Home Blog Page 23

சியானின் சேது இயக்குநர் பாலா பர்த்டே டுடே!

0
HBD Bala

Director Bala; நான் கடவுள் இயக்குநர் பாலா பர்த்டே டுடே! நான் கடவுள், பரதேசி, பிதாமகன் என்று மாஸ் படங்களை கொடுத்த இயக்குநர் பாலா  இன்று தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இயக்குநர் பாலா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கடந்த 1966 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி மதுரையில் பிறந்தவர் இயக்குநர் பாலா. பாடலாசிரியர் அறிவுமதியின் உதவியுடன் பாலு மகேந்திராவிடம் பணியாற்றினார்.

பாலு மகேந்திரா இயக்கத்தில் வந்த பல படங்களில் தயாரிப்பு உதவியாளராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு சிறிது காலம், துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சியானின் சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சியான் விக்ரமிற்கு இந்தப் படம் திருப்பு முனையாக அமைந்தது. விக்ரமை சியானாக அறிமுகம் செய்தது.

முதல் படத்திற்கே பிலிம்பேர் விருது, தமிழ்நாடு மாநில விருது, தேசிய விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது என்று பல விருதுகளை பாலா பெற்றார்.

கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் இந்தப் படத்தை முதலில் திரையில் பார்த்துள்ளனர். ஆனால், படத்தில் வரும் சோகமான கிளைமேக்ஸ் காட்சி காரணமாக படத்தை வாங்கி திரையிட முன்வரவில்லை.

அதன் பிறகு எப்படியோ விளம்பரம் இல்லாமலும், புரோமோஷன் இல்லாமலும், படத்தை திரையிட்டனர்.

அதன் பிறகு படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஒவ்வொரு வீடுகளிலும் சேது படம் குறித்து விமர்சனம் எழுந்தது. இதுவே படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

சேது படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, கன்னடம் (Huchcha), தெலுங்கு (Seshu) மற்றும் ஹிந்தி (Tere Naam) ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழ் சினிமாவில் புரட்சி ஏற்படுத்தக் கூடிய ஒரே இயக்குநர் யார் என்றால், அது இயக்குநர் பாலா தான். இயக்குநர், தயாரிபபாளர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.

இவர், இதுவரை, 6 தேசிய விருதுகள், 13 மாநில விருதுகள், 15 பிலிம்பேர் விருதுகள், 14 சர்வதேச திரைப்பட விருதுகள் என்று பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

சேது படத்தைத் தொடர்ந்து சியான் விக்ரமை வைத்து, பிதாமகன் படத்தை கொடுத்துள்ளார். அதன் பிறகு ஆர்யாவை வைத்து நான் கடவுள், அதர்வாவை வைத்து பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் என்று மாஸ் படங்களை கொடுத்துள்ளார்.

இப்படி, பல மாஸ் கொடுத்த இயக்குநர் பாலா இன்று தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில் HappyBidthdayBala என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

3

கான்பூரில் 8 காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுட்டு கொல்லப்பட்ட விகாஸ் தூபே வின் குழுவுடன் தொடர்புடைய 2 பேர் குவாலியரில் கைது

விகாஸ் தூபே

உத்திர பிரதேசம்: கான்பூரில் 8 காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கொலைகாரன் விகாஸ் தூபே மற்றும் அவனது குழுவினருடன் தொடர்புடைய 2 பேரை, உத்திர பிரதேச காவல் துறை மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் சனிக்கிழமை கைது செய்தனர்.

காவல் துறையால் சுட்டு கொல்லப்பட்ட விகாஸ் தூபே

வெள்ளிக்கிழமை காலை கான்பூர் அருகே காவல்துறையுடன் வந்த விகாஸ் தூபே தப்பிக்க முயன்ற பொழுது சுட்டு கொல்லப்பட்டான்.

