Sivakumar; “நான் அனாதைப் பிணம்தான் – விசு” சுட்டிக்காட்டிய சிவகுமார்! வெளிநாட்டில் இருக்கும் என் குழந்தைகள் இந்தியா வரும் வரை நான் அனாதைப் பிணம்தான் என்று விசு கூறியதாக நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், வசன கர்த்தா என்று பலதிறமைகளை கொண்ட விசு நேற்று மாலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விசு பற்றி நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அன்பு விசு! டைரக்டர் கே.பாலச்சந்தரை அடுத்து நகரத்து நடுத்தர மக்களின் வாழ்க்கையை உணர்வு பூர்வமாக மேடையிலும் திரையிலும் கூர்மையான வசனங்களால் படம் பிடித்து காட்டியவர் நீங்கள்…
சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு – இரண்டு படங்கள் போதும். உங்களை உலகம் புரிந்து கொள்ள…
அரட்டை அரங்கம் – அகில உலகப் புகழை உங்களுக்கு சேர்த்தது. தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கெல்லாம் படையெடுத்து குக்கிராமத்தில் உள்ள ஏழை மாணவ, மாணவிகளின் ஏக்கங்களை, வலிகளை வெளிப்படுத்த வாய்ப்பளித்து பல பேருக்கு வாழ்வில் ஒளியேற்றி வைத்தீர்கள்…
மக்களின் வாழ்க்கை போராட்டங்களை ரத்தமும், சதையுமாக படைப்புகளில் வெளிப்படுத்திய நீங்கள் தனி மனித வாழக்கையிலும் ஆரோக்கியத்திற்காக கடைசி நிமிடம் வரை தளராது போராடினீர்கள்…
இறைவன் விதித்த மானுட வாழ்வை கடைசி மணித்துளி வரை வாழ்ந்து விட்டீர்கள்…
மண்ணில் பிறந்த மனிதன் ஒரு நாள் இந்த மண்ணை விட்டு பிரிந்தே ஆக வேண்டும்.
உங்களுக்கு கடைசி மரியாதை செய்யக்கூட முடியாதபடி கொரோனா வைரஸ் எச்சரிக்கையால் பஸ் பயணம், ரயில் பயணம், விமானப் பயணம் தவிர்க்கும்படி டாக்டர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்…
என் உயிர் பிரிந்தால் வெளிநாட்டிலிருக்கும் என் குழந்தைகள் இந்தியா திரும்பும் வரை நான் அனாதைப் பிணம்தான் என்று உருக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தீர்கள். அந்தக்குறை இல்லாமல் மக்கள் கடைசி தருணத்தில் உங்களோடு இருந்தார்கள் என்று அறிகிறேன்.
பூமியில் வாழ்ந்த காலம் வரை அர்த்தமுள்ள வாழ்வு, மக்களுக்கு பயன்படும் வாழ்வு வாழ்ந்து விட்டாய். போய் வா நண்பா! அடுத்த பிறவியில் சந்திப்போம் – சிவகுமார்” .
இவ்வாறு நடிகர் சிவகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Losliya: தமிழகத்தின் அழகு ராணியான லோஸ்லியா! லோஸ்லியா இன்று தனது 24ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் உலகம் அறியும் ஒரு பிரபலமாக அறிமுகமானவர் லோஸ்லியா (Losliya Mariyanesan).
கடந்த 1996 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி (Losliya Birth Date) இலங்கையில் உள்ள கிளிநொச்சி பகுதியில் பிறந்தார். அதன் பிறகு கொழும்புவிற்கு குடும்பத்தோடு இடம்பெயர்ந்தார்.
மாடலாக இருந்த லோஸ்லியா (Losliya) இலங்கையில் உள்ள ஒரு சேனலில் நியூஸ் வாசிப்பவராக பணியாற்றினார்.
அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் (Bigg Boss Tamil Season 3) 2ஆவது போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் போட்டியாளர் இவர்.
இந்நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் அன்பைப் பெற்ற லோஸ்லியாவிற்கு லோஸ்லியா ஆர்மி (Losliya Army) உருவாக்கப்பட்டது. இன்றும், லோஸ்லியா ஆர்மி இருந்து வருகிறது.
முக்கியமான சாண்டி, கவின், முகென், லோஸ்லியா கூட்டணிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். எப்போதும் பாட்டும் டான்ஸும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு கலக்கு கலக்கினார்.
கவின், லோஸ்லியா இருவரது காதல் காட்சியை பார்த்தால் காதலிக்காத இளைஞர்களுக்கு கூட காதல் வரவழைக்கும். பார்வையால் பேசிக் கொள்வது சரி, இருவருக்கும் இடையில் இருக்கும் புரிதலும் சரி, விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் சரி எல்லாவற்றுக்கும் மேலாக கவின், லோஸ்லியா சாங், டான்ஸ் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
அடியே லோஸ்லியா…என்ன பாத்தியா…கண்டுக்க மாட்ரியே…உன் மனசு காஸ்ட்லியா… காதல சொன்னேனே… கருணை காட்டுனியா…சோகமா இருந்தேனே… பாவம் பாத்தியா… என்று கவின் பாடுவதும் அதற்கு லோஸ்லியா டான்ஸ் ஆடுவதும் செம்மாயா இருக்கும்.
