Home Blog Page 273

குடியுரிமை சட்டம் அமல்; ஆதரவளித்த பூபேந்தர் சிங் ஹூடா

0
குடியுரிமை சட்டம் அமல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா

குடியுரிமை சட்டம் அமல். நிறைவேற்ற முடியாது எனக் கூறும் மாநில அரசுகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா எச்சரித்துள்ளார்.

குடியரசுச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டால் அந்தச் சட்டத்தை மாநில அரசுகள் செயல்படுத்த முடியாது எனக் கூற வாய்ப்பில்லை என முன்னாள் ஹரியானா மாநில முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபேந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார் .

குடியுரிமை சட்டம் அமல்

ஆளும் பாஜக அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளதை அனைவரும் அறிந்ததே..!

இந்தச் சட்டமானது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் அகதிகளாக ஆவணங்கள் இன்றி குடியேறும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் போன்றவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்பதே.

இந்தச் சட்டத்திற்கு பல மாநிலங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம், டெல்லி, பீஹார் போன்ற மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தியாவில் பல பகுதிகளில் போராட்டங்கள் பலதரப்பட்ட மக்களால் நடத்தப்படுகின்றன. எதிர்க் கட்சியான காங்கிரஸும் தனது பங்குக்கு எதிர்ப்பைக்காட்ட தவறவில்லை.

மேற்கு வங்கம், கேரளா மட்டுமின்றி காங்கிரஸின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பஞ்சாப் மாநிலமும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக காங்கிரஸின் பிடியில் உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதரவுக்குரல்

ஆனால் இதுகுறித்து முன்னாள் ஹரியானா மாநில முதல்வர் கூறியிருப்பது இதற்கு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாற்றிக்கு எதிர்மாறாக உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா இதுகுறித்து கூறியதாவது,

“குடியுரிமைச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி விட்டால் மாநில அரசுகள் அதனை செயல்படுத்த முடியாது  என கூற முடியாது. இதுவே இந்திய சட்ட விதிமுறை. மாறாக நீதிமன்றத்தின் மூலமாக மட்டுமே தீர்வு காண வாய்ப்புள்ளது” எனக் கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக, காங்கிரஸ் பக்கம் இருந்து முதல் ஆதரவுக்குரல் நீண்டுள்ளது. எனவே பாஜக இன்னும் மும்முரமாக சட்டத்தை செயல்படுத்த வாய்ப்புள்ளது.

3

கடும் விற்பனை வீழ்ச்சி: ஆடி இனி இந்தியாவில் இருக்குமா?

0
கடும் விற்பனை வீழ்ச்சி ஆடி சொகுசுக்கார் பிஎம்டபிள்யூ மெர்சிடிஸ் பென்ஸ்

கடும் விற்பனை வீழ்ச்சி: ஆடி இனி இந்தியாவில் இருக்குமா? பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகியவற்றைக் காட்டிலும் ஆடி சொகுசுக்கார் விற்பனை குறைவு.

சொகுசுக்கார்

சொகுசுக்கார் என்ற உடனே நாம் நினைவுக்கு வருவது ஆடி கார். சாதாரண நபராக உள்ளவர் பிரபலமானவுடன் முதலில் வாங்கும் கார் ஆடி.

ஆடியில் சென்று மினுக்கினால் மட்டுமே பெரிய இடத்து ஆள் என உலகிற்கு தெரியும் என்னும் அளவிற்கு ஆடி புகழ் இந்தியாவில் இன்றும் உள்ளது.

ஆடி கடும் விற்பனை வீழ்ச்சி

அப்படிபட்ட ஆடி நிறுவனமே இந்தியாவை விட்டு ஓடிவிடும் அளவிற்கு அதன் விற்பனை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

கடந்த ஆண்டில் கார் விற்பனை  கடும் சரிவை சந்தித்து வருகிறது. அதேநேரம் ஆடி தன்னுடைய போட்டி நிறுவனங்களான பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் ஆகியவற்றைக் காட்டிலும் மிகக்குறைவான விற்பனையே செய்துள்ளது.

ஒன்மேன் ஆர்மி ஆடி

எத்தனையோ கார் நிறுவனங்கள் இந்தியாவில் தாக்குப்பிடிக்க முடியாமல் வேறு ஒரு நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது.

அதிலும் ஒருசில நிறுவனங்கள் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடியும் உள்ளது.

இப்படி ஒரு நிலையில் எத்தனையோ தடுமாற்றம் வந்தாலும் ஆடி இன்னும் ஒன்மேன் ஆர்மியாக கெத்தாக சந்தையில் நிற்கின்றது.

ஆடி இந்தியாவை விட்டு வெளியேறுமா?

வீழ்ச்சி என்பது ஆடி நிறுவனத்திற்கு புதிதல்ல. கடந்த 2019-ல் ஆடி கார் ஒட்டுமொத்தமாக 4594 யூனிட் விற்பனையானது.

2018-ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்தால் 1869 யூனிட்டுகள் குறைவாகவே விற்பனையாகியுள்ளது.

ஆடி நிறுவனம் பெரிய அளவில் இந்திய சந்தைக்கு மதிப்பு கொடுப்பதில்லை. புதுப்பிக்கப்பட்ட ஏ4 கார்கள், புதியதாக ஏ6 கார்களை மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்தது.

புதிய தலைமுறை சி8, ஏ6 மாடல்களை மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட பின்பே இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதுபோன்ற காரணங்களும் ஆடியின் வீழ்ச்சியில் பங்கு வகிக்கிறது.

