Home Blog Page 267

ஸ்விட்சர்லாந்தில் ரேஸ் – மாஸ் காட்டும் வலிமை அஜித்

0
ஸ்விட்சர்லாந்தில் ரேஸ் - மாஸ் காட்டும் வலிமை அஜீத் Valimai Ajith Race Scene

ஸ்விட்சர்லாந்தில் ரேஸ் காட்சி (Valimai Ajith Race Scene): அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தில், இரண்டு பயங்கரமான ரேஸ் காட்சிகள் ஸ்விட்சர்லாண்டில் படமாக்கப்படவுள்ளன.

கடந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களுமே அஜீத்திற்கு பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுத் தந்தது.

வலிமை அஜித் (Valimai Ajith Movie Update)

அதற்கு அடுத்ததாக தற்போது நேர்கொண்ட பார்வை படத்தைத் தயாரித்த போனி கபூரின் தயாரிப்பில் அதே இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் ஏ.கே 60 திரைப்படத்திற்கு வலிமை என்று பெயரிடப்பட்டு அதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் பலதரப்பட்ட சிறப்பான ஆக்ஸன் காட்சிகள், சண்டைக்காட்சிகள் இருப்பதாகவும் அவை பிரம்மிக்கும்படியாகவும் படமாக்கப்பட இருக்கிறது என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்தத் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் போட்டு சிறப்பாக நடைபெற்றது.

தற்போது சென்னையில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்விட்சர்லாந்தில் ரேஸ் (Valimai Ajith Race Scene)

இந்தத் திரைப்படத்தில் அஜீத் இரண்டு விதமான ரேஸ்களில் ஈடுபடுமாறு காட்சிகள் அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அதற்காக இந்தப் படக்குழுவினர் அனைவரும் மொத்தமாக வரும் ஏப்ரல் மாதம் ஸ்விச்சர்லாந்து செல்ல இருப்பதாகத் தெரிகிறது.

எப்படிப்பார்த்தாலும், அஜீத்தின் ரசிகர்களுக்கு மாபெரும் ரேஸ் விருந்து இந்தத் திரைப்படத்தில் காத்திருக்கிறது.

தியேட்டர்களில் இந்தக் காட்சிகளின் போது ரசிகர்களின் ஆரவாரம் வானை மிஞ்சும் அளவிற்கு இருக்கப்போகிறது. திரைப்படம் பெரும்பாலும் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திரைப்படத்தில் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் அவருக்கு லீட் ரோலாக நடித்த ஹீமா குரேஸி, அஜீத்துடன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிகிறது.

இந்த அதிரடியான புது அப்டேட் அஜீத் ரசிகர்களை குதூகலமடையச் செய்துள்ளது. அதிலும் அஜீத் இதில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பது முன்னேரே உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

அஜீத்தின் சூப்பரான மாஸான போலீஸ் லுக்குடன் (Ajith Police Look) கூடிய ஃபர்ஸ்ட் லுக்  (Valimai First Look) எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

3

550 கோடி மணி நேரம் விழுங்கிய டிக்டாக்: ஆப் அன்னி

0
ஆப் அன்னி (app annie): 550 கோடி மணி நேரம் விழுங்கிய டிக்டாக் (tiktok app)

ஆப் அன்னி நிறுவனம் (app annie) வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக் செயலி (tiktok app), இந்திய  பயனாளர்கள் நேரத்தில், 550 கோடி மணி நேரம் விழுங்கியுள்ளதாம்.

ஆப் அன்னி (app annie) நிறுவன ஆய்வின் முடிவில் வெளியான அதிர்ச்சி தரும் தகவல்கள்; 2019-ல் இந்தியர்கள் செலவழித்த நேரம் 550 கோடி மணிநேரம். இந்தியா இரண்டாமிடம். சீனா முதலிடம்.

டிக்டாக் செயலி (TikTok App)

2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட டிக்டாக் செயலியை ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் பயன்படுத்தலாம்.

பேஸ்புக், வாட்ஸ்ஆப் என பல சமூக செயலிகள் இருந்தும் மக்கள் பெரிதும் விரும்புவது டிக்டாக் செயலியை மட்டுமே.

பிறந்த குழந்தை முதல் பாட்டி வரை அனைவரையும் இந்த செயலி கவர்ந்திழுத்து வருகிறது. தங்கள் நடிப்புத் திறமை, ஆட்டம், பாட்டம் என தனித்திறமைகள் அனைத்தையும் இதில் வெளிப்படுத்த நினைத்து அதில் மூழ்கி வாழவேண்டிய நேரங்களை இதிலேயே போக்குகின்றனர்.

