Home Blog Page 252

RJ பாலாஜி உணர்ச்சிகர பேச்சு; Techofes 2020

0
RJ பாலாஜி உணர்ச்சிகர பேச்சு

RJ பாலாஜி உணர்ச்சிகர பேச்சு; Techofes 2020, டெகோஃபெஸ் 2020, ஆர்.ஜே.பாலாஜி எந்தக் கட்சி?

டெகோஃபெஸ் 2020

அப்போது பேசிய ஆர்.ஜே.பாலாஜி கூறுகையில், தோனி கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்து கொடுத்தார்.

அப்போது சச்சினை தோளில் தூங்கி சுமந்து செல்வார்கள். அப்போது அதனைய பார்க்கும் போது நாமும் ஒரு இந்தியன் என்ற உணர்வு வந்திருக்கும்.

இதே போன்று ஏ.ஆர்.ரஹ்மான் இரு கைகளிலும் ஆஸ்கர் விருதை வைத்துக் கொண்டு எல்லா புகழும் இறைவனுக்கே என்பார். அப்போது நமக்கு பெருமைமிக்க இந்தியன் என்ற உணர்வு வந்திருக்கும்.

ஒவ்வொரு முறையும் இந்தியா கிரிக்கெட் போட்டியில் ஜெயிக்கும் போது, செயற்கைக்கோள் அனுப்பும் போது நம்மைவிட பெருமைப்படும் இந்தியர்கள் வேறு யாரும் இருந்திருக்கமாட்டார்கள்.

இதையெல்லாம் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆம், இப்போது நடப்பதையெல்லாம் பார்க்கும்போது இந்தியர்கள் என்ற உணர்வு வருகிறதா? என்றால் இல்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் முயற்சியாக ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது.

அந்த சமயத்தில் நான் ஒரு வீடியோ வெளியிட்டேன்.அதில், சிவாஜி படத்தில் வரும் கிளைமேக்ஸ் காட்சியைப் போன்று அப்படியா அப்போது இந்தியா கண்டிப்பாக வல்லரசு நாடாக மாறிவிடும் என்று பதிவிட்டிருந்தேன்.

ஒரு சில நாட்களுக்குப் பிறகுதான் தெரிந்தது, இது நல்லதுக்கு இல்லை என்று, ஆதலால், மறுபடியும் மன்னிச்சிடுங்க என்று மற்றொரு வீடியோ பதிவிட்டேன்.

ஆர்.ஜே.பாலாஜி எந்தக் கட்சி?

பலரும் என்னை இடது பக்கம், வலது பக்கம் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். நான் எந்த பக்கமும் இல்லை. இத்தனை வருடங்களாக நாம் இந்தியர் என்ற உணர்வோடு தான் வாழ்ந்து வந்திருக்கிறோம்.

இதன் பிறகும் இருக்கப்போகிறோம். மக்களில் ஒருவனாக நம் எல்லோருக்கும் இப்போது பயமாக இருக்கிறது.

ஒரு அரசியல்வாதியாக அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, மத்திய அரசு, மாநில அரசு என்று எந்த அரசாக இருந்தாலும், எங்களுக்கு தேவை ஒன்றே ஒன்றுதான். அதுவும் நிம்மதி மட்டுமே.

RJ பாலாஜி உணர்ச்சிகர பேச்சு

நீங்கள் எத்தனை கோடி ஊழல் வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள். எவ்வளவு தப்பு வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள்.

கூட்டணி மாறிக்கோங்க, பேரம் பேசிக்கோங்க, ஆட்சியை கவிழுங்க, ஆட்சியை புடிங்க என்று என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள்.

ஆனால், எங்களை மட்டும் நிம்மதியாக இருக்க விடுங்கள். காலையில் வீட்டைவிட்டு கிழம்பும் ஒரு குழந்தையோடு அப்பா வீட்டிற்கு திரும்ப வரவில்லையென்றால், அந்த குழந்தையோடு வலி எப்படியிருக்கும்?

அந்த குழந்தையின் வாழ்க்கை முழுவதும் அப்படியே மாறிவிடும். ஆகையால் ஒரு தலைமுறையை நிம்மதியாக வாழவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

Mookuthi Amman First Look: இன்று இரவு வெளியீடு

0
Mookuthi Amman First Look

MMookuthi Amman First Look: மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதா?நயன்தாரா மூக்குத்தி அம்மன், Mookuthi Amman First Look.