பிஎம்டபிள்யூ, பென்ஸ் முன்னிலை

லக்ஸரி கார் விற்பனையில் பென்ஸ் நிறுவனம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மொத்த விற்பனை 13786 யூனிட்டுகள்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் 9000 யூனிட் கார்களை விற்பனை செய்து உள்ளது. அதிக விற்பனை என்றாலும் கடந்த ஆண்டுகளை ஒப்பிட்டால் சற்று சரிவையே சந்தித்துள்ளது.

ஆனால் ஆடி நிறுவனம் அளவிற்கு கடும் சரிவை சந்தித்தது இல்லை. ஆடியும் இந்திய சந்தைக்கு என சில பிரத்யேக கார்களை அறிமுகம் செய்தால் ஓரளவு தாக்குப்பிடிக்க முடியும்.

3

பிஞ்ச் கணக்கை பஞ்சாக்கி, விரட்டியடித்த விராட்-ரோஹித்

0
மூன்றாவது ஒருநாள் பிஞ்ச் விரட்டியடித்த விராட்-ரோஹித்

பிஞ்ச் கணக்கை பஞ்சாக்கி, விரட்டியடித்த விராட்-ரோஹித். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

IND vs AUS 3rd ODI 2020

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் சேசிங் செய்வது கடினம் என்பதால் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.

ஆனால், ஆஸ்திரேலியா வீரர்கள் சரியாக ரன்களை குவிக்கவில்லை. வார்னர் 3, பிஞ்ச் 19, ஓப்பனிங் விக்கெட்டை லட்டாக அள்ளினர் இந்தியா வீரர்கள்.

இந்தப் போட்டியிலும் ஸ்மித் நீண்ட நேரமாக போராடி சதம் அடித்து ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார்.

அவருக்கு துணையாக மர்னுஸ் 54 ரன்களும், அலெக்ஸ் கேரி 35 ரன்களும் எடுத்தனர். ஸ்மித் 131 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் அவுட் ஆகினார்.

50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி. ஷமி 4, ஜடேஜா 2, சைனி மற்றும் குல்தீப் 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இந்தியா அபார ஆட்டம்

ஷிகர் தவான் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிக்கொண்டார். எனவே அவர் ஆடுவது கேள்விக்குறியாகியது.

9 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் வைத்துக்கொண்டு இந்தியா களம் இறங்கியது. ஓப்பனிங் வீராக களம் இறங்கிய ராகுல் 19 ரன்னில் அவுட் ஆனார்.

இந்த விக்கெட் சற்று அச்சத்தையே கொடுத்தது. ரோகித்தும் விராட் கோலியும் இணைந்து ஆஸ்திரேலிய வீரர்களை விரட்டு விரட்டு என்று விரட்டினர்.

இருவருடய விக்கெட்டையும் வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். ரோஹித் காயத்துடன் ஆடினாலும் 119 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

விராட்கோலி இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். 89 ரன்கள் இருந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 12 ரன்கள் தான் தேவை என்ற நிலை இருந்தது.

இதனால் சிக்சர் அடித்து சதத்தை பூர்த்தி செய்யவேண்டும் என நினைத்த கோலி ஜோஸ் வீசிய பந்தில் போல்ட் ஆனார்.

பின்னர் அந்த ரன்களை கொண்டு ஷ்ரேயாஸ் அய்யர் அரைச்சதத்தை பூர்த்தி செய்ய நினைத்தார். 44 ரன்கள் இருந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை இருந்தது.

சிக்சர் அடித்தால் வெற்றி பெறலாம் அரைச்சதமும் பூர்த்தியாகும் என நினைத்தார் அய்யர். ஆனால் அவரால் சிக்சர் அடிக்க முடியவில்லை.

அடுத்த ஓவருக்கு ஸ்ட்ரைக்கை தக்கவைத்து கொள்ளலாம் என நினைந்தார் ஆனால் சிங்கிள் ஓட முடியவில்லை.

இதனால் ஸ்ட்ரைக் மனீஷ் பாண்டே கைவசம் சென்றது. சென்ற போட்டியில் ஒழுங்காக விளையாடவில்லை. எனவே இப்போட்டியில் கிடைத்த பாலில் இரண்டு பவுண்டரிகள் விரட்டினார்.

இதன் மூலம் இந்தியா வெற்றிபெற்றது. ஷ்ரேயாஸ் அய்யர் 44, மனீஷ் பாண்டே 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார். விராட்கோலி தொடர் நாயகன் விருதினை வென்றார்.

3

சபானா ஆஸ்மி: ஐந்து தேசிய விருது வென்ற நடிகை படுகாயம்

0
சபானா ஆஸ்மி ஐந்து தேசிய விருது நடிகை படுகாயம்

சபானா ஆஸ்மி: ஐந்து முறை தேசிய விருது வென்ற நடிகை படுகாயம். கார், லாரி நேருக்குநேர் மோதியதில் நடிகை மற்றும் டிரைவர் படுகாயம்.

இந்தி நடிகை சபானா ஆஸ்மி (69) மற்றும் அவரது  கார் டிரைவர் இருவரும் விபத்தில் காயம் அடைந்தனர். சபானாவின் கணவர் வேறு வாகனத்தில் வந்ததால் அவர் பத்திரமாக இருப்பதாக தெரிவித்தார்.