சிலர் பிரபலமாக நினைத்து ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் வீடியோக்களை வெளியிட்டு தங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை தாங்களே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

வெறும் லைக்கை மட்டும் வைத்து என்ன செய்ய முடியும் என்பதை உணராமல் தங்கள் வாழ்க்கையின் அழகிய நேரங்களை இதில் வீண் செய்கின்றனர்.

நேரத்தை விழுங்கும் டிக்டாக்

கடந்த 2019-ம் ஆண்டு மட்டும் இந்தியர்கள் டிக்டாக் செயலியில் செலவழித்த நேரம் சுமார் 550 கோடி மணிநேரம் ஆகும்.

2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட டிக்டாக் செயலி இதுவரை சுமார் 32.3 கோடி முறை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப் அன்னி ஆய்வு முடிவு (app annie report 2019)

2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட டிக்டாக் செயலிக்கு 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 90 கோடி மணிநேரம் இந்தியர்கள் செலவிட்டுள்ளனர்.

2019-ம் ஆண்டு அதையும் மிஞ்சியது 2019 டிசம்பர் வரை இந்தியர்கள் டிக்டாக்கில் செலவழித்த நேரம் சுமார் 550 கோடி மணிநேரம் ஆகும்.

2018 டிசம்பர் முதல் 2019 டிசம்பர் வரை ஒப்பிடும் போது 2019 டிசம்பரில் டிக்டாக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 90 சதவீதம் அதிகரித்து முதல் இடத்தில் டிக்டாக் செயலியை கொண்டு வந்துள்ளனர்.

அதே நேரம் பேஸ்புக் செயலி 15 சதவீதம் உயர்ந்து 15.6 கோடி முறை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப் அன்னி நிறுவனத்தின் வேலை என்ன?

மொபைல் தரவுகளை (data) பகுத்தாய்வு செய்யும் நிறுவனம். மொபைல் தரவுகள் மற்றும் மொபைல் கம்பெனிகள் தரும் இலவச ஆப்களை ஆராய்ந்து அதன் தரத்தினை வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் உணர்த்தும் ஒரு தனியார் நிறுவனம்.

இந்நிறுவனம் 2010-ம் ஆண்டு சான் ஃப்ரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டு தற்பொழுது தனது 12 கிளைகளை உலகம் முழுக்க பரப்பியுள்ளது.

மொத்தம் 1,100 நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகவும்; 1 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்நிறுவனம்.

மொபைல் நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியில் ஆப் அன்னி நிறுவனத்தின் பங்கு பெரிதும் இருப்பதாக நம்புகின்றனர்.

சமூக வலைதளங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமே என்பதையும் தாண்டி தாங்கள் வாழவேண்டிய நேரங்களைப் போக்குகிறது என்று உணராமல் மக்கள் டிக்டாக்கில் மூழ்கிவிடுகின்றனர்.

3

இன்றைய ராசிப்பலன்கள் பிப்ரவரி 4, 2020

0
இன்றைய ராசிப்பலன்கள்: பிப்ரவரி 4, 2020

இன்றைய ராசிப்பலன்கள்: பிப்ரவரி 4, 2020

இன்றைய ராசிப்பலன்கள் : பிப்ரவரி 4, 2020 அன்றிற்கான 12 ராசிகளுக்கு உண்டான பலன்களும், அவர்களின் ராசியான நிறம் மற்றும் எண்களை கீழே காண்போம்.

மேஷம்

குடும்பத்தில் சந்தோஷ மனப்போக்கு அதிகரிக்கும். குழந்தைகள் மற்றும் மனைவியிடம் அன்பு பூணுவீர்கள். பொதுவாக வெற்றி சூழும் நாள்.

ரிஷபம் 

தன்மீதான கண்ணோட்டம் சிறப்பானதாக உயர்வானதாக அமையும். வழக்கு விவகாரங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. சற்று உடல் உபாதைகளில் ஆட்படும் நாள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்

அக்கம் பக்கத்தினர், உடன் இருப்பவர்களிடம் கருத்து வேறுபாடு தோன்றலாம். மனம் ஏற்றத் தாழ்வு உடையதாக எதிலும் பிடிப்பில்லாதது போல் தோன்றும்.

