Home Blog Page 251

Kaithi Hindi Remake: பாலிவுட்டுக்கு சென்ற கார்த்தியின் கைதி!

0
Kaithi Hindi Remake கார்த்தி கைதி அஜய் தேவ்கன்

Kaithi Hindi Remake: ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் கார்த்தி கைதி படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kaithi Hindi Remake

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஆக்‌ஷன் த்ரில்லர் படம் கைதி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

இப்படத்திற்கு ஹீரோயினும், ரொமாண்டிக் பாடல்களும் இல்லை. படம் முழுவதும் இரவில் மட்டும் நடக்கும் காட்சிகளைக் கொண்டுள்ளது.

கிட்டத்தட்ட 10 வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு பின்னர் விடுதலையாகி வெளியில் வந்த கார்த்தி சந்திக்கும் பிரச்சனைகள் தான் படம்.

அவர் போலீஸ் அதிகாரிகளுக்கு உதவ சென்ற இடத்தில் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார். இறுதியில், அவரது முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா என்பதே படத்தின் மையக்கரு.

இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து தீனா, நரேன், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், அருண் தாஸ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தின் 2-ஆம் பாகம் உருவாக இருக்கிறது. எனினும், அது எப்போது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில், தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்169 படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்169 படத்தின் பூஜை வரும் மார்ச் 5-ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழில் கைதிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

ஹிந்தி ரீமேக்கில் (kaithi hindi remake) அஜய் தேவ்கன் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதோடு, இப்படம் வரும் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3

1/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
1/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

1/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டவர்களுக்கு இந்த நாள் ஒரு சிறப்பான நாளாக அமையும். நம்பிக்கையுடன் செல்லுங்கள்.

சங்கடஹர சதுர்த்தி நாளில் வழிபாடு செய்ய வாழ்க்கை நிலை மேலோங்கும். வயிற்று உபத்திரவம் இன்று சரியாகும்.

அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம்.

ரிஷபம் ராசிபலன்

எட்டில் கேது இருப்பதால் இன்று ஒழுக்கமுடன் இருப்பது நல்லது. தேவையில்லாத நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சங்கடஹர சதுர்த்தி வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மரகத வண்ணம், அதிர்ஷ்ட எண்: 5

மிதுன ராசிபலன்

நீங்கள் எந்த காரியத்திலும் தைரியமுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் வெற்றிவாகை சூடுவீர்கள். சூரிய வழிபாடு வாழ்க்கையை பிரகாசமாக மாற்றும்.

அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம் : முத்து வண்ணம்

கடக ராசிபலன்

இன்று கடக ராசிகாரர்களுக்கு பணவரவு கொண்ட நாளாக அமைந்துள்ளது. இன்று உங்களுக்கு பெரிய யோகம் காத்துக்கொண்டு உள்ளது.

கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மங்களம் உண்டாகும். பிசினஸ் பார்ட்னரிடம் இருந்த பகை மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: மாணிக்க வண்ணம், அதிர்ஷ்ட எண் : 1

சிம்மம் ராசிபலன்

ராசியில் சந்திரன் தங்கி, பிறகு தனஸ்தானத்திற்கு இடம்பெயருகிறார். நல்ல தனவரவு, நண்பர்களோடு கேளிக்கை, அரட்டை, மகிழ்ச்சி, என்று ஆனந்தப்படும் நாள்.

குடும்பத்தில் சந்தோஷம் கூடிவரும் நாள். வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: இலைப்பச்சை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 5

கன்னி ராசிபலன் 

கன்னி ராசிகாரர்களுக்கு ஏற்ற நாள். நீங்கள் விரும்பிய கன்னி உங்கள் காதலை ஏற்கும் நாள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும் நாள். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வாயை அடக்கியாள்வது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 6

துலாம் ராசிபலன்

திருமண வாழ்க்கையின் உன்னதத்தை உணரும் நாள். மனமினிக்கும் தருணங்களை கணவன் மனைவியர் மகிழ்ந்து பாராட்டிச் சிறக்கும் நாள்.