கார் மற்றும் லாரி மோதல்

இந்தி நடிகை சபானா தனது சபாரி காரில் மராட்டியத்தின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மும்பை-பூனே விரைவு சாலையில் வழியாக,  மும்பையில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள காலாப்பூர் என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முன்னே சென்ற தனது கணவரின் ஆடி காரை முந்திச்செல்ல முயன்றபோது முன்சென்ற லாரி மீது மோதியது.

எம்ஜிஎம் மருத்துவமனை

விபத்தில் இருந்து உடனடியாக மீட்கப்பட்ட நடிகை மற்றும் அவரது கார் டிரைவர் நவி மும்பையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

படுகாயம் அடைந்த சபானா

இன்று மாலை 3.30 மணியில் நடந்த இந்த விபத்தில் சபானா ஆஸ்மிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. டிரைவருக்கு பின் கண்ணாடி அருகில் அமர்ந்து இருந்ததால் முகம், கழுத்து, கன்னம், மற்றும் கண்ணின் அருகே காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐந்து முறை தேசிய விருது

சபானா ஆஸ்மி ஐந்து முறை தேசிய விருதினை பெற்றுள்ளார். மற்றும் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார்.

சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, சிறந்த துணை நடிகைக்கான விருது மற்றும் பல சர்வதேச விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

மன்னிப்பா? இந்திரா ஜெய்சிங் மீது ஆஷாதேவி கடுங்கோபம்

0
மன்னிப்பா இந்திரா ஜெய்சிங்

மன்னிப்பா? நிர்பயாவையை கொன்ற கொலையாளிகளை மன்னித்து விடுதலை செய்யவேண்டும் எனக்கூறிய இந்திரா ஜெய்சிங் கருத்திற்கு கடுங்கோபம் தெரிவித்தார் ஆஷாதேவி.

நிர்பயா கூட்டுப் பலாத்காரம்

உலகையே உலுக்கியது நிர்பயா என்ற 23 வயது மருத்துவ மாணவியின் மரணம். 2012-ல் ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார்.

6 பேர் கொண்ட கும்பல் இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியது. இதில் பாதிக்கப்பட்ட நிர்பயா டிசம்பர் 29-ல் உயிரிழந்தார்.

தள்ளிச்சென்ற தூக்கு தண்டனை

முகேஷ்சிங், வினய் ஷர்மா, பவன்குப்தா, அக்சய்குமார் இக்குற்றத்தை செய்தவர்கள். இவர்களுக்கு முதலில் ஜனவரி 22-ம் தேதி மரண தண்டனை வழங்கப்பட்டது.

பின்னர் குற்றவாளிகளின் மறுசீராய்வு மனுவால் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியாக வினய்ஷர்மா கருணை மனுவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளிப்படி செய்தார்.

இதையடுத்து நீதிபதி சதீஷ்குமார் அரோரா வெள்ளி அன்று அவர்கள் நால்வருக்கும் பிப்ரவரி முதல் தேதி மாலை 6 மணிக்கு மரணதண்டனை நிறைவேற்ற தீர்ப்பு வழங்கினார்.

இந்திரா ஜெய்சிங் ட்விட்

இதற்கிடையில் இந்திரா ஜெய்சிங், (முதன்மை வக்கீல்) ஆஷாதேவி குற்றவாளிகளை மன்னித்து அவர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று தனது கருத்தை ட்விட் செய்துள்ளார்.

மேலும், அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தன் கணவரை கொலை செய்த நளினி மற்றும் அவர் கணவர் முருகனை சோனியா காந்தி மன்னித்து வெளியே விடும்படி சொல்வது போல, ஆஷா தேவியும் குற்றவாளிகளை மன்னித்து அவர்களின் தண்டனையை தடுக்குமாறும் கூறியுள்ளார்.

ஆஷாதேவி கடுங்கோபம்

ஆஷாதேவி கடுங்கோபம்இந்திரா ஜெய்சிங்கின் ட்விட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் ஆஷாதேவியும் பதில் ட்விட் வெளியிட்டார்

அதில் அவர் குறிப்பிட்டதாவது, மன்னிப்பா? இவர் யார் என்னை முடிவெடுக்கச் சொல்ல என்பது போன்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இந்திரா ஜெய்சிங் போன்று குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களுக்கும் சேர்த்து தனது கண்டங்களையும் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா அல்லது மேலும் சில காரணங்களால் தள்ளிப்போகுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

3

ஒரு விரல் புரட்சி என்னும் விந்தை எப்படி இருக்கவேண்டும்?

0
ஒரு விரல் புரட்சி என்னும் விந்தை உங்கள் ஓட்டு யாருக்கு?

ஒரு விரல் புரட்சி (Oru Viral Puratchi) என்னும் விந்தை எப்படி இருக்கவேண்டும். மக்கள் தன்னுடைய தலைவனை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் ஓட்டு யாருக்கு?

அரசியலின் அரியனை

அரசியல் என்னும் அதிகாரத்தை ஆளும் தகுதி என்பது எளிதாய் போனதால் அந்த அரியனையில் ஏறத்துடிக்கும் மனிதர்கள் பலர்.

அந்த அரியனையில் ஏறும் மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் பல. ஆனால், அந்த மனிதனை ஏற்றிவிட்ட மக்களின் நிலை???

உண்மையின் குரல்

தேர்தல் என்றவுடன் உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பவன் அரியனை ஏறியவுடன் அதை மறக்கிறான்.

ஏனென்றால், அவன் ஆசைப்பட்ட அரியனையில் ஏறியதே தன் ஆசையை நிறைவேற்றி கொள்ள மட்டுமே. இப்படி இருக்க தேர்தலின்போது அவனின் குரலில் ஒலிக்கும் வார்த்தை மட்டும் மெய்படுமா என்ன???