இதே போன்று உங்க அப்பாவ பாத்தாலும் பயம்… உங்க அம்மாவ பாத்தாலும் பயம் எனக்கு எப்போ கிடைக்கும் இந்த பழம் என்று கவின் லோஸ்லியாவைப் பார்த்து பாடுவதும் அதற்கு லோஸ்லியா சின்னதாக டான்ஸ் ஸ்டெப் போடுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்…
லோஸ்லியாவின் சிரிப்புக்கும், டான்ஸூக்கும் என்றே ஏகப்பட்ட ரசிகர்கள். அதில், நானும் ஒருவன். இப்போது கூட அவரது டான்ஸை பார்த்தாலும் சிரித்துக் கொண்டே ரசிக்கத்தோன்றும்…
கலகலப்பாக சென்று கொண்டிருந்த கவின் – லோஸ்லியா காதல் விவகாரத்தில் லோஸ்லியாவின் பெற்றோர் இடையூறாக வர, ஒரு கட்டத்தில் இருவரும் பிரியும் நிலை வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இருவரும் அவர்களது படங்களில் பிஸியாக இருக்கின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய லோஸ்லியாவிற்கு ஹர்பஜன் சிங், அர்ஜூன் கூட்டணியில் உருவாகும் ப்ரண்ட்ஷிப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதுவும், ஹீரோயின் வாய்ப்பு அதுவும், ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக சொல்லவா வேணும்…இப்படி வரவேற்பு கொடுத்து கொடுத்து லோஸ்லியா ஆர்மியினர் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றனர்.
சமீபத்தில் ஃப்ரண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. ப்ரண்ட்ஷிப் படத்தைத் தொடர்ந்து ஆரி நடிப்பில் உருவாகும் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் படத்தில் லோஸ்லியா, ஸ்ருஷ்டி டாங்கே என்று இரு ஹீரோயினகள்.
சமீபத்தில் கலாட்டா சேனல் சார்பில் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான அழகு ராணி (Beauty Queen of the year) விருது லோஸ்லியாவிற்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று தனது 24 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் லோஸ்லியாவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
லோஸ்லியா ஆர்மியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் இணையதளம் மூலமாக நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம்.
வங்கதேச அணியின் வெற்றியை கடைசி மூன்று பந்துகளில் பறித்த இந்திய அணி ரசிகர்களை பரபரப்பாக்கி வெற்றி பெற்றது
உலகக்கோப்பை போட்டி
2016 ஆம் ஆண்டு உலக கோப்பை இந்தியாவில் நடைபெற்றது.
மொத்தம் 10 நாடுகள் பங்கு பெற்ற இந்த உலக கோப்பையில் குரூப் 1 இல் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா அணிகள் பங்கு பெற்றது
குரூப் 2வில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் விளையாடியது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும் அதன்படி குரூப்-1 பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
குரூப் 2 வில் 4 போட்டிகளில் வென்ற நியூசிலாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது மற்றும் ஒரு அணியில் இந்தியா ஆஸ்திரேலியா இதில் ஏதாவது ஒரு அணி தான் தகுதி பெற முடியும் என்ற நிலைமை இருந்தது.
இந்தியா-வங்கதேசம்
இந்தியா மார்ச் 23ஆம் தேதி வங்கதேசத்துடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் லீக் போட்டியில் மோதியது.
வங்கதேசம் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
வங்கதேச பந்துவீச்சாளர்கள் அருமையாக பந்துவீசி இந்திய பேட்ஸ்மேன்களை ரன் சேர்க்க விடாமல் தடுத்தார்கள்.
இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியை பொறுத்தவரை சுரேஷ் ரெய்னா 30, ரோகித் சர்மா 18, தவான் 23, கோலி 24, தோனி 13 யுவராஜ் சிங் 3, பான்டியா 15, ஜடேஜா 12 ரன்கள் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் அல்-அமீன், முஸ்தபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன், ஹோம் மற்றும் முகமதுல்லா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
வங்கதேசம் வெற்றி விழும்பில்
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச வீரர்கள். இந்திய பந்துவீச்சாளர்களை எளிதாக சமாளித்து ஆடினார்கள்.
தமிம் இக்பால் 35, மிதுன் 1, ரகுமான் 26, ஷகிப் அல் ஹசன் 22, மோர்தசா 6 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.
ஆட்டம் செல்ல செல்ல வங்கதேசம் கையிக்கு வெற்றி சென்றது. இந்த போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற அதிக சதவீதங்கள் இருந்தது.
கடைசி ஓவர்
கடைசி ஓவரில் வங்கதேச அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது அந்த ஓவரை வீச அன்றைய அனுபவம் இல்லாத இளம் வீரர் ஹர்திக் பாண்டியா வந்தார்.