உணவை அளவறிந்து உண்ண வேண்டி நாள்.

அதிர்ஷ்ட நிறம் : பவள வண்ணம். அதிர்ஷ்ட எண் : 9

விருச்சிக ராசிபலன்

பொறுமை கடைபிடிக்க வேண்டிய நாளாகக் காணப்படுகிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்தக் காரியமும் செய்தல் கூடாது.

அதேபோல கருத்தும் சொல்லக் கூடாது. மாமியாரின் உடல்நிலையில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட நிறம் : தேன்வண்ணம் வண்ணம், அதிர்ஷ்ட எண் : 3

தனுசு ராசிபலன்

பிள்ளைகளை மீது அதிக அக்கறை செலுத்துங்கள். அவர்கள் படிப்பில் கவனம் சிதற வாய்ப்பு உண்டு. பொறுமையாக எடுத்துச் சொல்லி ஆலோசனை வழங்குவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம், அதிர்ஷ்ட எண் : 4

மகரம் ராசிபலன் 

மதியத்திற்கு மேல் நன்மைகள் அதிகரிக்கும் நாளாகக் காணப்படுகிறது. சகோதரருடைய உடல்நலத்தில் அக்கறை தேவை.

மனதிற்கும் செயல்பாட்டுக்கும் இடையே ஒருவித மாறுபாடு வந்து கொண்டேயிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஜா வண்ணம், எண் : 7

கும்ப ராசிபலன்

காலைப்பொழுது அருமையாக காணப்படுகிறது. மாலையிலிருந்து மௌனம் காக்க வேண்டியது அவசியம். எதிலும் அவசரப்பட்டு கருத்துச் சொல்லாமை நலம்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

மீனம் ராசிபலன் 

அடிக்கடி கோபப்படும் நாள் இது. பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம். அலுவலகத்தில் பணிபுரிவர்கள் கவனமுடம் வார்த்தைகளை பேசுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : அடர்சிகப்பு வண்ணம், அதிர்ஷ்ட எண் : 9

1/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

Master: மாஸ்டர் அப்டேட் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

0
Master sethupathi மாஸ்டர் அப்டேட் விஜய்

Master மாஸ்டர் அப்டேட்: விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். கார்த்தியின் கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் மாஸ்டர் படத்தை தயாரித்துள்ளது.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் வைரலானது.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இதற்கு முன்னதாக ரஜினியின் பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு மனைவியாக நடித்திருந்தார்.

இதே போன்று, இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும், சாந்தனு, ஆண்ட்ரியா, நாசர், ஸ்ரீமன், ரமேஷ் திலக், சுனில் ரெட்டி, ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் உள்பட ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி படம் திரைக்கு வரயிருக்கிறது. இந்த நிலையில், இப்படம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

Master மாஸ்டர் அப்டேட்

சென்னை கிண்டியில் உள்ள மாணவர்கள் சங்கம் மற்றும் கலை சங்க பொறியியல் கல்லூரியில் நடந்த டெகோஃபெஸ் 2020 நிகழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் அட்லி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய லோகேஷ் கனகராஜ் கூறுகையில், இன்னும் 48 மணிநேரத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும்.

இதையடுத்து, படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் அப்படியே நெருப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக்கேட்ட விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து ஆரவாரம் செய்துள்ளனர். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்169 என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

வரும் மார்ச் முதல் வாரத்தில் அதுவும் 5-ஆம் தேதி தலைவர்169 படத்தின் பூஜை நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே போன்று விஜய்யிடம் தனது 65-ஆவது படத்தில் சுதா கொங்கராவுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படம் வெளியான பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

Draupathi: தல நல்லா இருக்காரா? ஷாலினியிடம் கேட்ட ரசிகர்

0
Draupathi ஷாலினி திரௌபதி

Draupathi: தல நல்லா இருக்காரா அக்கா என்று ரசிகர் ஒருவர் ஷாலினி அஜித்திடம் கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் ஆகியோரது நடிப்பில் நேற்று திரைக்கு வந்த திரௌபதி படத்தை நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினி குடும்பத்தோடு சென்று பார்த்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவருக்கு ரசிகர்கள் இல்லாத ஊரே இருக்காது. அந்தளவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ளார்.

