகர்கள் சம்பந்தப்பட்ட படத்தை ஹேஷ்டேக் போட்டு டுவிட்டரில் டிரெண்டாக்குகின்றனர்.
அதோடு இல்லாமல், அஜித் பற்றி விஜய் ரசிகர்கள் விமர்சிப்பதும், விஜய் பற்றியும் அவரது படம் குறித்து அஜித் ரசிகர்கள் விமர்சிப்பதும் காலங்காலமாக நடந்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையில் போட்டியும், மோதலும் நடைபெற்று வருகிறது.
ரசிகர்கள் பதிவிடும் டுவிட்டுகளில் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளையும் டேக் செய்து டுவிட் பதிவிடுகின்றனர்.
இதே போன்று நடிகர் விவேக்கிற்கும் டேக் செய்து டுவிட் பதிவிட்டுள்ளனர்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த விவேக், அஜித், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனி நபரையும் தரம் தாழ்ந்து கேவலமாக பேசும் எதிர்மறை பதிவுகளை நான் விரும்புவதில்லை.
தயவு செய்து இது போன்ற பதிவுகளில் என்னை டேக் செய்ய வேண்டாம். அதையும் மீறி செய்தால் பிளாக் செய்யப்படுவீர்கள். எனது டுவிட்டரை நான் நேர்மறைப் பதிவுகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் தனியாக இருக்கும் விவேக் பாடல்களுக்கு ஆர்மோனியம் வாசித்து தனிமையில் இனிமை கட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Anupama Parameswaran; தனது ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதோடு, மார்ஃபிங் படங்களை வெளியிட்டதற்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் கோபமாக பதிலளித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் வந்த கொடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
தற்போது தள்ளி போகாதே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
தமிழைத் தவிர தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், அனுபமா பரமேஸ்வரனின் ஃபேஸ்புக் பக்கத்தை சிலர் ஹேக் செய்து வெளியிட்டுதோடு இல்லாமல், அவரது புகைப்படங்களை மார்ஃபிங்கும் செய்து வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அனுபமா பரமேஸ்வரன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இந்த முட்டாள்தனங்களுக்கு எல்லாம் நேரமிருக்கும் அருவருப்பான நபர்களுக்கு, உங்கள் வீட்டில் அம்மா, அக்கா என்று யாருமே இல்லையா?
உங்கள் மூளையை இது போன்ற முட்டாள்தனங்களுக்குப் பயன்படுத்தாமல் ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்காக பயன்படுத்துங்கள்.
இதைத் தெளிவுபடுத்த விரும்பினேன் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ramya Krishnan; முத்தம் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்: வைரலாகும் புகைப்படம்! லாக்டவுனில் ரொம்பவே பிஸியாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரம்யா கிருஷ்ணன் முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். விஜய்காந்த், சரத்குமார், ரஜினிகாந்த் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
எனினும், அவரது நீலாம்பரி என்ற கதாபாத்திரம் தான் இன்றும் பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக கருதப்படுகிறது.
அதைவிட பாகுபலி சிவகாமி ராஜமாதா கதாபாத்திரமும் பட்டி தொட்டியெங்கும், உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகலீல் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ஒரு சில படங்களில் குத்தாட்டம் போடும் பாட்டுக்கும் டான்ஸ் ஆடியுள்ளார்.
அவர் நடித்த குயின் வெப் சீரிஸ் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. பிரபல இயக்குநர் கௌதவ் வாசுதேவ் மேனன் மற்றும் கிடாரி’ திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இருவரும் இணைந்து இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் இருக்கும் நிலையில் பிரபலங்கள் ரொம்பவே பிஸியாக இருக்கின்றனர்.
ஆம், சமையல், துணி துவைப்பது, தோட்ட வேலை பார்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என்று ரொம்பவே பிஸியாக இருக்கின்றனர்.
அந்த வகையில், ரம்யா கிருஷ்ணன், நடிகை சார்மி உடன் வீடியோ கால் பேசியுள்ளார். இருவருமே ஒருவருக்கொருவர் முத்தம் கொடுப்பது போன்று Screenshot எடுத்த புகைப்படத்தை சார்மில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது ரம்யா கிருஷ்ணன் முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.