கடகம் 

அலைச்சல் சிறது இருக்கும். இருப்பினும் எடுத்த காரியத்தை வெற்றியடையச் செய்துவிடுவீர்கள். செலவினங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களிடம் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

சிம்மம்

எதுவும் தாமதப்படும் நாள். பொறுமையைக் கைக்கொள்வது சிறந்தது. சில எதிர்ப்புகளை சமாளிக்கும் பக்குவம் பெறும் நாள்.

கன்னி 

நன்மைகள் விளையும் நாளாகக் காணப்படுகிறது. கவனத்துடன் எல்லா விஷயங்களையும் செய்து அசத்துவீர்கள். மேன்மக்களின் அன்பு, பாராட்டு, முக்கிய உதவி கிடைக்கும்.

துலாம்

தன்னம்பிக்கை தாலாட்டும் நாள். உங்கள் எண்ணங்கள் உறுதி பெறும். உற்சாகமும் தைரியமும் வாய்த்த சிறந்த நாளாக விளங்குகிறது.

விருச்சிகம் 

பணவரவு சரிசமமாக இருக்கும் நாள். வேலைபார்க்கும் இடத்தில் நல்ல ஊக்குவிப்பு கிடைக்கும். வியாபாரம் விருத்தியடையும் நாள்.

தனுசு

பிள்ளைகளால் மனம் மகிழும். குடும்பத்துப் பிரச்சினைகளுக்கு பேசி முடிவு எட்டப்படும். இன்பமும் துன்பமும் கலந்த நாளாக இந்தநாள் இருக்கிறது.

மகரம்

சுபகாரியத் தடை நீங்கி மங்களம் உண்டாகும் நாள். தைரியம் மேம்பட்டு மேலான அனுகூலம் அதிகரிக்கும் நாள். நினைத்த உதவிகள் கிட்டும்.

கும்பம் 

நன்றாக உழைக்க வேண்டிய நாள். உழைப்புக்கேற்ற ஊதியம் கிட்டும். கலைதுறை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்பப்புகளால் உள்ளம் பூரிக்கும்.

மீனம் 

எந்தக் காரியத்திலும் ஏதேனும் இடைஞ்சல் வரக்கூடும். செலவைக் கட்டுப்படுத்துவது நல்லது. அரசியலில் பிளவு ஏற்படலாம். அடுத்தவர்கள் மீதான அக்கறையை குறைத்துக் கொள்வது நல்லது.

3

LUCID DREAM: கனவுகளை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது?

0
LUCID DREAM: கனவுகளை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது, கனவு ஏன் வருகிறது, கனவு என்றால் என்ன, தூக்கம் எத்தனை வகைப்படும்,

LUCID DREAM: கனவுகளை எப்படி முழுமையாக ஞாபகம் வைத்துக்கொள்வது? கனவு என்றால் என்ன?  கனவு ஏன் வருகிறது? அதற்கு என்ன அர்த்தம்? தூக்கம் எத்தனை வகைப்படும்?

கனவு என்பது நம் அனைவரின் இரவு உறக்கத்தின்போது வரும் வழக்கமான ஒன்று. ஆனால் காலையில் எழுந்து பார்த்தால் கனவில் நடந்த சிலவிஷயங்கள் மட்டும்தான் நினைவில் இருக்கும்,

ஒரு சிலருக்கு அது கூட இருக்காது. கனவு என்றால் என்ன? கனவு ஏன் வருகிறது? அதற்கு என்ன அர்த்தம்?

முழுக் கனவினையும் எப்படி ஞாபகத்தில் வைப்பது பற்றி சில வழிமுறைகளை இங்கு காணலாம்.

கனவு ( LUCID DREAM ) என்றால் என்ன?

கனவு என்பது இரவு தூக்கத்தின் போது நம் ஆழ்மனம் உண்டாக்கும் படங்கள் மற்றும் கதைகளே. இப்படி உருவாகும் கதைகள் சில சமயங்களில் நல்ல கதையாகவும், ஒரு சில சமயங்களில் நம்மை அச்சுறுத்தும் விதமாகவும் இருக்கின்றன.

இப்படி உருவாகும் கனவுகளை வைத்து நம் ஆள் மனதில் இருக்கும் விஷயங்களை எளிதாக கண்டறிய முடியும் என்கின்றனர் அறிவியல் வல்லுநர்கள்.

கனவு ( LUCID DREAM ) ஏன் வருகிறது?

மனிதர்களுக்கு வெளிமனம், ஆழ்மனம் என மொத்தம் இரண்டு மனங்கள் உண்டு. இதில் அதிகமான நேரங்களில் நம் வெளிமனம் மட்டுமே செயல்படும், தூங்கும்போது மட்டுமே நாம் ஆள் மனதிற்கு செல்கிறோம்.