பிரச்சனையின் மறுஜென்மம்

முன் இருந்த ஆட்சியில் ஏற்பட்ட பிரச்சனைகள் இவன் வந்தவுடன் இருமடங்காக உயர்கிறது. எதனால் என்றால் இவன் அரியனை ஏறியதற்கு முக்கிய காரணம் பணம்.

ஒரு ஓட்டுக்கு பணம் என்றவுடன் அதை நாம் விற்றதால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் தான் இவை.

பணம் கொடுத்து அரியனையை வாங்கியவன். அந்த அரியனையால் எப்படி பணம் எடுப்பது என்பதே அவன் சிந்தனையாக இருக்குமே தவிர அவன் மக்களுக்கு எப்படி நன்மை புரிவான்?

எழுச்சியின் அலறல்

நடப்பதை மாற்றி அமைக்க மாற்றங்கள் வேண்டும் என்று குரல் கொடுப்பவன் தனக்கொரு ஆதாயத்திற்காக, தன்னுடைய எழுச்சிக்காக பொய் பிரச்சாரம் செய்கிறான்.

அவனின் பொய்யான வார்தைகளை நம்பி ஏமாறும் மக்கள், வறுமையால் வாடும்போது கேட்கும் அலறல் சத்தம்  இங்கு ஏராளம்.

விடைகளின் விதை

இப்படி, மக்களாட்சி நடக்கும்  நாட்டிலே, மக்களின் தோல் மீது ஏறி ஆட்சி செய்பவர்களே அதிகம். இந்த நிலைமையின் கேள்விக்கான விடை தான் என்ன??

பணம் கொண்ட மனிதன் அதை வெறுக்கும் இயல்பு கொண்ட ஒருவன்தான். இந்த கேள்விக்கான விடைகளின் விதை.

அனுபவித்த ஒன்றை வேண்டாம் என்பவனுக்கு, அதை அனுபவிக்க எண்ணம் தோன்றாது.

விதையின் விருட்சம்

நாம் வேண்டாம் என்பதை தூக்கி வீசினால் அது வேண்டும் என்பவன் தானாக தூக்கியெறியப்படுவான்.

பணம் மீதும், பதவி மீதும் ஆசை இல்லாதவன் அரியனையில் ஏறினால், மக்கள் எதிர்ப்பார்த்த ஒன்று அவன் ஏதுவும் செய்யாமலே வந்து சேரும்.

தவறு என்ற ஒன்றை நினைக்காமல் இருந்தால் நன்மை தானாக ஏற்படும் என்பதைப்போல் இந்த விதையும் மக்களின் கனவை நிஜமாய் மாற்றும் விருட்சமாய் மாறும்.

ஒரு விரல் புரட்சி என்னும் விந்தை

ஒரு விரலால் அரசியல் என்னும் அரியனையில் ஏற்றிவிடும் விந்தை கொண்ட மக்கள் அடிமையாய் போவதற்காக, பணத்தை வாங்கிக்கொண்டு அந்த விந்தையை நிகழ்த்த வேண்டாம்.

உண்மைக்காக தங்களின் உரிமையை புரிந்து கொள்ளும் ஒருவனுக்காக இந்த விந்தையை நிகழ்த்தினால் இனிவரும் காலங்கள் பொற்கால அரசியலாய், பொற்கால ஆட்சியாய் மாறும்.

உங்கள் ஓட்டு யாருக்கு? என்று இப்போது கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்.

3

பழிக்குப்பழி: மொத்தமாக திருப்பிக்கொடுத்த இந்தியா

0
பழிக்குப்பழி IND vs AUS 2nd ODI 2020

பழிக்குப்பழி: அரைச்சதம், சதம், விக்கெட் இழப்பின்றி வெற்றி. ஒரே போட்டியில் மொத்தமாக ஆஸ்திரேலிய அணிக்கு திருப்பிக்கொடுத்தது இந்தியா. IND vs AUS 2nd ODI 2020.

IND vs AUS 2nd ODI 2020

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

முன்னதாக, முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடர். எனவே, இந்திய அணி வென்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கியது.

அரைச்சதம் – சதம் வீண்

இந்திய அணியின் தொடக்க வீரர்கள்  ரோஹித்-தாவான் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் ரோஹித் 42 ரன்களிலும், தவான் 96 ரன்களிலும் அவுட்டாகினர்.

ஒருவருக்கு அரைச்சதம் மிஸ்ஸிங். இன்னொருவருக்கு நான்கு ரன்களில் ஒரு சதம் வீணாகியது.

விராட்-ராகுல் ஜோடி

அதன்பிறகு களம் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐய்யர் நிலைத்து ஆடவில்லை. 7 ரன்களில் நடையைக் காட்டினார். விராட் கோலியுடன் கே‌.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 40-வது ஓவர் வரை நிலைத்து ஆடியது.

மீண்டும் ஜாம்பா பந்தில் அவுட் 

விராட்கோலியின் விக்கெட்டை இன்னொருமுறை எடுத்துவிட்டார் ஜாம்பா. 78 ரன்கள் எடுத்த நிலையில் ஜாம்பா பந்தை நேராக சிக்சருக்கு தூக்கியடித்தார்.

அப்போது ஸ்டார்க் சிக்சர் எல்லையில் நின்று தாவி பிடித்து அதை மற்றொரு வீரருக்கு தூக்கிவீசிவிட்டு எல்லைக்குள் சென்றார். இன்னொரு வீரர் பிடித்ததால் அது அவுட்டாக மாறிவிட்டது.