முதல் பந்தை முகமதுல்லா ஒரு ரன் எடுக்க, இரண்டு மற்றும் மூன்றாவது பந்தை முஷ்பிக்குர் ரஹிம் பவுண்டரிக்கு விரட்டினார். விரட்டியதுமே முஷ்பிக்குர் ரஹிம் வெற்றியைக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்.
இதன் மூலம் இந்த மூன்று பந்துகளில் 9 ரன்கள் எடுக்க பட்டது. மீதமுள்ள 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் வங்கதேச அணி வெற்றி பெறும் என நிலைமை இருந்தது.
நம்பிக்கை இழந்த ரசிகர்கள்
சின்னசாமி மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் அனைவரும் வங்கதேசம் வெற்றி பெறும் என்று நினைத்து ஆரவாரத்தை குறைத்தார்கள்.
ஆனால் ஹர்திக் பாண்டியா விற்கு நம்பிக்கை இன்னும் தளர்ந்து போகவில்லை.
நான்காவது பந்தை ஹர்திக் பாண்டியா வீச முஸ்தபிசுர் ரஹிம் தூக்கி அடித்தார். ஆனால் அதை தவான் கேட்ச் பிடித்து முஸ்தபிசுர் ரஹீம் 11 ரன்களில் வெளியேற்றினார்.
அடுத்துச் சுவகோட்டா ஹோம் களமிறங்கினார். ஆனால் முகமதுல்லா ஐந்தாவது பந்தை எதிர்கொண்டார்.
அந்த பந்தை லெக் சைட் தூக்கி அடித்தார், ஜடேஜா அங்கு ஒரு அற்புதமான கேட்ச் பிடித்து முகமதுல்லாவை 18 ரன்னில் வெளியேற்றினார்.
இன்னும் வங்கதேச அணிக்கு ஒரு பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டது. மீண்டும் ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது.
ஒருவேளை ஆட்டத்தை சமம் செய்தாலே போதும் சூப்பர் ஓவரில் வெற்றி பெறலாம் என்று நினைத்தார்கள்.
தோனி கொடுத்த டிப்ஸ்
தோனி நீண்டநேரம் ஹர்திக் பாண்டியா விற்கு ஆலோசனை செய்துவிட்டு கீப்பிங் செய்யும் இடத்திற்கு சென்றார்.
ஒருவேளை பேட்ஸ்மேன் மட்டையில் படாமல் கீப்பரிடம் வந்துவிட்டால் ரன் அவுட் ஆக்க இடையூறாக இருக்குமென்று தோனி தான் அணிந்திருந்த கை உரையை கழற்றி வைத்தார்.
கடைசி பந்தை வீச ஹர்திக் பாண்டியா ஓடிவந்தார். அதை எதிர்கொண்ட ஹோம் மட்டையில் படாமல் ரன் எடுக்க ஓடினார். நேராக கீப்பரிடம் பந்து சென்றது.
ஆட்டத்தை டிரா செய்ய முஸ்தாபிகுர் ரகுமான் ஓடிவர தோனியும் பாய்ந்து வந்து ரன் அவுட் செய்தார்.
யுவராஜ் சிங் “அது விக்கெட்டு தான்” என்று சந்தோசத்தில் ஓட, தோனியும் கூடவே ஓடினார்.
நடுவரோ மூன்றாவது நடுவருக்கு சைகை செய்தார். ரசிகர்கள் மனதில் திக் திக் நிமிடமாக அமைந்தது.
இந்தியா வெற்றி
அந்த நொடி மூன்றாவது நடுவர் அதை ஆராய்ந்து பார்த்ததில் முஸ்தபிசுர் ரஹ்மான் ரன் ஏதும் எடுக்காமல் தன் விக்கெட்டை இழந்தார் என அறிவித்தார்.
அடுத்த கணமே மைதானம் அதிரும் அளவிற்கு ரசிகர்கள் சத்தம் காதைப் பிளந்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது.
மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் மட்டுமில்லாமல் டிவியைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களும் சீட்டின் நுனிக்கே வந்துவிட்டார்கள்.
19.3 ஓவரில் வங்கதேசம் அணி வெற்றி பெறும் என்று டிவி பார்த்துக்கொண்டிருந்த இந்திய ரசிகர்கள் டிவியை ஆப் செய்தார்கள்.
சில துளிகள்
கடைசி மூன்று பந்தில் விக்கெட் வீழ்த்தி ஹர்திக் பாண்டியா எனும் நட்சத்திரம் உருவாக காரணமாக அமைந்தது.
இந்த போட்டியில் வங்கதேசம் தோற்றதால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. ஒரு ரன்னில் தோற்றது டி20 போட்டிகளில் இது நான்காவது முறையாகும்.
டி20 போட்டிகளில் கடைசி மூன்று பந்துகளில் மூன்று விக்கெட் இழந்தது. இந்த ஆட்டத்தில் நடந்ததே டி20 போட்டியில் முதல் முறையாகும்.
இந்த ஆட்டத்தில் தோனி தன்னுடைய டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்தார். ஆயிரம் ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய வீரர் ஆவார்.