இன்றைய உலகில் அனைத்து விஷயங்களிலும் நாம், நம் மனம் கூறுவதைக் கேட்டு நடப்பதேயில்லை.

பல சமயங்களில் சூழ்நிலைகளுக்காக நம் மனதிற்கு வேண்டாத செயல்களை நாம் செய்கிறோம்.

இப்படி நாம் செய்யும் வேண்டாத செயல்களினால் ஆள் மனதில் ஏற்படும் மாற்றங்களே கனவாகத் தோன்றுகிறது.

கனவிற்கான அர்த்தம் மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள்

மனிதர்களின் பெரும்பாலான குணாதிசயங்கள் அவர்களின் ஆழ்மனதை பொறுத்தே இருக்கும். இப்படியான ஆழ்மன மாற்றங்களைப் பிரதிபலிக்கும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு.

உதாரணமாக ஒருவரது கனவு அவரை மிகவும் அச்சுறுத்துமாறு இருந்தால், ஆழ்மனதிற்கு புறம்பாக அவர்கள் செய்த ஏதோ ஒரு காரியத்தினால் அவர்களின் ஆழ்மனம் மிகவும் பயந்துள்ளது என்று அர்த்தம்.

இதன்பின் அவருக்கு முன்பு இருந்த அளவுக்கு மனதைரியம் இருக்காது. இப்படி ஒவ்வொரு கனவின் அர்த்தத்தின் மூலம், அவர்களின் உண்மையான ஆழ்மனதினை எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

அதுமட்டுமல்லால் வெளிநாடுகளில் இதற்காக தனி படிப்பே உள்ளது.

தூக்கம் எத்தனை வகைப்படும்?

நமக்கு ஏற்படும் கனவுகளை ஞாபகம் வைத்துக்கொள்ள பல வழிகள் இருக்கின்றன. அதற்குமுன் முதலில் நாம் எப்படி தூங்குகிறோம் என்று அறிய வேண்டும். தினமும் நாம் தூங்கும் தூக்கத்தில் மொத்தம் 5 படிநிலைகள் உள்ளன.

முதல் நிலை: நாம் கண்களை மூடி உறங்க ஆரம்பித்த முதல் 20 நிமிடங்கள் தான் இந்த முதல் நிலை. இந்த நிலையில் நம் உடலில் இருக்கும் தசைகள் மற்றும் கண்களின் செயல்பாடு தளர்வடையத் தொடங்குகிறது.

இரண்டாம் நிலை: இந்த நிலையில் கண்ணின் செயல்பாடு மற்றும் இதயத் துடிப்பு குறைவடையத் தொடங்குகிறது.

நம் உடலில் இருக்கும் வெப்பத்தின் அளவு குறைந்து, நமது மூளை, விழிப்பு மற்றும் தூக்கத்திற்கான நடுநிலையில் இருக்கும். நாம் இந்த நிலையில் 20 முதல் 30 நிமிடம் வரை இருப்போம்.

மூன்றாம் நிலை: இந்த நிலையில் தூங்குபவரை எழுப்புவது என்பது கடினம். இதில் நமது மூளையின் செயல்பாடு முற்றிலுமாகக் குறைந்து, நாம் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்கிறோம். நாம் தூங்கியதிலிருந்து 35 முதல் 45 நிமிடத்திற்குப் பிறகு இந்த நிலை ஆரம்பமாகிறது.

நான்காம் நிலை: இந்த நிலையில் நம் உடலில் எல்லா பாகங்களும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிடும். Slow Wave Sleep ( SWS ) எனப்படும்.

இந்த நிலையில் இருக்கும் யாரையாவது எழுப்பினால், அவர்களுக்கு சிறிது நேரம் தலைவலி, கண் எரிச்சலுடன், உடல் அசதியாகவும் இருக்கும்.

ஐந்தாம் நிலை: இந்த நிலையில் தான் கனவு வருகிறது. வேகமான ரத்த அழுத்தம், கண்கள் வேகமாக நகர்தல், இதயத்துடிப்பு வேகமாதல் போன்ற விஷயங்கள் எல்லாம் இந்த நிலையின் அறிகுறிகள்.

Rapid Eye Movement (REM) எனப்படும் இந்த நிலையானது, நமது மொத்த தூக்கத்தில் 25 சதவீதம் மட்டுமே ஆகும்.

இப்படி நம் தூக்கத்தில் ஐந்தாம் நிலையில் ஏற்படும் கனவினை எளிதாக நியாபகப்படுத்த உதவும் வழிகள் ஏராளம் உள்ளன.