அரசியலைப் பற்றி காமெடி திரைப்படத்தில் நடைத்து சினிமா துறையில் நல்ல வரவேற்பை பெற்று பிறகு இயக்குனராக அவதாரம் எடுத்த ஆர்‌ஜெ பாலாஜி.

ஆர்‌ஜெ பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா ஹீரோயின் ஆகவும் யாஷிகா ஆனந்த் மற்றும் கௌதம் கார்த்தி சிறப்பு அப்பெயரேன்ஸில் நடிக்கிறார்கள்.

மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக இருக்கும் நிலையில், நயன்தாரா சாமி வேடத்தில் இருக்கும் அவரது புகைப்படங்கள் நேற்று முதல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக இருக்கிறது.

நயன்தாரா மூக்குத்தி அம்மன்

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரத்தில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள், மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

அண்மையில், ரஜினியுடன் இணைந்து நடித்த தர்பார் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், இதில், நயன்தாராவிற்கு அப்படி ஒன்றும் கதாபாத்திரம் அமையவில்லை என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

இப்படத்தைத் தொடர்ந்து அடுத்து, ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் ஆர்.ஜே. பாலாஜி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரதம் இருந்த நயன்தாரா

மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பிற்காக நயன்தாரா விரதம் இருந்துள்ளார். மேலும், அவர் அசைவ உணவுகளையும் சாப்பிடவில்லையாம். முழுக்க முழுக்க தன்னை படத்திற்காகவே அர்ப்பணித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்காக அவர் அதிகளவில் சம்பளமும் வாங்கியுள்ளாராம். கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Mookuthi Amman First Look

இன்று இரவு மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கும் நிலையில், நேற்று முதல் டுவிட்டரில் #MookuthiAmman என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

Techofes 2020 Awards: அட்லி சிறந்த இயக்குநர்

0
Techofes 2020 Awards

Techofes 2020 Awards: அட்லி சிறந்த இயக்குநர், அட்லீ விஜய் காம்போ, வருமானவரி சோதனை, ஷாருக்கான் அட்லீ காம்பினேஷன்

பிகில் படத்திற்காக 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநர் விருது அட்லிக்கு வழங்கப்பட்டுள்ளது. கிண்டியில் நடந்த டெகோஃபெஸ் 2020 விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் அட்லி. பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா ஆகியோர் நடிப்பில் வந்த ராஜா ராணி படத்தின் மூலம் தன்னை சிறந்த இயக்குநராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அட்லீ விஜய் காம்போ

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தளபதி விஜய் நடித்த தெறி படத்தை இயக்கினார். இதில், எமி ஜாக்சன், சமந்தா, ராதிகா, பேபி நைனிகா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து, மீண்டும் விஜய்யை வைத்து மெர்சல் படத்தை இயக்கினார். இதில், விஜய் 3 விதமான கதபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன், வடிவேலு, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெறி, மெர்சல் ஆகிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 3ஆவது முறையாக விஜய்யின் பிகில் படத்தை இயக்கினார். இப்படம் கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்து சர்ச்சையில் சிக்கியது.

வருமான வரி சோதனை

வருமான வரித்துறை விஜய், பைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்று பல இடங்களில் சோதனை நடத்தினர்.

இதில், பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டில் கணக்கில் வராத ரூ.77 கோடியை பறிமுதல் செய்தனர். மேலும், பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இதன் மதிப்பு எல்லாம் ரூ.300 கோடிக்கும் அதிகமாகவே இருக்கும் என்று வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

Techofes 2020 Awards

இந்த நிலையில், கிண்டியில் நடந்த டெகோஃபெஸ் 2020 நிகழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் அட்லி ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.

அட்லி சிறந்த இயக்குனர்

இந்த விழாவில் பிகில் படத்திற்காக 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநர் விருது அட்லிக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான் அட்லி காம்பினேசன்

ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அட்லி பாலிவுட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஷாருக்கானை வைத்து சங்கி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஷாருக்கான் அட்லி காம்பினேசன்

இயக்குநரைத் தொடர்ந்து தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ஆம், சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை தயாரித்துள்ளார்.

3

Cobra First Look Release: கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

0
Cobra First Look Release கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Cobra First Look Release: விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படமான கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சியான் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான ஆக்‌ஷன் த்ரில்லர் படம் கடாரம் கொண்டான். இயக்குநர் ராஜேஷ்ம் எம். செல்வா இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் கடந்தாண்டு வெளியான படம் தான் கடாரம் கொண்டான்.