அஜித் என்றால் தன்னம்பிக்கை, தைரியம், விடா முயற்சி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அமர்க்களம் படத்தின் மூலம் ஷாலினியும், அஜித்தும் ஒருவருக்கொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆத்விக் என்ற மகனும், அனோஷ்கா என்ற மகளும் இருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு ஷாலினி சினிமாவை விட்டு விலகியுள்ளார்.

தற்போது தல அஜித் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று வரிசையாக பல ஹிட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது கூட வலிமை படத்தில் பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில், ஷாலினி குடும்பத்தோடு, சென்னையில் உள்ள ரோஹினி திரையரங்கிற்கு நேரில் சென்று நேற்று வெளியான திரௌபதி படத்தைப் பார்த்து மகிழ்ந்துள்ளார்.

ஷாலினி அஜித்

இதன் காரணமாக ஷாலினி அஜித் #ShaliniAjith என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

சுவிச்சர்லாந்து ரேசில் அஜித் காயம் பட்டதாக தகவல்கள் வெளியாகியது. எனவே, திரையரங்கிறகு வந்த ஷாலினியிடம், தல நல்லா இருக்காரா அக்கா? அவருக்கு எதுவும் ஆகலேல?

இவ்வாறு ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு சிரித்துக்கொண்டே நல்லா இருக்கார் என்று பதிலளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Draupathi Twitter

திரௌபதி

இயக்குநர் மோகன் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் ஆகியோரது நடிப்பில் நேற்று திரைக்கு வந்த படம் திரௌபதி.

சிலம்பம் ஆசிரியராக இருக்கும் ரிச்சர்டும், திரௌபதியும், தங்களது கிராமத்திற்குள் போர் போட்டு குடிப்பதற்கு தண்ணீர் விநியோகம் செய்து வரும் அரசியல்வாதியை எதிர்க்கிறார்கள்.

இதனால், பாதிக்கப்பட்ட அந்த அரசியல்வாதி, திரௌபதி மற்றும் அவரது சகோதரி ஆகியோரை கொலை செய்து, ரிச்சர்ட் மீது பழி சுமத்துகிறார்.

இதையடுத்து சிறைக்கு சென்று திரும்பிய ரிச்சர்ட் சம்பந்தப்பட்டவர்களை குறி வைத்து அவர்களை தீர்த்து கட்டுகிறார்.

அவர் யார் யாரை கொலை செய்தார்? எதற்காக கொலை செய்தார் என்பதற்கான காரணத்தை சித்தரிக்கும் கருவோடு வந்திருக்கும் படமே திரௌபதி.

படத்தில், ஆணவக் கொலை, சாதி அரசியல் போன்றவை இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரௌபதி முழு விமர்சனத்தை படிக்க கிளிக் செய்யவும்.

3

Draupathi Movie Review Download: திரௌபதி திரைவிமர்சனம்

1
Draupathi Movie Review Download திரௌபதி திரைவிமர்சனம் படம் எப்படி உள்ளது

Draupathi Movie Review Download: திரௌபதி திரைவிமர்சனம். Tamil Movie Review Watch Online. படத்தின் நாயகி திரௌபதி சபதம் எப்படி நிறைவேறியது? திரௌபதி படம் எப்படி உள்ளது?

திரௌபதி படத்தின் கதை

பணக்கார வீட்டுப்பெண்களாகப் பார்த்து காதலித்து வலையில் வீழ்த்தும் கும்பல். பணத்திற்காக திருமணம் முடித்து பெற்றோர்களிடம் பணம் பறிக்கின்றனர்.