கனவுகளை ( LUCID DREAM ) எப்படி முழுமையாக ஞாபகம் வைத்துக்கொள்வது?

முதலில் நன்றாக உறங்க வேண்டும், ஏனென்றால் நம் உறக்கம் சரியாக இல்லையென்றால் முதல் நான்கு நிலைகளில் அடிக்கடி முழிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அப்படி முழிப்பதனால் நாம் 5 ஆம் நிலைக்கு செல்வது மிக கடினம். எனவே குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும்.

காலை எழுந்தவுடன் வேகமாக படுக்கையிலிருந்து எழுந்திருக்காமல், படுத்தபடியே மெதுவாக கண்களை விழித்து ஏதாவது ஒரு பொருளை மட்டும் பார்த்துக்கொண்டு இரவில் வந்த கனவுவைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

இப்படி சிந்திப்பதனால் அவர்களின் எண்ணம் சிதறாமல் கனவைப் பற்றி மட்டுமே யோசிப்பதனால் எளிதாக கனவினை திரும்ப ஞாபகப்படுத்த முடியும்.

கனவிற்காக தினமும் தனியாக ஒரு டைரி எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

அப்படி எழுதிய டைரியை வாரம் ஒரு முறை திருப்பி பார்த்தால், அந்த வாரத்தில் நாம் நம்முடைய ஆழ்மனதிற்கு எதிராக செய்த காரியங்களினால், ஆழ்மனதில் ஏற்பட்ட மாற்றங்களை கண்டுபிடிக்க முடியும்.

தினமும் நாம் தூங்கும் போது மேற்கூறிய 5 நிலைகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும்.

குறிப்பாக நாம் தூங்கியதிலிருந்து 100 நிமிடங்களுக்கு பிறகு, நாம் REM எனப்படும் ஐந்தாம் நிலைக்கு போய்விடுவோம்.

அதற்கு பின் சிறிது நேரம் கழித்து மீண்டும் முதல் நிலையில் இருந்து நமது தூக்கம் ஆரம்பிக்கும்.

இதற்கு இடைப்பட்ட வேளையில் நாம் எழுந்து கனவுகளை மீண்டும் ஞாபகப்படுத்த முயற்சித்தால் எளிதாக நினைவில் வருமாம்.

எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் அலாரம் வைத்து எழுந்திரிப்பதன் மூலமும் கனவுகளை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமாம்.

அலாரத்தின் பாடல் மற்றும் ஒலியினை மென்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் நம் மூளை மெதுவாக விழிப்பு நிலைக்கு வரும்.

மாறாக வேகமான பாடல் ஒலித்தால் நம் மூளை பயந்து போய், நம் மனம் படபடப்புடன் எழுந்திருக்கும். இப்படி எழுந்த பிறகு கனவினை மீண்டும் ஞாபகப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்று.

3

India vs Pakistan U19 உலகக்கோப்பை இன்று நடைபெறுகிறது

0
India vs Pakistan U19 : உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது

India vs Pakistan U19 : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு நடைபெற்றுவருகிறது. இதுவரை நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியஅணி இன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ளது.

இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை இரண்டு அணிகளுமே தோல்வியை தழுவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காலிறுதிச்சுற்றில் இந்தியா எப்படி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முன்னேறியதோ, அதேபோல பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

பொதுவாகவே இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் என்றால் அதிகமான மக்கள் பார்ப்பார்கள். அதனாலே ஒவ்வொரு வீரருக்கும் இந்த போட்டியில் தன்னுடைய திறமையை நன்றாக வெளிப்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் இருக்கும்.

இரண்டு அணியிலும் பல திறமையான வீரர்கள் இருந்தாலும், இந்த அழுத்தமான சூழலில் எப்படி விளையாடுவார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Weather prediction & Pitch report :

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இந்த மேட்ச் தென்னாபிரிக்கா நாட்டில் சென்வேஸ் பார்க்கில் நடைபெறவுள்ளது.

வழக்கமாக இங்கு வெட்பநிலை எப்படி இருக்குமோ அதேபோலத்தான் இன்றும் இருக்கும் என்று கூறப்படுகிறது. வெயில் 32 டிகிரி முதல் 16 டிகிரிக்குள் இருக்கலாம் என்றும், கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் சிறந்த நிலையில் பிட்ச் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

India vs Pakistan U19 : உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி எப்பொழுது துவங்குகிறது?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இந்த அரையிறுதிப்போட்டி, இந்திய நேரப்படி சரியாக 1.30 PM மணிக்கு துவங்கியிருக்கிறது.