இதில், விக்ரமுடன் இணைந்து அக்‌ஷரா ஹாசன், அபி ஹாசன் ஆகிய பலர் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

விக்ரம் 58:

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இது விக்ரமின் 58 ஆவது படம். இதில், இவருக்கு ஜோடியாக கேஜிஎஃப் படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார்.

இவர்களுடன் இணைந்து கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கோப்ரா – Cobra First Look Release

ஹீரோயினுக்கும், கோப்ராவிற்கும் உள்ள தொடர்புதான் படத்தின் டைட்டில். அதோடு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளுக்கு கச்சிதமாக இருக்கும் வகையில் தான் படத்தின் டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் கூறியிருந்தார்.

சென்னை, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், வெளியாகவில்லை.

கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், விக்ரம் 7 விதமான கெட்டப்புகளில் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

இதில், மூன்றில் இளம் வயது கதாபாத்திரம் போன்றும், நான்கில் வயதான கதாபாத்திரம் போன்றும் காட்டப்பட்டுள்ளது.

ஆனால், இப்படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட 12 விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அரசியல் தலைவர், ஏரியா தாதா, பிஸினஸ்மேன், சர்ஜ் பாதிரியார், விஞ்ஞானி, மேஜிக் மேன் என்று பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த போஸ்டருன் படம் வரும் மே மாதம் திரைக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கண்ணாடியில் இருபுறமும் தோட்டாக்கள் துளைக்கப்பட்டிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது விக்ரம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

கோப்ரா படத்தைத் தொடர்ந்து, விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திலும், மகாவீர் கர்ணா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

3

29/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
29/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

29/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

லாபங்கள் பெருகக் கூடிய நாளாகக் காணப்படுகிறது. வியாபாரிகள் பழைய பகைமையை மறந்து அனைவருடனும் நட்பு பாராட்டினால் இரட்டிப்பு வெகுமானம் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: மரகத வண்ணம்.

ரிஷபம் ராசிபலன்

அதிர்ஷ்டகரமான நாளாகக் காணப்படுகிறது. எந்த நேர்முகத் தேர்விலும் எளிதாக வெற்றி பெற்று நல்ல வேலைவாய்ப்பைப் பெறும் நாள். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: முத்து வண்ணம், அதிர்ஷ்ட எண்: 2

மிதுன ராசிபலன்

நல்ல நாளாகக் காணப்படுகிறது. எதிலும் முன்னேற்றம் உண்டு. ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கிடைக்கும் நாள். எடுத்த காரியங்கள் வெற்றியடையும் சிறந்த நாளாக இந்த நாள் இருக்கிறது.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம் : மாணிக்க வண்ணம்

கடக ராசிபலன்

சுபமான நாளாகக் காணப்படுகிறது. தைரியம் மிகுந்து வெற்றி வாய்ப்புக்களுக்காக உழைக்கும் நாள். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது மிக அவசியம். காது சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் வந்து சரியாகும்.

அதிர்ஷ்ட நிறம்: இலைப்பச்சை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 5

சிம்மம் ராசிபலன்

இன்று தீமைகளுக்கெதிராகப் பொங்கியெழும் நாளாகக் காணப்படுகிறது. எதிரிகள் பயப்படும்படி கோபம் கொள்ள நேரிடும். குடும்பப் பகைகளை மறந்து இணக்கமாகிக் கொள்வது பிரச்சினைகளைக் குறைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

கன்னி ராசிபலன் 

ராசியிலேயே சந்திரன் இருப்பதால், வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். நன்றாக உழைக்க வேண்டிய நாளாகக் காசப்படுகிறது. தங்கள் முகத்தை வெகுவாக அழகுபடுத்தி மகிழ்வீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பவள வண்ணம், அதிர்ஷ்ட எண்: 9

துலாம் ராசிபலன்

கொஞ்சம் விரையமான நாளாகக் காணப்படுகிறது. வேலைபார்க்கும் இடத்தில் பேசாமல் காரியமாற்றுவது அவசியம். தகுந்த வேலை மாற்றம் கிடைக்கும் நாளாகக் காணப்படுகிறது. அம்மன் அருள் காக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : தேன் வண்ணம். அதிர்ஷ்ட எண் : 3

விருச்சிக ராசிபலன்

மிகவும் நல்ல நாளாகக் காணப்படுகிறது. அதிர்ஷ்டங்கள் கூடி வரும். சௌகரியமான நினைத்த வேலை இன்று கிடைக்க வாய்ப்புள்ளது. தங்கு தடையற்ற செல்வவளம் கிடைக்கும் நாள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இருக்கும் கஷ்டம் நிவர்த்தியாகும்.

அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம், அதிர்ஷ்ட எண் : 4

தனுசு ராசிபலன்

நல்லதொரு நாளாகக் காணப்படுகிறது. எந்த நேர்முகத் தேர்விலும் அசாத்தியமாக பதில் சொல்லி அசத்துவீர்கள். கவிதை கட்டுரை என்று உங்கள் புகழ் ஓங்கும். இன்பமான நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம் : ரோஜா வண்ணம், அதிர்ஷ்ட எண் : 7

மகரம் ராசிபலன் 

சாதுர்யமான நாளாகக் காணப்படுகிறது. எதிலும் வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது. திருமணப் பேச்சுகள் சுப முடிவை எட்டும். வெளிநாட்டு வேலை கிடைக்கக் கூடிய நாள். யோகமான நாளாக விளங்குகிறது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் வண்ணம், எண் : 3

கும்ப ராசிபலன்

எட்டில் சந்திரன் இருப்பதால் நிதானம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியமாகும். எதிலும் கட்டுப்பாடோடு இருக்க வேண்டிய நாளாகக் காணப்படுகிறது. அளந்து அறிவோடு அமைதியாகப் பேச வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் : அடர்சிகப்பு வண்ணம், அதிர்ஷ்ட எண்: 9

மீனம் ராசிபலன் 

மிகவும் சந்தோஷமான நாளாகக் காணப்படுகிறது. மனம் விரும்பியவரோடு குதூகலமாக இருக்கக் கூடிய நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி, நண்பர்களோடு அரட்டை என மிகவும் ஏகாந்தமாக இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

29/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

கல்யாண வீடு கோபி மற்ற தொடர்களில் இருந்து வேறுபடுவது ஏன்?

0
கல்யாண வீடு கோபி

கல்யாண வீடு கோபி மற்ற தொடர்களில் இருந்து வேறுபடுவது ஏன்? சன் டிவி மெகாத்தொடர் பார்ப்பவரா நீங்கள்? kalyana veedu gopi.

கோபி என்ற பெயரை கேட்டவுடன் மனதில் உடனே தோன்றுவது ‘மெட்டி ஒலி’ என்கிற மெகா தொடர் தான்.

திருமுருகன் என்கிற கோபி

இந்த சீரியலை பிடிக்காத தமிழ் ரசிகர்களே இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு தொடர் இன்றளவும் மக்கள் மனதில் இடம் பிடித்தது. இந்த சீரியலை இயக்கியவர் திருமுருகன்.

திருமுருகன் என்று சொன்னால் பாதி பேருக்குத் தெரியாது கோபி என்று சொன்னால் தான் தெரியும். அந்த அளவுக்கு சீரியல் பார்க்கும் ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ளார் கோபி.

தமிழ் சீரியல் கிங்

மெட்டி ஒலி, நாதஸ்வரம், குல தெய்வம், கல்யாண வீடு போன்ற சீரியல்கள் இவரது நடிப்பு மற்றும் இவரது இயக்குனர் திறமைகளைப் பேசும்.

மெட்டி ஒலியில் குடும்பங்களில் நடக்கும் மாமியார் மருமகள் சண்டைகள், கணவன் மனைவி சண்டைகள், இதனால் கணவன் மனம் மாறி மாறி செல்லுதல் போன்றவற்றை காதலுடன் கூறியிருப்பார் நம்ம கோபி.

இந்த சீரியலில் முதன் முதலாக நடிப்பிலும் கோபியாக வலம் வந்தார். அடுத்த வந்த நாதஸ்வரம், நான்கு தங்கைகளுக்கு அண்ணனாக நடித்தார்.

தன் ஆசைகளை விட குடும்பத்தில் உள்ள தேவைகளுக்கு முக்கயத்துவம் கொடுத்து எடுத்திருப்பார். 1356 எபிசோட்களை நிறைவு செய்தது.

மௌலியும் பூவிலங்கு மோகனும் கோபிக்கு அப்பா மற்றும் சித்தப்பாவாக நடிப்பில் பின்னி எடுத்திருப்பார்கள்.

அடிதடி மற்றும் சண்டைகள் தேவையில்லாத கதைகள் எப்போதும் கோபி நாடகத்தில் ரொம்பவே குறைவுதான்.

தங்கைகளுக்கு மனைவிக்கு, குடும்பத்தில் எவருக்கும் எதிரிகளால் பிரச்சினைகள் வரும்போது கோபி வரமாட்டாரா என்கிற ஏக்கம் ரசிகர்களிடம் தோன்றும்.