அந்தப்பெண் காதலிக்கவில்லை என்றாலும் கூட போலியாக ரிஜிஸ்டர் திருமணம் சான்றிதழ் தயாரிக்கின்றனர். அதை வைத்து மிரட்டி பணம் பறிக்கின்றனர்.

இவர்களின் நிலை என்ன ஆனது? இதுபோன்ற அசம்பாவிதம் வருங்காலத்தில் நிகழாமல் எப்படி தடுக்கப்பட்டது என்பது மீதிக்கதை.

படத்தின் நாயகி திரௌபதி

நாயகி திரௌபதி ஒரு மனைவியாய் மட்டுமல்லாமல், சமூக சீர்திருத்தவாதியாகவும் செயல்படுவதாக கதாபாத்திரம் அமைக்கப்பட்டு உள்ளது.

நாயகன் ரிஷி ரிச்சர்ட் சிலம்பம் வாத்தியார். வீண் பழியுடன் சிறை சென்றுவிட்டு வெளியில் வந்தவுடன், மனைவி திரௌபதியின் சபதத்தை நிறைவேற்றுகின்றார்.

வில்லன் ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவர். திரௌபதியின் ஊரில் உள்ள தண்ணீரை கோலா கம்பெனிக்கு தாரைவார்த்துக் கொடுக்க முயற்சி செய்கிறார்.

திரௌபதி சபதம்

வில்லனின் முயற்சியைத் தடுக்கும் திரௌபதியின் குடும்பத்தை அவமானப்படுத்த, அவரின் தங்கையை காதல் வலையில் வீழ்த்த முயற்சிக்கின்றனர்.

ஆனால் அந்த கெட்டிக்காரத் தங்கை காதலிக்கவில்லை. இருப்பினும் சில புகைப்படங்களையும், போலி பதிவுத் திருமண சான்றிதழையும் வைத்து குடும்ப மானத்தை சீர் குலைக்கின்றனர்.

இவர்களின் போலித் திருமண நாடகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று திரௌபதி சபதம் ஏற்ற சில நிமிடங்களில் கொல்லப்படுகிறாள்.

அவளின் சபதத்தை நாயகன் ரிஷி ரிச்சர்ட் எப்படி நிறைவேற்றினார் என்பதே மீதிக்கதை. புராண கால திரௌபதி சபதம் படிக்க கிளிக் செய்யவும்.

திரௌபதி படம் எப்படி உள்ளது?

படம் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டாம் பாதியும் அதே வேகத்திலேயே நகர்கிறது.

படத்தின் க்ளைமேக்ஸ் நம்மை முழு திருப்தி படுத்துகிறது. அந்த அளவிற்கு எமோஷனல் கண்டன்ட் படத்தில் உள்ளது. கிளைமேக்ஸ் காட்சியில் திரௌபதி மீண்டும் அவதரிப்பது கூடுதல் சிறப்பு.

படத்தின் குறைகள்

இந்தப்படம் லோ பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். இதனால் நிறைய புதுமுகங்கள் கொண்டு எடுக்கப்பட்டு உள்ளது.

அதில் சில நடிகர்-நடிகையர் தேர்வு சொதப்பல். அந்த கதையின் தாக்கத்தை அவர்கள் முகங்களில் உணர முடியவில்லை.

மேலும் படம் சற்று ஜாதிய சீர்குலைப்பை பற்றி மட்டும் பேசாமல், ஜாதியை உயர்த்திப்பிடிப்பது போன்ற காட்சிகள் உள்ளது.

கலப்பு காதல் என்றாலே நாடகக் காதல் என்பது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டு உள்ளது.

நாடகக் காதல் – ஜாதி கலப்புக் காதல்

இந்த படத்தில் சொல்லப்படுவது பணக்கார குடும்பத்தில் உள்ள பெண்ணை மயக்கி பணம் சம்பாதிப்பது அல்லது செட்டில் ஆவது.

இதில் தாழ்ந்த ஜாதியில் உள்ளவர்கள் மட்டும் இதில் ஈடுபடவேண்டும் என்பது அவசியமில்லை. பணம் யாரிடம் எல்லாம் இல்லையோ அவர்களும் இதில் ஈடுபடுவர்கள் எனபதே உண்மை.