விராட் கோலியை தொடர்ந்து 2 ரன்களில் மனீஷ் பாண்டேவும் நடையைக் கட்டினார். 300 ரன்களை நெருக்கிக் கொண்டிருந்தபோது அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது.

இதனால் இந்தியா 300 ரன்களை கடக்குமா என சந்தேகம் எழுந்தது. இருப்பினும் ராகுல்-ஜடேஜா ஜோடி கை கோர்த்தனர்.

தோனியாக மாறிய ராகுல்

INDvsAUS இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கே.எல். ராகுல்

இந்திய அணியின் மிடில் ஆர்டர், நீண்ட நாட்களாக தோனி இல்லாமல் தடுமாறி வந்தது. நம்பிக்கை தரும் அளவிற்கு எந்த வீரரும் நிலைத்து ஆடியது கிடையாது.

ஆனால் ராகுல், நேற்று விளையாடிய போட்டியில் தோனி போன்று பொறுப்புடன் விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

ஸ்டார்க் ஓவரை நாலாபக்கமும் விரட்டினார். இதனால் இந்திய அணி 49 ஓவருக்கு 335 ரன்களை எட்டியது. ஆனால் கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

இப்போட்டி மூலம் கே.எல்.ராகுல் சர்வதேச ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை கடந்தார். கடைசி ஓவரில் வீணாக ரன் ஓடிய ராகுலின் விக்கெட் பறிபோனது.

இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்தியா 340 ரன்கள் எடுத்தது.  ஜடேஜா 20, ஷமி 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

 

பழிக்குப்பழி வாங்கியது இந்தியா

341 ரன்கள் எடுத்தால் வெற்றி என ஆஸ்திரேலிய ஓப்பனர் வார்னர்-பிஞ்ச் களம் இறங்கினர். இந்தமுறை  சீக்கிரமே வார்னர் விக்கெட்டை சமி கைபற்றினார்.

12 ரன்கள் எடுத்தபோது ஷமி பந்தை அடிக்க முயன்று பாண்டேவிடம் கேட்ச் ஆனார். 33 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா வீசிய பந்தை பிஞ்ச் அடிக்க முயன்றார்.

ஆனால், பந்து பேட்டில் படாமல் ராகுலிடம் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டெம்பிங்க் செய்தார். ராகுல் பேட்டிங் மட்டுமல்லாமல் கீப்பிங்கிலும் தோனி போன்று அசத்தினார்.

மூன்றாவது அம்பயர் நீண்ட நேரம் ரீப்ளே செய்து அவுட் கொடுத்தார். மயிரிழையில் கிரீசில் கால்வைக்க முடியாமல் அவுட் ஆனார் பிஞ்ச்.

முதலாவது போட்டியில் அவுட்டாகாமல் விளையாடிய ஆஸ்திரேலிய துவக்கவீரர்களை எளிதாக வீழ்த்தினர் இந்திய பவுலர்கள்.

அரைச்சதம் – சதம் பழிக்குப்பழி

மர்னஸ் 46 ரன்கள் இருந்தபோது அரைச்சதம் அடிக்க விடாமல் ரவீந்திர ஜடேஜா ஓவரில் ஷமி கேட்ச் பிடித்து அவுட் செய்தார்.

அதேபோல் நீண்ட நேரமாக ஆஸ்திரேயாவை வெற்றி பெறவைக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடிய ஸ்மித் 98 ரன்கள் எடுத்தபோது குல்திப் சூழலில் சுருண்டார்.

90 ரன்கள் கடந்த நிலையில் பதற்றதுடனே ஆடினார் ஸ்மித். குல்திப் பந்தை தூக்கியடிக்க நினைத்து பால் எட்ச்சாகி ஸ்டெம்பில் பட்டு அவுட் ஆனார்.

ரோஹித்-தவான் போன்றே இவர்கள் இருவரையும் அரைச்சதம்-சதம் அடிக்க விடாமல் இந்திய வீரர்கள் அவுட் செய்து பழிதீர்த்துக்கொண்டனர்.

ஆல்அவுட் பழிதீர்ப்பு

முதலாவது போட்டியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் திணறிய இந்திய பவுலர்கள் இரண்டாவது போட்டியில் ஆல்அவுட் செய்து கெத்து காட்டினார்.

49-வது ஓவரை ஷமி விசும்போது கடைசி விக்கெட் வேண்டும் என விராட் கூற, லூஸ் பால் போட்டார் ஷமி. ஆனால் ரிஷார்ட்சன் பந்தை சிக்சர் பவுண்டரி என பறக்க விட்டார்.

இதனால் ஆஸ்திரேலியா 300 ரன்களை கடந்தது. 9 ஓவர்கள் வீசிய பும்ரா 32 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆனால் ஒரு விக்கெட் கூட விழவில்லை.

இறுதி ஓவரை வீசிய பும்ரா முதல் பந்திலேயே ஜம்பாவிற்கு பவுன்சர் போட்டார். அதை அடிக்க முயன்றார் ஜாம்பா ஆனால் கே.எல்.ராகுல் கேட்ச் பிடித்து ஆல்அவுட் செய்தார்.

49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலியா 304 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

3

INDvsAUS: தோனியாக மாறிய கே.எல். ராகுல்

2
INDvsAUS இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கே.எல். ராகுல்

INDvsAUS: தோனியாக மாறிய கே.எல்.ராகுல். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடினார்.