4 ஓவர்கள் பந்துவீசி 20 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
மிகவும் பரபரப்பான டி20 போட்டிகளில் இதுவே முதன்மையாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லாத ஒன்று.
Andha Kanna Paathaakaa Song Lyric; ஸ்மார்ட்டான தோற்றத்தில் தளபதி விஜய்: வைரலாகும் அந்த கண்ண பாத்தாக்கா லிரிக் வீடியோ! அந்த கண்ண பாத்தாக்கா பாடல் லிரிக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாஸ்டர் படத்தின் அந்த கண்ண பாத்தாக்கா பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் மாஸ்டர். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆனால், கொரோனா எதிரொலி காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள 8 பாடல்கள் வெளியிடப்பட்டது.
ஆனால், படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் கூறியிருந்தார்.
மாஸ்டர் இசை வெளியீட்டுக்கு முன்னதாக மாஸ்டர் குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ, வாத்தி பாடல் லிரிக் வீடியோ மற்றும் வாத்தி ரெய்டு பாடல் லிரிக் வீடியோ என்று அடுத்தடுத்து பாடல்கள் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள அந்த கண்ண பாத்தாக்கா என்ற பாடலின் லிரிக் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா தனது சொந்தக் குரலில் இந்தப் பாடலை பாடியுள்ளார்.
இதற்கு முன்னதாக புதிய கீதை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த கண்ண பாத்தாக்கா என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியாக இருந்த நிலையில், இந்தியா முழுவதும் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக மாஸ்டர் டிரைலர் நேற்று வெளியாகவில்லை.
அதற்கு பதிலாக தற்போது அந்த கண்ண பாத்தாக்கா என்ற பாடல் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் பாடலில், மாளவிகா மோகனன் மற்றும் விஜய் இருவரது ரொமான்ஸ் காட்சி இடம்பெற்றுள்ளது. அதோடு, விஜய் தாடி இல்லாமல் ஸ்மார்ட்டாக இளமையான தோற்றத்தில் நடித்துள்ளார் என்று பாடலை பார்த்தாலே தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Cinema 1992: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட 1992! தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும், ஏதாவது ஒரு மறக்க முடியாத நிகழ்வு நடந்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில், Tamil cinema 1992-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நிகழ்ந்த மாறுதல் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்த 1992-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட பல நிகழ்வுகள் நடந்துள்ளது. அது, மாஸ் ஹீரோக்களுக்கு மறக்க முடியாத வகையில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. அது படங்களின் வசூல், பிரபலங்களின் திருமணம், வருமான வரித்துறை சோதனை, பிரபலங்களின் விபத்து, இறப்பு…இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில், Tamil Cinema 1992-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் என்ன நடந்தது? ஏன் தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட 1992 என்று சொல்கிறார்கள்? என்பது குறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம்.
ஒரே வருடத்தில், இப்போது இருக்கும் விஜயகாந்த், சரத்குமார், கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜய் என்று மாஸ் நடிகர்களுக்கு சினிமா வாழ்க்கையை மாற்றியமைத்த ஆண்டாக கருதப்படுகிறது. அது என்னென்ன படங்கள் என்று இங்கு பார்க்கலாம்.
சின்ன கவுண்டர்
கடந்த 1992-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி திரைக்கு வந்த படம் சின்ன கவுண்டர். ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த், மனோரமா, சுகன்யா, கவுண்டமனி, செந்தில் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்திற்கு முன்பாக விஜயகாந்த் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், எல்லாமே ஆக்ஷன் படங்களாகவே அமைந்தது.
ஆனால், சின்ன கவுண்டர் படம் முழுக்க முழுக்க கிராம மக்கள் மரியாதை கொடுப்பதும், தப்பு, தவறு நடந்தால் பஞ்சாயத்து மூலம் தீர்ப்பு சொல்வதும் என்று எல்லாமே விஜயகாந்திற்கு கிடைத்த பெருமை. இந்தப் படத்தில் பெரிய அளவில் சண்டைக் காட்சி இடம் பெற வில்லை.
விஜய்காந்த் அரசியல்
கடந்த 2004 ஆம் ஆண்டு விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு சின்ன கவுண்டர் படம் அவருக்கு பக்க பலமாக, பாலமாக அமைந்தது.
சின்ன கவுண்டர் பம்பரம்
சின்ன கவுண்டர் படத்தில் ஒரு முக்கியமான காட்சியும் இடம்பெற்றிருந்தது. அது என்னவென்றால், நடிகை சுகன்யா தொப்புள் (Sunganya Navel) பகுதியில் வயிற்றில் பம்பரம் சுற்றுவதுதான்.
இதன் கட்சிக்கு பிறகு அந்த பம்பரத்திற்கு பெயரே சின்ன கவுண்டர் பம்பரம் என மாறிப்போனது. பம்பரத்திற்கும் அப்படியொரு மவுசு இருந்தது.
இந்தக் காட்சி ஏன் படத்தில் இருந்தது, சுகன்யா ஏன் பம்பரக் காட்சியில் நடித்தார் என்பதெல்லாம் கேள்விக்குறிதான்?