எல்லா ஜாதியினரிலும் ஒரு ஏழை, ஒரு பணக்காரன் என்ற பாகுபாடுடன் தான் இந்த சமூகம் உள்ளது.

திரௌபதி படமாக முழுமையான நிறைவு தந்ததா?

நம்மில் எத்தனை பேர் வசதியான குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக வேண்டும் என்று சிறு வயதில் ஆசைப்பட்டு இருப்போம்? ஆசையே பட்டது இல்லை என்று சொல்லிவிட முடியுமா?

இதற்குள் ஜாதி எப்படி வருகிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றில் நடக்கும் ஒன்று தான்.

ஆனால், பணம் பறிப்பதற்காக மட்டுமே இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றுவது கண்டிக்கத்தக்க ஒன்றே.

இந்தக்கால பெண்களிடமும், காதலர்களிடமும் இப்படம் நிச்சயம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் அது எப்படிப்பட்ட விழிப்புணர்வு? நாடகக் காதல் மட்டும் அல்ல, ஏதோ தாழ்த்தப்பட்டவர்கள் என்றாலே வெறுக்கத்தக்கவர்கள் என்ற எண்ணத்தை விதைக்கும் விதமாகவும் உள்ளது.

படம் ஏற்படுத்திய அரசியல்

திரௌபதி படம் ட்ரைலர் வெளியான உடனேயே காரசாரமான விவாதங்கள் அரங்கேறியது. மேல்ஜாதி நியாயத்தை பேச ஒரு இளம் இயக்குனர் வந்துவிட்டார் எனக் கொண்டாடினர்.

படம் வெளியாகும் முன்னரே ராமதாஸ் நான் வெளியிட்ட அறிக்கை காரணமாகவே இந்தப் படம் எடுக்கப்பட்டு உள்ளது என மார்தட்டி கூறினார்.

இது ஒரு சமுதாயத்தில் நிகழும் அவலங்களை மையப்படுத்திய படம். இதை ஒரு படமாகவே பார்க்கவேண்டும்.

இதை அரசியல் ஆக்கி மீண்டும் ஜாதி என்னும் வேரை இளைஞர்கள் மனதில் ஆழமாக பாய்ச்சும் நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றது.

திரௌபதி படம் மட்டுமல்ல இது போன்ற படங்கள் யாருக்கு லாபம்? அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்கள் இந்தப்படத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.

மக்களுக்கு விழிப்புணர்வு என்ற பெயரில் ஜாதி என்னும் வெறியை மனதிற்குள் ஆழமாக விதைத்து வருகின்றனர். மோகன்.ஜி மட்டுமல்ல பா.ரஞ்சித் போன்றவர்களும் தான்.

Draupathi Movie Review Download: திரௌபதி திரைவிமர்சனம். Tamil Movie Review Watch Online.

3

INDWvsSLW-WWCT20I; இலங்கையை வீழ்த்தியது இந்தியா

0
INDWvsSLW-WWCT20I

INDWvsSLW-WWCT20I; இலங்கையை வீழ்த்தியது இந்தியா

பிப்.29: 7வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது.

பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும்,

பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடுகிறது.

இன்று பிரிவு ‘ஏ’ யில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை INDWvsSLW-WWCT20I மோதியது.

இந்தியா மகளிர் பேட்டிங் 

டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இலங்கை அணி இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது.

தடுமாறியது 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக கேப்டன் அதப்பட்டு 33 ரன்கள் சேர்த்தார், ஸ்ரீவர்த்தினே 13 ரண்களும், மடாவி 12 ரன்களும் சேர்த்தனர்.