INDvsAUS 2020

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

எனவே இந்திய அணி இப்போட்டியில் வெல்ல வேண்டிய காட்டாயத்தில் உள்ளது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோஹித்-தாவான் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

அரை-சதம் மிஸ்ஸிங் 

42 ரன்கள் எடுத்தபோது ரோஹித் சர்மா, சாம்பா ஓவரில் எல்பிடபில்யு அவுட் ஆனார். இதனால் அவரால் அரைச்சதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை.

அதன்பிறகு இணைந்த விராட்-தவான் ஜோடி இந்திய அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.

96 ரன்கள் எடுத்தபோது ஷிகர் தவான் துரதிஷ்டவசமாக கேன் ரிச்சர்ட்சன் வீசிய பந்தை தூக்கியடிக்க நினைத்து ஸ்டார்க்கிடம் கேட்ச் ஆனார்.

இதை ஆஸ்திரேலிய வீரர்களே எதிர்பார்க்கவில்லை. ஒருவர் அரைசதம் கடக்கவிடாமல் அவுட் செய்தனர். மற்றொருவரை சதம் அடிக்கும் தருவாயில் அவுட் செய்தனர்.

விராட்-ராகுல் ஜோடி

அதன்பிறகு களம் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐய்யர் நிலைத்து ஆடவில்லை 7 ரன்களில் நடையைக் காட்டினார். விராட்கோலியுடன் கே‌எல்ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 40-வது ஓவர் வரை நிலைத்து ஆடியது.

ஜாம்பா மேஜிக்

விராட்கோலியின் விக்கெட்டை இன்னொருமுறை எடுத்துவிட்டார் ஜாம்பா. 78 ரன்கள் எடுத்த நிலையில் ஜாம்பா பந்தை நேராக சிக்சருக்கு தூக்கியடித்தார்.

அப்போது ஸ்டார்க் சிக்சர் எல்லையில் நின்று தாவி பிடித்து அதை மற்றொரு வீரருக்கு தூக்கிவீசிவிட்டு எல்லைக்குள் சென்றார். இன்னொரு வீரர் பிடித்ததால் அது அவுட்டாக மாறிவிட்டது.

ராகுல்-ஜடேஜா ஜோடி 

விராட் கோலியை தொடர்ந்து 2 ரன்களில் மனீஷ் பாண்டேவும் நடையைக் கட்டினார். 300 ரன்களை நெருக்கிக் கொண்டிருந்த போது அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது.

இதனால் இந்தியா 300 ரன்களை கடக்குமா என சந்தேகம் எழுந்தது. இருப்பினும் ராகுல்-ஜடேஜா ஜோடி கை கோர்த்தனர்.

தோனியாக மாறிய ராகுல்

இந்திய அணியின் மிடில் ஆர்டர் நீண்ட நாட்களாக தோனி இல்லாமல் தடுமாறி வந்தது. நம்பிக்கை தரும் அளவிற்கு எந்த வீரரும் நிலைத்து ஆடியது கிடையாது.

ஆனால் ராகுல் இன்று விளையாடிய போட்டியில் தோனி போன்று பொறுப்புடன் விளையாடி இந்திய் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

ஸ்டார்க் ஓவரை நாலாபக்கமும் விரட்டினார். இதனால் இந்திய அணி 49 ஓவருக்கு 335 ரன்களை எட்டியது. ஆனால் கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

ராகுல் இப்போட்டியில் 1000 ரன்களை கடந்தார். வீணாக ரன் ஓடி ராகுல் விக்கெட் பறிபோனது. இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்தியா 340 ரன்கள் எடுத்தது.  ஜடேஜா 20, ஷமி 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

 

ஷமி ஓவர் வார்னர் காலி

341 ரன்கள் எடுத்தால் வெற்றி என ஆஸ்திரேலியா ஓப்பனர் வார்னர்-பிஞ்ச் களம் இறங்கினர். இந்தமுறை  சீக்கிரமே வார்னர் விக்கெட்டை சமி கைபற்றினார்.

12 ரன்கள் எடுத்தபோது ஷமி பந்தை அடிக்க முயன்று பாண்டேவிடம் கேட்ச் ஆனார். 33 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா வீசிய பந்தை பிஞ்ச் அடிக்க முயன்றார்.

மயிரிழையில் பிஞ்ச் அவுட்

ஆனால் பந்து பேட்டில் படாமல் ராகுலிடம் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டெம்பிங்க் செய்தார். பேட்டிங் மட்டுமல்லாமல் கீப்பிங்கிலும் தோனி போன்று அசத்தினார்.

மூன்றாவது அம்பயர் நீண்ட நேரம் ரீப்ளே செய்து அவுட் கொடுத்தார். மயிரிழையில் கிரீசில் கால்வைக்க முடியாமல் அவுட் ஆனார் பிஞ்ச்.

26 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 150 ரன்கள் எடுத்து சற்று இந்தியாவிற்கு அச்சம் கொடுத்தவாரே விளையாடி வருகிறது.

3

மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது ஏன்?

2
ஏன் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது?

மகர சங்கராந்தி (Makar Sankranti), இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று. அது என்ன மகர சங்கராந்தி? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.

காரணங்கள் அறியாமலே நம்மில் பலர் நிறைய காரியங்கள் மற்றவர்களைப் பார்த்து செய்து வருகிறோம்.

மகர சங்கராந்தி

சங்கராந்தி என்றால் என்ன?