சரத்குமார் – சூரியன்
இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பாக சரத்குமார் ஒரு துணை நடிகர், வில்லன் கதாப்பாத்திரங்களில் தான் நடித்திருந்தார்.
தேசிய கமாண்டாவாக நடித்திருந்த சரத்குமார் மீது தீவிரவாதி என்ற பழி சுமத்த அங்கிருந்து வேறொரு கிராமத்திற்கு சென்று மக்களோடு மக்களாக வாழ்கிறார்.
மொட்டை
இந்தப் படத்திற்காக நிஜமாகவே மொட்டை அடித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு படத்திற்காக சரத்குமார் மொட்டை அடித்த விஷயம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்தப் படத்தில் மனோரமா, கவுண்டமனி, ரோஜா ஆகியோர் நடித்திருந்தனர்.
கவுண்டமனி காமெடி
இந்தப் படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ஆம், அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா, இங்க பூசு, அங்க பூசு, ரைட்ல பூசு, லெப்ட்ல பூசு போன்ற காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அசோஸியேட் டைரக்டர் ஷங்கர்
இப்படத்தின் டைட்டிலில் அசோஸியேட் டைரக்டர் ஷங்கர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அது வேறு யாமில்லை. இப்போது பிரமாண்ட இயக்குநராக பார்க்கப்படும் இயக்குநர் ஷங்கர் தான்.
இந்தப் படம் தான் சரத்குமார் அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றது. பேரும் புகழும் கிடைத்தது.
ரோஜா : மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான்
கடந்த 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரைக்கு வந்த படம் ரோஜா. இப்படத்தை இயக்கியது இயக்குநர் மணி ரத்னம். இசை, ஏஆர் ரஹ்மான்.
தமிழகத்தில் ஒரு இயக்குநராக மணி ரத்னம் என்பவரை அனைவருக்கும் தெரியும். ரோஜா ஹிந்தியில் டப் செய்யப்பட்ட பிறகு இந்திய அளவில் ரஹ்மான்-மணிரத்னம் புகழ் ஒலித்தது.
தேசப்பற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தின் பாடல் கேசட் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
கமல் ஹாசன் – தேவர் மகன்
1992-ஆம் ஆண்டு கமல் ஹாசனுக்கு சினிமா வாழ்க்கையை மாற்றிய படமாக இருந்தது தேவர் மகன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரேவதி, வடிவேலு, கௌதமி, நாசர் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு இசை நம்ம இசைஞானி இளையராஜா தான். படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் இஞ்சி இடுப்பழகி பட்டி தொட்டியெங்கும் பரவியது. இன்றும் பேசப்பட்டு பாடப்பட்டு வருகிறது.
தேவர் மகன் என்று டைட்டில் வைத்ததற்கு பல இடங்களில் கலவரம் வெடித்தது. படமும் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. கிட்டத்தட்ட 200 நாட்கள் ஓடி வெற்றிகண்ட படமாக தேவர் மகன் திகழ்கிறது.
தமிழகத்தில் சிறந்த 10 படங்கள் எது என்ற பட்டியலில் தேவர் மகன் படமும் ஒன்றாக இருக்கும்.
இந்த படத்தில் கமல்-நாசர் நேருக்கு நேர் பார்க்கும் படம் தான் பாகுபலி, விக்ரம் வேதா, மாஸ்டர் போன்ற பல படங்களின் போஸ்டருக்கு இன்ஸ்பிரேஷன்.
ரஜினிகாந்த் – அண்ணாமலை
ரஜினிக்கு வாழ்க்கையை மாற்றிய படம் எது என்றால், அது அண்ணாமலைதான். இந்தப் படத்தில் குஷ்பு, மனோரமா, ஜனகராஜ், சரத்பாபு ஆகியோர் நடித்திருந்தனர்.
படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு டயலாக், அசோக் உன்னோட காலண்டரில் குறித்து வைத்துக் கொள்…இந்த நாள் என்ற டயலாக் இன்றும் இளைஞர்கள் மத்தியில் பேசப்படும் ஒரு வசனம்.
இந்த படத்தில் அசோக் கதாபாத்திரம் சீட்டில் இருந்து எழுந்து நிற்க, ரஜினி உட்காரும் காட்சி இடம் பெரும். இது நேரடியாகவே ஜெ.வை குறித்து வைக்கப்பட்டது.
ரஜினி – ஜெயலலிதா சச்சரவு
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும் ரஜினிக்கும் இடையில் இருந்த சச்சரவு, இந்த படத்தின் போது பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.
இந்தப் படமும் பல இடங்களில் 150 நாட்களுக்கு மேலாக ஓடியுள்ளது. இப்படத்திற்கு இசை தேவா தான். வந்தேண்டா பாலுக்காரன், அண்ணாமலை ஆகிய பாடல்கள் சூப்பர்ஹிட் பாடல்களாக அமைந்துள்ளது.
தளபதி விஜய் – நாளைய தீர்ப்பு
தற்பொழுது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பது தளபதி விஜய். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜய்.