இந்த உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியின் நேரலையை எங்கு காணலாம்?

மிகவும் எதிர்பார்ப்புடன் நடக்கவிருக்கும் இந்தப்போட்டியை, STAR SPORTS 3 சேனலில் கண்டுகளிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் இந்தப்போட்டியின் நேரலையினை ஆன்லைன் மூலம், HOTSTAR ஆப்பிலும் கண்டுகளிக்கலாம்.

இந்த போட்டியின் ரன்னிங் கமெண்ட்ரி மற்றும் ஸ்கோர் அப்டேட்ஸ்களை CRICBUZZ போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

3

ICAI Result 2019 : CA தேர்வு முடிவுகள் வெளியீடு

0
ICAI Result 2019 : CA தேர்வு முடிவுகள் வெளியீடு

ICAI Result 2019 ( icai.nic.in ) : 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த CA இடைநிலை மற்றும் அறக்கட்டளை ( CA Intermediate and CA Foundation ) தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Indian Charted Acoounts of India, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்திய தேர்வு முடிவுகள், திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை வெளியாகலாம் என்று கூறியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை ICAIன் அதிகாரபூர்வமான இணையதளத்தின் ( icai.nic.in ) மூலம் தெரிந்துகொள்ளலாம்.

அந்தந்த மாணவர்களுக்கு உண்டான தனித்தனி ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் ( REGISTRATION NUMBER ) மூலம் ICAI இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை பெறமுடியுமாம்.

அதுமட்டுமல்லாமல் தங்களின் பிரத்யேக மெயில்ஐடியை ICAI இணையத்தளத்தில் ரிஜிஸ்டர் செய்வதன் மூலமும் தங்களது தேர்வு முடிவுகளை காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அப்படி இணையத்தளத்தில் ரிஜிஸ்டர் செய்த நபர்களுக்கு, தேர்வுமுடிவு வெளியாகியவுடனே அவர்களின் இமைலுக்கு தேர்வு முடிவுகள் வந்து சேரும்.

இந்த வழிமுறைகள் மட்டுமல்லாது மொபைல்போனின் மூலமும் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அப்படி மொபைல் SMS மூலம் தேர்வு முடிவுகளை அறிய விரும்புபவர்கள் கீழ்வருமாறு மெசேஜ் டைப் செய்து 57575 என்ற எண்ணிற்கு அனுப்பவேண்டும்.

ICAI Result 2019: For (CA) Intermediate Old Course exam:

CAPICOLD (space) 6 இலக்க பதிவு எண்

For (CA) Intermediate New Course exam:

CAPICNEW (space) 6 இலக்க பதிவு எண்

ICAI Result 2019: For CA Foundation exam

CAFND (space) 6 இலக்க பதிவு எண்

மேற்கண்ட மூன்றில், தங்களின் சரியான தேர்வுக்கான மெசேஜ் முறையை தேர்ந்தெடுத்து, 57575 என்ற எண்ணிற்கு அனுப்பி உடனே உங்களது தேர்வு முடிகளை தெரிந்துகொள்ளலாம்.

3

Coronavirus : 17000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

0
CORONAVIRUS : சீனாவின் வுஹான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17000 ஆக உயர்ந்துள்ளது Coronavirus Death rate

Coronavirus : கொரோனா வைரஸ் தற்போது பல உலகநாடுகளை உலுக்கிக்கொண்டிருக்கிறது. சீனாவின் வுஹான் (WUHAN) மாகாணத்தில் தோன்றிய இந்த வைரஸால் தற்போது உலகம் முழுவதும் (Coronavirus Death rate) 362 பேர் இறந்தும், 17000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

CORONAVIRUS how it came : கொரோனா வைரஸ் எப்படி வந்தது?

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பலர் பாதிப்புக்குள்ளான நிலையில், இது எந்த வழியில் மனிதர்களைத் தாக்கியிருக்கக்கூடும் என்று பல அறிஞர்கள் ஆய்வு செய்துவருகின்றனர்.

சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி இந்த கொரோனா வைரஸ் (CORONA VIRUS) விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்றும் அதிலும் குறிப்பாக வௌவால்லின் மூலம் பரவியிருக்கக்கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பொதுவாகவே சீனாவில் (CHINA) பல விலங்குகளின் மாமிசங்களை உட்கொள்ளும் பழக்கம் வழக்கமானது.