கோபி வந்தவுடன் ஷ்லோ மோஷன்ல கேமிராவைத் திருப்பும் போது அதிரடியான பின்னனி இசையில் கோபி வந்து நிப்பாரு பாருங்க, வீட்டில உள்ள மாமியாரும் மருமகளும் கைதட்டி விசில் அடிக்கிற அளவுக்கு இருக்கும். அந்த அளவுக்கு ஹீரோ கதைக்கு தேவை என்பதை பதிய வைப்பார்.

நாதஸ்வரம் நாடகத்தில் உலக சாதனையும் செய்திருக்கிறார், 23 நிமிடம் 25 நொடி நேரலையாக ஒளிப்பதிவு மற்றும் இசையை செய்து ஒளிப்பரப்பினார். இதுவும் கோபியே சேரும்.

அடுத்து குல தெய்வம் சீரியல் இதுல கோபி நடிக்கவில்லை. ஆனால் விறுவிறுப்பாக செல்லக்கூடிய சீரியலாக அமைந்து ரசிகர்கள் மனதில் நின்றது.

அடுத்த சீரியல் வழக்கம்போல  கோபி ஹீரோ அவருக்கு மூன்று தங்கச்சிகள். சொல்லவா வேணும்? பாசத்தால் தன் இயக்குனர் திறமையாலும் நடிப்பின் திறமையாலும் கோபி இறங்கி சிக்ஸர் அடிப்பாருங்க!

கல்யாண வீடு கோபி

அந்த அளவுக்கு வெற்றிநடையில் சென்று கொண்டு இருக்கிற சீரியல் தான் கல்யாண வீடு. யூடியூப் உலகத்திலும் தினசரி எபிசோட்க்கு 5 லட்சம் பார்வையாளர் இருக்கிறார்கள்.

கல்யாண வீடு சீரியலில் இரண்டு மாத காலம் கோபியை காட்டவில்லை, ரசிகர்கள் யூடியூபில் கமெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

கோபி எப்போ வருவார், எப்போ வருவார், சீரியல் இனி பார்க்க மாட்டேன் என்று, ஒருவழியாக கோபி என்ட்ரி கொடுத்துட்டார். அப்பறம் என்ன சீரியல் டிஅர்பி வேற லெவல்.

இந்த சீரியலில் எப்போதெல்லாம் பிரச்சினை வரும் போது கோபியின் என்டரி மாஸ் சீன்ஸ் தான்.

தங்கைக்காக விட்டுக்கொடுத்து போவதும் தாயை வீட்டுக்கொடுக்காமல் பேசுவதும், சொந்தக்காரர்களின் கஷ்டங்களை தானே ஏற்பதும் கோபி தன் கதாபாத்திரத்தை அருமையாக செதுக்கியிருப்பார்.

தன் தங்கைகளுக்காக தன் சந்தோஷங்களை தள்ளி வைப்பதை இந்த தொடரிலும் தொடர்ந்து இருப்பார்.

எந்த இடத்திலும் நிதானமாக செயல்படுவதிலும், விட்டுக்கொடுத்து போவதிலும், பெண்ணியத்தை உயர்த்துவதிலும் கோபிக்கு நிகர் கோபியே.

எதற்கும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை துணிச்சலுடன் காட்டுபவர் கோபி. இப்படித்தான் ஓர் ஆண்மகன் இருக்க வேண்டும் என்பதற்கு பல உதாரணம் கோபியிடம் இருக்கும்.

கஷ்டங்களை கையாள்வதிலும் சொந்தங்களை கையாள்வதிலும் கோபியை அடிச்சிக்க ஆளே இல்லைங்க. ஏழரை வந்த எல்லோருக்கும் கஷ்டம்னு சொல்லுவாங்க ஆனால் சன் டிவி ரசிகர்களுக்கு மட்டும் ஹாப்பி தாங்க.

கோபியின் குட்டி ஸ்டோரி

திருமுருகனா வந்தாரு,
மெட்டி ஒலி கோபியா நின்னாரு,
நாதஸ்வரத்த எடுத்தாரு
குல தெய்வத்த நினைச்சாரு
கல்யாண வீட்டில ஜெய்சாரு.

3

WWCT20I BANw vs AUSw: வங்கதேசத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

0
WWCT20I BANw vs AUSw மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டி 2020

WWCT20I BANw vs AUSw: மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டி 2020.  வங்கதேசத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா மகளிர் அணி. விளையாட்டுச்செய்திகள்.

மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டி 2020

பிப்.27: 7-வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது.

பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும், பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடுகிறது.

WWCT20I BANw vs AUSw

இன்று பிரிவு ‘ஏ’ வில் நடைபெற்ற 10வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

மூனே, ஹிலே அதிரடி

தொடக்க ஆட்டகாரர்களாக பெத் மூனே மற்றும் அலிசா ஹிலே களமிறங்கினார்கள். வங்கதேச வீராங்கனைகளின் பந்துவீச்சை அடித்து நொறுக்கித் தள்ளினார்கள்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 15.1 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தது. ஹிலே 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், மூனே 81 ரன்னும், கார்டனர் 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்தனர். வங்கதேசம் தரப்பில் கேப்டன் சல்மா கதுன் மட்டும் 39 ரன்கள் வழங்கி ஒரே ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா வெற்றி

இமாலய இலக்கை வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணியினர் இருபது ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

போராட்டம் இல்லாமல் முடிந்தது இரண்டாவது இன்னிங்ஸ். இதன் மூலம் 86 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வங்கதேசத்தை வென்றது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஃபர்ஹானா ஹாஹ் 36, நிகர் சுல்தானா 19, ஷமிமா சுல்தானா மற்றும் ரூமானா அஹமது தலா 13 ரன்களும் சேர்த்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் மேஹன் ஸ்கட் 3 விக்கெட்டும், ஜோனஸன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார். அதிரடியாக ஆடிய அலிசா ஹிலே ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்த உலககோப்பையில் ஆஸ்திரேலியா பெறும் இரண்டாவது வெற்றி, முந்தைய ஆட்டத்தில் இலங்கை வீழ்த்தியது. முதல் ஆட்டத்தில் இந்தியாவுடன் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஏற்கனவே இந்தியா அரையிறுதிக்கு சென்றுவிட்டது.

ஆஸ்திரேலியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் மெல்போர்னில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கிறது.

உலகக்கோப்பை புள்ளி பட்டியல்

பிரிவு ஏ

TEAM  P     W     L   P
IND    :   3     3     0   6
NZ     :   2     1     1   2
AUS  :   3     2     1   4
SL     :   2     0     2   0
BAN  :   2     0     2   0

பிரிவு  பி

TEAM  P   W     L    P
ENG   :   2     1     1    4
PAK   :   1     1     0    2
RSA   :   1     1     1    2
WI   :   2     1     1    0
THAI  :   2     0     2    0

3

Rajinikanth Wedding Anniversary: கொண்டாடிய ஜப்பான் ரசிகர்கள்!

0
Rajinikanth Wedding Anniversary

Rajinikanth Wedding Anniversary: ரஜினிகாந்தின் 39-ஆவது திருமண நாள் இன்று. இதனை முன்னிட்டு தலைவர் 169 படத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

Rajinikanth Wedding Anniversary

ரஜினிகாந்த் – லதா தம்பதியினர் இன்று தங்களது 39 ஆவது திருமண நாளை கொண்டாடும் நிலையில், ஜப்பான் ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் வரிசையில் இடம்பெற்றிருப்பவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். சாதாரண பஸ் நடத்துனராக வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்தை இன்று ஒட்டு மொத்த சினிமாவும் வியந்து பார்க்கும் அளவிற்கு புதிய உச்சம் பெற்றுள்ளார்.

ரஜினிகாந்த் – லதா திருமணம்

இவர், கடந்த 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி லதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா என்று இரு மகள்கள் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

ரஜினிகாந்த் 39ஆவது திருமண நாள்

இந்த நிலையில், ரஜினிகாந்த் – லதா தம்பதியினர் இன்று தங்களது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு கோலிவுட் சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜப்பான் ரசிகர்கள் கொண்டாட்டம்

குறிப்பாக ஜப்பானைச் சேர்ந்த ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: ரசிகர் ஒருவர் தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்துகொண்டு தலைவா திருமண நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க மற்ற ரசிகர்களோ விசில் அடித்து பேப்பர்களை கிழித்து பறக்கவிட்டுள்ளனர்.