1992-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படத்தில் கீர்த்தனா, ஈஸ்வரி ராவ், ஸ்ரீவித்யா, ராதா ரவி, வினுசக்ரவர்த்தி, கே ஆர் விஜயா, சரத்பாபு ஆகியோர் உள்பட பலர் நடித்திருந்தனர்.
இப்படி பல திருப்பு முனைகளை கொண்டு வந்து நடிகர்களை உச்சம் தொட வைத்த வருடமாக 1992 அமைந்துள்ளது. ஆதலால், தான் தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட வருடமாக 1992 கருதப்படுகிறது.
Senthil Birthday; கோச்சுக்கிட்டு வீட்டைவிட்டு வந்து ஒயின்ஷாப்பில் வேலை பார்த்தவருக்கு இப்படியொரு வாழ்க்கையா? நகைச்சுவை நடிகர் செந்தில் இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
செந்தில் இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா என்றால், செந்தில், கவுண்டமனி இல்லாத காட்சிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவை தனது நகைச்சுவைக்குள் வைத்திருந்தார்.
செந்தில் வாழ்க்கை (Comedy Actor Senthil)
கடந்த 1951 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள இளஞ்சம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் தான் நம்ம காமெடி நடிகர் செந்தில்.
செந்தில் பெற்றோர்
ராமமூர்த்தி – திருகம்மாள்…
செந்தில் திருமணம் (Senthil Marriage)
செந்தில் கடந்த 1984 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகன்கள்.
இவரின் முதல் மகன் மணிகண்டபிரபு டாக்டராக இருக்கிறார். 2ஆவது மகன் ஹேமசந்திரபிரபு சினிமாவில் நடிக்க முயற்சித்து வருகிறார்.
வீட்டைவிட்டு வெளியேறிய செந்தில்
தனது அப்பா திட்டியதால் 13ஆவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறிய செந்தில், சென்னைக்கு வந்துள்ளார். முதலில் அவர் வேலை பார்த்தது எண்ணெய் மார்ட்டில்தான். அதன் பிறகு ஒயின்ஷாப்பில் வெயிட்டராக வேலை பார்த்துள்ளார்.
கவுண்டமனி அறிமுகம் (Senthil And Goundamani)
நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் மேடை நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அப்போதுதான் கவுண்டமனியின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதன் பிறகு இருவரும் இணைந்து மேடை நாடகங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
மலையாள சினிமா அறிமுகம் (Senthil Malayalam Movie)
இப்படி தொடர்ந்து மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது, புரோடக்ஷன் மேனேஜர் ஒருவரது உதவியின் மூலம் இதிக்கார பக்கி (Ithikkara Pakki) என்ற மலையாள படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். பசி, கிளிஞ்சல்கள், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, தீர்ப்புகள் திருத்தப்படலாம், அர்ச்சனை பூக்கள், பொய் சாட்சி, தூறல் நின்னு போச்சு, மலையூர் மம்பட்டியான், வைதேகி காத்திருந்தாள், நான் சிகப்பு மனிதன் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
செந்தில் சம்பளம் Senthil Salary
கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார். சினிமாவில் அறிமுகமானதில் இருந்து ரூ.5, ரூ.100 என்றுதான் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.
கவுண்டமனி – செந்தில் கூட்டணி
கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான உதயகீதம் படத்தில் கவுண்டமணி – செந்தில் காமெடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
செந்திலின் மார்க்கெட்டும் சூடு பிடித்தது. சம்பளமும் ரூ.100 லிருந்து ரூ.1000 ஆக உயர்ந்தது.
80 படங்கள்!
1979 ஆம் ஆண்டு ஓரிரு படங்களில் நடித்து வந்த செந்திலுக்கு 1984 ஆம் ஆண்டு 17 படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1985 ஆம் ஆண்டு 29 படங்கள், 1986 ல் 36 படங்கள் என்று வரிசை கட்டி சினிமாவை கலக்கி வந்தார்.
செந்தில் நடித்த ஒரு வருடம் 80 படங்கள் வெளியாகியது. ஒரே நேரத்தில் 45 படங்களில் எல்லாம் நடிக்கும் நிலைகூட அவருக்கு வந்துள்ளது.
1300க்கும் அதிகமான படங்கள்
தன்னால் கூட சொல்ல முடியாத அளவிற்கு 1300க்கும் அதிகமான படங்களில் செந்தில் நடித்துள்ளார். தமிமில் மட்டுமல்லாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் 5 ரூபா சம்பளம் வாங்கிய செந்திலுக்கு தற்போது ரூ.25 லட்சம் சம்பளமாம். விவேக், வடிவேலு கூட்டணி வரும் வரை தமிழ் சினிமாவை கலக்கு கலக்கு என்று கலக்கியவர்.