விகாஸ் தூபேவின் குழுவை சேர்ந்த 2 பேருக்கு நான்கு நாட்கள் அடைக்களம் கொடுத்ததாக கூறி குவாலியரில் வசிக்கும் 2 பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் இருவர் கைது

அந்த இருவரும் இ.பி.கோ 216 இன் படி குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

விகாஸ் தூபே மற்றும் அவனது குழுவை சேர்ந்த 5 பேரும் ஜூலை 3 முதல் ஜூலை 10 க்கிடையில் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம்: காவல் துறை

இவர்களை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ₹. 50,000 முதல் ₹.1,00,000 வரை சன்மானம் வழங்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

நடிகை “சனம் செட்டி” யின் நீச்சல் உடையில் இருக்கும் படங்கள் இணையதளத்தில் வைரல்

நடிகை "சனம் செட்டி"

அம்புலி, 23 போன்ற படங்களில் நடித்தவரும் 2016 ஆம் ஆண்டின் தென் இந்தியாவிற்கான அழகி பட்டத்தை வென்றவருமான நடிகை “சனம் செட்டி” யின் நீச்சல் உடையில் இருக்கும் படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகியுள்ளது.

2 பீஸ் எனப்படும் கதாநாயகிகள் அணிய தயங்கும் ஆடைகளை இலாவகமாகவும், கவர்ச்சியாகவும் அணிந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் சனம் செட்டி.

பெங்களூரில் வளர்ந்த இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் நடித்து வெளிவர காத்திருக்கும் படம் “வால்டர்”. மேலும் ‘மகா’ என்ற படத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கிறார்.

36 வயதாகும் சனம் செட்டி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா ஆகிய அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

3

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி: தமிழகம்

செல்லூர் கே.ராஜூ

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விற்கு கொரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது. அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் செல்லூர் ராஜூவிடம் தொலைபேசியில் பேசினார்

எதிர்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் செல்லூர் ராஜூவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கொரோனா பாதிக்கும் மூன்றாவது அமைச்சர்

செல்லூர் ராஜூ தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றாவது அமைச்சர் ஆவார்.

இதற்கு முன்னர் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த அதிமுக தலைவருமான பி.வளர்மதிக்கும் கொரோனா இருப்பது திங்கள் கிழமை உறுதிசெய்யப்பட்டது மற்றும் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திமுக வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா

திமுக வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ் மஸ்தான்(செஞ்சி), ஆர்.டி.அரசு(செய்யூர்), வசந்தம் கே கார்த்திகேயன்(ரிஷிவந்தியம்) மற்றும் ஜெ.அன்பழகன்(திருவல்லிகேணி-சேப்பாக்கம்) ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் அன்பழகன் கொரோனா தொற்றால் காலமானார்.

3

சூர்யாவின் சூரரைப் போற்று ரிலீஸ்க்கு முன்பே ரூ.55 கோடி வியாபாரம்?

0
Soorarai Pottru Tamilnadu Rights

Soorarai Pottru Tamilnadu Rights; சூர்யாவின் சூரரைப் போற்று ரிலீஸ்க்கு முன்பே ரூ.55 கோடி வியாபாரம்? சூர்யா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள சூரரைப் போற்று ரிலீஸ்க்கு முன்பே ரூ.55 கோடி வரையில் வியாபாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரரைப் போற்று ரூ.55 கோடி வரையில் வியாபாரம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. ஒரு சாதாரண மனிதன் விமான ஓட்டியாக மாறுகிறான் என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூர்யா – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர், மேக்கிங் வீடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.

அதோடு, சூரரைப் போற்று படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மண்ணுருண்ட என்ற பாடல் சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.

கிட்டத்தட்ட ரூ.33 கோடியில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், தமிழ்நாட்டு உரிமம் ரூ.55 கோடி வரையில் வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தைத் தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம் மற்றும் தொலைக்காட்சி உரிமம் பற்றிய தகவல் வெளியாகவில்லை. கடந்த மே மாதம் வெளியாக இருந்த சூரரைப் போற்று கொரோனா மற்றும் லாக்டவுன் காரணமாக இதுவரை வெளியாகவில்லை.