அப்போது அவர்கள் தங்களது கைகளில் தர்பார் போஸ்டர் மற்றும்  ரஜினியின் மக்கள் மன்ற கொடியினை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர்169 பூஜை

ரஜினியின் 39-ஆவது திருமண நாளை முன்னிட்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தலைவர்169 ஆவது படம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், தலைவர்169 ஆவது படத்தின் பூஜை வரும் மார்ச் முதல் வாரத்தில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5-ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. இது ரஜினி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கமல் ஹாசன் – ரஜினிகாந்த் கூட்டணி

இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமல் ஹாசன் தயாரிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ரஜினியும், கமலும் இணைந்து 9 தமிழ் படங்களிலும், 2 தெலுங்கு படங்களிலும், ஒரு ஹிந்தி படத்திலும் நடித்துள்ளனர்.

இதையடுத்து, தற்போது தலைவர்169 படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். தலைவரின்169 ஆவது படம் லோகேஷ் கனகராஜின் 5-ஆவது படம்.

அண்ணாத்த

தற்போது ரஜினிகாந்த் தலைவர்168 ஆவது படமான அண்ணாத்த படத்திலும், லோகேஷ் கனகராஜ் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் பிஸியாக இருப்பதால், இந்த படங்களின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட பிறகு தலைவர்169 ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாத்த படத்தை சிவா இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இதில், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருடத்திற்கு ஒரு படத்தை மட்டும் இயக்கி வருகிறார். இதுவரை அவியல், மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். அடுத்து ரஜினியின் தலைவர்169 படத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

WWCT20I ENGw vs PAKw: இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி

0
WWCT20I ENGw vs PAKw மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி

WWCT20I ENGw vs PAKw: இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி. மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி. இங்கிலாந்து vs பாகிஸ்தான் மகளிர் அணி.

WWCT20I ENGw vs PAKw

பிப்.27: 7-வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது.

பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும், பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடுகிறது.

இன்று பிரிவு ‘பி’ யில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

விக்கெட் சரிவு

இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக வெய்ட் மற்றும் ஜோன்ஸ் களமிறங்கினார்கள்.

வெய்ட் 16 ரன்னிலும் ஜோன்ஸ் 2 ரன்களும் எடுத்து நடையை கட்டினார்கள். சைவர் மற்றும் நைட் சேர்ந்து ரன்களை சேர்த்தனர்.

சைவர் 36 ரன், நைட் 62 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். அடுத்து இறங்கிய வில்சன் 22 ரன்கள் சேர்த்தார்.

இங்கிலாந்து இருபது ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. இறுதியில் ஆட்டமிழக்காமல் வின்ஃபில்ட் 4 ரன்னும், சோபி எச்கிள்ஸ்டோன் 2 ரன்னும் களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் அன்வர் 3 விக்கெட்டும் நிடா தார் 2 விக்கெட்டும் பையக் மற்றும் அலியா ரியாஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் தோல்வி

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியினர் ரன்கள் சேர்க்க திணறினார்கள்.

பாகிஸ்தான் 19.4 ஓவர்களில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இங்கிலாந்து 42 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.

பாகிஸ்தான் அணியில் முனிபா அலி 10, ஜவேரியா கான் 16, கேப்டன் மருஃப் 4, தார் 5, ஜவாது 4, சோகய்ல் 7, நவாஸ் 6, பைய்க் 0, இக்பால் 1 ரன்கள் சேர்த்து வெளியேறினார்கள்.

பாகிஸ்தானின் ரியாஸ் மட்டும் 41 ரன்கள் சேர்த்து அந்த அணிக்கு அறுதலாக அமைந்தது. மற்ற யாரும் ரன்கள் சேர்க்காதது தோல்விக்கு காரணம்.

இங்கிலாந்து தரப்பில் சரப்சோலே 3 விக்கெட்டும், ஃபர்ண்ட் மற்றும் எச்கிள்ஸ்டோன் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்.

ஹீதர் நைட் ஆட்டநாயகன்

47 பந்தில் 62 ரன்கள் எடுத்த இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இவர் தாய்லாந்து அணிக்கு எதிராக சதம் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து vs பாகிஸ்தான்

இங்கிலாந்து தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வருகிற மார்ச் 1-ஆம் தேதி சிட்னியில்  மேற்கு இந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கிறது.

அதே மார்ச் 1 ஆம் தேதி அதே சிட்னி மைதானத்தில் பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதுவும் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கிறது.