வடமொழியில் சங்கரமணம் என்றால் நகர துவங்குதல் என்று பொருள். சூரியன் தனது ராசி மண்டலத்தில் 12 ராசிகள் வழியாகப் பயணிக்கிறார்.

ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் உள்ளன. 12 ராசிகளின் பெயரிலேயே வடமொழியில் மாதங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு நகர்வதே சங்கராந்தி ஆகும்.

எத்தனை சங்கராந்திகள் உள்ளன?

தட்சிணாயனம் சங்கரமணம்

நாம் முன்பு கூறியது போல் ராசி் மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சங்கராந்தி வீதம் மொத்தம் 12 சங்கராந்திகள் உள்ளன.

உத்தராயண புண்ணிய காலத்தில் 6 சங்கராந்திகள் வரும் மற்றும் தட்சிணாயன காலத்தில் 6 சங்கராந்திகள் வரும். இந்த 12 சங்கராந்திகளும் 4 சங்கராந்தி பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

உத்தராயணம் &  தட்சிணாயனம் என்பது என்ன?

உத்தரம் என்றால் வடக்கு. தட்சிணம் என்றால் தெற்கு. அயனம் என்றால் வழி என்பது பொருள்.

சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கிய வழியில் பயணிப்பது உத்தராயண காலம் ஆகும்.

சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வழியில் பயணிப்பது தட்சிணாயன காலம் ஆகும்.

சங்கராந்தி வகைகள்

வருடத்திற்கு மொத்தம் 12 சங்கராந்திகள் உள்ளன.

தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண காலத்தில் வரும் 6 சங்கராந்திகள் மற்றும் அதன் மாதங்கள்:

மகரம்-தை, கும்பம்-மாசி, மீனம்-பங்குனி, மேஷம்-சித்திரை, ரிஷபம்-வைகாசி, மிதுனம்-ஆனி.

தட்சிணாயன காலத்தில் ஆடி முதல் மார்கழி வரை வரும் 6 சங்கராந்திகள் மற்றும் அதன் மாதங்கள்:

கடகம்-ஆடி, சிம்மம்-ஆவணி, கன்னி-புரட்டாசி, துலாம்-ஐப்பசி, விருட்சிகம்-கார்த்திகை, தனுசு-மார்கழி.

இந்த 12 சங்கராந்திகளும் 4 பிரிவுகளாக பிரிகின்றன:

• அயனி சங்கராந்தி
• விஸுவ சங்கராந்தி
• விஷணுபதி சங்கராந்தி
• ஷாட்சித முக சங்கராந்தி

அயனி சங்கராந்தி

மகரம் மற்றும் கடக சங்கராந்திகளை அயனி சங்கராந்திகள் என்பர். இது உத்தராயண மற்றும் தட்சிணாயன சங்கராந்திகள் இரண்டும் சேர்ந்த ஒன்று.

இவையிரண்டும் பருவ நிலை சார்ந்தவை ஆகும். உத்தராயண மற்றும் தட்சிணாயன காலத்தின் ஆரம்பமே அயனி சங்கராந்தி ஆகும்.

விஸுவ சங்கராந்தி

மேஷம் மற்றும் துலாம் சங்கராந்திகள் சேர்ந்ததே விஸுவ சங்கராந்தி ஆகும். இவை வசந்த சம்பத் மற்றும் சரத் சம்பத் எனப்படுகிறது.

விஷ்ணுபதி சங்கராந்தி

சிம்மம், கும்பம், ரிஷபம், விருட்சிகம் இந்த நான்கு சங்கராந்திகளும் விஷ்ணுபதி சங்கராந்திகள் எனப்படுகிறது.

பெரும்பாலான சுப நிகழ்ச்சிகள் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் தான் நடைபெறுகின்றன.

ஷாட்சித முக சங்கராந்தி

மீனம், கன்னி, மிதுனம், தனுசு ஆகிய நான்கும் ஷாட்சித முக சங்கராந்திகள் எனப்படுகிறது.

அயனி, விஸுவ, மகர சங்கராந்தி

மகர சங்கராந்தியின் சிறப்பு

சூரியன் ராசி மண்டலத்தில் மகர ராசிக்கு பிரவேசிக்கும் நாளே மகர சங்கராந்தி ஆகும்.

சூரியன் 29 நாட்கள் 27 நிமிடங்கள் 16 நொடிகள் மகர ராசியில் பயணிப்பார். இது தை மாதத்தின் முதல் நாள் நிகழ்கிறது.

இது வெகு விமர்சையாக இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

தேவர்களுக்கு காலைப் பொழுதின் ஆரம்பம் மகர மாதம் ஆகும். ஆறு மாதம் பகல் மற்றும் ஆறு மாத இரவு என்பது தேவர்களின் ஒரு நாள் என்று நம்பப்படுகிறது.

காலை பொழுதின் துவக்கமே தை மாதம் ஆகும். எனவே தான் சூரியன் முதலான தேவர்களுக்கு இந்த ஆரம்ப நாளில் இந்துக்கள் பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.

இந்தியா மட்டுமின்றி நேபாளம், தாய்லாந்து, மியான்மர், இலங்கை, லாவோஸ் போன்ற நாடுகளில் இந்த விழாவானது வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

2020-இல் மகர சங்கராந்தி

இந்த ஆண்டு சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் மகர சங்கராந்தி ஆனது ஜனவரி மாதம் 15-ஆம் தேதி நள்ளிரவு 02:22AM மணிக்கு நடைப்பெற்றுள்ளது.

இனியாவது விழாக்களை கொண்டாடுவது மட்டுமின்றி அந்த விழாக்களின் சிறப்பு மற்றும் காரணங்களை அறிந்து கொண்டாடுவோம்.