மேலும், திரையரங்குகள் திறப்பதற்கு இன்னும் 3 மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில், சூரரைப் போற்று ஓடிடி தளத்தில் வெளியாகுமா? அல்லது திரையரங்கில் வெளியாகுமா? என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யா உடன் இணைந்து, ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு, சம்பத் ராஜ், விவேக் பிரசன்னா, காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Prabhas20FirstLook: பிரபாஸ்20 டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு!

0
Prabhas20FirstLook

Prabhas20 Movie Title RadheShyam; பிரபாஸ்20 டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு! பிரபாஸ் நடிக்கும் 20 ஆவது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிரபாஸ் நடிக்கும் 20ஆவது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சாஹோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் தனது 20ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இத்தாலி மற்றும் அதனை சுற்றி நடக்கும் காதல் கதையை மையப்படுத்தி பிரபாஸ்20 படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து முரளி சர்மா, சச்சின் கடேகர், பிரியதர்ஷி, சத்யன், பாக்யஸ்ரீ ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

முதலில் இப்படத்தின் சேஸிங் காட்சி படமாக்கப்பட்டது. இதையடுத்து, ஜியார்ஜியாவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடந்துள்ளது.

தற்போது கொரோனா காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதால், இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா முற்றிலும் சரியான பிறகு படப்பிடிப்பிற்கு அனுமதி கிடைத்த உடன் பிரபாஸ்20 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று ஏற்கனவே படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பிரபாஸ்20 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் பிரபாஸ்20 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதன்படி, படத்திற்கு ராதேஷ்யாம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் கட்டியணைத்து நிற்பது போன்று புகைப்படம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஒரே படத்தில் பல கதைகள்: சுதா கொங்கராவின் புதிய முயற்சி!

1
Sudha Kongara Anthology Film

Sudha Kongara Anthology Film; ஒரே படத்தில் பல கதைகள்: சுதா கொங்கராவின் புதிய முயற்சி! ஆணவக் கொலையை மையப்படுத்தி ஒரே படத்தில் பல கதைகளை கொண்ட திரைப்படம் ஒன்றை இயக்குநர் சுதா கொங்கரா உருவாக்கி வருகிறார்.

சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த இயக்குநர்களில் பெண் இயக்குநரான சுதா கொங்கராவும் ஒருவர்.

இவரது இயக்கத்தில் வந்த இறுதிச் சுற்று படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, தற்போது சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ளார்.

இதில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், விவேக் பிரசன்னா, காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்ட நிலையில், கொரோனா மற்றும் லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா விஜய்யின் தளபதி65 படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், இந்தப் படத்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்குவதால், சுதா கொங்கரா – விஜய் கூட்டணி இப்போதைக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சாந்தனு ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய படம் ஒன்றை இணையதளத்திற்காக உருவாக்கி வருகிறார்.

முற்றிலும் ஆணவக்கொலையை மையப்படுத்திய இந்தப் படத்தில், பல கதைகளும் (ஆந்தலாஜி) இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில், இந்தப் படம் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஜெய்க்கு ஜோடியான சின்னத்திரை நடிகை!

0
Dhivya Duraisamy

Dhivya Duraisamy; ஜெய்க்கு ஜோடியான சின்னத்திரை நடிகை! நடிகர் ஜெய் நடிக்கும் புதிய படம் ஒன்றில் சின்னத்திரை நடிகை திவ்யா துரைசாமி ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்த சின்னத்திரை நடிகை திவ்யா துரைசாமி, சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த நடிகர், நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் சிவகார்த்திகேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர் ஆகியோர் சின்னத்திரையில் இருந்து வந்து பெரிய திரையில் கலக்கியவர்கள்.

இதே போன்று பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகர்கள், நடிகைகளும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், மற்றொரு நடிகை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றுள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த திவ்யா துரைசாமிக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில், ஷில்பா மஞ்சுநாத்தின் தோழியாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது ஜெய் ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக திவ்யா துரைசாமி நடிக்கிறார்.