உலககோப்பை புள்ளி பட்டியல்

பிரிவு ஏ

TEAM  P    W     L   P
IND   :   3     3     0   6
NZ    :   2     1     1   2
AUS  :   3     2     1   4
SL    :   2     0     2   0
BAN   :   2     0     2   0

பிரிவு  பி

TEAM     P     W     L    P
RSA   :    2     2     0    4
ENG   :    3     2     1    4
PAK   :    2     1     1    2
WI    :    2     1     1    0
THAI  :    3     0     3    0

3

WWCT20I saw vs thaw: தொக்காக மாட்டிய தாய்லாந்து மகளிர்

0
WWCT20I saw vs thaw மகளிர் உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டி

WWCT20I saw vs thaw: மகளிர் உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டி. தென் ஆப்ரிக்காவிடம் தொக்காக மாட்டிய தாய்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி.

WWCT20I SAw vs THAw

பிப்.27: 7வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது.

பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும், பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடுகிறது

இன்று பிரிவு ‘பி’ யில் நடைபெற்ற 11வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் தாய்லாந்து மோதியது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

லீ, சுனே லோஸ் அதிரடி

தொடக்க ஆட்டகாரர்களாக லீ மற்றும் நெய்க்ரேக் களமிறங்கினார்கள். நெய்க்ரேக் இரண்டு ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய சுனே லோஸ், லீயுடன் ஜோடி சேர்ந்து தாய்லாந்து வீராங்கனைகளின் பந்துவீச்சை அடித்து நொறுக்கித் தள்ளினார்கள்.

இரண்டாவது விக்கெட்க்கு இந்த ஜோடி 80 பந்துகளில் 131 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய லீ 60 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். லோஸ் 41 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தனர். தாய்லாந்து தரப்பில் 7 பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தினார்கள்.

ஆனால் பெரிதாக பலன் கிடைக்கவில்லை மூவர்கள் மட்டும் தலா ஒரு விக்கெட் விழ்த்தினார்கள்.

தென் ஆப்பிரிக்கா வெற்றி

இமாலய இலக்கை வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணியினர் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து 82 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

ஆராவாரம் இல்லாமல் முடிந்தது இரண்டாவது இன்னிங்ஸ். இதன் மூலம் 113 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது தென் ஆப்பிர்க்கா.

தாய்லாந்து அணியில் அதிகபட்சமாக காம்சோம்ஃப் 26 ரன்கள் மற்றம் சுதிராவ்ங் 13 ரன்கள் சேர்த்தனர்.

மற்ற ஒன்பது வீராங்கனைகள் வெறும் ஒற்றை இலக்கு எண்களை மட்டும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தர்பபில் இஸ்மாயில் மற்றும் சுனே லோஸ் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர்.

அதிரடியாக ஆடி சதம் அடித்த லிஸ்லே லீ ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த உலககோப்பையில் தென் ஆப்பிரிக்கா பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும்.

முந்தைய ஆட்டத்தில் இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிர்க்கா பிரிவு பி புள்ளிப் பட்டியலில்  முதலிடத்தில் இடத்தில் உள்ளது.

தாய்லாந்துக்கு அடிமேல் அடி

இந்த உலகக்கோப்பையில் தாய்லாந்தை மற்ற அணிகள் ரன் ரேட்டை உயர்த்த பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

எந்த ஒரு தோல்வி கவலையின்றி, வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், சர்வதேச அணி போன்று விளையாடாமல் கவுண்டி அணி போல் விளையாடுகிறார்கள்.

மேற்கு இந்திய தீவு அணியிடம் 78 ரன்கள் மட்டுமே சேர்த்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்

இங்கிலாந்திடம் ஏழு விக்கெட் இழப்புக்கு அதே 78 ரன்கள் சேர்த்து 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.

இன்று கூடுதலாக நான்கு ரன்கள் சேர்த்து 82 ரன்களில் அனைத்து விக்கெட்டும் இழந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்துள்ளனர்.

தெ.ஆப்பிக்கா vs தாய்லாந்து அடுத்த போட்டி

தென் ஆப்பிர்க்கா தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வருகிற மார்ச் 1-ஆம் தேதி சிட்னியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

வருகிற மார்ச் 3-ஆம் தேதி அதே சிட்னி மைதானத்தில் பாகிஸ்தானை தாய்லாந்து எதிர்கொள்கிறது. இதுவும் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது.

உலகக்கோப்பை புள்ளி பட்டியல்

பிரிவு ஏ

TEAM  P    W    L   P
IND   :   3     3     0   6
NZ    :   2     1     1   2
AUS  :   3     2     1   4
SL    :   2     0     2   0
BAN  :   2     0     2   0

பிரிவு  பி

TEAM    P    W     L   P
RSA    :   2     2     0  4
ENG   :   2     1     1    4
PAK    :   1     1     0    2
WI     :   2     1     1    0
THAI   :   3     0     3    0

3