3

விஜய்சேதுபதி பிறந்தநாள்: ரசிகனை ரசிக்கும் நடிகன்

0
விஜய்சேதுபதி பிறந்தநாள் பிறந்த தினம் ரசிகனை ரசிக்கும் நடிகன்

விஜய்சேதுபதி பிறந்தநாள்: ரசிகனை ரசிக்கும் நடிகன் விஜய் சேதுபதி பிறந்த தினம் இன்று.

பக்கத்து வீட்டு மனிதர் போலவோ, நாம் எப்போதோ பார்த்த மனிதர் போலவோ தோற்றமும் , இயல்பான பேச்சு வழக்கையும் கொண்டவர் விஜய் சேதுபதி.

சூப்பர் டீலக்ஸ் படம் சென்ற வருடத்தின் சிறந்த படம்.

தனது ரசிகர்களுக்கு அதிகமாக முத்தம் கொடுத்த நடிகன் யாரென்றால் நிச்சயமாக அது விஜய்சேதுபதியாகத்தான் இருக்க முடியும்.

ஆம்! படத்தில் தன்னுடன் நடிக்கும் நடிகைக்கு கூட அவ்வளவு முத்தம் கொடுத்திருக்கமாட்டார். தன்னை ரசிக்கும் ரசிகனை இவர் அவ்வளவு ரசிக்கிறார் .

படங்களைத்தாண்டி பொது இடங்களில் பேசுவதில் தன் பேச்சை தெளிவாக வெளிச்சொல்பவர்.

ஆனால் அவை எதுவுமே மேடைப்பேச்சுக்காக பேசுபவையாக இருக்காது. உண்மையில் நினைத்ததை சொல்வதாகவே இருக்கும்.

சக நடிகர்களையும் பெரும் கணிவுடனும் அன்புடனும் அணுகுவார் என்று பல பிரபலங்கள் கூறியுள்ளனர்.

உச்ச நடிகர்களுடன் நடிப்பு

தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்குலக மெகாஸ்டார் சீரஞ்சிவி, தற்போது தளபதி விஜய், பாலிவுட் நடிகர் அமிர்கான் என உச்ச நடிகர்களுடன் இணைந்து நடிப்பதெல்லாம் விஜய்சேதுபதிக்கே சாத்தியமான ஒன்று.

30 வயதென்ற காலக்கட்டத்தில் திரைத்துறையில் பிராகசிக்க ஆரம்பிப்பதெல்லாம் அவ்வளவு எளிதனா விஷயமல்ல அதை சாதித்து காட்டியவர் விஜய்சேதுபதி.

திரைத்துறையில் பல காலமாக சிறு சிறு காதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். உதாரணமாக புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம்.

சிலபல நடிகர்கள் தனது தோற்றத்தை படத்தை தவிர்த்து வெளியில் காட்டும்போது முடிந்த அளவிற்கு அழகை கூட்டியும் ஸ்டைலாக இருக்க வேண்டுமெனவும் மெனக்கெடுவார்கள்.

ஆனால் அப்படியொரு எந்த மெனக்கெடலுமின்றி இயல்பாக சிம்பிளாக தோற்றமளிப்பார். அது எவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி.

ஏன் இப்படி வருகிறீர்கள் என்று கேள்வி கேட்டால்?

“எனக்கு இப்படியான உடைகளும் காலணிகளும்தான் சவுகரியமாக இருக்கும். அதனால்தான் நான் இப்படி வருகிறேன் “

என்று எளிமையான, உண்மையான விளக்கத்தையே கொடுப்பார்.

பார்வதியை கவர்ந்த சேதுபதி

இடையில் நடைபெற்ற Flim Companion இன்டர்வீயு ஒன்றில் ரன்வீர் சிங் , தீபிகா படுகோனே , விஜய் தேவர்கொண்டா ஆகியோருடன் தமிழ் திரை உலகம் சார்பாக விஜய் சேதுபதி கலந்துகொண்டார்.

அங்கிருந்தவர்கள் இவரை பாராட்டியது அழகாக இருந்தது. மேலும் அந்த இடத்தில் இருந்த மலையாள நடிகை பார்வதி அவர்கள் விஜய்சேதுபதியுடன் நடிக்க எனக்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன் டிவியில் அவர் செய்த நிகழ்ச்சியாகட்டும், தனது ரசிகர் மன்றம் மூலம் செய்து வரும் நற்பணிகளாகட்டும், பொதுவிடத்தில் பதிவேற்றும் கருத்துகளாகட்டும்.

அனைத்துமே இவரை நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்று நம்மால் சொல்லக்கூடிய அளவிற்கே இருக்கிறது. அவர் பேச்சிற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே .

விஜய்சேதுபதி பிறந்தநாள்

இக்கட்டுரை கூட அவரின் படங்களை பற்றியோ நடிப்பை பற்றியோ பெரிதும் பேசாமல் இருப்பதற்கான காரணம் ஒன்றே! அவர் நல்ல நடிகன் என்பதற்காக மட்டுமல்ல நல்ல மனிதனாகவும் கொண்டாடப்படுகிறார்.

விஜய் சேதுபதி பிறந்த தினம் 16 ஜனவரி, இன்னமும் கொண்டாடப்பட வேண்டும் என்பதே அக்காரணம்.

ரசிகனை ரசிக்கும் தலைவனும்
மக்கள் செல்வனுமாகிய
விஜய் சேதுபதி அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !
3