இந்தப் படத்தில் முக்கிய ரோலில் இயக்குநர் பாக்யராஜூம் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கும் மற்றொரு படத்திலும் திவ்யா துரைசாமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

RadheShyam: பிரபாஸ்20 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

0
Prabhas20FirstLook

Prabhas20FirstLook; பிரபாஸ்20 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! பிரபாஸ் 20 ஆவது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிரபாஸ் நடிக்கும் 20ஆவது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சாஹோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் தனது 20ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இத்தாலி மற்றும் அதனை சுற்றி நடக்கும் காதல் கதையை மையப்படுத்தி பிரபாஸ்20 படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து முரளி சர்மா, சச்சின் கடேகர், பிரியதர்ஷி, சத்யன், பாக்யஸ்ரீ ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

முதலில் இப்படத்தின் சேஸிங் காட்சி படமாக்கப்பட்டது. இதையடுத்து, ஜியார்ஜியாவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடந்துள்ளது.

தற்போது கொரோனா காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதால், இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா முற்றிலும் சரியான பிறகு படப்பிடிப்பிற்கு அனுமதி கிடைத்த உடன் பிரபாஸ்20 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று ஏற்கனவே படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பிரபாஸ்20 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் பிரபாஸ்20 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதன்படி, படத்திற்கு ராதேஷ்யாம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் கட்டியணைத்து நிற்பது போன்று புகைப்படம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

GV Prakash: ஜீ.வி.பிரகாஷும் இயக்குனர்களும்!