அப்படி சீனாவின் வுஹான் மாகாணத்தில் (WUHAN) இருக்கும் மிகப்பெரிய விலங்கு சந்தையின் மூலம்தான் முதல் முதலாக மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது.

How the Coronavirus Spread? கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது?

கொரோனா வைரஸ்ஸால் பாதிக்கப்பட்ட மக்களின் உடம்பில் இருக்கும் வைரஸ் நிறைந்த நீர், அவர்களின் தும்மல் மற்றும் இருமல் போன்ற நேரங்களில் வெளியில் சிதறுவதன் மூலம் பரவியது என்று கூறுகின்றனர்.

அதோடு மட்டுமல்லாமல் அவர்களின் எச்சில் மூலமும் பரவுகின்றது என்று ஆராய்ச்சி ஒருபுறம் செய்து கூறிவருகின்றனர்.

Coronavirus Symptoms? கொரோனா வைரஸ்ஸின் அறிகுறிகள்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதலில் உடலசதியுடன் கூடிய காய்ச்சல் ஏற்படும், பின்னர் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வருமாம்.

இந்த சாதாரண அறிகுறிகள், தொடர்ந்து இரண்டு வாரத்திற்கு மேல் இருந்தால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

Why Coronavirus more Dangerous? கொரோனா வைரஸ் ஏன் மிகவும் கொடியது?

உலகில் இருக்கும் பல வகையான வைரஸ் ஏற்படுத்தும் சாதாரண காய்ச்சல் மற்றும் இருமலை ஏற்படுத்துகின்ற இந்த கொரோனா வைரஸ் (CORONAVIRUS), ஏன் இவ்வளவு கொடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று பலர் வியக்கின்றனர்.

கொரோனா வைரஸ் மனிதர்களின் சுவாசமண்டலத்தை பெரிதும் பாதிப்புக்குள்ளாகக்கூடியது. இந்த வைரஸ் முதலில் சளி மற்றும் இருமல் போன்றவைகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நுரையீரலில் தொற்றை ஏற்படுத்தி விடும்.

இதனால் சுவாசிப்பதற்கு சிரமமாக இருக்கும் வேளையில், சிறுநீரகத்தை முழுவதுமாக செயலிழக்க செய்துவிடுகின்றன இந்த கொடிய வகையான வைரஸ்கள்.

ஒரே நேரத்தில் நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தையும் (Multi Organ Failure) செயலிழக்க செய்வதால் இந்த கொரோனா வைரஸ் மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது.

Coronavirus Death Rate: கொரோனா வைரஸால் இதுவரை இறந்தவர்கள்

முதலில் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் (Coronavirus), தற்போது நாடுமுழுவதும் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய கணக்கெடுப்பின்படி உலகில் மொத்தமாக 17387 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் சீனாவில் 361 பேர் இந்த கொரோனா வைரஸினால் இறந்துள்ளனர். முதல் முதலாக சீனாவை விட்டு வெளிநாட்டில், பிலிபைன்ஸ் நகரத்தில் 44 வயது முதியவர் ஒருவர் இறந்துள்ளார்.

Corona virus Cure: கொரோனா வைரஸிற்கான மருந்து

உலக நாடுகள் முழுவதையும் அசச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸிற்கு இன்று வரை சரியான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இருப்பினும் தற்போது ஆய்வாளர்கள் எய்ட்ஸ் நோய்க்கு பயன்படுத்தும் மருந்தோடு ஒரு சில மருந்துகளைச் சேர்த்து, கொரோனா வைரஸினால் (Coronavirus) பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

இந்த மருந்து மூலம் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட தொற்றிலிருந்து மக்கள் மெதுவாக குணமடைந்து வருவதாக ஹாங்காங் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

3

ரஞ்சித் பச்சன் சுட்டுக்கொலை: Ranjit Bachchan Murder

0
விஸ்வஹிந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் சுட்டுக்கொலை Ranjit Bachchan Murder

விஸ்வஹிந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் சுட்டுக்கொலை (Ranjit Bachchan Murder). அதிக அளவு குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உத்திரப்பிரதேசம் லக்னோவில் அகில்பாரத் இந்துமகாசபாவின் மாநிலத் தலைவர் ரஞ்சித்பச்சன் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று காலை 6.30 மணியளவில் சுட்டுக் கொள்ளப்பட்டார்.

தலையில் தோட்டா பாய்ந்து இறப்பு

ரஞ்சித் மற்றும் அவரது சகோதரர் ஆதித்யா ஸ்ரீவத்சாவும் நடைப்பயிற்சி சென்றபோது நகரத்தின் பரபரப்பான வணிகப்பகுதியான ஹஸ்ரத்கஞ்சில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுடப்பட்டனர்.