கவிஷா தில்காரி 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இந்திய தரப்பில் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், கெய்க்வாட் 2 விக்கெட்டும், தீப்தி சர்மா, ஷிகா பாண்டே மற்றும் பூனம் யாதவ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

மீண்டும் ஷாபாலி அதிரடி

114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 14.4 ஓவர்களில் இலங்கையை வீழ்த்தியது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷாபாலி வர்மா 34 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

மந்தனா 17 ரன்கள், கேப்டன் கவுர் 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்கள். ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி சர்மா தலா 15 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை தரப்பில் பிரபதானே கட்டுக்கோப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார், இவரைத் தவிர மற்ற வீராங்கனைகள் சொல்லிக்கொள்ளும்படி பந்துவீசவில்லை.

இந்த வெற்றியின் மூலம் இந்த உலக கோப்பையில் இந்தியா தொடர்ச்சியாக பெறும் நான்காவது வெற்றியாகும். புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

ராதா யாதவ் ஆட்டநாயகன்

4 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ராதா யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த நான்கு போட்டிகளிலும் பந்துவீச்சாளர்களே இந்தியாவின் வெற்றிக்கு முன்னிலை வகிக்கிறார்கள்.

இலங்கை மகளிர் அணி வருகிற மார்ச் 2-ஆம் தேதி மெல்போர்னில் இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு வங்கதேச மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுமே ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது

உலககோப்பை புள்ளி பட்டியல்

பிரிவு ஏ

TEAM   P    W     L   P
IND   :   4     4     0   8
AUS  :   3     2     1   4
NZ    :   3     2     1   4
SL    :   3     0     3   0
BAN  :   2     0     2   0

பிரிவு  பி

TEAM     P    W     L    P
RSA    :   2     2     0    4
ENG   :   3     2     1    4
PAK    :   2     1     1    2
WI     :    2     1     1    0
THAI   :   3     0     3    0

3

INDvsNZ 2nd Test; இந்தியா 242 ரன்களுக்கு ஆல் அவுட்

0
INDvsNZ 2nd Test

INDvsNZ 2nd Test; இந்தியா 242 ரன்களுக்கு ஆல் அவுட்

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது, அடுத்து நடந்த ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில்  இந்தியாவை நியூசிலாந்து ஒயிட் வாஷ் செய்தது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து  இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது டெஸ்ட் போட்டி INDvsNZ 2nd Test இன்று கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது.

இந்தியா பேட்டிங் 

டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது, அதன்படி இந்தியாவில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்திவி ஷா மற்றும் மயங்க் அகர்வால் இறங்கினார்கள்.

அதிரடியாக ஆடிய பிரத்திவி ஷா 54 ரன்கள் எடுத்து ஜேமிஸ்சன் பந்தில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

விராத் கோலி 3 ரன்கள், அஜின்கியா ரகானே 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்கள். புஜாரா மட்டும் நிலைத்து நின்று ஆடி 54 ரன்கள் சேர்த்தார்.

அவருக்கு உறுதுணையாக ஆடிய ஹனுமன் விகாரி 55 ரன்கள் சேர்த்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு  இந்த ஜோடி  81 ரன்கள் சேர்த்தது.

194 ரண்களுக்கு 4 விக்கெட் மட்டுமே இழந்த இந்திய அணி அடுத்த 13 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது.

கடைசி விக்கெட்டில் பும்ரா மற்றும் சமி ஆறுதலளிக்கும் ஆட்டத்தை ஆடினார்கள். முகமது சமி டிரென்ட் போல்ட் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசினார்.

மிரட்டிய பிளாக் கேப்ஸ்

இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூஸிலாந்து தரப்பில் ஜேமிஸ்சன் 5 விக்கெட், சவுத்தீ மற்றும் டிரென்ட் போல்ட் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லதாம் மற்றும் பிளண்டல் இந்திய பவுலர்களை சோதித்தனர்.

முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது. டாம் லதாம் 27 ரன்களிலும் பிளண்டல் 29 ரன்களிலும் களத்தில் உள்ளனர்

தொடர்ந்து சொதப்பும் கோலி

நியூஸிலாந்தில் டி20 போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி ரன் சேர்க்க திணறி வருகிறார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திணறி வருகிறார்.