0
GV Prakash and Gautham Menon
ஜீ.வி.பிரகாஷும் இயக்குனர்களும்!
இசையமைப்பாளராக தனது முதல் திரைப்படத்திலேயே திரையுலகத்தாலும் சரி மக்களாலும் சரி கவணிக்கப்பட்டவர்,
ஜி.வி.பிரகாஷ்குமார். 
ஜி.வி. பிரகாஷ்குமார் அவர்களின் இயக்குனர் காம்போவை பற்றிய சிறு பார்வைதான் இந்த கட்டுரை.
ஜி.வி.பிரகாஷ்-வசந்தபாலன்
ஜி.வி.பிரகாஷ் அவர்கள் இசையமைப்பாளராக அறிமுகமானது வசந்தபாலன் அவர்கள் இயக்கிய  வெயில் திரைப்படத்தில்தான். அப்படத்தில் வரும் ‘வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி ‘என்ற பாடல் பலரின் நாஸ்டாலாஜியாக்களை தூண்டிவிட்டும் ‘உருகுதே மருகுதே’ பாடல் மக்களை கவர்ந்தும் ஜி.வி.பிராகாஷ்குமாரின் மீது கவணிப்பை ஏற்படுத்தியது.
அதன் பிறகும்  தனது இசையால் தன் மீதான மக்களின் கவணத்தையும் திரையுலகின் கவணத்தையும் சிதறவிடாமல் தொடர்ந்து  பெற்றார், பெற்றுக்கொண்டுமிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் மற்றும் வசந்தபாலன் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த வெயில் மற்றும் அங்காடித்தெருவின் பட பாடல்கள் நம்மை ஆட்கொள்ளும் அளவிற்கு இருந்தவை. அங்காடித்தெருவில் வரும் ‘உன் பெயரை சொல்லும்போதே’ பாடலுக்கென்று தனி ரசிக பட்டாளமிருக்கிறது. இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் வரவிருக்கும் ஜெயில் திரைப்படத்திற்கான பாடல்களில் மீது மக்களுக்கான எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. ஜெயிலில் இருந்து வெளியான காத்தோடு காத்தானேன் பாடலும் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜி.வி.பிரகாஷ் – A.L.விஜய்
இவர்களின் கூட்டணி அனைவராலும் நம்பப்படும் கூட்டணியாகவே திகழ்கிறது. இவர்கள் கூட்டணியில் வந்த பெறும்பாலான பாடல்கள் ஹிட்லிஸ்டில்தான் சேர்ந்திருக்கிறது. மதராசப்பட்டினம் – பூக்கள் பூக்கும் தருணம்,
கிரிடம்- அக்கம் பக்கம்,
சைவம்- அழகு,
இது என்ன மாயம்- இரவாக நீ,
தாண்டவம்- ஒரு பாதி கதவு,
தலைவா- யார் இந்த சாலையோரம்,
தெய்வத்திருமகள்- தந்தையின் தாலாட்டு
என படங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு பாடலையாவது இதயம் தொட்ட பாடலென நாம் நினைவு கூர்ந்து விடலாம்.
ஜி.வி.பிரகாஷ்- வெற்றிமாறன்
பாடல்களுக்கு மட்டுமல்லாது கொளுத்தும் பின்னனி இசையையும் இவர் கூட்டணி படங்களில் நாம் கேட்கலாம். பொல்லாதவன் சமயத்தில் வந்த பைக்கிற்கான BGM இப்போது வரை பலரின் பைக்குகளில் ஹார்ன்-டோனாக உள்ளது. பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் என அனைத்துப்படங்களிலுமே பின்னனி இசை தெறித்திருக்கும். பாடல்களையும் குறைத்து மதிப்பீடல் ஆகாது. ஆடுகளம் திரைப்படத்தில் வரும் ‘ஒத்த சொல்லலால’ பாடல் இன்றளவும் பலரால் கொண்டாடப்பட்டுத்தான் இருக்கிறது. படத்திற்கு ஒரு பாடல் சொல்ல வேண்டுமென்றால்
மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம் என்ற மெலடியும், படிச்சு பார்த்த ஏறவில்லை என்ற குத்தாட்ட பாடலையும் கொண்டிருக்கிறது பொல்லாதவன். ‘யாத்தே யாத்தே’ என்ற மெலடியையும், ‘வாழ்க்கை ஒரு போர்க்களம்’ என்ற எழுச்சி பாடலையும் ஆடுகளம் தன்னுள் வைத்திருக்கிறது. அசுரன் திரைப்படத்தில் ‘வா அசுரா வா’ என்ற பாடலில் திரைப்படத்தில் அக்காட்சியின் கொதிப்பையும், ‘எள்ளு வய பூக்கலயே’ பாடலின் ஒரு தாயின்  தவிப்பையும் நாம் அப்படியே உணர்வதற்கான காரணங்களில் மிக முக்கியமானவர் ஜி.வி.பிரகாஷ் அவர்கள். வெற்றிமாறன் தயாரித்த திரைப்படமான உதயம் NH4, காக்கா முட்டை, லென்ஸ் போன்ற திரைப்படங்களுக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்தான் இசையமைப்பாளர்.
ஜி.வி.பிரகாஷ்-அட்லீ
அட்லியின் திரைப்படங்களான இராஜா இராணி மற்றும் தெறி படத்திற்கு இசையமைத்தவர் இவர்தான். இராஜா இராணி திரைப்படத்திற்கு பெரிய அறிமுகமாக இருந்தது படத்தின் பாடல்கள். பலவிதமான வேரியஷன்கள் பொருந்திய பாடல்களை நாம் இராஜா இராணியிலும், தெறியிலும் காணலாம். இப்போதும் fresh ஆகவே இருக்கிறது இவ்விரு படங்களின் ஆல்பமும்.
ஜி.வி.பிரகாஷ்-செல்வராகவன்
செல்வராகவனும் ஜி.வி.பிரகாஷும் கூட்டணி அமைத்த இரண்டு படங்களும் ஜி.வி அவர்களின் இசைப்பயணத்தில் மிக முக்கியமானவை. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் celebration of life என்ற பின்னனி இசை நம்மை சிலிர்க்க வைக்கும். மயக்கம் என்ன திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களுமே ஹிட் லிஸ்ட்தான். இருப்பினும், ‘பிறை தேடும் இரவிலே’ பாடல் பலருக்கு நெருக்கமாக இருக்கிறது.
3