நகைச்சுவை எழுதிய வீரப்பன்
செந்திலுக்கு நகைச்சுவை பகுதிகளை எழுதிக் கொடுத்தவர் வீரப்பன். இவர், தான் செந்திலை கவுண்டமனியிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இவ்வளவு ஏன், கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழ காமெடியை எழுதியதே இவர்தானாம். ஆகையால், செந்திலுக்கு கிடைத்த வெற்றியில் வீரப்பனுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
செந்தில் விபத்து (Senthil Accident)
கொடைக்கானலில் நடந்த படப்பிடிப்பின் போது தவறி விழுந்ததில் செந்திலுக்கு முதுகு எலும்பில் அடிபட்டுள்ளது. இதனால், சில வருடங்கள் ஓய்வில் இருந்தார்.
தானா சேர்ந்த கூட்டம்
செந்திலின் 6 வருட இடைவெளிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் வந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கடந்த ஆண்டு வந்த ராசாத்
தி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரையிலும் அறிமுகமானார்.
செந்தில் வீடு
லட்சம் லட்சமாக சம்பளம் வாங்கிய செந்திலுக்கு சென்னையில் ஒரு பெரிய வீடு இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரை இருக்கும். செந்திலுக்கு அவரது மனைவிதான் உலகமே. ஒருநாள் கூட அவரை படப்பிடிப்பிற்கு அழைத்து சென்றதே இல்லையாம்.
செந்தில் சொகுசு கார்
செந்தில் ஆடி A4 என்ற சொகுசு கார் வைத்திருக்கிறார்.இதன் மதிப்பு சுமார் 40 லட்சம். மேலும் இவரிடம் ரூ.18 லட்சம் மதிப்பில் ஸ்க்ரோடா ஆக்டோவியா காரும் உள்ளது. அதோடு, ரூ.16 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா இநோவா காரும் வைத்து உள்ளார்.
செந்தில் அரசியல் வாழ்க்கை
ஆரம்பத்தில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த செந்தில், தற்போது அமமுக கட்சியில் இருக்கிறார். அதுவும் அமைப்புச் செயலாளராக இருக்கிறார். இதற்கு முன்னதாக இந்தப் பதவியில் கோகுல இந்திரா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில் உடன் இணைந்து கதிர்காமு, ராஜா மாணிக்கம், தேவதாஸ் மற்றும் ஹென்றி தாமஸ் ஆகியோரும் இந்த அமைப்பு செயலாளர் பதவியில் இருக்கின்றனர்.
செந்தில் பிறந்தநாள் (Senthil Birthday)
இந்த நிலையில், செந்தில் இன்றுதனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் இணையதளம் வாயிலாக நாமும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம்.
இத்தாலி கொரோனா நோயாளிகளை காப்பாற்ற 17 மருத்துவர்கள் உயிர்த்தியாகம்
உலகையே அச்சுறுத்தும் கோரோனோவால் சீனாவை விட அதிகம் பாதிக்கப்பட்டது இத்தாலி நாடுதான்.
ஒரு கட்டத்திற்கு மேல் இத்தாலியால் கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. மற்ற நாடுகளை விட இறப்பு விகிதம் இங்குதான் அதிகம்.
இத்தாலியில் இது வரை 59138 பாதிக்கப்பட்டுள்ளனர். 5476 பேர் உயிரிழந்துள்ளனர். 7024 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாள் ஒன்றுக்கு 700, 800 என இரக்கமில்லாமல் வேட்டையாடும் கொரோனா கொடூரனால் கலங்கிய இத்தாலி மக்கள்.
மக்கள் அனைவரையும் வெளியில் செல்லாமல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்தது அந்நாடு. அனைத்து பயணங்களையும் தடை செய்தது.
In Italy 🇮🇹 17 doctors 🥼 died helping save others from the Coronavirus pandemic. These are nowadays heroes. Respect ✊🏼 #StayAtHomepic.twitter.com/kZR6KnFFqr
மூன்று நாட்களுக்கு பிறகு வேலையை காட்டிய கொரோனா; சீனா கதறல்
சீனாவில் கடந்த மூன்று நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. நான்காம் நாளில் புதிதாக ஒரு நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 46 நபர்களில் 45பேர் வெளிநாட்டில் இருந்து வந்தோர். ஒருவர் மட்டும் அந்த நாட்டில் இருந்தவர்.
மீண்டும் கொரோனா தொற்று வந்ததால் சீனா மக்கள் மீண்டும் பீதி அடைந்தனர்.
நாடு முழுதும், நேற்று முன்தினம் வரை, கொரோனாவால், 81 ஆயிரத்து, 54 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில், 3,261 பேர் இறந்த நிலையில், 5,549 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
சிகிச்சைக்கு பின், 72 ஆயிரத்து, 244 பேர் வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை, 1,845 ஆக குறைந்துள்ளது.
கடந்த வருடம் வெளியான ரவுடி பேபி பாடல் தற்போது யூடியூபில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. 2015ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம்தான் மாரி.
இது ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை ஆனாலும் தனுஷின் கதாபாத்திரம் அவரது ரசிகர்களை பெரிதாக கவர்ந்தது.
அதனால் மீண்டும் அதே கூட்டணி மாரி 2 என்ற படத்தில் இணைந்தனர். முதல் பாகத்தில் அனிருத்தின் இசை பெரும்வரவேற்பை பெற்றது.