கடந்த போட்டிகளில் சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் இந்த போட்டியில் 7  ரன்களில் வெளியேறினார். அணியில் ரிஷப் பந்த் என்ன பேட்டிங் செய்கிறார் என்பது அவருக்கே புரியாத புதிராக உள்ளது.

அவருக்கு பதில் விருத்திமான் சஹா ஆடும் 11 லில் சேர்ந்திருக்கலாம்.
அஸ்வினுக்கு பதிலாக களமிறங்கிய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விக்கெட் சரிந்த நிலையில் களமிறங்கினார்.

அவரும் சற்று பொறுமையாக ஆடி இருக்கலாம் அதை அவர் செய்ய தவறினார். இந்திய அணி 300 ரன்கள் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது 242 ரன்களுக்கு சுருட்டினார்கள் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள்.

3

கரோனா வைரஸ் விழிப்புணர்வு; மேடையில் சிக்கன் சாப்பிட்ட அமைச்சர்கள்

0
கரோனா வைரஸ் விழிப்புணர்வு

கரோனா வைரஸ் விழிப்புணர்வு; மேடையில் சிக்கன் சாப்பிட்ட அமைச்சர்கள்

சிக்கன் மூலம் கரோனா வைரஸ் பரவும் என சமீபத்தில் வெளிவந்த வதந்தியால் இந்தியாவில் சிக்கன் விற்பனை 50 சதவிகிதம் குறைந்தது.

இறைச்சிகள் மூலம் கரோனா வைரஸ் பரவாது என்பதை உறுதி செய்யும் விதமாகா தெலுங்கானா மாநில அமைச்சர்கள் ஹைத்ராபாத் நடந்த நிகழ்ச்சியில் அனைவரின் முன் சிக்கன் சாப்பிட்டனர்.

இவ்வாறு பொது மக்கள் முன் சிக்கன் சாப்பிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கைக்கு அவர்களை மாற்ற வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம்.

வெறும் நண்பர்களுக்கு இடையே நடந்த வாட்ஸ்ஆப் உரையாடலே இந்தியா முழுவது இந்த வதந்தி பரவ காரணம்.

Corona Virus – கரோனா வைரஸ் – ஆபத்தானதா?

கொரொனா வைரஸ்: நிலவேம்பு கஷாயம் குடித்தால் வராதா?

3

Hardik Pandya is Back; நான்கு சிக்ஸ் & மூன்று விக்கெட்

0
Hardik Pandya is Back

Hardik Pandya is Back; நான்கு சிக்ஸ் & மூன்று விக்கெட்

கடந்த உலகக் கோப்பைக்கு பிறகு முதுகு வலியால் எந்த வித போட்டிகளிலும் விளையாடாத ஹார்திக் பாண்டியா மீண்டும் காலத்தில் இறங்கினார்.

ரிலையன்ஸ் 1 அணிக்காக களமிறங்கிய ஹார்த்திக் பாண்டியா 38 ரன்கள் 4 சிக்ஸர்கள் இதில் அடங்கும் 3 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவி செய்தார்.

இதன் மூலம் ரிலையன்ஸ் 1 அணி பாங்க் ஆஃப் பரோடா அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதே ஃபார்மில் ஐ‌பி‌எல் போட்டிகளிலும் களமிறங்குவார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருங்க்கின்றனர்.

WWCT20I BANw vs AUSw: வங்கதேசத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

WWCT20I ENGw vs PAKw: இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி

WWCT20I saw vs thaw: தொக்காக மாட்டிய தாய்லாந்து மகளிர்

3

Leap Year History; கூகிள் டூடுல் இன்று

2
Leap Year History

Leap Year History; கூகிள் டூடுல் இன்று, Leap Day-Google Doodle Today,கிரகோரியன் நாட்காட்டி (Krikorian Calendar)

ஒவ்வொரு நான்கு வருடத்திற்கு ஒரு முறை பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் அதிகமாக சேர்க்கப்படும் .இந்த ஆண்டு 366 நாட்களோடு லீப் ஆண்டு என எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Leap Day-Google Doodle Today

லீப் டே வாரலாரை அவ்வளவு எளிதாக ஓரிரு வரியில் நீங்கள் தெரிந்துவிட முடியாது. ஒட்டுமொத்த ஆங்கில நாட்காட்டியின் வரலாற்றை படித்து பார்த்தால் புரியும்.