இதில் தலையில் அதிக அளவு குண்டுகள் பாய்ந்ததில் ரஞ்சித் பச்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் (Ranjit Bachchan Murder).

லக்னோ போலீஸ்‌ இணை ஆணையர் நவீன் அரோரா கூறுகையில், மர்ம நபர்கள் சுட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஸ்ரீவத்சவா கையில் குண்டு பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருகிறது மற்றும் 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சமாஜ்வாதி பார்ட்டி ரஞ்சித்

ரஞ்சித் பச்சன் ஹிந்து அமைப்பை தொடங்கும் முன் சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். 2009-ம் ஆண்டு வரை சமாஜ்வாதி கட்சியில் முக்கியப் பதவியிலிருந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

உத்திரபிரதேசத்தில் நடக்கும் இரண்டாவது கொலை இது. இரண்டாவது விஸ்வஹிந்து மகாசபா தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

NZvsIND 2020: கருப்பு சட்டைக்கு வெள்ளை அடித்தது இந்தியா

0
NZvsIND 2020 கருப்பு சட்டை நியூசிலாந்துக்கு நியூசிலாந்து vs இந்தியா

NZvsIND 2020: கருப்பு சட்டை நியூசிலாந்துக்கு வெள்ளை அடித்தது 5-0 என்ற கணக்கில் இந்தியா டி20 தொடரை வென்றது.

நியூசிலாந்து vs இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியா வரலாறு காணாத சாதனை படைத்து உள்ளது.

இதுவரை எந்த அணியும் டி20 போட்டியில் 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது கிடையாது. இந்தியா இந்தச் சாதனையை நியூசிலாந்துக்கு எதிராக நிகழ்த்தியுள்ளது.

இந்திய அணி முதலில் பேட்டிங்

முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் குவித்தது.

ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இந்திய அணி 140 ரன்களைக் கடந்த நிலையில் 17-வது ஓவரில் ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டது.

இதனால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாமல் பாதியிலேயே போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்.

அதன்பிறகு களம் இறங்கிய சிவம் துபே சரியாக விளையாடவில்லை. இதனால் இந்தியாவின் ரன்ரேட் குறைந்தது. இறுதி ஓவரில் பாண்டேவின் விலாசலால் இந்தியா 163 ரன்களை எட்டியது.

நியூசிலாந்து பேட்டிங்

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது நியூசிலாந்து அணி. கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு பதில் கே.எல்.ராகுல் அணியை வழி நடத்தினார்.

இந்திய வீரர்கள் ஆரம்பம் முதலே கட்டுக்கோப்பாக பந்து வீசினார். 3.2 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் மட்டுமே எடுத்து நியூசிலாந்து தடுமாறியது.

பேட்டிங்கில் சொதப்பிய சிவம் துபே 10-வது ஓவரை வீசினார். இந்த ஓவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. வரலாற்றில் மோசமான சாதனையைப் பதிவு செய்தார் சிவம் துபே.

10-வது ஓவரில் மட்டும் 34 ரன்கள் வாரி வழங்கினார் துபே. இது ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன் என்ற மோசமான சாதனைப்பட்டியலில் இடம் பெற்றது.

இதற்கு முன் இங்கிலாந்து வீரர் பிராட் ஓவரில் யுவராஜ்சிங் தொடர்ந்து 6 சிக்ஸர்கள் அடித்து 36 ரன்கள் எடுத்ததுவே, ஒரு ஓவரில் அதிகபட்சமாக எடுக்கப்பட்ட ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பிறகு சிவம் துபேவிற்கு ஓவரே வழங்கவில்லை. துபேவின் விளையாட்டு, உண்மையில் அவர் ஆல்ரவுண்டரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பின்னர், வாஷிங்டன் சுந்தர், பும்ரா அபாராமாக பந்துவீசி நியூசிலாந்து வீரர்களின் விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

மீண்டும் சூப்பர் ஓவரா?

20-வது ஓவரில் நியூசிலாந்து வெற்றிக்கு 21 ரன்கள் தேவை; கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது. சோதி 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

மீண்டும் சூப்பர் ஓவர் வந்துவிடுமோ என்ற பரபரப்பு இறுதி இரண்டு பந்துகளில் தொற்றிக்கொண்டது. ஆனால் டாட் பால் வீசினார் தாக்கூர்.

இதனால் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி கருப்பு சட்டை அணியை 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து அனுப்பியது.

3