டானு டானு சாங் அனிருத்தின் இசையில் தமிழ்நாடு எங்கும் ஒலித்தது. 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.
இருப்பினும் இரண்டாம் பாகத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவை தேர்ந்தெடுத்தனர்.
இந்த செய்தி வெளியான முதல் தனுஷ் ரசிகர்களிடையே சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
அப்போது நவம்பர் 28ஆம் தேதி 2018 ஆம் ஆண்டு ரவுடிபேபி லிரிகல் விடியோ வெளியிடப்பட்டது.
அது இசை பிரியர்கள் இடம் பெரும் வரவேற்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷும் தீயும் இணைந்து அப்பாடலை பாடியிருந்தனர்
தனுஷ் ஏற்கனவே ஆங்கிலம் கலந்து தமிழ் பாடல்கள் எழுதுவதில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
அவருடைய கொலைவெறி பாடல் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்று உலக ரசிகர்களை கவர்ந்து இருந்தது
அதே பாணியில் எழுதப்பட்டு வெளியான இந்த ரவுடி பேபி லிரிகல் வீடியோ 8 மில்லியன் பார்வையாளர்களை சம்பாதித்தது.
பின் படம் வெளியாகி ஜனவரி இரண்டாம் தேதி 2019 ஆம் ஆண்டு இதனுடைய வீடியோ பாடல் வெளியிடப்பட்டது.
பிரபுதேவாவின் துள்ளலான நடன அமைப்பும் அதற்கு சற்றும் குறையாத தனுஷ் மற்றும் சாய்பல்லவி யின் அசாத்திய நடனத்தாளும் பெரியவர்களை மட்டுமின்றி சிறுவர்களையும் பெரிதாக கவர்ந்தது.
அதனால் இந்த பாடல் ரிப்பீட் மோடில் கேட்டனர்
டிக் டாக்கிலும் இந்த பாடலுக்கு நிறைய பேர் சின்ன சின்ன வீடியோ செய்து இது மேலும் மேலும் பிரபலம் ஆக்கினர்.
இந்தப்பாடல் இந்திய ரசிகர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு ரசிகர்களையும் கவர்ந்தது.
அதனால் இந்த பாடல் 80 கோடி அதாவது 800 மில்லியன் பார்வையாளர்களை நேற்று மார்ச் 22 ஆம் தேதி கடந்தது.
இதுவே ஒரு தமிழ் பாடல் யூடியூபில் நிகழ்த்திய மிகப்பெரும் சாதனை என்றே சொல்லலாம்
Yogi Babu Meet Vijayakanth; விஜயகாந்தை சந்தித்த யோகி பாபு: என்ன கட்சியில் சேரப்போறாரா? காமெடி நடிகர் யோகி பாபு நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தை சந்தித்து பேசிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் காமெடி நடிகர் யோகி பாபு திருமணம் செய்து கொண்டார். கவுண்டமனி, செந்தில், சந்தானம், சூரி, ரோபோ சங்கர் ஆகியோரது வரிசையில் இடம்பெற்றவர் காமெடி நடிகர் யோகி பாபு.
தமிழ் சினிமாவில் இவர் இல்லை என்றால் படங்கள் இல்லை என்றும் கூறும் அளவிற்கு ஏராளமான படங்களில் வரிசை கட்டி நடித்து வருகிறார்.
தற்போது இவரது கால்ஷீட் கிடைக்கவில்லை என்று பொலம்பும் அளவிற்கு ரொம்பவே பிஸியாக இருக்கிறாராம்.
இந்த நிலையில், கடந்த மாதம் 5 ஆம் தேதி யோகி பாபு (Yogi Babu Wedding) ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
சென்னையின் திருத்தணி அருகிலுள்ள தனது குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். யாரையும் அழைக்காமல் திடீரென்று யோகி பாபு திருமணம் செய்து கொண்டதால் பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
யோகி பாபுவின் திருமண நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். யோகி பாபுவின் திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து மார்ச் மாதம் வரவேற்பு நிகழ்ச்சி நடப்பதாக தகவல் வந்தது.
ஆனால், தற்போது உலகத்தையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனினும், அதையும் மீறி, யோகி பாபு தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் தயார் செய்து ஒவ்வொருவரது வீட்டிற்கும் சென்று கொடுத்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் தலைவரான விஜயகாந்தை சந்தித்துள்ளார்.
யோகி பாபு கட்சியில் இணைவதற்கு அங்கு சென்றாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்று கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இல்லை இல்லை அவர் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்றுள்ளார் என்று தகவல் வந்துள்ளது.
யோகி பாபுவின் திருமண வரவேற்பு (Yogi Babu Wedding Reception) நிகழ்ச்சி ஏப்ரல் 5 ஆம் தேதி நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விஜயகாந்தை சந்தித்து தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அ ழைப்பிதழ் கொடுத்து வரவேற்றுள்ளார்.
அப்போது, விஜயகாந்தின் இளைய மகன் விஜய பிரபாகரன் மற்றும் இயக்குநர் முத்துக்குகுமார் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.