உங்களுக்காக ஒரு எளிதான விளக்கம் இதோ

கிரகோரியன் நாட்காட்டி (Krikorian Calendar)

கி.பி 1582-ம் ஆண்டு பதிமூன்றாம் போப் கிரகோரி, ஜூலியன் நாள்காட்டியில் உள்ள பிழையை மாற்றியமைத்தார்.

அப்போது, மருத்துவராக இருந்த அலோயிசியஸ் லிலியஸ் என்பவர் ஜீலியன் நாட்காட்டியில் 11 நிமிடம், 14 வினாடி அதிகமாக உள்ளதைக் கண்டறிந்தார்.

இதனால், ஒவ்வொரு 130 வருடத்திற்கும், ஒரு நாள் அதிகமாகிக்கொண்டே சென்றது. எனவே, புனிதவெள்ளி பண்டிகை வருடத்திற்கு வருடம் மாறிக்கொண்டே இருந்தது.

அதாவது பூமி, சூரியனை முழுமையாக சுற்றிவரத் துல்லியமாக 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள், 46 வினாடிகள் (365.2422) ஆகிறது. ஆனால், சூலியஸ் சீசர் 365.25 என்ற முறையில் தோராயமாக நாட்காட்டியை உருவாக்கியிருந்தார்.

Leap Year History

இதன்படி, நான்கு ஆண்டிற்கொருமுறை ஒரு நாளைச் சேர்த்தால், 130 ஆண்டுகளுக்கு 24.22  மணி நேரம் அதிகமாகும்.

அதைச் சரிசெய்ய, ஒவ்வொரு 400 ஆண்டுகளுக்கும், ஒரு லீப் ஆண்டு மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது.

அதாவது, 100-ஆல் வகுபடும் நூற்றாண்டுகள் லீப் வருடங்கள் இல்லை. 100-லும் 400-லும் வகுபடும் ஆண்டுகள் மட்டுமே லீப் ஆண்டுகளாக கணக்கிடப்பட்டது.

எடுத்துக்காட்டு:-

1700, 1800, 1900 லீப் ஆண்டுகள் இல்லை. ஆனால், 1600, 2000 லீப் வருடங்கள். அடுத்து 2400-வது வருடம் லீப் நூற்றாண்டு வருடமாகும். இடையில் உள்ள 3 நூற்றாண்டுகளின் துவக்க வருடம் (2100,2200,2300) கணக்கில் கொள்ளப்படாது.

இதன் மூலம், 130 வருடங்களுக்கு ஒருமுறை, 1 நாளைக் குறைக்க இயலும்.

கிரகோரியன் நாள்காட்டி மிகச்சரியானதா?

கிரகோரியன் நாள்காட்டியில் சராசரியாக 365.2425 என ஒரு வருடத்தின் அளவு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இது துல்லியமானது. ஆனால், மிகத்துல்லியமானது இல்லை. ஏனெனில், ஒவ்வொரு வருடத்திற்கும் 27 வினாடிகள் அதிகமாக இருக்கிறது. இதனால், ஒவ்வொரு 3236 வருடத்திற்கு 1 நாள் அதிகமாகிக் கொண்டே செல்லும்

தற்போது, நாம் பயன்படுத்தி வரும் (கிரகோரியன்) நாட்காட்டிப்படி, 4909-ம் வருடம் ஒருநாள் அதிகமாகும்.

எனவே, இந்த நாட்காட்டியும் மாறுதலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், 4909-ம் ஆண்டிற்கு பிறகு நாட்கள் மாறிச்செல்லும்.

3